திங்கள், 30 நவம்பர், 2015

குழந்தைகளிடம் மதத்தை போதிப்பது சட்ட விரோதமானதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

பலே, பலே! வரவேற்கத்தக்கது
குழந்தைகளிடம் மதத்தை போதிப்பது சட்ட விரோதமானதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
கான்பெர்ரா, நவ.18_ ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க முடிவாக பன்னாட்டளவில் முதல் நாடாக ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு மதத்தை கற்பிப்பதை தடை செய்து அறிவித் துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் தர்ன்புல் இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் தகவ லைப் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு மதத் தைப் போதிப்பது குற்றம் என விரைவில் சட்டம் கொண்டுவரப் பட உள் ளது. இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பவர் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல். இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் பல மதம் மற்றும் பல கலாச் சார மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பற்றி அவர் கூறுகையில், இனிமேல் நம் குழந்தை களுக்கு ஆபத்தான, காலா வதியான (மதக்) கருத்துக் களை கற்பிக்க, நமது நாட் டைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இது தனி மனித சுதந் திரத்தையே கேள்விக்குள் ளாக்குவதாக ஒரு தரப்பி லும், மற்றொரு தரப்பில் இதற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள் ளனர். ஆஸ்திரேலியா வின் அரசின் கொள்கை முடிவுகளில் மத ரீதியான கருத்துக்கள் தாக்கம் செலுத்துவதை இது தடுக்கும் என்று அவர் கள் வாதிடுகின்றனர்.
எல்லோரும் படிக்கும் அரசுப் பள்ளி நிறுவனங் களில், அது போன்ற பொதுக் கல்வி நிறுவனங் களில் சிறு குழந்தை களுக்கு மதம் சம்பந்தப் பட்ட பாடங்களைத் தவிர்த்தல் மிக நல்லது தானே என்கிறார்கள் அக் கருத்தை ஆதரிப்பவர்கள்.
-விடுதலை,18.11.15

திங்கள், 16 நவம்பர், 2015

மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!


நான் யார்?
நான் முரண்பாடு களின் சின்னமாக விளங்கி வருவதாகப் பலர் மதிப்பிடுகிறார்கள். இது ஓரளவு உண்மை தான். என்னை நானே, பல்வேறு சந்தர்ப்பங் களில் ஒரு மிதவாதி யாகவும் சோஷலிஸ் டாகவும் சமாதானவாதி யாகவும் கருதியிருக்கிறேன். என்றாலும், இவை அனைத்துக்கும் மேலாக நான் ஒரு தனி மனித வாதி என்பதையே நான் கூற விரும்புகிறேன்.
பெண்களின் கற்பு
பெண்களின் உரிமைகள் அவர்களது ஒழுக்கம், அல்லது ஆண்களைவிட அவர்கள் மேலான வர்கள் என்பதைச் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதின் பேரில் உள்ளது. ஆனால், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனம் தனது உரிமைகளைக் கோரும் போது பெண்களுக்கு சில தனிப்பட்ட தன்மைகள் உண்டு என்றும், இவை ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.
முன்காலத்தில் பெண்களின் கற்பு என்பது நரகத்துக்குப்போக நேரிடும் என்ற பயம், கர்ப்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் ஆகியவற்றை கருதியே இருந்தது.
ஆனால் பழமைவாதம் அழிந்துவிட்டதாலும், கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாலும் இந்த பயம் நீங்கி விட்டது. தற்போதைய பெண்கள் ஆண்களுக்கு என்ன உரிமைகளோ அவை தங்களுக்கும் வேண்டும் என்று கோருகிறார்கள்.
பால் உணர்வும் கடை அடைப்பும்!
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்ற மத சம்பிரதாயம் காரணமாக கடைகள் மூடப்பட்டு வந்தன. அதுஇப்போது பொருளாதார வாழ்க்கை முறையாகி விட்டது. இதைப் போலவே பால் உணர்வுக்கான பெரும்பாலான சட்டங்களும், சம்பிரதாயங்களும் இருந்துவருகின்றன.
குழந்தை பிறக்கும் ரகசியம்
ஆண் - பெண் உறவுபற்றிய பால் உணர்வு விவகாரங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள விடாமல் மறைத்து வைப்பது சரியல்ல.
பாப்பாக்களை பறவை கொண்டுவந்து போட்டது என்றோ, புதரிலிருந்து தோண்டி எடுத்தோம் என்றோ குழந்தைகளுக்கு சொல்லப் படுகிறது. ஆனால் உண்மைகளை மற்ற குழந் தைகளிடம் இருந்து அவை தெரிந்து கொள் கின்றன. இதை ரகசியம்போல் அவை கருதுகின் றன. அசிங்கமானது என்று நினைக்கின்றன.
பெற்றோர்கள் தங்களிடம் பொய் சொல்லு வதாக ஒரு முடிவுக்கு குழந்தைகள் வந்துவிடு கின்றன. பெற்றோர்கள் ஒரு விவகாரத்தில் பொய் சொன்னால் அவை இன்னொரு பிரச்சினையில் பொய் சொல்கின்றன.
பால் உணர்வு விவகாரங்களில் தாங்களும் பொய்சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு அவை வந்துவிடுகின்றன.
இதனால் குழந்தைகளின் ஒழுக்கம் சிதைந்து விடுகிறது.
-விடுதலை,8.2.14

ஞாயிறு, 15 நவம்பர், 2015

குவைத்தில் பெரியார்- அண்ணா பிறந்த நாள் விழா

குவைத்தில் தந்தை பெரியார் நூலகம் சார்பில்
பெரியார்- அண்ணா பிறந்த நாள் விழா
குவைத், அக்.12- குவைத்தில் வைத் மன்சால் வா உணவகத்தில் பேராசிரியர்  கல்புர்கி நினைவு அரங்கில்,   கூடல் நகர் மிர்காப்பில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழாக்கள் தந்தை பெரியார் நூலகம் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வெற்றியூர் அன்பரசன் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைக்க,  சத்திரமனை அசன் முஹம்மது  தலைமை  தாங்க, நூலக காப்பாளர் வரவேற்புரையாற்ற, டி.வி.எஸ். நிர்வாகி  அலாவுதீன்  முன்னிலை   வகித்து  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா தொண்டு, பணி குறித்து உரையாற்றினார்.
மிசால் சித்தார்த்தன், டாக்டர் அன்வர்பாஷா, கவிஞர் சாதிக், தஞ்சை  பாருக் மகராஜ் (தமுமுக மண்டலத் தலைவர்), பந்தல்குடி  சம்சுதின் (தமுமுக மண்டலச் செயலாளர்),  ‘இன்பதமிழ்’ மாத இதழ் ஆசிரியர்  அருவிகவி, அனந்த ரவி,  அறிவழகன் (விசிக),  முனைவர் விஞ்ஞானி குமார், தமிழோசை கவிஞர்  மன்றம் மற்றும் தமிழில் அறிஞர்கள் பெரியார், அண்ணா ஆகியோருக்குப்  புகழாரம் சூட்டி உரையாற்றினர்.
நூலகக் காப்பாளர்  நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு  பெற்றது. இத்தகவலை நூலகக் காப்பாளர்  ச.செல்லபெருமாள் தெரிவித்தார்.
-விடுதலை,9.10.15

சுயமரியாதை இயக்கத்தின் நீதி வாக்கியங்கள்!


1) அறிவைக் கெடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப் படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
அய்யம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்
அவ்வை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.

2) கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக்காதே.
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்விலகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே.
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதில கற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவல மாக்கும்.

3)    சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்க்கை கைக்கொள்வாயே
சீற்றம் ஒழிந்தால் ஏற்ற முறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்றறிந்துகொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கம் என்பது துட்டுப் பறிப்பதே,
சோதிடமகற்றின் நீதிடம் பெறலாம்.

4) தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியிலில்லை.
திருவிழா, மனிதரைத் தெருவில் விடுவதே
தீர்த்தமென்று நீ திரிந் தலையாதே.
துக்கமென்பதை இக்கணம் அகற்று.
தூய மனத்தால் தீயவை அகற்று.
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.
- குடியரசு (30.3.1930)
விடுதலை,5.10.13

வெள்ளி, 13 நவம்பர், 2015

டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை!


பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடை பெற்ற ஏலத்தில் 1.97 லட் சம் டாலர்களுக்கு (சுமார் ரூ.1.3 கோடி) விற்பனை யானது. நியூயார்க் நகரி லுள்ள ஏல மய்யத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனை யாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
எனினும், எதிர் பார்த்ததைவிட இரு மடங் குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனை யானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்த கத்தை தாம் புனித நூலா கக் கருதவில்லை எனவும், இயேசு கிறிஸ்துவை கட வுளின் குழந்தை என நம் பவில்லை எனவும் டார் வின் குறிப்பிட்டுள்ளார்.
மத நம்பிக்கையற்ற டார்வின், மத நம்பிக்கை கொண்ட தனது நண்பர் கள், உறவினர்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அது குறித்து வெளிப்படையாகப் பேசு வதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், மதம் குறித்து தனது கருத்தைத் தெரிவிக்குமாறு டார்வி னின் நண்பர் மெக்டெர் மட் என்பவர் அவருக்கு கடிதம் எழுதினார்.
அது குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் மெக்டெர் மட் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கடிதம் மூலம் டார்வின் தெளிவு படுத்தினார்.
மெக்டெர் மட்டும் அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். 100 ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதம் குறித்து வெளியுல குக்குத் தெரிய வந்தது.
-விடுதலை,25.9.15

அமெரிக்காவில்அய்ந்தாவது ஊரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா



தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கலிபோர்னியா, வாசிங்டன், வர்ஜினியா, இலினாஸ் (சிகாகோ) கனடா ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இப்போது கனெக்டிகட் மாநிலம் எலிங்டன் நகரில் கருத்துக் களஞ்சியமாக நடைபெற்றுள்ளது.
தந்தை பெரியார் அவர்களது 137 வது பிறந்த நாள் விழா அமெரிக்க கனெக்டிகட் மாநிலத்தில் எலிங்டன் நகரில் நூலகத்தில் அமெரிக்க மனித நேய அமைப்பால் கொண்டாடப்பட்டது.
இது ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. அதில் சில கருத்துக்கள் மனம் நிறைந்த மாட்சியாக இருந்தது.
தோழர் நாச்சிமுத்து சாக்ரட்டீசு வரவேற்புரை ஆற்றி அமெரிக்காவில் பெரியார் இயக்க வளர்ச்சி பற்றிப் பேசினார்.
பெரியாரின் கருத்துக் களம்!
முதலாவதாகப் பெட்சி எனும் இளைய பெண்மணி பெரியாரின் பெண்ணுரிமை கருத் துகள் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். அதைப் பெண்கள் முன்னெடுக்க வேண்டும் என்று சொன்னார். அன்பு அவர்கள் பெரியாரின் கருத்துக் களம் ஆணிவேரைக் குறி வைத்தது.அதுதான் வெற்றிக்கு அடிப்படை என்றார். புரட்சிக் கவிஞரின் தொண்டு செய்து பழுத்த பழம் பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான பொருளுடையது என்றார். அஜய்குமார்  பெரி யாரினால் அவர் அனுபவிக்கும் தொல்லைகள் பற்றி நகைச்சுவையாகச்  சொன்னார். தேவதாசி முறை ஒழிந்ததால் அவர் குழந்தைகளை நாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. பெண்ணுரிமை என்பதால் இணையரை மரியாதை யுடன்  நடத்த வேண்டியுள்ளது. வட நாட்டார், மற்ற மாநிலங்கள் போல தனது சாதிப் பெயரை போட முடியவில்லை, வெட்கமாக இருக்கின்றது என்றார். திண்ணை இணைய இதழ் நடத்தும் தோழர் ராஜாராம் விதை விதைத்து வளர்ப்பவன் பழம் தின்பதில்லை. ஆனால் பழம் தின்பவனோ நன்றி இல்லா விட்டாலும் குறையாவது சொல் லாமல் தின்கின்றானா? பெரியாரைக் குறை கூறுவோர் இன்று பழம் தரும் மரத்தின் மீதே கல் வீசுகின்றனர். அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்வோர் எல்லோரும் அறிவாளிகள் அல்லர். பெரியார் போல அனுபவத்தில் அறிவு படைத்த வர்களே மதிக்கத் தக்க அறிவாளிகள் என்றார். முன்னுக்குப் பின் முரண் என்கின்றார்கள். அவர் அனைத் திற்கும் நன்றாக விளக்கமளித்துள்ளார். அதைப் படிக்காமல் அந்தக் காலத்தைப் போலவே சூனா மாநா என்ற மாதிரியில் வெறுப்பூட்டப் பார்க்கின்றனர் என்றார்.
பெரியார் அம்பேத்கர் உறவு!
நாஞ்சில் நாட்டுத் தோழர் லாரன்சு பல பக்தகோடி இளைஞர்களை மென்மையாகப் பேசி மாற்றியுள்ளவர். மாட்டுக்கறி அரசியல் அதன் அடிப்படை பற்றி நன்கு பேசினார். போலித் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பற்றி செல்வராஜ் முருகைய்யன் பேசி பெரியார் அம்பேத்கர் உறவினை எடுத்துரைத்தார்.
அய்யா இமயவரம்பனின் உறவினர் ராசேந் திரன்  அவர்கள் அவர் குடந்தையில் படித்த போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக்குக் குடிக்க ஒரு தண்ணீர்ப் பானையும் நிறைய எண்ணிக்கையில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் படி பெரும்பான்மையி னருக்கு ஒரு தண்ணீர்ப் பானையும் வைத்திருந் ததை எடுத்துச் சொன்னார். அவர் அன்று படித்த உயிர் வேதியியல் பார்ப்பனர் கூடாரமாகவும், இருந்த நிலையில் தாம் முன்னணியில் விளங்கு வதற்குக் காரணமே. தந்தை பெரியார் கொடுத்த தன்னம்பிக்கைதான் என்றுரைத்தார்.
இன்றும் நாம் யாரையும் எதிரிகளாகக் கருதவில்லை; ஆனால் அவர்கள் அந்த எதிரியான எண்ணங்களை விட்டொழிக்க மறுப்பது தான் நம்மை அந்த எண்ணங்களுக்கு எதிரிகளாக்கிப் போராட வைக்கின்றது என்றார். பிரபு ராமகிருட்டிணன் கோவில் - பாவம் செய்தவர்கள் புண்ணியம் தேடி அலையும் இடமாகி விட்டது. அங்கே நல்லவர்கள் இருக்கின்றார்களா என்பதே பெரிய கேள்வியாக இருக்கின்றது என்றார். இளைஞர் கணேசன் பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ளாமல் சென்னையில் வளர்ந்து விட்டேன். அது போல நிறைய இளைஞர்கள் உள்ளனர். இப்போதுதான் படித்து அறிந்து கொள்கின்றேன். இவ்வளவு பெரிய தலைவரை எப்படி  மூடி மறைத்தனர்? அவருக்குள்ள மரியாதையை அனைவரும் நினைத்துக் கொண்டாட வழி வகுக்க வேண்டும் என்றார். சாம்ராஜ் அவர்கள் பெரியாரின் சிக்கனம் பற்றிப் பேசினார். தர்மபுரி தோழர் விநோத்குமார் அவர் அப்பாவிடமிருந்து எப்படி மருத்துவக் கல்லூரியே பார்ப்பனக் கூடாரமாக இருந்தது என்பது பற்றி அறிந்து அதிர்ச்சியுற்றேன் என்றும், இன்றைய நிலைமைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
இளைய தலைமுறையைச் சேர்ந்த திருமதி வர்ஷா நாகர்கோவில்காரர். நம்பூதிரிகளின் அநியாயங்களை நேரில் பார்த்தவர். கோவிலில் அவர்கள் தூக்கையில் தூக்கி எறிவதை அம்மா விடம் கூறி வாங்க மறுத்ததில் ஆரம்பித்தது அவரது சுய மரியாதைச் சிந்தனைகள். இன்றும் நடை முறையில் உள்ள இழுக்குகளை எடுத்துச் சொல்லி எதிர்க்க வேண்டும் என்றார். பெரியாரின் சிக்கனம் ஒவ்வொருவராலும் கடை பிடிக்கப்பட வேண்டும் என்றார்.
போராட்டமே வாழ்க்கை!
தோழர் கார்த்திகேயன் பிரபு திராவிட இயக்கங்கள் தேர்தல் அரசியலால் எவ்வளவு கொள்கைகள் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.இன்று எவ்வாறு அரசியல் சீரழிந்துள்ளது, இப்போது புரிகின்றது - பெரியாரின் பணி. போராட்டம், போராட்டம், போராட்டமே வாழ்க்கை என்பது. திராவிடர் கழகம் என்றும் தேவை என்று கூறினார்.
மருத்துவர் சரோஜா இளங்கோவன் எப்படி அவரது வகுப்புப் பார்ப்பனப்  பெண் உனக்கெல்லாம் படிப்பு வராதடி என்று சொன்னதே பெரிய உந்துகோல் ஆகிவிட்டது. இன்றும் பார்ப்பனீயம் டில்லி பாம்நோலி பெரியார் மாளிகையை இடித்தது, உடல் துடித்தது என்றும்,இன்றும் நமக்கு உண்ர்வு வேண்டும், கோவிலுக் குப் போவதால் ஏதாவது பயனுண்டா என்று உணர வேண்டும் என்றார்.
உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களைக் காண்பித்து அதிலிருந்து படித்துக் காட்டினார். அனைவரையும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களைப் படிக்கச் சொன்னார்.
தாலி பற்றிய சூடான விவாதம்
நண்பர் கார்த்திக் தெய்வீகராசன் தொகுத்து வழங்கி பங்கேற்றார். தாலி பற்றிய சூடான விவாதம் கிளம்பியது. அதைப் பற்றி விவாதிக்க இருந்த தொலைக் காட்சி நிறுவனத்தை அடித்ததால் தான் அந்தப் பிரச்சினையே உருவானது. யாருங் கேட்காததால் திராவிடர் கழகம் கேட்டு பின்னர் நிகழ்வுகள் நடந்தன். அது போலவே மாட்டிறைச்சிப் பிரச்சினை. இது மாதிரி இந்து மத வெறியர்களின் கொட்டம் அடக்கப் பட வேண்டும் என்று பலரும் பேசினர். விவாதங்களை சோம.இளங் கோவன் நடத்தினார். இப்போது என்ன செய்யப் படுகின்றது என்பதற்குப் பெரியார் ஆயிரம் வினா விடை மாநிலமெங்கும் லட்சக்கணக்கில் இளைய தலைமுறை பங்கேற்பது, 360க்கும் மேல் தொடர்ந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நாடெங்கும்  நடப்பது, மானமிகு ஆசிரியர் வீரமணி பெயரில் பெரியார் பன்னாட்டு மய்யம் சமூக நீதி விருது நிகழ்ச்சி நடத்தி உலகெங்கும் பெரியாரியலைப் பரப்புவது, இணையத் தில், முக்கியமாக முகநூலில் நமது இளை யோர் செய்யும் பணி பாராட்டத்தக்கது என்றும், 2016 ஜூலையில்  ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில்  மாநாடு நடக்கும் என்று எடுத்துரைத்தார்.
நமது இயக்க நூல்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.
இளைய தலைமுறை பெரியாரை அறிந்து கொள்ளும் துடிப்புடன் பங்கேற் றது மிக்க மன நிறைவாக இருந்தது மாட்சி தந்தது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.
-vsodlnr,19.10.15

ஞாயிறு, 8 நவம்பர், 2015

வட அமெரிக்கா: சீக்கிய குருத்வாராவில் பெரியார் விழா


வட அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள பிரஸ்னோ நகரில் அமைந்துள்ள சிறீ குரு ரவிதாஸ் சீக்கிய குருத்வாராவில் பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 4.10.2015 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. சீக்கிய பன்னாட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விழாவில், பெரியாரின் சிந்தனைகள், பகத்சிங் தூக்கி லிடப்பட்ட போது பெரியார் எழுதிய தலை யங்கம் ஆகிய கருத்துகள் விழாவில் பேசப்பட்டன.
சீக்கிய பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் அம்ரிக் சிங், பஜன்சிங் பிந்தர், எம்.பி.சிங் மற்றும் சிலர் உரையாற்றினர்.
தந்தை பெரியார் நூலினை எடுத்துக் காட்டி அதிலிருந்து பல கருத்துகள் படித் துக் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிய குருத்வாராவில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடுவது இதுவே முதன்முறை. செப்டம்பர் 12-ஆம் தேதி வட அமெரிக்காவின் பிரிமாண்ட் நகரில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவையும், பெரியார் பன்னாட்டமைப்பு மற்றும் சில அமைப்புகளுடன், சீக்கிய பன்னாட்டமைப்பு இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மண்டை சுரப்பை உலகு தொழும்.
-விடுதலை,5.10.15

சனி, 7 நவம்பர், 2015

கடவுள் மறுப்பாளர் இங்கர்சால்




- வழிகாட்டி
இறை மறுப்பில் இவ்வுலகில் இணையில்லா புகழ்பெற்றவர் இங்கர்சால். ஜூலை 21 அவரது நினைவு நாள்.
நியூயார்க்கில் பாதிரியார் ஒருவரின் மகனாகப் பிறந்து, பைபிள் மற்றும் மதத் தொடர்பானவற்றை நுட்பமாகக் கற்று, ஆய்வு செய்து, தெளிந்தவர்.

தன்னைப் போலவே தன் மகனும் மதப் போதகராக பணிபுரிய வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசை. அதற்கு அவரைத் தயார் செய்தார். ஆனால், தந்தையின் முயற்சியால் தனக்குக் கிடைத்த மதம் சார்ந்த செய்திகள் மூலம் இவர் இறை மறுப்பாளராக மாறினார்.
மதம் சார்ந்தவற்றை முழுவதும் கற்றுத் தேர்ந்ததால் அவரின் கருத்துக்களை எவராலும் மறுக்க இயலவில்லை. மதவாதிகள் இவரது புரட்சிச் சிந்தனைகளைக் கேட்டு மருண்டனர்.
நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் சண்டைகளும் துன்பங்களும் ஒழிந்து, நாட்டில் நிரந்தர ஒற்றுமையும் நன்மையும் நிலவ, மக்களைப் பிடித்தாட்டும் மதவெறி, மூடநம்பிக்கைகள், கண்மூடி வழக்கங்கள் நீக்கப்பட வேண்டும். அந்த அளவிற்கு மக்களுக்கு உண்மைகள், சரி, தவறுகள், விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகள் பல ஆற்றினார்.
மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்றால், அவர்களுக்குள் போர்களும், இரத்தச் சிந்தல்களும், மூட வெறிச் செயல்களும், குரோத பகை உணர்வுகளும்  ஏன் படைத்தார்?
பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்படும் கொடுமையை ஏன் உருவாக்கினார்? என்று பல அறிவார்ந்த கேள்விகளின் மூலம் மக்களைச் சிந்திக்கச் செய்தார்.
பாதிரியார்களின் ஞானஸ் _னானம் பற்றி கருத்துக் கூறிய இங்கர்சால், என்னைப் பொருத்தவரை ஞானஸ்னானம் என்பது சுத்தமாகக் குளிப்பதுதான். அது பாதிரியார்கள் கூறும் ஞானஸ்னானத்தை விடச் சிறந்தது என்றார்.
தனது வழக்கறிஞர் தொழிலின் மூலம் ஈட்டிய பொருளையெல்லாம் பொதுமக்களின் பணிக்கே செலவிட்டார்.
உலகப் பிரளயக் கதை சொன்ன மோசோயைவிட டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாடு மேலானது, சரியானது என்பது என் கருத்து என்று கூறி மதத்தை ஆட்டங் காணச் செய்தார்.
மத நூல்களை எழுதின எல்லோரையும்விட, ஹெக்கேல், ஹக்ஸ்லி, டின்டால் முதலிய அறிஞர்களின் எழுத்துக்கள், பூமியைப் பற்றி, வின்வெளியைப் பற்றி, மனித உடல்பற்றி, வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்னை ஈர்க்கின்றன என்றார்.
இவரது சிந்தனைகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நூல்களாக வெளியிட்டுள்ளது. இங்கர்சால் பெரியார் போன்றோரை இளந் தலைமுறையினர் தேடித்தேடி அறிந்து தெளிவும், ஊக்கமும் பெற்று உயரவேண்டும்!

உண்மை இதழ்,1-15.7.15

அமெரிக்க மனித உரிமைச் சங்க திட்ட இயக்குநர் பிரட்எட்வர்டு உரை!-துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

அமெரிக்காவில் பெரியார் கொள்கை பரவலுக்கு உதவிடத் தயார்!
அமெரிக்க மனித உரிமைச் சங்க திட்ட இயக்குநர் பிரட்எட்வர்டு உரை!
மேரிலாண்டில் நடந்த தந்தை பெரியாரும் மனிதநேயமும் நிகழ்வில் எழுச்சி! முனைவர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனுக்கு முனைவர் அரசு செல்லையா நினைவுப் பரிசு வழங்கினார்.

அமெரிக்கா - மேரிலாண்ட் மாநிலத்தின் லாரல் சேவஜ் நூலகத்தின் அய்ன்ஸ்டீன் கருத்தரங்க அறையில் நடைபெற்ற தந்தை பெரியாரும் மனித நேயமும் எனும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியோர் (31.10.2015)
வாசிங்டன், நவ. 6- வாசிங்டன் வட்டார பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் அமெரிக்கா - மேரிலாண்ட் மாநிலத்தின் லாரல் சேவஜ் நூலகத்தின் அய்ன்ஸ்டீன் கருத்தரங்க அறையில் 31.10.2015 அன்று நண்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தந்தை பெரியாரும் மனித நேயமும் எனும் சிறப்பு நிகழ்ச்சி பேராசிரியர் அரசு செல் லையா தலைமையில், பெரியார் பன்னாட்டு மய்ய இயக் குநர் டாக்டர் சோம.இளங்கோவன் முன்னிலையில் நடை பெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்க மனித உரிமை சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ராய் ஸ்பெக்கார்ட், அமெரிக்க மனித உரிமை சங்கத்தின் திட்ட இயக்குநர் ஃபிரட் எட்வர்டு, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், இந்திய மனித உரிமை எழுத்தாளர் டாக்டர் இன்னையா நாரிசெட்டி ஆகியோர் பங்கேற்றனர். ராய் ஸ்பெக்கார்ட், ஃபிரட்எட்வர்டு ஆகியோர் ஆங்கிலத்திலும் முனைவர் துரை.சந்திர சேகரன் தமிழிலும் உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், பேராசிரியர் அரசு செல்லையா ஆகியோர் சிறப்பு செய்ததுடன் - அறிமுக உரையும் ஆற்றினர். தோழியர் பூஜா செல்வம் பெரியார் ஒருவர்தான் பெரியார், தமிழுக்கும் அமுதென்று பேர் ஆகிய பாடல்களை கேட்போரை ஈர்த்திடும் வகையில் சிறப்பாகப் பாடினார்.
இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - ஏன்? என்பதை விளக்கி ஆங்கிலத்தில் டாக்டர் சோம.இளங் கோவன் உரையாற்றினார். டாக்டர் ஆர்.பிரபாகரன் தமிழ் சமுதாயமும் மனித நேயமும் எனும் தலைப்பிலும், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளர் மணிகுமரன் மனித நேயம் செழிக்க பெரியாரின் பங்கு என்பது பற்றியும் கருத்துரையாற்றினர்.
டாக்டர் இன்னையா பிறந்த நாள்
விழாவில் பங்கேற்ற டாக்டர் இன்னையா நாரிசெட்டி பிரபல மனித உரிமை எழுத்தாளர். அவரின் பல நூல்கள் வாசிங்டன் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ரிச்சர்ட் டாகின்ஸின் ‘The God Delusion’ என்ற நூலினை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். சிறந்த பத்திரிக்கையாளர். சீரிய மொழி பெயர்ப்பாளர். அவரின் பிறந்த நாளினை ஒட்டி விழாவில் கேக்வெட்டி கொண் டாடும்படியான ஏற்பாடும் செய்யப்பட்டு நிறைவேறியது. அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
நூல் அறிமுகம்
அமெரிக்க மனித உரிமை சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ராய் ஸ்பெக்கார்ட் எழுதிய “Creating Change through Humanism” எனும் நூலின் கருத்தினை ஒட்டியே தமது உரையை கேள்வி - பதில் முறையில் நிகழ்த்தினார்.
மனித நேயம் என்றால் என்ன? மனித நேயத்துடன் செயல்பட கடவுளும் சமயமும் துணை நிற்கின்றனவா? எவ்வளவு காலமாக நீங்கள் மனித நேயம் - பகுத்தறிவின் இன்றியமையாமையை உணர்ந்திருக்கின்றீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை பார்வையாளர்களைப் பார்த்து விடுத்தார் ராய் ஸ்பெக்கார்ட்.
அவையோரில் பலரும் ஊக்கத்துடனும் உற்சாகத்து டனும் பதில் அளித்து நிகழ்வை சுவையாக்கினர். மூன்று தலைமுறைகளாக நாத்திகர்களாக, பகுத்தறிவாளர்களாக இருப்பதைக் கேட்டு அவர் வியந்தார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வாழ்நாள் தொண்டே இதற்குக் காரணம் என்பது அவருக்கு அவையோரால் சொல்லப்பட்டது. அது கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
பகுத்தறிவும் மனித நேயமும் விரைந்து பரவிடும் ஆற்றல் வாய்ந்தது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் அவர் விளக்கினார். மாந்த நேயம் மற்றும் பகுத்தறிவுத் தொண்டு செய்வோருக்கு, கருத்தளிப்போருக்கு மதச்சார் பாளர்களால் உலகமெங்கும் ஏற்பட்டுவரும் ஆபத்தினை விவரித்தார். வங்க தேசத்தில் மனித உரிமைகள் பற்றிப் பேசுவோர் - எழுதுவோர் கொல்லப்பட்ட செய்தியையும் சுட்டினார்! அவரின் நூல்கள் பலராலும் வாங்கப் பெற்றன.
பெரியார் கொள்கை பரவலுக்கு உதவிடத் தயார்!
அமெரிக்காவின் மனித உரிமை சங்கத்தின் திட்ட இயக்குநர் ஃபிரட் எட்வர்டு பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை நன்னெறி காரணகாரிய தேடல், மனித நேயம் - ஒரு உலகப் பார்வை எனும் தலைப்பில் சீரிய உரை யாற்றினார். அவர் தமது உரையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனிதநேயம், பகுத்தறிவு இவற்றை முன்னிறுத்தும் அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்ததுடன், அவற்றில் தமது அனுபவங்களையும் விளக்கினார். உலகளாவிய அளவில் பகுத்தறிவாளர்களும், மனிதநேயர்களும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பகுத்தறிவாளர் கள், மனித நேய ஆர்வலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவும், கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் வேண்டும் என்றார். சமயச் சார்பாக கூடுவோரைப் போல், நாமும் வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ கூடி மகிழ வேண்டும் என்றார். கலைநிகழ்ச்சிகள் போன்ற உத்திகளை கருத்துப் பரவலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதன் மூலம் திட்டங்கள் தீட்டப்பெறவும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், செயல்படுத்திடவும், ஆய்வுக்கு அதனை உட்படுத்திடவும் சாத்தியமாகும் என்றார். பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவில் இன்னும் பலராலும் அறியப்பட தன்னாலான உதவிகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
பிரட் எட்வர்டு அனுப்பிய செய்தி
நிகழ்ச்சி முடிந்து சென்ற பிறகு பேராசிரியர் அரசு செல்லையா அவர்களுக்கு ஃபிரட் எட்வர்டு அனுப்பிய செய்தியில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளமை பாராட்டுவதற்குரியதாகும். செய்தி வருமாறு: தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்தித்ததில், நிகழ்வில் பேசியதில் நான் பெருமகிழ்வு அடை,கிறேன். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வாசிங்டன் டி.சி பகுதியில் இவ்வளவு பெரியார் பற்றாளர்களைக் கொண்ட அமைப்பு இருப்பதுபற்றி நான் அறியவில்லை. உங்கள் அமைப்புக்கு ஏதாவது இணையதளம் உள்ளதா? எப்படி உங்கள் அமைப்பை செயல்படுத்துகிறீர்கள், உறுப்பினர்கள் எவ் வாறு சேர்க்கிறீர்கள்? பெரியாரைப் பற்றி - பெரியார் கொள்கைப்பற்றி வெகு பேர்கள் தெரிந்து கொள்ள நான் உதவிடத் தயாராக உள்ளேன். நான் வெகு ஜன தொடர்புள்ளவன். அமெ ரிக்க மனித உரிமை சங்கத் தின் மூலம், யுனைடெட் கொய்லேஷன் ஆப் ரீசன் அமைப்பு மூலமும் பொது மக்கள் தொடர்பு பணிகள் செய்துள்ளேன். அதனால் வெற்றியும் ஈட்டி உள்ளேன். உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை தர தயாரா யுள்ளேன். உங்கள் அமைப்பு வெற்றிபெற, மலர்ச்சி அடைய நான் வாழ்த்து கிறேன் என்று குறிப்பிட் டுள்ளார்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
நிகழ்வின் இறுதியில் தந்தை பெரியாரின் தத்துவங் களும், சமுதாயத் தொண் டும் எனும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஒரு மணி 10 நிமிடம் சிறப்புரையாற்றினார். அவருக்கு நினைவுப் பரிசினை விழாக்குழு சார்பில் பேராசிரியர் அரசு செல்லையா வழங்கினார். திராவிடர் கழக சார்பில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பயனாடை மற்றும் சிறப்பாடைகளை பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன், தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் சிவசைலம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, பேராசிரியர் அரசு செல்லையா ஆகியோருக்கு அணிவித்து பாராட்டைத் தெரிவித்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் டாக்டர் சரோஜா இளங்கோவன், மீனா செல்லையா, கீதா பிரபாகரன், ராஜிசெல்வம், செல்வம், தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள் ராசாராம், மகேந்திரன் பெரியசாமி, சுந்தர், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை குழந்தைவேல், ராமசாமி, சித்தானந்தம், எழில்வடிவன், அறிவுப் பொன்னி, கலைச்செல்வி சந்திரசேகரன், மெய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்க முன்னாள் நிர்வாகி மயிலாடுதுறை சிவா நன்றி கூறினார்.
-விடுதலை,6.11.15


பார்வையாளர்களைக் கவர்ந்த ஒலி- ஒளி - வினாடி வினா
மேரிலாந்து, செப். 22- அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள் வழக்கம் போல் இந் தாண்டும் சீரும் சிறப்புமாக பல்வேறு சிறப்பு அம்சங் களுடன் நடைபெற்றது.
வாசிங்டன் அருகே உள்ள மேரிலாந்து, லாரல் நகரில் உள்ள நூலகத்தில் தந்தை பெரியார் விழா நிகழ்ச்சிக்கு, வாசிங்டன், மேரிலாந்து, விர்ஜெனியா, பென்சில்வேனியா போன்ற பெரும் நகரங்களில் இருந்து தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
இந்த ஆண்டின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பொதுச்செய லாளர் மானமிகு முனை வர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண் டும், விழாவில் பெரியார் நமக்கு ஏன் இன்றும் தேவை என்பதை மிக எளிமையாக, நுண்மைமாக, விரிவாகத் தமிழ் அன்பர் களிடம் பகிர்ந்து கொண் டதாகும்."
தந்தை பெரியார் காலம் முழுக்க எதிர் நீச்சல் போட்டவர் என்பதை பல எடுத்து காட்டுகளுடன் விளக்கினார். தந்தை பெரியார் அவர்கள் தனது சமுதாய பணி என்பது இமயமலை வெயிலில் காய்கிறது என்பதற்காக குடை பிடிப்பது போன்ற செயல் என்பாராம். தனது மக்கள் பணி என்பது சறுக்கு மரத்தில் ஏறுவ தற்கு ஒப்பான பணி என்றும் சொல்வாராம்.
மனிதனுடைய அடிப்படைப் பிரச்சினை ஜாதி, மதம், கடவுள் என்ப தால் அதனை தொடர்ந்து எதிர்த்துப் போராடிய மிகப் பெரும் போராளி தந்தை பெரியார். 1967 ஆம் ஆண்டு திருவாரூர் அருகே உள்ள விஜயபுரத் தில் நடந்த பயிற்சி முகா மில் கடவுள் மறுப்பு தத்து வத்தை உலகிற்கு வழங்கினார்.
ஏதென்ஸ் நகரத்து சாக்ரடீஸ் எப்படி இளை ஞர்களை சிந்திக்கத் தூண் டினாரோ? அப்படி தந்தை பெரியார் தமிழக இளை ஞர்களை ஆழமாகச் சிந் திக்க தூண்டினார். தமிழக மக்களின் வாழ்வியில் நெறிகளைத் தூண்டியவர் தந்தை பெரியார். 1927 ஆம் ஆண்டு குடும்ப வாழ் வியல் பற்றியும், குடும்பக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் பேசியவர். கர்ப்ப ஆட்சி என்ற நூலை வெளியிட்ட வர். ஓர் ஆணும், பெண் ணும் மனம் ஒத்து திரு மணம் செய்து கொள்வதை யும், மணமகளை வாழ்க்கை துணைவர் என்றும் சொன் னவர் பெரியார், வாழ்க்கை இணையர் வாழ்வின் உயர் விற்கு மிக முக்கியம் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
தாய் மொழியில் திருமணங்கள்
திருமணங்கள் நமது தாய் மொழியில் நடை பெற வேண்டும் என்பதை யும், நமது இனத்தின் மேம்பாட்டை வலியுறுத் துவதாக திருமணங்கள் இருக்க வேண்டும் என்ப தையும் சொன்னவர் தந்தை பெரியார். அதன் காரணமாகவே சுயமரி யாதைத் திருமணங்கள் நடை பெற வேண்டும் என்று புது முறையை வகுத்துக் கொடுத்தவர் தந்தை பெரியார். இதன் மூலம் தமிழகத்தில் பண் பாட்டுப் புரட்சி ஏற்பட் டது. அந்த காலகட்டத் திலேயே தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார். தமிழில் பெயர் வைப்பதால் ஒரு இனத்தின் மாண்பு காக் கப்படுகிறது என்பதையும் தந்தை பெரியார் சொல்லி யுள்ளார். அவமானமான  பெயர்களையே பொருள் உணராமல் பெருமையாக வைத்துக்கொள்வதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.
இப்படிப் பெயர் மாற் றத்தின் காரணமாகவே நாராயணசாமி நெடுஞ் செழியன் ஆனார், சோம சுந்தரம்-மதியழகன் ஆனார், ராமய்யா - அன்பழகன் ஆனார், தண்டபாணி-இளம்வழுதி ஆனார், சின்னராஜ்-சிற்றரசு ஆனார் என்பதை துரை. சந்திர சேகரன் எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார் இதி காசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதங்களில் உள்ள தவறுகளை சுட்டிக் காண்பித்தும், திருக்குறளின் பெருமைகளையும் தமிழர் களிடையே பரப்பியவர். தமிழ்நாட்டில் முதன் முதலில் திருக்குறளிற்கு மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார். நல்ல கருத்துக் கள் திருக்குறளில் ஏராள மாக உள்ளன. அதை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக வேதங் களில் மற்றும் இதிகாசங் களில் நல்ல கருத்துக் களைத் தேடுவது என்பது-மலத்தில் அரிசி பொறுக்கு வதற்கு ஒப்பானது என்று கூறினார். அதே நேரத்தில் தந்தை பெரியார் திருக் குறளில் உள்ள பெண் அடிமை குறள்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது
1950களில் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த இராஜாஜியைக் கடுமை யாக எதிர்த்து போராடி அந்த திட்டத்தை முறி யடித்து, காமராசரை முதல் அமைச்சர் ஆக்கிய சம்ப வத்தை நினைவு கூர்ந்தார்.
தந்தை பெரியார் மானு டப் பற்றை மிகவும் விரும் பியவர், ஆகையால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றார்.
தந்தை பெரியார் இறந் தவுடன் கவிஞர் கண்ண தாசன் அவர் இல்லை என்றால் நாட்டில் அறி வில்லை, ஆக்கமில்லை... அவர் இல்லை என்றால் நாட்டில் அறிஞர்தாம் பிறப்பதில்லை'' என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் மிகப் பெரும் சீர்திருத்தவாதி என்பதை மிக அருமையாக உரையாற்றி தெளிவாக் கினார் மானமிக துரை சந்திரசேகரன்.
மருத்துவர் சோம. இளங்கோவன்
தந்தை பெரியாரின் விழாவை சீரும் சிறப்புமாக ஆண்டு தோறும் நடத்தி வரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் மருத்துவர் சோம இளங்கோவன் மிக பாராட்டுக்குரியவர். விழாவில் பேசிய ஒவ்வொருவரையும் வரவேற்று அறிமுகப் படுத்தி அவர்களை பேச அழைத்தார். மானமிகு
ஆசிரியர் அவர்களின் தலைமையில் பல புதிய திட்டங்களுடன் பெரியார் வலைக்காட்சி,பண்பலை மற்றும் தங்கள் உழைப்பை அர்ப்பணித்து 350க்கும் மேல் திராவிட விழிப்புணர்ச்சி மாநாடுகள், பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டிகள், பெரியார் பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்கங்கள் தமிழகமெங்கும் நடந்து வருவதை அனைவர்க்கும் மருத்துவர் சோம. இளங்கோவன் எடுத்துரைத்தார். அவரது வாழ்விணையர்  மருத்துவர் சரோஜா அவர்களும் தந்தை பெரியார் பற்றியும் முக்கியமாக, தந்தை பெரி யாரின் மிக முக்கிய கனவு  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பெண்களுக்கு நாம் பெரியார் கருத்துக்கள் எப்படி வாழ்வில் நம்மை உயரவைக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். பெரியார் பொன்மொழிகளை குழந்தைவேல் ராமசாமி, மீனா செல்லய்யா, ஜெயந்தி சங்கர், கல்பனா மெய்யப்பன் எடுத் துரைத்தனர். கவிஞர் பன்னீர்செல்வம் பெரியார் பற்றிய கவிதையைப் பாடினார்.
ஒலி- ஒளி - வினாடி வினா
மேரிலாந்தில் நடை பெற்ற விழாவில் மற்றொரு மிக முக்கியமான சிறப்பு , வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர் குப்புசாமி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், தமிழ் நாடு அறக்கட்டளைத் தலைவர் சிவசைலம் மூவரும் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் மயிலாடுதுறை சிவா கலந்து கொண்டும், விழாவில் தந்தை பெரியார் பற்றி நல்ல பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். வாசிங்டன் வட்டார பிரபல வலைப் பதிவர், சமுதாய மாற் றத்தை விரும்பும் முனைவர் சங்கர பாண்டி, தந்தை பெரியாரின் தன்னல மற்ற கருத்துகளை, அவரின் கடும் பணியை கணினித்துறை சார்ந்த இளை ஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்  என்பது மிக முக்கியம் என்று சொன்னார்.
விழாவில் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியாக பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர் வினாடி வினா மூலம் தந்தை பெரியாரின் முக்கியமான சமுதாய மாற்ற பணிகள் மற்றும் நீதிக்கட்சி  மூலம் நடைபெற்ற சமுதாய மாற்றத்தை சட்டம் மூலம் மாற்றியதை பார்வையாளர்கள் கவரும் வண்ணம் பகிர்ந்து கொண்டார். நாஞ்சில் பீட்டரின் இந்த ஒலி/ஓளி வினாடி வினா பரவலாக பலரையும் கவரும் வண்ணம் இருந்தது. அவர் தந்தை பெரியாரின் கருத்துகள் உலக மக்கள் அறியும் வண்ணம் பல மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
விழாவில் அனைவரையும் வாசிங் டன் தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர் குப்புசாமி வரவேற்றுப் பேசினார். விழா விற்கு  வந்த அனைத்துத் தரப்பு மக்க ளுக்கும் முனைவர் அரசு செல்லையா நன்றி தெரிவித்தார்.
நூல்கள் அறிமுகம்
அண்மையில் வெளியிடப்பட்ட 37ஆவது பெரியார் களஞ்சியம் திருவள்ளுவர்-திருக்குறளும், மற்றும் இங்கர்சால் நூலும் அறிமுகம் செய்யப்பட்டன. பலரும் நூல்களை வாங்கினார்கள். புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஈ.வெ.ரா. என்னும் நான்" வீடியோக் காட்சி ஒளிபரப்பப்பட்டது
செய்தி: மயிலாடுதுறை சிவா / மருத்துவர் சோம இளங்கோவன்
-விடுதலை,22.9.15

வெள்ளி, 6 நவம்பர், 2015

சிங்கப்பூரில் பெரியார் விழா : தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்


சிங்கப்பூர், நவ.2 நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில்  பெரியார் கண்ட வாழ்வியல்-விழா சிறப்பாக நடைபெற்றது.  விழாவில்  செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவின் சிறப்பு அம்சங்களாக சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் திரு.ஜே.எம்.சாலி அவர்களுக்கு "பெரியார் விருது" வழங்கியும். திரு. ச.வரதன், திரு. கா. ஆ.நாகராசன் ஆகியோர்களுக்கு "பெரியார் பெருந்தொண்டர் விருது" வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்கள்.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டினார்கள்.  சிங்கப்பூர் அறிஞர்களின் கட்டுரைகள், வரலாற்று தகவல்கள் உள்ளடக்கிய பெரியார் பணி இதழ் வெளியிடப்பட்டது; விழா பற்றி மேலும்
விரிவான செய்தி பின்னர்.
செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
-விடுதலை,2.11.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

கடவுள் மறுப்பாளர் விஞ்ஞானி சந்திரசேகர்


சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 - 1995) ஒரு வானியல் - இயற்பியல் விஞ் ஞானி. ஆங்கிலேயர் கால இந்தியாவில், இன்றைய பாகிஸ் தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன் - சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்த தமிழர்.
அவர் லாகூரிலும், பிறகு லக்னோ விலும் வாழ்ந்தபின், சென்னை வந்தடைந் தார். 11 வயதில் அவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவரது சித்தப்பா சர்.சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அவரின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திர சேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.
சந்திரசேகர் 19 வயது மாணவராக இருக்கும்போதே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930 - ஆம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப் புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத் துக்குப் போனார்.
அவர் தனது 19ஆம் வயதில் ஐன்ஸ் டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன் படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.
விண்வெளியில் உள்ள ஒரு நட்சத் திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள் நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந் துளைகளாகவோ மாறுகின்றன.
பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள் - உதாரணமாக - நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் - வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.
இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.
இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983 - இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.
1937 - இல் சந்திரசேகர் அமெரிக்கா வின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 - இல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெ ரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு அமைப்பான நாசா உள் ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினை வாகப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நீடித்தார்.
நன்றி: தி இந்து (தமிழ்) 20.10.2014
-விடுதலை ஞா.ம.1.11.14