ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 

7
தாம்பரம், ஏப். 20- 14.4.2023 அன்று, தாம்பரம் பேருந்து நிலைய பெரியார் புத்தக நிலையத்தில், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அண் ணல் அம்பேத்கரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சிறப்பு கலந்துரை யாடல் கூட்டம் மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பி.கரிகாலன் தலைமை  வகித்தார். தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தாம்ப ரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அனை வரையும் வரவேற்று,  அறிமுக உரை ஆற்றினார். அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறினார். பின்னர் இரா.சு.உத்ராபழனிசாமி உரையாற்றினார்.

“1929 - நாசிக்கில் நடைபெற்ற ஒடுக் கப்பட்டோர் மாநாடு குறித்தும் அதில் தந்தை பெரியாரின் கடிதத்தை அம் பேத்கர் படித்தது குறித்தும், அம்பேத் கரும், பெரியாரும் எவ்வாறு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட் டனர் என்பது குறித்தும் பேசினர். கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் அண்ணா துரை உரையாற்றுகையில், மனித சமூ கம் எப்படி, இப்படி அடிமையாக்கப் பட்டது என்றும், பழைமையான மக்கள் தங்கள் தேவைக்காக கற்பனை செய்து வைத்திருந்த சொர்க்கம், நரகத் தைப் பற்றியும், அதனைப் பார்ப்பனர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு மக் களை அடிமைப்படுத்தினர் என்பதை யும், அதற்காக எதிர்ப் போராட்டம் நடத்திய அம்பேத்கரின் அர்ப்பணிப்பு களையும் எடுத்துக் கூறினார்.

குணசேகரன் பேசும்போது, “தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், இந்து மதத்தில் உள்ள இடர்ப்பாடுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளால் இந்து மதத்தில் இருந்து மன வேதனையுடன், வெளியேறி  அண்ணல் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவியதையும்“ விளக்கி உரை ஆற்றினார். 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய தோழர் பழனிசாமி பேசும் போது:-

நிர்மலா:- அம்பேத்கர் பெண்களுக்காக போராடியதையும், பெண்களுக்கு வாங்கிக் கொடுத்த முன்னுரிமைகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.

தாம்பரம் மாவட்ட தலைவர் முத் தையன்:- தன் வாழ்வில் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், தன் தந்தை அரசு வேலை செய்தாலும் பார்ப்பனரிடம் வேலை செய்யும் போதும், அந்த பார்ப்பனரின் குழந்தை கள் தன் தந்தையிடம் நடந்துகொண்ட முறையைக் கண்டு சிறு வயதிலேயே மனதில் ஏற்பட்ட வேதனை குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ‘விடுதலை’ பத்திரிகை மூலமாக பெரியாரின் கருத் துகளை தெரிந்துகொண்டு சுயமரி யாதை எவ்வளவு முக்கியம் என்று உரிமைகளை இழந்த காலகட்டத்தில் அம்பேத்கர் பட்ட பாடுகளையும் வேத னையோடு வெளிப்படுத்தினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் த
லைவர் பி.கரிகாலன் மற்றும் ஆவடி தமிழ்ச்செல்வன், கூடுவாஞ்சேரி மா.ராசு ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக நன்றியுரை ஆற்றிய தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அருணா பத்மாசூரன் லாகூர் மாநாடு குறித்தும், அம்பேத்கரின் மன உறுதியையும், அம்பேத்கர் இந்தக் காலகட்டத்திலும் போற்றப்பட வேண்டிய, தேவையான தலைவர் என்பது குறித்தும் பேசி, அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத் தினை நிறைவு செய்தார்.

கருப்பைய்யா மற்றும் கழகத் தோழர் கள் பலரும் இக்கலந்துரையாடல் கூட் டத்தில் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்! - தந்தை பெரியார்

 

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்!

2022 பெரியார் ஜூன் 16-30 2022

தந்தை பெரியார்

இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற இக்கழகத்தினைத் துவக்கும் வகையில் இப்பெரும் கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்-களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்-களாகவும் மக்களுக்கேற்ப கருத்துகளை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்-கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவல ரவர்கள். அண்ணா அவர்கள் நகைச் சுவையோடு, அடுக்குத் தொடரோடு எடுத்துச் சொல்வார்கள்; நாவலரவர்கள் புள்ளி விவரங்களோடு மக்களுக்குப் புரியும் தன்மையில் பேசக் கூடியவராவார்கள். இவர்கள் இருவரது பேச்சுகளைக் கேட்பதற்காகவென்று மக்கள் அதிகமாகக் கூடுவார்கள்.

மனிதனா-மிருகமா?
அமெரிக்காக்காரன் சந்திரமண்டலத்திற்கு சென்று வர சாதனம் கண்டுபிடித்ததைப்போல நாம் சிறந்த காரியமாக பகுத்தறிவாளர் கழகம் என்கின்ற இதனைக் கண்டுபிடித்திருக்கிறோம்; மக்களுக்கு அறிவை எடுத்துச் சொல்கிற – மிருகமாக இருக்கிற மக்களை மனிதர்களாக்குகிற இயக்கம் என்பதுதான் இதற்குப் பொருள். பகுத்தறிவுச்- சிந்தனை _ தாராள சுதந்திர நோக்குள்ளவன்தான் மனிதன். இவை இல்லாத மற்றவை மிருகங்கள். நாம் ஏறக்குறைய அப்படித்தான் இருந்து வருகின்றோம். இப்போதுதான் மனிதரா-கின்றோம். இந்த நாட்டில் இத்துறையில் பாடுபட யாருமே தோன்றவில்லை.
«««
இந்த இயக்கம் வளருமேயானால் மேனாட்டு-காரர்களை விட அதிகமாக நாம் வளருவோம். அறிவில் மட்டுமல்ல, பல அதிசய அற்புதங்களையும் காணுவோம். நமது நாட்டில் அறிவுள்ள மனிதன் என்று சொல்ல ஒரு ஆளில்லை. படித்தவர்கள், பணம் படைத்தவர்-கள், பெருமை பெற்றவர்கள் இருக்கலாம். அறிவாளி என்று சொல்லும் படியாக ஓர் ஆள் கிடையாது. நம் சமுதாய மக்களிடையில் இன உணர்வு நட்பு இல்லாமல் போய் விட்டது. பொது உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்த ஸ்தாபனத்தை நல்ல வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழர்கள் எல்லோரும் அங்கத்தினர்-களாக வேண்டும். தங்கள் மனைவிமார்களையும் இதில் சேர்க்க வேண்டும். பிரச்சார ஸ்தாபனம் ஒன்று இதற்காகத் துவக்க வேண்டும். பத்திரிகைகள் ஆரம்பிக்க வேண்டும். நிறைய புத்தகங்கள் போடவேண்டும். தாங்களாகவும் மற்றவர்களை அழைத்தும் பிரச்சாரம் செய்து, மக்களைப் பகுத்தறிவாளர்-களாக்க வேண்டும்.

ஒழுக்கம் நாணயம் வேண்டும்
இதற்கு மரியாதை வேண்டுமானால் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டும். நாம் தீவிரமான கருத்துகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். நம்மிடம் ஒழுக்கம், நாணயம் இல்லையென்றால் மதிப்பிருக்காது. இப்போது நாங்கள் “கடவுள் இல்லை- கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கு-கிறவன் காட்டுமிராண்டி” என்கின்றோம்.
முட்டாளை முட்டாள் என்று சொல்வதில், திருடனை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறேன். யாராவது நீங்கள்தான் சொல்லுங்களேன்? கடவுளை நம்புகிறவன் முட்டாளாக இல்லாவிட்டால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொள்வானா?

மறு பிறப்பும் பிதிர்லோகமும் முரண் அல்லவா?
அடுத்த ஜன்மத்கில் நாயாக, கழுதையாகப் பிறப்பாய் என்கிறான். பிறகு பிதிர்லோகத்தில் ஆத்மா தங்கி இருக்கிறது, அதற்கு உணவுக்கு அரிசி, உப்பு, புளி அனுப்ப வேண்டு மென்கின்றான். பெரிய எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படித்தவனெல்லாம் இதை நம்பித்தானே தெவசம் கொடுக்கின்றான், கருமாதி செய்கின்றான். நாமிங்கு கடவுள் மறுப்புச் சொல்வது போன்று ஒவ்வொரு நாட்டிலும் இது போல் செய்கிறார்கள்.

விழிப்பூட்டும் ஏடுகள் வேண்டும்!
நானும் காலம் சென்ற இராமநாதன் அவர்களும் பாரிசுக்கு ஒரு நாத்திக சங்கத்திற்கு சென்றிருந்தோம். அவர்கள் ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகையின் தலைப்பில் ஒரு சிலுவையைப் போட்டு அதை ஒரு மனிதன் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியைக் காலால் மிதித்துக் கொண்டு மறுபகுதியைக் கையால் பிடித்து இழுப்பது போலப் படம் போட்டிருக்கிறார்கள். அப்படம்தான் அந்தப் பத்திரிகையின் “எம்பிளம்” ஆகும். அப்போதே அப்பத்திரிகை 50, 60 ஆயிரம் போகிறது என்றார்கள். அது போன்று இங்கும் நிறைய பத்திரிகைகள் தோன்ற வேண்டும்.

கடவுளை முழுமையாக நம்புகிறவர் யாரும் இல்லை!
மனிதன் – அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை, முட்டாள்தனத்தோடு நம்பு-கின்றான். அதனால் இவன் மடையனாவ-தோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வசக்தி-யுள்ளது என்று சொல்கிறானே தவிர, அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா என்று கேட்கிறேன்…
சங்கராச்சாரியைச் சொன்னாலும் சரி, மடாதிபதியானாலும் சரி, பெரிய பக்தனானாலும் சரி ஒருவனைச் சொல்லுங்கள், -எவன் கடவுள் சர்வ சக்தியுள்ளது என்று நம்புகின்றான்? ஒருவன் கூட இல்லையே!

அடிமையாக நாமிருக்கிறோம்
தீவிரமான காரியங்களில் ஈடுபடுகிற நம்மீது சிறு குற்றம்கூட இருக்கக் கூடாது. நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும். நமக்கு ஒரு குறிப்பு மோனோகிராம் (பேட்ஜ்) இருக்க வேண்டும். மேல் நாடுகளில் இதுபோன்ற இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் சட்டையின் ஒரு பகுதியில் அணிந்திருப்பார்கள். அதுபோன்று இந்தக் கழகத்தினைச் சார்ந்த அங்கத்தினர்கள் அணிந்து கொள்ள வேண்டும்.
«««
அதுபோன்று இக்கழகத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்-கொருவர் அண்ணன் தம்பிபோல் பழக வேண்டும். நமது நிலை என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா; நமது மதத்தின் பெயர் இந்து. இதற்கு எந்த ஆதாரமும் இருக்கிறதா என்றால் இல்லை. இந்நாட்டிற்குரிய நமக்கென்று எதுவுமே இல்லை. அனாமதேயமாக இருக்கி றோம். அரசியலிலும் அனாமதேயமாக இருக்-கிறோம். நமக்கென்று நாம் எதையும் செய்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நடித்தால் போதும்
நாமெல்லாம் சகோதரர்கள் என்கின்ற உணர்ச்சி வர வேண்டும். இதனால் சிலருக்குத் தொல்லை வரலாம். தியாகம் செய்தாக வேண்டும். நம்மவன் என்றால் அன்பாய் நடந்து கொள்ள வேண்டும் தம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். பகுத்தறிவின் பெயரால் நாடகங்கள் நடத்த வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடத்துவதில் அண்ணா முக்கியமான பாகத்தில் நடிப்பார் 3_4 ஆயிரம் வசூலாகும். நமது கடவுள் கதைகளை – உள்ளபடி நடித்தால் போதும்- _ அறிவோடு பார்ப்பவன் நிச்சயம் திருந்துவான். இதற்கு ஒரு நிதி திரட்ட வேண்டும். பத்திரிகை சம்பந்தமாக நண்பர் திரு. வீரமணி அவர்கள் உதவி செய்வார்கள். (‘விடுதலை’ 23.9.1970)

தந்தை பெரியார் தந்த நிதியுதவி!
பகுத்தறிவாளர் கழகத்தைத் துவக்கி வைத்து அறிவுரை ஆற்றிய வணக்கத்திற்குரிய தந்தை பெரியார் அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு.சி.டி.நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித்தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில் கழகம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பலவகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் துவங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்-தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல்., கருத்தரங்கு-கள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் (ணினீதீறீமீனீ) ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள்.
கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தி-யமைக்கு ஆதரவாக ரூபாய் 129_30 காசு வசூலாகியது. (‘விடுதலை’ – 7.9.1970)

நாகபுரி சமூகநீதி மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022

நாகபுரி சமூகநீதி மாநாடு
கி.வீரமணி

மகாத்மா ஜோதிபா பூலே துவக்கிய சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் 125ஆம் ஆண்டு விழா, சமூக நீதி மாநாடு ஆகிய விழாக்கள் நாகபுரி, நேஷனல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பெற்ற டாக்டர் பஞ்சாப் ராவ் தேஷ்முக் உள்ளரங்கத்தில் மிகச் சிறப்பான முறையில் 9.1.1990 அன்று காலை 10:00 மணியளவில் துவங்கியது.
மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை-யிலிருந்து ராஜதானி ரயில் மூலம் 9.1.1999 அன்று அதிகாலை 3:45 மணிக்கு நாகபுரி ரயில் நிலையத்திற்குச் சென்று சேர்ந்தேன். சத்திய சோதக் சமாஜ் சங்க முக்கிய நிருவாகி டாக்டர் காம்ப்ளே மற்றும் உறுப்பினர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் நாகபுரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நடக்கவிருக்கும் இரண்டு நாள் மாநாடுகள் பற்றி அச்சங்கத்தின் தலைவர் நாகேஷ் சவுத்ரி விளக்கமாகக் கூறிச் சென்றார்.
முதல் நாள் மாநாட்டுக்குத் தலைமை விருந்தினராக, மாநாட்டின் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அரங்கினுள் நுழையும்போது அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து வரவேற்றது அவர்கள் நம் இயக்கத்தின் மீது கொண்ட மரியாதையை உணர்த்தியது.
சமூகநீதி முன்னோடித் தலைவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் படங்களுக்கு நாகபுரி பல்கலைக்-கழகத் துணைவேந்தர் டாக்டர் பேரா.பால்சந்திர-சோப்னேவும் நாகேஷ் சவுத்ரியும் மலர் தூவி, வீர வணக்கம் செய்தனர். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக வரவேற்புப் பாடல் அங்குள்ள மாணவிகளால் பாடப்பட்டது.
பின்னர் மாநாட்டின் வரவேற்புரையை சங்கத்தின் தலைவர் திரு. நாகேஷ் சவுத்திரி ஆற்றினார். சங்க உறுப்பினர் பேராசிரியர் சுதாகர் மொக்டே, தலைமை விருந்தினரான ‘எனது வாழ்க்கைக் குறிப்பினை’ மிகத் தெளிவாகவும், விவரித்தும் மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கரவொலிக்கிடையே வழங்கி, ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் மொழிபெயர்த்து பெருமைப்படுத்தினார்கள்.

பின்னர் மாநாட்டில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மாணவிகள் பூச்செண்டு கொடுத்துச் சிறப்பித்தார்கள். ஆங்கிலம் மற்றும் மராத்தியில் தயாரிக்கப்பட்ட, ‘எனது வாழ்க்கைக் குறிப்பை’ உள்ளடக்கிய கண்ணாடிப் பேழையினையும் அளித்து சிறப்பித்தார்கள்.
அதையடுத்து மாநாட்டின் தலைவர் பேரா.சோப்னே துவக்க உரையாற்றினார். அவர் தமது உரையில், “மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் அளப்பரிய பணிக் கொடை-களைப் பாராட்டி, அவர்களின் உழைப்பினால்-தான் இந்த அளவிற்கு சமுதாய மாற்றம் ஏற்பட்டு உயர்வடைந்திருக்கிறது. திரு.வீரமணி அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தலைசிறந்த சமூகநீதித் தலைவர்களில் முதல் இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார்கள் என்று சொன்னால், அது ஏதோ வார்த்தைக்காக அல்ல. அதற்கு அவர் முழுத் தகுதியும் பெற்றிருக்கிறார் என்றே நான் பொருள் கொள்கிறேன்.
அவருடைய இடைவிடாத நன்றி பாராத உழைப்புக்குக் காரணம், அவர் நம்முடைய சமூகநீதிப் போராளிகளான ஜோதிபா பூலே, தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களிலிருந்தும், கொள்கைகளிருந்தும் எள் முனையளவுகூட பிறழாமல் தன் பணியினைச் செய்து வருவதால்தான். தலைவர் வீரமணி அவர்கள் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கும் இவையே காரணம் என்றவர், பெரியார் சுயமரியாதை அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 44 நிறுவனங்களைக் கூறி, மிகவும் பெருமைப்-படுகின்ற அளவுக்கு அவை சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளன என்று சொன்னால், அதற்குக் காரணம் தலைவர் வீரமணியே ஆவார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார். தலைமையுரையைத் தொடர்ந்து நான் துவக்க உரையை ஆங்கிலத்தில் ஆற்றினேன். அதை மராட்டியத்தில் சிறப்பாக தோழர் ஒருவர் மொழிபெயர்த்தார்.

மும்பையில் நடைபெற்ற உலக மனிதநேய மாநாடு!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022


கி.வீரமணி


மும்பையில் நடைபெறும் உலக மனிதநேய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் நாற்பத்தோரு பேர் கொண்ட குழு ஒன்று 10.1.1999 அன்று மும்பை வந்தடைந்தனர். மும்பையில் தந்தை பெரியாரைத் தம் ஆசான் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்ட மனிதநேய மாண்பாளர் எம்.என்.ராய் பெயரால் அமைந்த சமூக மாற்ற மய்ய மாளிகையில், மனிதநேய மாநாடு ஜனவரி 10 முதல் 15 வரை நடைபெற்றது.
நான் 11.1.1999 அன்று பல்வேறு அறிஞர்களின் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. அதில் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் அருள்-மொழியும், திருச்சி திலகவதியும் உரை-யாற்றினார்கள். 12.1.1999இல் நடைபெற்ற கருத்தரங்க ஆய்வுரையில் கு.வெ.கி.ஆசான் உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள், 13.1.1999 அன்று மாநாட்டில் நான் உரையாற்றுகையில், “எம்.என்.ராயுடன் தந்தை பெரியார் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். தென்னாட்டில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்துப் போராடிய மனிதநேய மாண்பாளர்களில் முதல் இடம் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை விளக்கினேன்.
மாநாட்டின் நிறைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் முனைவர் பு.இராசதுரை கொண்டுவந்த ஜாதி ஒழிப்புத் தீர்மானம் செயற்குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் பாண்டியனின் மின்தொலைத் தொடர்பு சாதனங்களை பகுத்தறிவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அ.மணிநிலவனின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சாமியார்களைப் பார்க்கப் போகக் கூடாது என்பதையும் தீர்மானங்-களாகக் கழகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியாரின் கருத்துகள், உலக மனிதநேய நன்னெறி மாநாட்டில் தீர்மானங்-களாக இடம்பெற்ற மகிழ்ச்சியில் மாநாட்டில் கலந்துகொண்ட நமது கழகக் குடும்பத்தினர் 16.1.1999 அன்று சென்னை திரும்பினர்.

நான் மும்பையில் இருக்கும்-போது, சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்கள் 12.1.1999 அன்று மரண-மடைந்தார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மும்பையில் இருந்து விடுத்த இரங்கல் செய்தியில், “தோழர் எம்.டி.கோபாலகிருஷ்ணனின் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியும், பெரியார் திடலுக்கு நாளும் வந்து, அதன் பணிகளில் ஈடுபட்டு அதன் சாதனைகளை, பெருமைகளை உலகறியச் செய்ய, தமது உடல் உபாதைகளையெல்லாம் பொருட்படுத்தாது, அஞ்சா நெஞ்சத்துடன் பணியாற்றினார். அவரது துணைவியார் பேராசிரியை தவமணி அவர்களது சீரிய ஒத்துழைப்போடும், அவரது குடும்பத்துச் செல்வங்களின் அரவணைப்போடும், அதே
நல்லெண்ணத்துடனும் (மகன், மகள், மருமக்கள்) செய்து வந்த பாங்கை எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டும்.
மும்பை, உலக மனித நேய மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார். அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவர் மருத்துவமனைக்குச் செல்லும்படி நேரிட்டது.
அவரது தெளிவு, துணிவு, பொதுத்தொண்டு செய்யும் உள்ளம் பற்றி எவ்வளவோ எழுதலாம். பாழும் சாவு _ இந்தச் சொத்தை நம் இயக்கத்திடமிருந்து பறித்துவிட்டதே! என்ன செய்வது? நாம் பகுத்தறிவாளர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறித் தேற்றிக் கொள்ள வேண்டும்.
அவரின் துணைவியார் _ குடும்பத்தார் அனைவருக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்-கிறோம். அவரின் தொண்டுக்கு நம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அவர் “மறையாத வாழ்வு பெற்ற மாவீரர்’’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம். அப்போது மும்பையில் கலந்துகொண்டிருந்த மனிதநேய மாநாட்டில், “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்துப் பேராளர்களும் இத்துயரச் செய்திக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஒரு நிமிடம் எழுந்து நின்று ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தி _ வீரவணக்கம் தெரிவித்தனர்.

- கட்டுரையின் ஒரு பகுதி...