திங்கள், 29 மே, 2023

எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக தொடர் கலந்துரையாடல் கூட்டங்கள்

  

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

17

6.05.2023 அன்று காலை 10:30 மணிக்கு அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம், அரியலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மண்டல கழக செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், அமைப்பாளர் ரெத்தின.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் அனைவரையும் மாவட்ட ப.க. செயலாளர் துரை.சுதாகர் வரவேற்று உரையாற் றினார்.

தொடர்ந்து, மாநில ப.க.துணைத்தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான ‘‘வைக்கம் போராட்ட நூற்றூண்டுவிழா, இயக்க செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும். பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் “பெரியார் பேசுகிறார்” என்ற தலைப்பில் மாதக்கூட்டங்கள் நடத்துவது, திருக் குறள், புரட்சிக்கவிஞர் - பற்றிய இலக்கிய வட்டங்களின் மூலம் மாணவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டி இளம் தலைமுறைகளை பெரியார் வழியில் அடையாளப்படுத்த வேண்டும் என்றும், இயக்க உறுப் பினர்களை ஆண், பெண் பேதமின்றி அதிகரித்து இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் எனவும் உரை யாற்றினார்.

தொடர்ந்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையாற்றியவர்கள்: இர.இராமச்சந்திரன், ஒன்றிய கழகத் தலைவர். சி.சிவக்கொழுந்து, த.சுப்பராயன், இரா.ராசாராம், மு.முத்தமிழ்செல்வன், இராசா.செல்வ குமார், மு.கோபாலகிருஷ்ணன், கே.வெள்ளமுத்து, மு.ஜெயராஜ்.

பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தை எந்த அளவு வலிமையுள்ள அமைப்பாக நாம் உருவாக்குகிறோமோ, அந்த அளவு நம் எதிர்கால தலைமுறைக்கு வலிமையான சுயமரி யாதை, பகுத்தறிவு, இன உணர்வுள்ள அடித்தளத்தை அமைக்கிறோம் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்'' என்றார். 

தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகம், என்பது திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும்  அமைப் பாகும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். பகுத்தறி வாளர் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர்களையும், ஆதர வளிக்கும் தோழர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாட வேண்டும். நம் பணி என்பது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று மட்டுமே இல்லாமல் ,அறிவுப் பூர்வமான சமூகத்தை அமைப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். வாசகர் வட்டம், இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், கருத்தரங்கம் நடத்துதல். நூல் திறனாய்வு செய்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். பெரியார் 1000 வினா - விடைத்தேர்வுகள் மூலம் மாணவர்களிடம் பெரியாரியலை கொண்டு செல்ல வேண்டும்.  சமூக வலைதளங்களின் மூலம் பெரியாரியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலோடு பரப்பிட வேண்டும். பகுத் தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்ப் பதன் மூலம்தான் ஜாதி, மதச்சிந்தனைகளை கட்டு டைக்க முடியும். மூட நம்பிக்கையையும், பெண்ண டிமைத் தனத்தையும் ஒழிக்க முடியும்.  அதற்கு பகுத்தறிவாளர் கழகம் பரவலாக்கப்பட வேண்டும்'' என்று தனது உரையை முடித்து புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார்.

 இறுதியில் தோழர் சா.பகுத்தறிவாளன் நன்றி கூறியபின் கூட்டம் நிறைவடைந்தது.


குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

18

6.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு கும்ப கோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் குடந்தை பெரியார் மாளிகை கூட்ட அரங்கத்தில் மாவட்ட கழக. செயலாளர் முனை வர் பேராசிரியர் சேதுராமன் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

தொடர்ந்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தன்னை தோழர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு, கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றூண்டு விழா” நடத்துதல், உறுப்பினர் சேர்க் கையை அதிகப்படுத்துதல், குடந்தையில் மீண்டும் “பெரியார் பேசுகிறார்” கூட்டத்தை நடத்துதல்'' போன்றவற்றை மய்யப் பொருளாக வைத்து உரை யாற்றினார்,

19

தொடர்ந்து, ஒவ்வொரு தோழர்களும் தங்களை அறிமுக செய்து கொண்டு இயக்கத்தின் செயல் பாடுகள், தாங்கள் ஆற்றியச் செயல்பாடுகள் குறித்தும் தோழர்கள் இராம.புகழ், வி.சி.க.செல்வராஜ், ப.தியாக ராசன், மாவட்டப.க. அமைப்பாளர் சு.திருஞான சம்பந்தம், சேகர், துகிலிதமிழ்மணி, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் க.பவானிசங்கர், மீன்சுருட்டி சேக்கிழார், மேனாள் கழக மாவட்ட செயலாளர் மில்லர். சுவாமிமலை ஞானம், பாபநாசம், ஒன்றிய கழகத் தலைவர் சு.கலியமூர்த்தி, கபிஸ்தலம் ஏ.கைலா சம், மகளிரணி எம்.திரிபுரசுந்தரி, கி.இந்திரா அ.சங்கர், ச.திராவிட ராஜேஷ், வே.குணசேகரன், குடந்தை ஒன்றிய கழகத் தலைவர் ஜில்ராஜ், இளஞ்சேட் ஜென்னி, சோழபுரம் மதியழகன், திருநாகேஸ்வரம் சிவக்குமார், தமிழ்வேந்தன், இரமேஷ், பாபநாசம் சங்கர், கோவி.பெரியார்கண்ணன், கு.ரியாஸ் கி.செல்வ ராசன், முனைவர் பிரபாகரன், என்.காமராசு, குடந்தை மாநகர கழகத் தலைவர் வழக்குரைஞர் இரமேஷ் க.வளர்தமிழ், தே.அகல்யா, மண்டல கழக செயலாளர். க.குருசாமி ஆகியோர் உரையாற்றினர். 

தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றினார். அவர் தமதுரையில், ‘‘கும்பகோணம் எப் போதுமே பல வரலாறுகளை படைத்த ஊர். திராவிட மாணவர் கழகம் தோன்றுவதற்கு அடித்தளமிட்ட ஊர். பல மாநாடுகளை நடத்திய ஊர், இவ்வூர் மத வாதிகளும், மனுதர்மவாதிகளும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த திட்டமிடும் பகுதி. ஆனால், பெரியார் காலம் முதல் நம் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலுடன் என்றும் இது திராவிடமண், சுயமரியாதை, பகுத்தறிவு, இன உணர்வை வளர்க்கும் மண். இங்கு நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்த்தெடுப்போம், எதிர்கால நம் தலைமுறைக்கு பெரியாரியலை பரப்புவோம், வாசகர் வட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்'' என்று கூறிமுடித்தார்.

20
தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றினார். அவரது உரையில், கும்ப கோணம் என்பது, திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத ஊர். குடந்தை கல்லூரியில் நடந்த மாணவர் எழுச்சிதான் திராவிட மாணவர் கழகத்தின் மூலம் பார்ப்பனர்களின் ஜாதி, திமிரை அடக்கியது. நம் இயக்கம். பல வகையில் பிரச்சாரப் பணிகளைச் செய்தாலும், இன்னமும் மகாமக குளத்தின் மூலம் மூடநம்பிக்கைகளைப் பரப்பியும், அரசும் பல கோடிக்கணக்கான தொகைகளை செலவு செய்து அறி வியலுக்குப் புறம்பான கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புகின்றனர்.  அதை நாம் முறியடிக்க வேண்டும்.  எதிர்கால சமூகம் அறிவு வழியில் செல் வதற்கு பெரியார் கருத்துகளை நாம் தொடர்ந்து பிரச் சாரம் செய்து, ஒத்தக்கருத்துள்ள முற்போக்குச் சிந் தனையாளர்களை அடையாளம் கண்டு பகுத்தறி வாளர் கழகத்தை வலிமை பெற செய்வோம். ஆசிரி யர் தமிழர் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செய லாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார். இறுதியில் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.


 பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்


21

7.5.2023 அன்று காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் மெரினா ஓட்டல் அரங்கத்தில் மாவட்ட ப.க. தலைவர் ஆ.இரத் தினசபாபதி தலைமையில், மாவட்ட கழகத் தலைவர் பெ.வீரைய்யன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.காம ராசு, பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

கூட்டத்தின் நோக்கமான வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு களை விரிவுப்படுத்துதல் பற்றி மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தொடக்கவுரையாற்றினார்.  
22

வருகை தந்த தோழர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டும், கூட்டத்தின் பொருள் சார்ந்தும், அமைப்பின் வளர்ச்சிக்கு  அவரவர்கள் நல்ல செயல் திட்டங்களைக் கூறிக் கீழ்க்காணும் தோழர்கள் நகர தலைவர் சிற்பி.சேகர், மதுக்கூர் ஒன்றிய ப.க. தலைவர் நாராயணன், நகர அமைப்பாளர் அ.இரவிக்குமார், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் சு.நடராசன், மாவட்ட ப.க. பொறுப்பாளர் மாணிக்க சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் சி.ரெங்கசாமி, க.சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, ஒன்றிய கழகத் தலைவர் ரெ.வீரமணி, பள்ளத்தூர் சண்முக வேல், சொக்கனாவூர் கு.சிவாஜி, சேது ஒன்றிய தலை வர் சி.செகநாதன், காசாங்காடு திருமேனி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராசு, ஆசிரியர் வீர.முருகேசன், ப.க. அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன், மண்டலக்கோட்டை சரவணன், புல வஞ்சி பெ.அண்ணாதுரை, கருப்பூர் சி.முருகேசன், பேராவூரணி வசி, உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து, திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர். அதிரடி அன்பழகன் உரையாற்றும் போது, ‘‘சுயமரியாதை இயக்கம், பட்டுக்கோட்டையில் பகுத்தறிவாளர் கழக தொடக்கம், மாநாடு, ஊர்வலம், போன்ற செயல்களை செய்திட்ட பட்டுக்கோட்டை சதாசிவத்தின் தொடர் பிரச்சாரத்தால் இப்பகுதியில் உருவானப் பேச்சாளர் களில் நானும் ஒருவன், பட்டுக்கோட்டை சுயமரி யாதைக் கோட்டை பகுத்தறிவுக் கோட்டையாகும்.  

தந்தை பெரியார் காலத்திலிருந்து, அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற பல நூறு இளைஞர்களை உருவாக்கிய இயக்கம்தான். இன்றும் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் காலத்திலும் இப்பகுதி பகுத்தறிவுக் கோட்டையாகத் தான் திகழ்கிறது. 


குறிப்பாக நம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை போன்றவர்களை பகுத்தறி வாளர்களாக உருவாக்கியதும் நம் தொடர் பிரச்சாரம் தான்.  எனவே, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுப் போம்'' என்று பேசினார்.
23

பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில்  தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, நம் அமைப்பை வளர்த்திட தோழர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும் என உரையாற்றினார்.

நிறைவாக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் தமதுரையில், ‘‘அமைப்பை கட்டமைக்க தோழர்களின் சந்திப்பும் - மாதாந்திரக் கூட்டமும் அவசியம்.  மேலும், மாதந்தோறும் “பெரியார் பேசுகிறார்” என்ற தொடர் கூட்டங்கள்மூலம் புதிய தோழர்களை உருவாக்கி பகுத்தறிவாளர்கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ண ஒட்டத்திற்கு செயலாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.  மாவட்ட ப.க அமைப்பாளர் ஆசிரியர் வீர.முருகேசன் நன்றி கூறினார்.

மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

7.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ப.க. தலைவர் வை.கவுதமன் தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் சித்தார்த்தன், மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், மாவட்ட ப.க. செயலாளர் உ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அடுத்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றாண்டு விழா”உறுப்பினர் சேர்க்கை, மாதாந்திர தொடர் கூட்டங்கள் நடத்துவது போன்றவைப்பற்றிக் கூறி இது தொடர்பாகவும், அமைப்பு வளர்ச்சிப் பற்றியும் தோழர்கள் உரையாற்ற வேண்டும் என கூறினார். 

தொடர்ந்து, மாவட்ட ப.க.ஆசிரியரணி செயலாளர் இரா.கோபால், மாவட்ட கழக துணைத் தலைவர் ந.இன்பக்கடல், நகர ப.க. தலைவர் கோவி.அழகிரி, நகர கழக செயலாளர் மு.இராமதாஸ், ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் பு.காமராசு, ஒன்றிய ப.க. செயலாளர் வே.வினோத், மாவட்ட ஆசிரியரணி தலைவர் த.வீரமணி, செ.இராமலிங்கம், ஆசிரியர் ஜெ.அருளரசன், மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், அழகேசன், எம்.பி.குமார்,  சிவா.வணங்காகுடி, மு.சந்திரசேகரன், ந.இந்திரஜித், த.சத்தியமூர்த்தி, அ.குணசேகரன், இரா.வெங்கட்ராமன், மாவட்ட கழக அமைப்பாளர் அன் பழகன், மா.மணிகண்டன், மு.சந்திரபோஸ் ஆகி யோரின் உரைக்குப்பின் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் பேசும்போது, பகுத்தறிவாளர் கழகம் என்பது, திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தள மான அமைப்பாகும்.  நம் படிப்பகத்தில் முன்பு போல் மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற வேண்டும், அதற்கு என் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றிய போது, ‘‘பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களை நாம் அடிக்கடி சந்தித்து கலந்துரையாட வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தந்தை பெரியார், நம் ஆசிரியர் அவர்களின் தொடர் போராட்டத்தால் கிடைத்த பலன்கள். அதை நாம் பாதுகாக்க வேண்டும். பெரியாரின் பணிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். இல்லையென் றால் நம் அடுத்த தலைமுறை மிகப் பெரிய பாதிப்பு களைச் சந்திக்கும்'' என்று எச்சரிக்கை விடுத்து நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்க்கப் பாடுபடுவோம் என்று உரை யாற்றினார். 

முன்னிலை வகித்த மாவட்ட கழக  தலைவர் சித்தார்த்தன், தனது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தோடு, திராவிடர் கழகமும் இணைந்து ஒரு குழு அமைத்து இந்த மாதத்திலிருந்தே, இதே பெரியார் படிப்பகத்தில் “பெரியார் பேசுகிறார்” என்ற நிகழ்வை நடத்துவோம்''  என்று அறிவித்தார்.

நிறைவுரையாக மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றும் போது, ‘‘அனைத்துத் தோழர் களின் உரைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மாவட்ட கழகத் தலைவர் அவர்களின் அறிவிப்பானது மாதாந்திரக் கூட்டம் நடத்துவோம் என்பதை எண்ணி மகிழ்கிறேன். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு களும், செஞ்சி மாநாட்டிற்கு அதிக நன்கொடையும் அளித்த மாவட்ட தோழர்களைப் பாராட்டுவதோடு சிறிய மாவட்டமாக இருந்தாலும், செயல் திட்டத்தில் மிகப்பெரிய மாவட்டம் மன்னை மாவட்டமாகும். நல்ல பொறுப்பாளர்களைப் பெற்றுள்ள தோழர்கள் நீங்கள். உங்களின் செயல்பாடுகளால் பகுத்தறிவாளர் கழகத்தை வலிமையான அமைப்பாக உருவாக்குவோம். நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் சிந்தனைக்கு செயலாக்கம் தருவோம்'' என்று கூறி, புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார். இறுதியில் நகர ப.க. செயலாளர் பேராசிரியர் பு.காமராசு நன்றி கூற கூட்டம் மகிழ்வுடன் நிறைபெற்றது.