வெள்ளி, 10 ஜனவரி, 2020

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்! மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம்!

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

விஜயவாடா ஜன.6 மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்; மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம் என்றார் விஜய வாடா உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் 80 ஆம் ஆண்டு விழாவினையும் உலக நாத் திகர் மாநாட்டையும் சிறப்பாக நடத்தியுள்ளது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்கள் நிறுவிய நாத்திகர் மய்யம் (1940-2020) கடந்த காலங்களில் பல்வேறு கட்டங்களில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளது. தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகங்களின் ஏற்பாட்டில் திருச்சி மாநகரில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகளை (ஜனவரி  7, 8 மற்றும் 9- 2011 மற்றும் ஜனவரி    5, 6 மற்றும் 7 - 2019) நாத்திகர் மய்யமும் இணைந்து நடத்தியுள்ளது. விஜய வாடாவில்  ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் சிறப்புப் பங்கேற்பாளர்களாக  பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) முதன்மை செயலதிகாரி கேரி மெக்லேலண்ட் (2018 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்றவர்) மற்றும் ஜெர்மனி சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவர் முனைவர்  வோல்கர் முல்லர் (தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) விஜயவாடா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரண்டு நாள் மாநாட்டின் நிறை வுரையினை திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறி வாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆற்றி, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து மாநில பகுத்தறிவாளர் அமைப்பின் தோழர்களை, நாத்திகப் பெருமக்களை  எழுச்சி கொள்ளச் செய்தார்.

ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய  ‘Understanding Rationalism'  புத்தகத்தை மாநாட்டில் தமிழர் தலைவர் வெளியிட்டார்.

மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு நாத்திகர் மய்யத்தின் டாக்டர் சமரம் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். உடன் விகாஸ் கோரா உள்ளார்.

தமிழர் தலைவருடன் 80 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விஜயவாடா உலக நாத்திகர் மய்யத்தின் பொறுப்பாளர்களான கோரா குடும்பத்தினர்

இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் நாத்திகப் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். அமெரிக்க - மேரிலாந்து மாநிலத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா, பகுத் தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் அ.த.சண்முக சுந்தரம், நாத்திகம் பற்றிய தங்களது கட்டுரைகள் குறித்து உரையாற்றினர்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

80 ஆம் ஆண்டு விழா காணும் விஜயவாடா - நாத்தி கர் மய்யம் நடத்திட்ட 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டு மலரினை தமிழர் தலைவர் வெளியிட, அதனை இங்கிலாந்திலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட், ஜெர்மனி நாட்டிலிருந்து வருகை தந்த முனைவர் வோல்கர் முல்லர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உலக நாத்திகர் மாநாட்டை சிறப்பாக நடத்திய முனைவர் விஜயம், டாக்டர் சமரம் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து  தமிழர் தலைவர் பாராட்டி, சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவர் வெளியிட்ட

நாத்திகப் புத்தகம்

உலக நாத்திகர் மாநாட்டில் ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய ‘Understanding Rationalism' புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட்டார். புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு இணையருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவரின்

மாநாட்டு நிறைவு எழுச்சியுரை

ஜனவரி 5 ஆம் நாள் பிற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவுரையினை ஆற்றினார். தமிழர் தலைவரின் நிறைவுரை மாநாட்டிற்கு வருகை தந்தோருக்கு எழுச்சியுரையாக அமைந்தது.

தமது உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

மதவெறிக்கு ஊக்கம் காட்டும் செயல்கள் அதி கரித்துவரும் நடப்புக் காலகட்டத்தில், விஜயவாடா நாத்திகர் மய்யம் உலக நாத்திகர் மாநாட்டை சரியானபடி நடத்துகிறது. மதவெறிப் பிரச்சாரத்தை மாய்த்து, மனித நேயக் கருத்துகள், மக்களது மனதில் தழைத்தோங்கிட வழி செய்திடும் வகையில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்று வருகிறது. நாத்திகப் பிரச்சாரத்தைப் பொறுத்த அளவில், நாத்திக அறிஞர் கோரா நிறுவிய விஜயவாடா நாத்திகர் மய்யம் ஓர் எடுத்துக்காட்டு நாத்திக அமைப்பாக - நிறுவனமாக மக்கள் சேவை ஆற்றி வருகிறது. நாத்திக அறிஞர் கோரா, நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் காந்தியார் அவர்களின் சீடர் ஆவார். ஆனால், காந்தியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கை மிகுந்த காந்தியாருக்கு நாத்திகக் கருத்துடைய கோரா சீடராக இருந்தது ஒரு வேறுபட்ட சிறப்பு. மக்கள் சமத்துவத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட புரட்சியாளர் தந்தை பெரியாரும் கடவுள் மறுப்பினை உரிய அணுகுமுறையாகவே கடைப்பிடித்தார்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

தந்தை பெரியாரும், ஒரு காலத்தில் காந்தியாரின் சீடராகவே இருந்தார். மனிதரிடம் நிலவிவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு  அடிப்படையான மனித விரோத வருணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்தவர் தந்தை பெரியார். வருணாஸ்ரம  தர்மத்திற்கு ஆதரவு அளித் தவர் காந்தியார். காந்தியாரை விட்டு அமைப்பு ரீதியாக முழுமையாக பிரிவதற்கு முன்பு 1927 இல் பெங்களூரில் காந்தியாரைச் சந்திக்கிறார் தந்தை பெரியார். அவர்கள் பேச்சில் வருணாஸ்ரம தருமம்பற்றிய பேச்சு விவாதப் பொருளாக அமைந்தது. வருணாஸ்ரம தர்மத்தை உடனே கைவிட வேண்டிய அவசியமில்லை. நாளா வட்டத்தில் அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம் என காந்தியார் கூறிய கருத்தினை பெரியார் ஏற்றுக் கொள்ள வில்லை. வருணாஸ்ரமம் தூக்கி எறியப்பட வேண்டியது. அதில் படிப்படியாக மாற்றம் என்பது கால விரயம் மட்டுமல்ல, வீணானதும்கூட. அப்படி வருணாஸ்ரமத்தில் மாற்றத்தைக் கொண்டுவர, மதத்தில் மாற்றங்களை உருவாக்க காந்தியார் நினைத்தால், காந்தியாரையே மதவாதிகள் விட்டு வைக்கமாட்டார்கள் என தந்தை பெரியார், காந்தியாரிடமே நேரடியாக தெரிவித்துவிட்டு விடைபெற்று, விலகி தமது கொள்கைகளை நடை முறைப்படுத்த தனியாக இயக்கம் கண்டு வெற்றியினைப் பெற்றார். பெரியார் எச்சரித்தபடி 1948 ஆம் ஆண்டில் மதவெறிக்குப் பலியானார் காந்தியார். கோராவின் நாத்திகக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத காந்தியார், இறுதியில் பெரியார், கோரா கூறிய மனிதநேயம், மனித சமத்துவம் பற்றிக் கூறும் நிலைக்கு வந்தபொழுதுதான்,  அதுவரை காந்தியாரை ஆதரித்துப் போற்றிய மதவாதிகள் - மத வெறியர்கள் காந்தியாரையே சுட்டுக்கொன்றனர். பொது வாக கொள்கை வழிநடக்கும் தலைவரைப் பின்பற்றி சீடர் நடப்பது வாடிக்கை. ஆனால், சீடர்களான பெரியார், கோரா வலியுறுத்திய கருத்துகளின் வழிதான் அவர்களது தலைவராக விளங்கிய காந்தியார் இறுதியில் வர வேண்டிய நிலை வந்தது. சீடர்கள் வழி தலைவர் நடந்து கொண்டார். தொடக்கத்திலேயே  இவர்களது வழி வந்தி ருந்தால், காந்தியார் மேலும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி ஆற்றியிருக்க முடியும். கடவுள் மறுப்பு, நாத்திகக் கொள்கை ஏற்படுத்திய நிலைதான் சீடர் வழி தலைவர் எனும் வரலாற்றுக் குறிப்பு. அத்தகைய மாபெரும் மனிதநேய தத்துவத்துவமான நாத்திக நன்னெறி குறித்து தொடர்ந்து உலக நாத்திகர் மாநாட்டை விஜயவாடா நாத்திகர் மய்யம் நடத்தி வருகிறது.

நாத்திகம் ஒன்றும் புதிய தல்ல!

நாத்திகம் என்பது புதியதல்ல; இயல்பானதுதான். இந்த உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே நாத்திகர்கள்தான்; பிறந்த பொழுது எந்த மத அடையாள மும் தானாக வந்ததில்லை. குழந்தையின் பெற்றோர்தான் தங்களது மத அடையாளத்தை குழந் தையின்மீது திணித்து விடுகின்றனர். இயல்பாகவே குழந்தைகள் வளர்க்கப்பட்டால், மத அடையாளங்களால் உருவாகும் மதவெறிக்கு இடமே இல்லை. இயல்பானதற்கு மாறாகத் தான் மனிதரிடம் மதக் கருத்துகள் இடம் பெறுகின்றன. சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட மதவெறியினை எதிர்த்து - அதற்கு அடிப்படையான மத அடையாளமே தேவையில்லை என தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஆவார்கள்.

மக்களை ஆதிக்கம் செலுத்தும்

மதவாதம்!

மனிதருடைய ஆற்றல், நேரம், உழைப்பு ஆகிய வற்றை பெரும்பாலும் மதத் தொடர்பான விசயங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மனிதருடைய முழு மையான பங்களிப்பு சமுதாயத்திற்குக் கிடைக்கவிடாமல், மதம் சார்ந்த விசயங்கள் தடையாக இருக்கின்றன. அப் படிப்பட்ட தடை என்பது இருப்பதை உணராமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் நல்ல நேரம் - கெட்டநேரம் (ராகுகாலம், எமகண்டம்) வகைப்படுத்தி, எந்த ஒரு முனைப்பான செயலையும் கெட்ட நேரத்தில் செய்யக்கூடாது எனும் மனப்பான்மையினை உருவாக்கிவிட்டது மதம். மதம் சார்ந்த பண்டிகைகள் மனிதரது உழைப்புக்கு விடுமுறை என்பதாக மட்டுமல்லாமல், பண விரயம், கடன் வாங்கி பண்டிகைக்கு செலவிட வைத்துவிடும் நிலை என்ப தெல்லாம் மதம் சார்ந்த நடவடிக்கைகாளல் ஏற் பட்டவையே!

இப்படி மனித உழைப்பை மட்டுப்படுத்தும் நிலைமையினை நீக்கிட கடவுள் மறுப்பு, மத மறுப்பு, நாத்திகக் கருத்துகள் மக்கள் மனதில் உறுதிப்பட வேண் டும். மதம் சார்ந்த சிந்தனைகளை, நடவடிக் கைகளை குறைத்துக் கொண்டதால், உலக நாடுகளில் உள்ள பலர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். தனி நபர் வாழ்வு நிலையும் உயர்ந்து, சமுதாயம் மேம்பாடு அடைந்திட்ட நிலைமைகள் கண்கூடாகத் தெரிகிறது.

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள்

மதம் சார்ந்த சிந்தனைகளைப் புறந்தள்ளப்பட வேண்டும். மனிதநேயம் சார்ந்த சிந்தனைகள் வளர்த் தெடுக்கவேண்டும். அத்தகைய சமுதாயப் போக்கிற்கு உலக நாத்திகர் மாநாட்டு நடவடிக்கைகள் ஆக்கம் கூட்டும். அந்த மகத்தான பணியில் நாம் அனைவரும் - இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும்  இணைந்து பணியாற்றுவோம். மனித குலம் மேம் பாடடைய பாடுபடுவோம். இறுதி வெற்றி நமக்கே; நாத்திக இயக்கத்திற்கே!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவரின் எழுச்சியுரையினால் உணர்வு வயப்பட்ட அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கால் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தானாக எழுந்த கரவொலி எழுச்சி கலந்த மகிழ்ச்சி வெள்ளமாக அரங்கம் முழுவதும் அதிர்வுகளை எழுப்பியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தமிழர் தலைவருக்கும் - வெளிநாட்டுப் பேராளர்களுக்கும் சிறப்பு

உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தமிழர் தலைவருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட் மற்றும் வோல்கர் முல்லர் ஆகியோருக் கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினர்.

நாத்திகர் மய்யத்தின் 80 ஆண்டுகால செயல்பாட் டிற்கு ஆர்வம் கூட்டியவர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பகுத்தறி வாளர் அமைப்புப் பேராளர்களுக்கும் நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து....

அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப் பின்  (FIRA - Federation of Indian Rationalist Association) சங்க அமைப்பினர், தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் - மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர்கள் அ.த.சண் முகசுந்தரம், ரஞ்சித்குமார், பொறுப்பாளர்கள் - நடராசன், மாணிக்கம் புதுவை குப்புசாமி இணையர் ஆகியோர் மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தமிழர் தலை வருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பெரியார், பெரியார் சமூகக் காப்பு அணியின் பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் சென்றி ருந்தனர்.

- விடுதலை நாளேடு, 6.1.20

மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பினாங்கு, ஜன. 5- மலேசியா திராவிடர் கழகத்தின் சார்பில் மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் குடும்ப விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

25.12.2019 அன்று பட்டர்வொர்த் நகர் - ஜாலான் பாகான் லூவாரில் உள்ள சிறீ ஆனந்த பவன் உணவக அரங்கில் மாலை 7 மணி அளவில் விழா தொடங்கி நடைபெற்றது. 1929ஆம் ஆண்டில் முதன்முதலாக தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணமாக வந்த நாடு அன்றைய மலாக்கா நாடு. அன்னை நாகம் மையார் மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்க ளுடன் கப்பலில் பயணம் செய்து வந்து இறங்கிய இடம் பினாங்கு தீவு. அதையொட்டி அமைந்துள்ள பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியார் சுயமரியாதை கொள்கைப் பிரச்சாரம் செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர், தந்தை பெரியாரின் 40ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பட்டர்வொர்த் நகரத்தில் 2013ஆம் ஆண்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியுள் ளார்.

நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், பினாங்கு மாநிலத் தலைவருமான ச.த.அண்ணாமலை தலைமை வகித் தார். வந்திருந்தோரை வரவேற்று பினாங்கு மாநிலச் செயலாளர் சோ.மருதமுத்து உரையாற்றினார். தேசிய பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அறிமுக உரையாற்றினார். கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்றிருந்த திராவிடர் கழகத்தின் பொரு ளாளர் வீ.குமரேசன் சிறப்புரையாற்றினார்.

பினாங்கு மாநில அரசால் விருது வழங்கப்பட்டோருக்குப் பாராட்டு

தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பொதுவாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றிய மலேசியா திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மலேசியா திராவிடர் கழக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் செ.குணசேகரன் (PKT, PJK) அவர்களுக்கு DJN (Darjah Johan Negari) விருதி னையும், மலேசியத் திராவிடர் கழகத்தின் பெர்கான் மாத்தாய் பாவ் கிளைத் தலைவர் த.இரவி ஆகி அவர்களுக்கு PJM (Pingat Jasa Masyarakat) விருதினை யும் பினாங்கு மாநில அரசு வழங்கியிருக்கிறது, விருது வழங்கப்பட்ட கவிஞர் செ.குணாளன் அவர்களுக்கு தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ குமரேசன் அவர்களும் மற்றும் த.இரவி அவர்களுக்கு மலேசியா திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர்களும் சால்வை, சந்தன மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். விருது பெற்றோர் பற்றிய குறிப்புகளை சோ.மருத முத்து அவர்கள் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகப் பொருளாளரின் உரை

நினைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொரு ளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:- மனிதர்களில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்க ளின் உயர்விற்கு பாடுபட்ட மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார். மனித சமத்துவத்திற்கு எதிராக எவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன என்பதை தயவு தாட்சண்யமின்றி உடைத்து எறிந்தவர் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களது சமூக நிலைக்கு - சமூக இழிவுக்கு எவை காரணம் என்பதை தனது பிரச்சாரத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எந்த சாஸ்திர புராணங்கள் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்ததோ, உடல் உழைப்பில் தான் சாகும்வரை அந்த மக்கள் வாழ வேண்டும் என வலியுறுத்தியதோ அவைகளையெல்லாம் தூக்கி குப்பையில் போடச் சொன்னார். பிரச்சாரத்தின் வலிமை, கடுமை, அதிகமாக இருந்தாலும், தனது வழிமுறையில் வன்முறை என்பது கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் பெரியார் பரப்பிய கருத் துக்கள் அவர் மறைந்தும் இன்றும் நீடித்து நிலைத்து இருக்கிறது. வற்புறுத்தலால் சொல்லப்படும் கருத்துக் கள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலைபெற முடியாது. மக்கள் மனங்களில் மனிதரிடம் இயல்பாக இருக்க வேண்டிய சுயமரியாதை, பகுத்தறிவு பண்பு களை தட்டியெழுப்பி முழுமையாக கடைப்பிடிக்கச் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்திய புரட்சியாளர் தந்தை பெரியார். இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள எவரும் தந்தை பெரியாரை நேரில் பார்த்திருக்க முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தாலும் பெரியாரின் பேச்சினை நேரில் கேட்டிருக்க முடியாது. பெரியாரது கருத்தின் வலிமை என்பது இன்று அவரை பார்த்திராத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தெரியவரும். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் மலேசிய நாட்டுக்கு வாழ்வாதாரம் தேடிவந்த தமிழர்களிடம் ஒரு குறிப் பிட்ட மாற்றத்தை, அவர்களது வாழ்நிலை உயர்விற் கான மாற்றத்தை தந்தை பெரியாரின் கொள்கைகள் உருவாக்கியுள்ளன.

மலேசிய நாட்டுக்கு இரண்டு முறைதான் தந்தை பெரியார் வருகை தந்துள்ளார். இங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடினார். அவரது மனிதநேயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் அமைப்பு ரீதியாக தங்களை ஒருங்கிணைத்து செயல்படத் தொடங்கினார்கள். அப்படி உருவான அமைப்புதான் மலேசியத் திராவிடர் கழகம். அதன் சார்பாக தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. வெறும் நினைவு நாளை துக்கம் கருதி நடத்தப்படும் நிகழ்வல்ல இது. அடக்கப்பட்ட மக்கள் எழுச்சி கொண்டு முன்னேறியதைக் கொண்டாடும் நிகழ்வு பெரியாரின் நினைவு நாள். சமூக இழிவுக்கு ஆளான தமிழன் எழுச்சி பெற்று, சமூக, பொருளாதார அரசியல் என பலதுறைகளிலும் சாதனை புரிந்து மலேசிய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கம் காட்டியதை கொண்டாடும் நாள் இது. பெரியாரது கொள்கை வழி நடப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். தொடர்ந்து வெற்றியடைவார்கள். பல்வேறு சோதனைகளை தாண்டி சாதனை புரிவார்கள். அப்படி சாதனை புரிந்த மலேசிய திராவிடர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் இருவர் மலேசியா - பினாங்கு மாநில அரசால் பாராட்டுக்கு உரியவர்களாக அடையாளம் காணப் பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளனர். பொது வாழ்க் கையில் பொது சேவையில் குறிப்பிடத்தக்க பணியாற் றியதற்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கையாளர்கள் இறுதியில் பாராட் டப்படுபவர்களாக, சமுதாயத்திற்கு பயன்தரக் கூடிய வர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளான சுயமரி யாதை உணர்வுடன் மனிதன் வாழ வேண்டும்; வாழ் வில் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினை கடைப் பிடித்திட வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்காக மட்டுமே சொல்லப்பட்டதல்ல; குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது அல்ல; உண்மையில் தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுமையும் உள்ள மக்களுக்கு பொருந்தக் கூடியவை; பயன்தரக்கூடியவை. பெரியாரது கொள் கைகள் ஓர் உலகத் தத்துவம் சார்ந்தவை. உலக மக் களை மனிதர்களாக வாழ செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அந்த வகையில் தந்தை பெரியார் ஒரு உலகத் தலைவர். தந்தை பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வரும் வேளையில் இங்குள்ள மக்கள், தமது உயர்வுக்குக் காரணமாக இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை இந்த தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, உணர்த்தி அவர்களையும் வாழ்நிலையில் உரிய மரியாதையுடன் வாழச் செய்திட தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதி பூணு வோம். என்றும் பெரியார் வெல்வார்; பெரியாரின் கொள்கை மனிதனை வளப்படுத்தும்; மானுடத்தை  தழைத்தோங்க செய்திடும்!

- இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.

மறைந்த பொறுப்பாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

மலேசிய திராவிடர் கழகத்தின் பினாங்கு மாநிலப் பொருளாளர் சுப்பிரமணியம் செப்டம்பர் 15, 2019 அன்று மறைந்தார். கழகத்தின் சார்பாக பெறப்பட்ட நிதி உதவியினை மலேசியா திராவிடர் கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை மறைந்த சுப்பிரமணியம் அவர்களது துணைவியார் பத்மினி அவர்களிடம் வழங்கினார்.

சமூக நல காவலன் விருது

பினாங்கு மாநிலத்தின் கொடை நெஞ்சரும், சமூகவியலாளருமான டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான் அவர்களின் எழுத்துப்பணி மற்றும் அவர் ஆற்றிவரும் சமூகப் பணிக்காக தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் சமூக நல காவலன் விருது வழங்கப்பட்டது.

விழாவில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய செயலவை கணக்காயர் ரவீந்திரன், தேசிய துணைப் பொதுச் செயலாளர் நாகேந்திரன் மற்றும் மாநில பொறுப் பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மகளிர் அணி தோழர்கள் இரா.அமுதவல்லி, பொன்.பரமேஸ்வரி, த.முருகம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிறைவாக பினாங்கு மாநில திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் பெ.இராஜேந்திரன் நன்றி கூறினார்.

மாநிலத்தில் சொந்தமாக கட்டிடம், அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் கழகம் பினாங்கு மாநில திராவிடர் கழகம். கழகம் பினாங்கு மாநிலத்தில் வலுவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆண், பெண், குழந்தைகள் எனப்பலரும் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து தந்தை பெரியாரின் கொள்கையை பிரச்சாரம் செய் திடும் குடும்ப விழாவாக நடைபெற்றது சிறப்புக்கு உரியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

- விடுதலை நாளேடு 5 1 20

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஆந்திர கோரா நாத்திக மய்யத்தின் 80ஆவது ஆண்டு விழா - 11ஆவது உலக நாத்திகர் மாநாடு

மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும் நிலைமையினை உருவாக்க உறுதி பூணுவோம்
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டில்  தமிழர் தலைவர் சூளுரை
விஜயவாடா, ஜன.5 ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்றுள்ளார். நாத்திக மய்யத்தின் 80ஆம் ஆண்டு நிறைவில் நடத்தப்படும் 11ஆவது உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் இன்று (5.1.2020) பிற்பகலில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர், நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் டாக்டர் சமரம் கோரா புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி நூலகத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்று, அதனை மேலும் செழுமைப்படுத்த தமிழர் தலைவரின் ஆலோ சனைகளை கேட்டறிந்தார். தந்தை பெரியாரின்  புத்தகங்களை கணினி மூலம் தொடர்பு கொண்டு படித்திட உரிய அனுமதி தர வேண்டியும் தமிழர் தலைவரிடம் கேட்டார். தமிழர் தலைவரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகமும், விஜயவாடா நாத்திக மய்யமும் இணைந்து உலகம் முழுவதும் நாத்திக மனிதநேய கருத்துகள் பரவிட, பயன்பட செயல்பட வேண்டும்  என்று தமிழர் தலைவர் தமது விருப்பத்தினையும் தெரிவித்தார்.
நாத்திக மய்யத்தில் காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சிறிய தொரு உரையாற்றிட அழைக்கப்பட்டார். அப் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்ட தாவது: இந்த நாட்டில் ஜாதி மனிதர்களை பிளவு படுத்துகிறது. மதங்கள் மனிதரை வேறுபடுத்து கின்றன. உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கிறது. இந் நிலைக்கு ஒரே தீர்வு மனிதநேயத்தை வலியுறுத்தும் நாத்திகமே, சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளே!
தந்தை பெரியார் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழக இலக்கியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக  மாந்தரையே ஒரே குலமாக கருதிய போக்கு நிலவியது. அப்படிப்பட்ட மனிதநேயம் சார்ந்த மனப்பான்மை, அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்கிட இந்த உலக நாத்திகர் மாநாடு வலு  சேர்க்கும்; நாம் அனைவரும் வலிமை சேர்ப்போம். நாத்திகக் கருத்துகள் தழைத்தோங்கும் பொழுது மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும். அத்தகைய நிலை மையினை உருவாக்க உறுதி பூணுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாத்திகத்தின் பல்வேறு கூறுகள், கடைப் பிடிக்கப்பட தேவையான அணுகுமுறைகள் பற்றிய தலைப்புகளில் உரை வீச்சு ஆற்றப்பட்டு வருகிறது.

உலக நாத்திக மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு விஜயவாடா ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

பஞ்சாபிலிருந்து மாநாட்டிற்கு வருகைதந்த நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருடன்...

கோரா உலக நாத்திக ஆராய்ச்சி நூலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்...

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்


- விடுதலை நாளேடு,5.1.2020

வியாழன், 2 ஜனவரி, 2020

மலேசியா-பேராக் மாநிலம் ஈப்போ நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

ஈப்போ, டிச. 28- மலேசியா நாட்டு பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளை மலேசியா திராவிடர் கழகத்தினர் வெகு சிறப்பாக - கொள்கைப் பிரச்சார விழாவாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சி 27.12.2019 அன்று ஈப்போ நகர் மேடான் இஸ்தானா - ரிஷிபவன் உணவக மேல்தளத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் வருகை தந்திருந்தார். மக்கள் நீதிக் கட்சியின் (மலேசியா நாட்டு ஆளும் அரசியல் கூட்டணியில் அங்கம் வகித்து வரும்) சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மானமிகு இரா.கோபி வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தின் பொழுது, செல்வி.எல்லீஸ் ஏலன் தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையினை வாசித்தார். நிகழ்ச்சி நிறைவின் பொழுது பத்திரிகையாளர் எம்.ஏ.அலி 'யார் இவர்' எனும் தலப்பில் பெரியார் பற்றிய குறுங்கவியினை வாசித்தார். நிகழ்ச்சியில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக.பஞ்சு, ஆலோசகர் ரெ.சு.முத்தையா, பேராக் பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி.முனியரசன், மலேசிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் கு.கிருஷ்ணன், ஈப்போ நகர் கிளைத் தலைவர் ஏலன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம்

மலேசிய நாடாளுமன்றத்தின் சுங்கை சிப்புட் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்ரமணியம் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:

"நான் தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் கூட்டத் திற்கு வேண்டி விரும்பி பங்கேற்றுள்ளேன். தொடக்கத்தில் திராவிடர் கழகத்தைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. 2008ஆம் ஆண்டு சென்னை நகருக்குச் சென்றபொழுது அங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகள் ஓர் அரங்கில் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி எழுதியுள்ள புத்தகங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றுள் சில புத்தகங்களை வாங்கி வந்து படித்தேன். பெரியாரைப் படிக்க படிக்க என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு ஒருவித புதிய தன்னம்பிக்கை, புதிய துணிச்சல், விரிவாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு ஏற்பட்டது. தந்தை பெரியாரின் உழைப்பினால் மலேசிய நகர்த் தமிழ்ச் சமுதாயம் சுயமரியாதை உணர்வுடன் வாழ்வில் முன்னேறி இங்கு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். பெரியாருடைய கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டங்கள் வழி வகுக்கும். அடுத்த ஆண்டு தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியினை நாங்களே ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திடுவோம்.

இவ்வாறு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் தமது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகப் பொருளாளர் உரை

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் முதன் முதலாக வெளிநாட்டுச் சுற்றுப் பயணமாக மலேசிய நாட்டிற்குத்தான் வந்தார். பினாங்கு நகருக்கு கப்பலில் வந்த பெரியார் அடுத்த நாள் (21.12.1929) இந்த ஈப்போ நகரில் நடைபெற்ற தமிழர் சீர்திருத்த மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது மலேசிய நாடும், இந்தியாவும் பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தன. அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. இந்தியாவில் இயற்றப்பட்டதைப்போல பால்ய திருமண தடைச் சட்டம் மலேசியாவிலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், விதவை மணத்தை ஒவ்வொருவரும் ஆதரித்துக் கைக்கொள்ள வேண்டும் எனவும், குடும்ப சமுதாய நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைக் கைவிட்டு சிக்கனமாக நடத்திட வேண்டும் எனவும், மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமக்குள் நாட்டு வேற்றுமை பாராட்டாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியார் அன்றைய மலாய் நாட்டின் பல ஊர் களில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார். மக்களைச் சந்தித்து அவர்களது உயர்விற்கான வழிமுறைகளை வலி யுறுத்தினார். அந்த வருகை ஏற்படுத்திய தாக்கங்களை 1954ஆம் ஆண்டு மீண்டும் மலேயா நாட்டிற்கு பெரியார் வந்த பொழுது நேரடியாக பார்த்தார். 25 ஆண்டுகால இடைவெளியில் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இன்று அதைவிடப் பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டு, தமிழர்கள் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலைமைகள் ஏற்பட அன்றே வித்திட்டவர் தந்தை பெரியார். அந்த நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடாக தந்தை பெரியாரின் கொள்கைகளை மேலும் பரப்பிட இந்த நினைவுநாள் கூட்டத்தை மலேசிய திராவிடர் கழகத்தினர் நடத்துகின்றனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகள் எளிதாக நடை முறைக்கு வந்துவிடவில்லை. பலத்த எதிர்ப்புக்களுக்கிடையில் நடைமுறைக்கு வந்தது. பயன்பெற வேண்டிய மக்களே தொடக்க காலத்தில் எதிர்த்தனர். காரணம் அந்த அளவிற்கு பழைமைக்கு ஆட்பட்டு சமூக அடிமை வாழ்விற்குப் பழக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர். படிப்படியாக உண்மை நிலை உணர்ந்து முன்னேறினர். இன்றைக்கு தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு உலகம் முழுவதும் வரவேற்கப்படும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டு நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு நிகழ்வுகளாக, உலகினருக்கு எடுத்துக் கூறக்கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.

மலேசியாவில் தமிழர்கள் பலர் அரசியல் களத்தில் ஆளும் தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். ஏற்கெனவே தந்தை பெரியாரின் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சட்ட அனுமதியுடன் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால்தான். தமிழ் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலமே பெரியாரின் கொள்கைக் கடைப்பிடித்து மேலும் முன்னேறி வளம் பெற வேண்டும். அதற்கு அமைப்பு ரீதியான பிரச்சாரப் பணிகள் ஆக்கம் பெற வேண்டும். இந்த நினைவு நாள் கூட்டம் அப்படிப்பட்ட நிகழ்வாகும். தொடர்ந்து, அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள், பலரது பங்கேற்புடன் நடைபெற வேண்டும். இவ்வாறு வீ.குமரேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.

நிறைவாக மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேந்திரன் நன்றி கூறினார்.

இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது, பொதுப்படையான தமிழர்கள் பலரும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தது சிறப் புக்குரியதாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகம் நடத்திய தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முழுமையான கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்றது.

- விடுதலை நாளேடு 28 12 19

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 6

- ஒரு தொகுப்பு -

23.12.2019 அன்றைய தொடர்ச்சி...

கொலம்பியா பல்கலைக்கழகம்

(Columbia University)

400 ஆண்டு கால அமெரிக்க அய்க்கிய நாடுகளின் வரலாற்றில் 250 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க உயர் கல்வி நிலையம் கொலம்பியா பல்கலைக் கழகமாகும். நியூயார்க் நகரம் முழுவதும் வானைத் தொடும் கட்டிடங்கள் (Skyscrapers) நிறைந்திருந்தாலும், பழமையான கொலம்பியா பல்கலைக் கழகத்தால் நியூயார்க் நகரத்திற்கு கூடுதல் சிறப்பு சேருகிறது.

இந்தியாவில் பரோடா மன்னரின் சமஸ்தான நிதி உதவியில் உயர்கல்வி கற்க அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வந்து சேர்ந்த இடம் கொலம்பியா பல்கலைக் கழகம். மும்பையில் B.A. பட்டப்படிப்பை முடித்திருந்த நிலையில் 1913-15 ஆண்டுகளில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளியியலில் M.A. பட்டமும், பின்னர் டாக்டர் பட்டமும் அண்ணல் அம்பேத்கர் பெற்ற இடம் கொலம்பியா பல்கலைக்கழகமாகும்.. பல்கலைக்கழக வாயில் சிறியதாக இருந்தாலும், உள்ளே சென்றதும் முதற் கட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான நூலகத்திலேயே கொலம்பியா பல்கலைக் கழக முழுமையின் வீச்சை தெரிந்து கொள்ள முடிந்தது. பழமையின் சிறப்பைக் கட்டியம் கூறும் வகையில் அமைந்த பரந்து விரிந்த வளாகம். மாணவர்கள் (இருபாலரும்) ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த விதமும், நாமும் இந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்திருக்கக் கூடாதா? வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டதே! என்ற நினைப்பும் வந்தது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் அதன் மேனாள் மாணவரும், மானுடம் போற்றிய சட்ட மேதையுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு மார்பளவு சிலை எழுப்பப்பட்டு இருந்தது. வளாகத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்த பொழுது - அந்திசாயும் நேரமாகிவிட்டது. பல்கலைக்கழகத்தை விட்டு அகல முடியாமல், இரவு தொடங்குவதற்கு முன்னர் மற்றொரு முக்கிய நினைவுப் பூங்காவை பார்த்திட வேண்டும் என பல்கலைக்கழக வளாகத்தை விட்டு நீங்கினோம்.

ஸ்ட்ராபெர்ரி தோட்டம்

(Strawberry Fields)

நியூயார்க் மத்திய பூங்காவில் உள்ள ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் இசைப் பாடகர் ஜான் லெனன்

நினைவாக அமைக்கப்பட்ட 'Imagine' மொசைக் தளத்தில் தோழர்கள்.

நியூயார்க் நகரத்தின் மய்யப் பகுதியின் மத்தியப் பூங்காவில் உள்ளது ஸ்ட்ராபெர்ரி தோட்டம்.  எத்தனையோ தேசியப் பூங்காக்கள் அமெரிக்காவில் இருந்த போதிலும் இந்தப் பூங்காவிற்கு மட்டும் ஒரு கூடுதல் சிறப்பு உள்ளது. உலகப் புகழ் வாய்ந்த பீட்டில்ஸ்  (Beatles) பாடகர் எனப் பெயர் பெற்ற ஜான் லெனன் (John Lenon)  இந்தப் பூங்காவிற்கு அருகில் உள்ள டகோட்டா பகுதியில் தான் வசித்து வந்தார். காலை நேரத்தில் இந்த மத்தியப் பூங்கா விற்கு நடைபயிற்சிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டி ருந்தாராம்.

கிறிஸ்தவ மத நம்பிக்கையுடன் ஏசுகிறிஸ்து மீது மதிப்பு வைத்து வழிபடும் மக்களைக் கொண்ட மேலைநாட்டில், தனது இசைப் பாடல்கள் மூலம் 'ஏசு கிறிஸ்துவை விட பிரபலமானவர்' என ஜான் லெனன் போற்றப்பட்டார். இதனை சகித்துக் கொள்ளாத மதவெறியன் ஒருவன் 1980 டிசம்பர் 8-ஆவது ஜான் லெனன் நடைப் பயிற்சிக்கு சென்ற பொழுது அவரை சுட்டுக் கொன்றுவிட்டான். இசைப் பாடகர் நினைவாக நியூயார்க் மக்கள் 1985 -ஆம் ஆண்டில் மத்தியப் பூங்காவில் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை (Strawberry Fields) அமைத்து அர்ப்பணித்தனர்.

பாடகர் லெனன் பாடிய பிரபலமான பாடலான கற்பனை செய்வீர்!' (Imagine) நினைவாக 'Imagine Mosaic' எனும் ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அந்த இடத்தை மட்டும் பார்வையிட்டு, இரவு நேரமாகி விட்ட படியால் பூங்காவின் இதரப் பகுதிகளுக்குச் செல்லமுடிய வில்லை. மதவெறிக்குப் பலியான மாபெரும் இசைப் பாடகனின் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை,  Imagine Mosaic தளத்தை பார்த்த நிறைவுடன் விடுதிக்கு திரும்பினோம். நியூயார்க் நகரத்தின் முக்கிய இடங்களை பார்த்ததுடன் அமெரிக்க சுற்றுலா நிறைவுபெற்றது.

விடுதியில் இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் செப்டம்பர்  28 ஆம் நாள் காலை சிற்றுண்டியை விடுதியிலேயே முடித்துக் கொண்டு, விடுதியை காலி செய்து விட்டு நியூயார்க் நகருக்கு நினைவுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்கக் கிளம்பினோம். அமெரிக்காவில் 'ஒரு டாலர் கடை' (One $ Shop) மிகவும் பிரசித்தி பெற்றது. நல்ல பொருட்கள் ஒரு டாலர் (இந்திய ரூபாயில் 70-75 வரை) விலைக்கு வாங்க லாம். பகல் முழுவதும் கடைகளைச் சுற்றிப் பார்த்து வீட்டுக்கும் உற வினர்களுக்கும், நண்பர் களுக்கும், பொருட்களை வாங்கி மாலை நேரத்தில் சென்னைக்கு திரும்பிட நியூயார்க் விமான நிலை யம் வந்து சேர்ந்தோம். வாங்கிய பொருட்களை முறையாக அடுக்கி - கூடுதல் எடை எந்தப் பெட்டியிலும் இல்லாத அளவிற்கு அடுக்கி வைத் துக் கொண்டு தாயகம் திரும்பிட விமான பயணத் திற்கு தயாரானோம்..

அமெரிக்க நாட்டில் இரண்டு நாள் மாநாடு, கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள, அருகிலுள்ள வாஷிங்டன் D.C.  மேரிலாந்து, பெனிசில் வேனியா, நியூயார்க், மாசசூசெட்ஸ் ஆகிய மாநிலங்களிலுள்ள முக்கிய நகரங்களில் - முக்கிய இடங்களை சுற்றுலா சென்று பார்த்ததில் அமெரிக்காவைப் பற்றிக் கேள்விப்பட்டதை விட அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. விடுதலை வேட்கை, தனிமனித சுதந் திரம், அரசையும் மதத் தையும் பிரித்துப் பார்க்கும் மக்கள் என பாராட்டுதலுக்கு உரியவைகள் நிறைய இருந்தன. இருப்பினும் கருப்பர் இனத்தை அடக்கி ஆண்ட நிலைமை, அதனை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் மனப்போக்கு முரண்பாடாகத் தெரிந்தது. தனிமனித உணர்வுக்கு மதிப்பளித்தல், பிறர் விசயங்களில் தேவையற்ற தலையிடாத பண்பு, பெரும்பாலான நேரங்களில் மெதுவான குரலில் பேசும் பாணி, சாலை விதிகளை எந்தவித நிர்பந்தமுமின்றி இயல்பாகக் கடைப்பிடிக்கும் போக்கு, புதிய மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் புன்னகை புரிந்து மனித இயல்பைக் காட்டும் தன்மை என பல விசயங்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன. கல்வி கற்பதில், கல்வித் தரத்தில் பல மடங்கு முன்னேறியுள்ளனர். உயர்கல்வியில், வேலை வாய்ப்பில் உடன்பாட்டு செயல்முறை (Affirmative Action)  பாராட்டுக்குரியதாகும்; ஒடுக்கப்படும் நிலையில் உள்ள நம்நாட்டினர் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.

மிகப் பலருக்கு அமெரிக்கச் சுற்றுலா முதன்முறையாக இருந்தது. மிகச் சிலர் முன்னமே சென்று இருந்தாலும், சுற்றுலா செல்வது முதன்முறையே. எத்தனையோ பேர் வெளிநாட்டினர் அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருக்கலாம்.  ஆனால் சுயமரியாதைகாரர்கள் சென்ற அமெரிக்கச் சுற்றுலா மாறுபட்ட கண்ணோட்டத்துடன், மனிதநேயம் மதிக்கப்படுதல் பற்றிய புரிதலோடு இருந்தது. தனியாகச் சென்றிருந்தால் கூட இதில் கிடைத்த அனுபவம் பெற்றிருக்க முடியாது. சுற்றுலா செல்லுவது துணைத் திட்டமாக, மாநாட்டில் பங்கேற்பது முதன்மைத் திட்டம் என்ற அளவில் மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாடு ஏற்பாட்டாளர்களுக்குதான் சுற்றுலா சென்றதால் கிடைத்த அனுபவத்திற்கு நன்றி செலுத்த வேண்டும். மாநாடு, சுற்றுலா என வகைப்படுத்தி இரண்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வழிகாட்டிய தமிழர் தலைவருக்கு சுற்றுலா சென்ற சுயமரியாதைத் தோழர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பன்னாட்டு மாநாடு 2021-ல் நடைபெற உள்ளது. எங்கு நடைபெற உள்ளது என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அடுத்த மாநாட்டிலும் பங்கேற்று, சுற்றுலா செல்ல அணியமாக இருப்போம்.

வாழ்க பெரியார், வாழ்க பகுத்தறிவு, போற்றுக சுயமரியாதை மனிதநேயம்!

வீ. குமரேசன்

(நிறைவு)

- விடுதலை நாளேடு 28 12 19

மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் தந்தை பெரியாரின் 46ஆம்ஆண்டு நினைவு நாள் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பங்கேற்பு

மலேசியாவில் தந்தைபெரியாரின் கொள்கை யினை ஏற்று இயங்கி வருகின்ற திராவிடர் அமைப்புகளான மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், மலேசிய தமிழர் தன்மான இயக்கம் மற்றும் பேராக் மாநில பெரியார் பாசறை ஆகியவற்றின் கூட்டமைப்பின்  ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சார விழாவாக கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.

24.12.2019 அன்று மாலை 7 மணி அளவில் தொடங்கிய கூட்டம், கோலாலம்பூர் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள விஸ்வமாதன் சம்பந்தன் தான் சிறீடத்தோ கே.ஆர். சோமா அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை தலைமை வகித்தார். நினைவு நாள் கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்று மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் சுடர்மதி அம்மையார்  'பெரியார் தமிழரா' எனும் தலைப்பில் ஒரு ஆளுமையான கவிதையினைப் படைத்தார். கூட்டத்தில் மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் கெ. வாசு,   பேராக் மாநில பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி. முனியரசன், மலேசிய மலாக்கா மாநில  திராவிடர் கழகத்தின்  ஆலோசகர் ரெ.சு. முத்தையா, மலேசிய தமிழ்  மொழிக் கழகத்தின் தேசிய தலைவர் திருமாவளவன் மற்றும் பகான் மாநில சபாய் சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மின்னல் பண்பலை வானொலியின் அறிவிப்பாளர் புலவர் பொன் கோகிலம் கவிதை வாசித்தார். நிறைவாக தமிழக திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் எடுத்த முயற்சி வெற்றி

மலேசிய திராவிடர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் நவம்பர் 2019இல் கோலாலம்பூர் வருகை தந்த திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக அனைத்து மலேசிய திராவிடர் அமைப்புகளும் இணைந்து செயல்பட முன்வந்ததுபற்றி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இணைந்து செயல்படுவதன் அவசியத்தை உறுதி செய்து உரையாற்றினர். கூட்டமைப்பின் தலைவர்கள் தந்தை பெரியார் மலேசிய நாட்டிற்கு இருமுறை வந்து சென்றது பற்றியும், ஆதலால் தமிழர் தம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்  நன்றி கலந்த வெளிப்பாட்டுடன் உரையாற்றினர்.

தமிழ் மொழிக் கழகத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன் முதன் முறையாக கருப்புச்சட்டை அணிந்து தனது வாழ்வில் ஓர் புதிய அத்தியாயத்தை கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம்  தொடங்கியுள்ளதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மலேசிய பகான் மாநில சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு அவர்கள் பெண் விடுதலைக்கு தந்தை பெரியார் ஆற்றிய அரும் பணிபற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். மேலும் பெரியார் இயக்கத்தின் 'கடவுள் மறுப்பு' கொள்கையினை மறுத்துப் பேசிய தானும் கடவுளைப் பார்த்திட முடிய வில்லை என்பதை ஏதார்த்தமாக தனது கடவுள் மீதான நம்பிக்கை அற்ற நிலையினை வெளிப்படுத்தினார்.

கழகப் பொருளாளர் சிறப்புரை

நினைவுநாள் கூட்டத்திற்கு சிறப்பு வருகை தந்த  தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழகம் தாண்டி, தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் நிலையில் சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று அமைப்பு ரீதியில் செயல்பட்டு வரும் ஒரே நாடு மலேசியா. 1946ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலேசிய திராவிடர் கழகம் தமிழர் தம் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்தது. பெரியார் பற்றாளர்கள் பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாரின் 46ஆம்  நினைவு நாள் நடைபெறுவது தமிழர் தம் ஒற்றுமை கலந்த செயல்பாட்டு உணர்வினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தந்தை பெரியாரது சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகள்  தமிழகத்தில் மட்டுமல்லாது உலக மனிதர்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில், மனித குல மேம்பாட்டை வலியுறுத்துகின்ற வகையில் 'பெரியார் உலகமயம்' என்பதாகப் கொள்கைப் பரவல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. புரட்சிக் கவிஞரின் தந்தை பெரியாரின் 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்'  காலம் உருவாகி வருகிறது. 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பொழுதே தந்தை பெரியார் தமதுஉலகம் தழுவிய பார்வையினை உறுதிப்படுத்தினார். பெரியார்தம் கொள்கைகளை ஏற்று வாழ்பவர்கள், சமுதாயப் பணி ஆற்றுபவர்கள் மேம்பட்ட நிலையில்தான் உள்ளனர்; எந்தவிதமாற்றுக் கொள்கையினர்களைவிட செம்மாந்து வாழ்ந்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மனிதரின் முழு ஆற்றலை மனித மேம்பாட்டுக்குப் பயன்படுத்திட வழி அமைத்துள்ளது. 'இனிவரும் உலகம்' என அறிவியல் வளர்ச்சியினை தொலைநோக்கி மக்களிடையே அறிவியல் மனப்பான்மை பெருகிட வித்திட்டவர் தந்தைபெரியார். மக்களில் பாதியினரான பெண்களின் சமூகநிலை அனைத்து நாடுகளிலும் உரிய உரிமைகளுடன் இல்லை. பெண்கள் விடுதலை பெற்ற சமுதாயந்தான் முழு வெற்றி பெற்ற சமுதாயமாக வாழ்ந்திட முடியும் என உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில் தந்தை பெரியார் தமது மனிதநேயக் கருத்துகளை விதைத்து, அவரது வாழ் நாளிலேயே   அதன் விளைச்சலை பார்த்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகள், கொள்கைப் பரப்பை மேற்கொண்டு அடுத்த தலைமுறைக்கும் அவற்றை எடுத்துச் செல்கின்ற வகையில் மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் பணி அமைந்திட வேண்டும்.  பெரியார் தம் கொள்கைகளை உலகமயப்படுத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சிப் பணிகளுக்கு ஆக்கம்  ஊட்டிட நினைவு நாளில் உறுதியேற்போம், செயல்படுவோம்.

இவ்வாறு வீ. குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்ச்சியில் நன்றியுரையினை மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் சா.இரா. பாரதி வழங்கினார். நிகழ்ச்சியினை  ஒருங்கிணைத்து, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் தலைவர் பஞ்சு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் மலேசியாவின் பெரியார் இயக்க முன்னோடிகள், இன்றைய பொறுப்பாளர்கள் பலர் திரளாகக்  கலந்து கொண்டனர். பெரியார் நூலகத்தினை மலேசிய பள்ளிகளில் அமைத்து வரும் பணியினை தொடர்ந்து ஆற்றி வரும் மு.கோவிந்தசாமி மற்றும் கே.ஆர்.ஆர்.  அன்பழகன் உள்பட  மகளிர் பலர் வருகை தந்திருந்தனர். தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு கூட்டத்தின் வாயிலாக மலேசியத் தமிழர் வாழ்வில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு ஏதுவாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.  அனைவரின் பாரட்டுதலுக்கும், பெருமைக்கும் உரியதாக இருந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஒரு குடும்ப விழாவாக தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இனிதே நடந்தது.

(மேலும் தகவல்கள் 3ஆம் பக்கம் காண்க)

மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.

25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் ஓர் உலகத் தலைவர்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.

மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.

பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 - விடுதலை நாளேடு, 26.12.19

மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.

25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் ஓர் உலகத் தலைவர்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.

மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.

பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 26 12 19