திங்கள், 30 நவம்பர், 2015

குழந்தைகளிடம் மதத்தை போதிப்பது சட்ட விரோதமானதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

பலே, பலே! வரவேற்கத்தக்கது
குழந்தைகளிடம் மதத்தை போதிப்பது சட்ட விரோதமானதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
கான்பெர்ரா, நவ.18_ ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க முடிவாக பன்னாட்டளவில் முதல் நாடாக ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு மதத்தை கற்பிப்பதை தடை செய்து அறிவித் துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் தர்ன்புல் இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் தகவ லைப் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு மதத் தைப் போதிப்பது குற்றம் என விரைவில் சட்டம் கொண்டுவரப் பட உள் ளது. இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பவர் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல். இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் பல மதம் மற்றும் பல கலாச் சார மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பற்றி அவர் கூறுகையில், இனிமேல் நம் குழந்தை களுக்கு ஆபத்தான, காலா வதியான (மதக்) கருத்துக் களை கற்பிக்க, நமது நாட் டைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இது தனி மனித சுதந் திரத்தையே கேள்விக்குள் ளாக்குவதாக ஒரு தரப்பி லும், மற்றொரு தரப்பில் இதற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள் ளனர். ஆஸ்திரேலியா வின் அரசின் கொள்கை முடிவுகளில் மத ரீதியான கருத்துக்கள் தாக்கம் செலுத்துவதை இது தடுக்கும் என்று அவர் கள் வாதிடுகின்றனர்.
எல்லோரும் படிக்கும் அரசுப் பள்ளி நிறுவனங் களில், அது போன்ற பொதுக் கல்வி நிறுவனங் களில் சிறு குழந்தை களுக்கு மதம் சம்பந்தப் பட்ட பாடங்களைத் தவிர்த்தல் மிக நல்லது தானே என்கிறார்கள் அக் கருத்தை ஆதரிப்பவர்கள்.
-விடுதலை,18.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக