பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசனின் 71 ஆவது பிறந்த நாள், நடராசன் - ராசலட்சுமி ஆகியோரின் 52 ஆவது மணவிழாவினையொட்டி அவரது இல்லத்தில் நினைவு கல்வெட்டினை தமிழர் தலைவர் திறந்து வைத்து, விழா நாயகருக்குப் பயனாடை அணிவித்தார். உடன் புதுச்சேரி மேனாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் (புதுச்சேரி, 23.7.2017)
திங்கள், 31 ஜூலை, 2017
ஜெர்மனி: பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு (27.7.2017)
பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசனின் 71 ஆவது பிறந்த நாள், நடராசன் - ராசலட்சுமி ஆகியோரின் 52 ஆவது மணவிழாவினையொட்டி அவரது இல்லத்தில் நினைவு கல்வெட்டினை தமிழர் தலைவர் திறந்து வைத்து, விழா நாயகருக்குப் பயனாடை அணிவித்தார். உடன் புதுச்சேரி மேனாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் (புதுச்சேரி, 23.7.2017)
ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது
பெரியார் நூல்கள் ஜெர்மன் மொழியில் வெளிவர உதவிய ஆராய்ச்சி வல்லுநர்கள் கிளாடியா வாடர், ஸவென் வொர்ட்மன் ஆகியோருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்
evolt ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆங்கில நூலான 'Periyar Self-Respect Movement'வெளியிட்ட காட்சி
கொலோன், ஜூலை 28 தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவப் பரப்பலின் முயற்சிகளில் ஒன்றாக ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு நடைபெறுகிறது.
ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழா" 27.07.2017 அன்று மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணி) எழுச்சியுடன் துவங்கியது.
மாநாட்டினை நடத்திடும் அமெ ரிக்க பெரியார் பன்னாட்டு மய் யத்தின் ஜெர்மனி நாட்டு கிளையின் தலைவர் பேராசிரி யர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் மாநாட்டுக்கு வருகை தந்தோர் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். பன்னாட்டு மாநாடு கொலோனில் நடைபெறுவதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி எடுத்துரைத்த அவர், அதற்காகப் பெருமைப்படுவதாகவும் தமதுரையில் குறிப்பிட்டார்.
தொடக்கம்
லண்டன் நகர கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வ நாயகம் மாநாட்டை திறந்து வைத்து சிறப்பானதொரு உரையினை வழங் கினார். பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டினை தொடங்கி வைப்பது தமது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு எனவும், பெரியாரின் மனிதநேய தத்துவம் உலகமெலாம் பரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பெரியார் தம் கொள்கைகளை உலகமயமாக்குப் பணியில் தாமும் இணைந்து பணியாற்றிட அணியமாக இருப்பதாகவும் கூறினார்.
புத்தக வெளியீடு
பன்னாட்டு மாநாட்டில் வெளியிட ஜெர்மன் மொழியாக்கத்தில் இரண்டு நூல்களும், மூன்று ஆங்கில நூல்களும் அச்சிடப்பட்டன. 'கடவுளும் மனிதனும்' (Gott und Mensch) எனும் தந்தை பெரியாரின் தமிழ் உரையினை உள்ளடக்கிய நூலினை கொலோன் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர் கிளாடியா வெப்பர் ஜெர்மனியில் மொழி பெயர்த்துள்ளார். 'பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்" (Periyar E.V. Ramasamy - Eine Kurzbiographie) நூலினை கொலோன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸவென் வொர்ட்மேன் ஜெர்மனியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு ஜெர்மனி மொழியாக்கங்களை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் வெளியிட, முதல் நூலினை ஸ்வீடன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உப்சல் மற்றும் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஸல்க் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதிய "பெரியார் சுயமரியாதை" (Periyar Self-Respect) எனும் ஆங்கில நூலினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட முதல் நூலினை ஜெர்மனியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் ராகுலன் - ஒலிவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
"பெரியார் நினைவிடம்: கல்வெட்டுப் பொன்மொழிகள்" (Inscriptions at Periyar Memorial) (தமிழ், ஆங்கிலம்) நூல்களை திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி வெளியிட பல்கலைக் கழக மாணவர் பாஸ்கல் பெற்றுக் கொண்டார்.
'ரிவோல்ட்' ஏட்டில் வெளிவந்த சுயமரியாதை தத்துவம், இயக்கம்பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான 'பெரியார் சுயமரியாதை இயக்கம்' (Periyar Self-Respect Movement) எனும் ஆங்கில நூலினை தமிழர் தலைவர் வெளியிட, வியட்நாம் நாட்டைச் சார்ந்த கொலோன் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் சினா முதல் நகலினைப் பெற்றுக் கொண்டார். ஜெர்மன் மொழியாக்க நூல்களைப் படைத்த கிளாடியா வெப்பர், ஸ்வென் வொர்ட்மேன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் அமெரிக்க நாட்டு மருத் துவர் சித்தானந்தம் சதாசிவம் மாநாட்டு வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்க பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டு சிறப்புரை
நிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி மாநாட்டு சிறப்புரையினை ஆற்றினார். சுயமரியாதை தத்துவம் பற்றி ஆங்கிலத்தில் அரியதொரு சொற்பொழிவினை வழங்கினார். தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குப் பயன்பட்டன. ஆனால் பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் அனைத்து நாட்டினருக்கும், ஒட்டு மொத்த மானிடருக்கும் உரியது. பெரியார் சுயமரியாதைத் தத்துவம், உலகளாவிய தத்துவம் எனக் குறிப்பிட்டு கூறி தமது உரையில் விரிவாக விளக்கிப் பேசினார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பேராளர்கள் பலரும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
-விடுதலை,28.7.17.
.
ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டிற்கு பேராளர்கள் புறப்பட்டனர்-1
கவிஞர் கலி. பூங்குன்றன்
மருத்துவர் பிறைநுதல் செல்வி
வீ.குமரேசன்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
கலைச்செல்வி அமர்சிங்
வெற்றிச்செல்வி கலி.பூங்குன்றன்
தங்கமணி கோவிந்தசாமி
தனலட்சுமி இராஜகோபாலன்
ஜெயராமன் பெரம்பூர் சிதம்பரநாதன்
முத்தையன் பக்கிரிசாமி
வீரபத்திரன் ராகவன் தேசப்பன்
கே. சோமசுந்தரம்
இராஜமாணிக்கம் பெரியசாமி
அன்பழகன் வெங்கடேசன்
சக்திவேல் கிருஷ்ணன்
கார்த்திக் சக்திவேல்
கணேசன் சன்னாசி
மு.க. ராஜசேகரன்
த. ஜெயகுமார்
சுப்பராயன் மண்ணாங்கட்டி
அ.தங்கசாமி
கே. முனியசாமி
கோவிந்தராஜன் வாஞ்சிநாதன்
சங்கர் திருஞானம்
சிவக்குமார் பழனியப்பன்
ஆ.கலைச்செல்வன்
சடகோபன் விவேகானந்தம்
விஜயானந்த் மண்ணாங்கட்டி
ஊமை. ஜெயராமன்
தமிழ்செல்வி ஜெயராமன்
லதாராணி பச்சையப்பன்
ராஜேந்திரன் சாமிக்கண்ணு
ஜெயச்சந்திரன் மாணிக்கம்
நாராயணசாமி காசி விஸ்வநாதன்
சிவ. வீரமணி
எஸ். எஸ். சுந்தரம்
சா.தேவதாஸ்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
ஜெர்மனியில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டிற்குப் பங்கேற்கச் செல்லும் பேராளர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் உள்ளிட்டோரை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் (சென்னை, 26.7.2017) - செய்தி 7ஆம் பக்கம் காண்க..
ஜெர்மனியில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு வைகோ, தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் வாழ்த்து
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், பெரியாரின் கடவுளும் மனிதனும் என்னும் நூல்கள் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. பெரியாரின் ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, பெரியாரின் நினைவிடம், கல்வெட்டு, பொன்மொழிகள் ஆகிய ஆங்கில நூல்களும் பெரியார் சுயமரியாதை எனும் ஆங்கில நூலும் இதே நிகழ்வில் வெளியிடப்பட உள்ளன. பெரியார் திரைப்படமும் ஒளிபரப்பாகின்றது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள சிறப்புமிகு மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்க உள்ளனர். சுயமரியாதை இயக்கம் குறித்து நடத்தப்பட்ட பன்னாட்டுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் பாராட்டி சிறப்பிக்கப்படுகின்றார்கள்.
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
இவ்வாறு கூறியுள்ளார்.
தங்களைப் போன்ற அனுபவசாலிகள் இம்மாநாட்டை வழிநடத்திச்செல்வது குறித்து நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம். உங்களின் சமூகப்பணிக்கான நடவடிக்கைக்கு எங்களது வாழ்த்துக்கள். மேலும் மாநாடு சீரும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்.
வெள்ளி, 28 ஜூலை, 2017
இனத்தால் திராவிடர் - மொழியால் தமிழர் - உலகத்தால் மனிதர்
- தொடரும்
புதன், 26 ஜூலை, 2017
ஜெர்மனியில் தந்தை பெரியார்
இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் சென்ற ஜெர்மனிக்கு அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. #வீரமணி அவர்களின் தலைமையில் தமிழ் நாட்டிலிருந்து 41 பேராளர்கள் வரும் 26ஆம் தேதி பிற்பகல் புறப்படுகின்றனர்.
எதற்காக? ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களிலும் நடைபெறும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான் செல்லுகின்றனர்.
எதற்காக? மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று 60 ஆண்டுகளுக்கு முன் பாடினாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அந்தத் தலைவரின் தத்துவத்தை மய்யப் பொருளாக வைத்து நடத்தப்பட உள்ள மாநாட்டில் பங்கு கொள்ளத்தான் செல்லு கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழ்நாடு, பிரான்சு முதலிய நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் பங்கேற்க இருக் கின்றனர். தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத் தத்துவம் குறித்து ஆய்வுக் கட் டுரைகளை அளிக்க இருக்கின்றனர்.(Inter National Conference on Periyar Self Respect Movement)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் ஒரு முறை சொன்னார். “திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லி மெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?” என்று சொன்னார்.
நான்காம் வகுப்புப் படித்த தலைவரின் கொள்கைச் சித்தாந்தங்களை நாடுகளைத் தாண்டிப் பரப்பிட பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar InterNational) அமெரிக் காவின் சிகாகோ நகரில் உருவாக்கப்பட்டது (13.11.1994).
இன்று அமெரிக்கா, லண்டன், பிரான்சு, மியான்மா, சிங்கப்பூர், துபாய், குவைத், ஜெர்மனி முதலிய நாடுகளில் கிளை பரப்பி அய்யாவின் கருத்துக்களைப் பரப்பும் அரும் பணியில், பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஜெர்மனியில் 2014 ஜூன் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளையின் தலைவராக பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத் தலைவராக கவன்வோர்ட், செயலாளராக கிளவுடியா வெப்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2014 ஜூன் மாதம் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவ லரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் மானமிகு கி. வீரமணி சென்றார்.
ஜூன் 3ஆம் தேதி மாலை “திராவிட இயக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைத் தத்துவமும்” எனும் தலைப்பில் அரிய உரையாற்றினார்.
மறுநாள் கொலோன் பல்கலைக் கழகத்தில் (4.6.2014) “இந்தி எதிர்ப்பு இயக்கம்” எனும் தலைப்பில் மாணவர் களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் “பவர் பாய்ண்ட்” வழி ஆய்வுரை வழங்கினார்.
ஓர் இணையருக்குச் சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அங்கு சென்றபோது தான் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளை தொடங்கப் பட்டது.
இந்தப் பெரியார் பன்னாட்டு அமைப்பு தான் ஆண்டுதோறும் “சமூக நீதிக்கான வீரமணி விருதை” வழங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 17 பேருக்கு அளிக் கப்பட்டுள்ளது.
ஜெர்மனி மாநாட்டிலும் இறுதி நாளன்று (29.7.2017) மைக்கேல் செல்வநாயகம் (துணைமேயர், கிராட்டன் மாநகராட்சி இங்கிலாந்து) அவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.
(விரிவான நிகழ்ச்சி நிரல் 13ஆம் பக்கத்தில் காண்க!)
50 ஆண்டுகளுக்கு முன் இதே ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டைப் பொறுப் பேற்று நடத்தியவர் உலகப் பேரறிஞர் என்று போற்றப்படும் வால்டர் ரூபன்; மாநாட்டின் ஓய்வு நேர இடைவேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட சில இந்திய அறிஞர்களுடன் உரையாடினார்.
அப்பொழுது வால்டர் ரூபன் ஒரு வினாவை முன் வைத்தார்.
“இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமையாளர் யார்? (Who is the Unpreceded Human Personality of the Present India?)என்பதுதான் அந்த அர்த்தமிக்க வினா.
காந்தி என்றனர், நேரு என்றனர். அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை அந்தப் பேரறிஞர்.
“நீங்களே சொல்லி விடுங்கள்” என்றனர் அந்த உரையாடலிலே பங்கு கொண்ட இந்திய அறிஞர்ப் பெரு மக்கள்.
உலகப் பேரறிஞர் வால்டர் ரூபன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி தான்!” என்று பட்டை தீட்டிய வகையில் பதில் அளித்தார் அந்தப் பேரறிஞர்.
இந்தத் தகவலைத் தெரிவித்தவர் யார் தெரியுமா? சாகித்ய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளரும், பிரபல எழுத்தாளருமான பொன்னீலன் அவர்கள்.
தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் என்பது உலகளாவிய “பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்ற கருப்பொருளைக் கொண்ட தாகும்.
2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மய்ய மாநாட்டுக்குச் செல்லுகிறோம் என்றால் இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அந்நாட்டுக்குச் சென்றதை எண்ணிப் பார்க்கிறோம். 19.5.1932 முதல் 14.6.1932 வரை 27 நாள்கள் ஜெர்மனியிலே எஸ். இராமநாதன், இராமு ஆகியோர்களுடன் தந்தை பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தந்தை பெரியார் சென்ற அம்மண்ணுக்கு தமிழர் தலைவர் தலைமையில் 41 இருபால் தோழர்களும் பயணிக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதே!
பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கத் தத்துவத்தின் மீது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.
பெரியார் காணும் சுயமரியாதை எத்த கையது என்பதை படம்பிடிக்கக் காத்திருக் கின்றனர். தந்தை பெரியார் பார்வையில் உலக விழிப்புக்கும், மாற்றத்திற்குமான பல அரிய சிந்தனை வித்துகளை எதிர்ப் பார்க்கலாம்.
26 ஜூலையில் புறப்படும் தோழர்கள் சில அய்ரோப்பிய நாடுகளிலும் (சுவிட்சர் லாந்து, இத்தாலி, பாரீஸ்) சுற்றுப்பயணம் சென்று ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் சென்னை திரும்புவர்.
தந்தை பெரியார்பற்றி பழி தூற்றும் தக்கைகளின் கண்கள் இதற்குப் பிறகாவது திறந்து புத்தி தெளிவு கொண்டால் மகிழ்ச்சியே!
பார்ப்பனர்கள் பதைப்பது புரிகிறது - பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று ஆக்கிக் கொண்டு, அவர்களின் தொங்கு சதைகளாக இருக்கின்றவர்கள் தான் திருந்த வேண்டும். எங்கே பார்ப்போம்!
-கவிஞர் கலி. பூங்குன்றன்......