வியாழன், 2 ஜனவரி, 2020

மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.

25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் ஓர் உலகத் தலைவர்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.

மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.

பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 26 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக