வியாழன், 25 அக்டோபர், 2018

மலேசியா ரவுப் நகர் அரசு தமிழ்ப்பள்ளியில் பெரியார் நூலகம் அமைந்தது



பாரம்பரிய மலாய் இசையுடன் நடனமும் இடம்பெற்றது

மலேசியா. பகாங் மாநிலம், ரவுப் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள அரசு தமிழ்ப் பள்ளியில் சுமார் இருநூறு மாணவர்கள் தங்களின் தொடக்க நிலை கல்வியை பயில்கிறார்கள். இருபது ஆசிரியர்கள் பணிபுரி கின்றனர்.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 22.10.2018 அன்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு பழங்களும் சுவை நீரும் வழங்கப்பட்டன. பெரியார் பிஞ்சு இதழ்களும் பாரதிதாசன் நூல்களும், டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்களும் வழங்கப் பட்டன.

பள்ளியின் மேல் மாடியில் பெரியார் நூலகம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர்  கி. தமிழ்வாணன்  அனைவரையும் வரவேற்று விழாவிற்கு தலைமை தாங்கினார்.



நூலகத்தை திராவிட இயக்க பணியாளரும், தோட்டத் தொழில் துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.  பெரியாரின் மலாயா வருகைகளைபற்றியும், அதனால் ஏற்பட்ட தமிழர் எழுச்சி பற்றியும் கூறினார். பெரியார் வலியுறுத்திய கல்வி, சேமிப்பு, சிக்கனம் பற்றி மாணவர்களுக்கு நினைவுபடுத்தினார். இந்த நூலகம் பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் துணையுடன் அமைக்கப்பட்டது.

இந்த விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடை யார், கு.க.இராமன், கு.கிருட்டிணன் மற்றும் ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-  விடுதலை நாளேடு, 24.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக