வியாழன், 25 பிப்ரவரி, 2021

இவர் பகுத்தறிவாளர் - புரூஸ் வில்லிஸ்

பகுத்தறிவு : பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

பெரியார் பன்னாட்டு மய்யம்’ அமெரிக்காவில் தொடங்கப்பட்டது

அமெரிக்கா செல்லும் ஆசிரியரை அகமகிழ்ந்து வழியனுப்பும் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்கள்

9.10.1994 மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் எனக்கு கழகத் தோழர்கள் ஏராளமானோர் விமான நிலையம் வந்து வழி அனுப்பினர். இரவு 9:00 மணியளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருக்கையில், கழகத் தோழர்கள் சால்வைகளையும், கைத்தறி ஆடைகளையும் அணிவித்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன்  சென்னை மாவட்டத் தலைவர்கள், நண்பர்கள், கழகப் பொறுப்பாளர்கள், தஞ்சை பெரியார் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என பெருந்திரளான தோழர்கள் கூடி என்னை வழி அனுப்பி வைத்தனர். என்னுடன் என் வாழ்விணையரும் அமெரிக்காவிற்கு வந்தார்.

29.10.1994 அன்று அமெரிக்காவில் செயின்ட் லூயிசில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், திராவிடர் கழகப் பொன்விழாவும் ஒன்றாக கொண்டாடப்பட்டன. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். விழாவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் தேவ் நேச்வில் டென்னசி பேசுகையில் “தாம் தமிழகத்திற்கு வந்தபொழுது 69 சதவிகித இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து அடைய முடியாத ஒன்று என்று அங்குள்ளோர் அனைவரும் சொன்னார்கள். ஆனால், அதை முறியடித்து அதை அடைந்து காட்டியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்’’ என்று நன்றியுணர்ச்சியுடன் கூறினார். செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் அரசு செல்லையா அவர்கள், திராவிடர் கழகத்தின் தொண்டைப் பாராட்டி எடுத்துரைத்தார். அங்கு சிறப்புரையாற்றுகையில், “மற்றவர்கள் என்னைப் பெருமைப்படுத்தி, பொது வாழ்க்கையில் ஈடுபடாவிட்டால் எங்கோ சென்றிருப்பார்” என்றார்கள். நான் எங்கும் சென்றிருக்க மாட்டேன். நான் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகி இருக்கலாம். பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், வேறு எதிலும் பெறமுடியாத உண்மையான மனநிறைவை, மகிழ்ச்சியைப் பெரியார் தொண்டனாக இருப்பதில் பெறுகிறேன்’’ என எடுத்து கூறினேன்.

மாலையில் “என்னை செல்ல மகனாக நினைக்கும் ஆல்டன் “மாம்’’ வர்ஜினியா கர்சனர் அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.’’ அவரிடம் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினையும் கழகம் ஆற்றிவரும் கல்விப் பணிகளையும் விளக்கிக் கூறினேன்.

அன்னை திருமதி.வர்ஜினியா கர்சனர்


அமெரிக்க சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு மய்யம் துவக்க விழா நிகழ்வில் ஆசிரியருக்கு சிறப்புச் செய்யும் விழாக் குழுவினர்கள்

13.11.1994 அன்று அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில தலைநகரான ராலே நகரில், கரோலினா தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் தணிசேரன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி கழகத்தின் பணிகளை எடுத்துக் கூறினார். அங்கு “பெண்ணுரிமை’’ என்னும் தலைப்பில் உரையாற்றுகையில், “வளர்ந்த நாடுகளில் கூட இன்றும் ஆண் ஆதிக்கம்தான் நிலவுகின்றது. முழுமையான பெண்ணுரிமை பெற்ற சமுதாயத்தினால்தான் மனிதநேயத்தை வளர்க்க முடியும். மனிதநேயத்தை வளர்ப்பதுதான் பெண்கள் உரிமை பெறுவதற்கு ஏற்ற வழி’’ என்பதை விளக்கி உரையாற்றினேன்.

சிகாகோ இந்தியத் தூதர் சின்காவுக்கு தந்தை பெரியார் புத்தகங்களை கொடுக்கும் ஆசிரியர் உடன் திரு.சந்திரஜித் யாதவ் அவர்கள்

13.11.1994 அன்று சிகாகோ நகரில் திரு.சந்திரஜித யாதவ், சிகாகோ இந்தியத் தூதரகத் தலைமைப் பொறுப்பாளர் மாண்புமிகு சின்கா முன்னிலையில் ‘பெரியார் பன்னாட்டு மய்யம்’ துவக்கப்பட்டது. அந்த துவக்க விழாவில் சிகாகோ இந்தியத் தூதர் சின்கா பேசுகையில் “அமெரிக்கர்கள் கேட்கும் “ஜாதி, மனிதாபிமான’’க் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது பூசி மெழுக வேண்டியிருக்கிறது. இனி பெரியார் மய்யம் அதற்கான பதிலை நேரிடையாகச் சொல்லும். ஆசிரியர் கி.வீரமணி, திரு.சந்திரஜித் இருவரின் பேச்சையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். “நன்றி எதிர்பார்க்காத இவர்களின் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்’’ என்று உளமார வாழ்த்தினார்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15 .11. 20

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஒப்பீடு! 1&2