புதன், 29 ஜூலை, 2015

கடவுள், மதங்கள் இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்


சென்னை, ஜூலை 1_ இன்சைடர்மாங்கி எனும் இணையப் பக்கத்தில் பன்னாட்டளவில் குறிப் பாக 11 நாடுகளில் நாத் திகர்கள் மற்றும் கடவுள், மதம் குறித்த கவலையற்ற வர்கள் அதிகரித்து வருவ தாக 11 நாடுகளைப் பட் டியலிட்டுக் குறிப்பிட்டுள் ளது.
மதங்கள் வழி நடந்து வரும் நாடுகளில் சமூக, தொழில்நுட்ப வளர்ச்சி கள் மந்தமாக  பின்னோக் கியே  இருப்பதையும் அந்த இணையப் பக்கத்தில் சுட் டிக் காட்டப்பட்டுள்ளது. உலகை குறிப்பிட்ட வடிவத்தில் வடிவமைப் பதில் மதம் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அம்மதத்தை மக்கள் ஏற் றுக்கொள்ளும் வரையில் தான் அது பொருந்தும். மதம் என்பதே நாட்டுப் புறங்களில் நிலவிவந்த கற்பனைகளின் அடிப் படையில் உள்ள கதைகள், பாடல்கள் ஆகியவை களின்மூலமாகவே மதக் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. மக்களைக் கவர்ந்த கற்பனைக்காவி யங்கள் எதையோ சொல்ல வருவதுபோல்,  தோன்றி னாலும், பொதுவான நடைமுறைகளில் மக்களி டையே உள்ள இயலாமை களின் அடிப்படையில் பரப்பப்பட்டு வந்துள்ளன. நம்முடைய அன்றாட வாழ்வில் இவை எதை யுமே நாம் கவனிப்ப தில்லை. அன்றைய காலம் தொட்டு புதிய புதிய மத நம்பிக்கைகளால், மதங் களும் அதன் பல்வேறு பிரிவுகளும், கிளைகளும் அதன் எதிரிகளின் குருதிக் கறைகளால், வாள்முனை யில் பிரகாசிக்கும் என்று எண்ணுகிறார்கள்.
சில மதங்கள் எப் படியோ நூற்றாண்டு காலங்களாக மக்களி டையே பின்னிப் பிணைந்து விட்டபடியால், இப் போதும்கூட உள்ள மக்க ளிடையே பிரபலமாக செல்வாக்குடன் அந்த மதங்களைப் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கின்ற நிலையைக் காணமுடிகிறது. ஆனால், அதனால் அந்த மக் களுக்கு நன்மை ஏதும் விளைகின்றதா? என்றால் இல்லை என்றுதான் கூற முடிகிறது.
நவீன உலகில் மதங் களை ஏற்கமுடியாத மதங் களுக்கு எதிரான நிலை உயர்ந்தவண்ணம் உள் ளது. நவீன உலகில் மக் களிடையே வேரூன்றிப் போய் உள்ளவைகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து கற்பிக்கவும், தனி மனித ஒழுக்கம், நன்மை, தீமைகளின் எல்லைகள் குறித்தும் கற்பிக்கப்படும் நிலை இயல்பாக ஏற்பட் டுள்ளது. ஆனால், மதங் களிடையே இதுபோன்று தொடங்கப்படவில்லை. மத நூல்களில் கூறப் பட்டவைகளைத் தவிர வேறு எந்த விளக்கங் களையும், மாற்றங்களை யும் ஏற்காமல், அந்த அடிப்படையிலேயே மதத் தின் கருத்துகளைப் பரப்பி  வருவதுடன், அவர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ச்சியாக வைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்டுப்பாட்டுடன்கூடிய கருத்துகளாக வானவெளி யில் இயற்கைக்கு மீறிய சக்தியுள்ளவர்கள் மிதந்து கொண்டிருப்பதாக கரு தும் நிலை குறைந்து கொண்டு வருகிறது.
நாம் இன்று வசித்து வரும் உலகில் அறிவியல்  முறையிலான விளக்கங் கள் பரவிவருகின்றன. அறிவியல் வளர்ச்சிகளால் நூற்றாண்டு கால கிறித் துவ சர்ச்சுகள் மூடப் பட்டுவருகின்றன. மக்களிடையே பெண் கள்மீதான வன்செயல்கள்,   கொலைகள் இருப்பது குறித்து எண்ணிலடங் காத புள்ளிவிவரங்கள் உள்ளன. பல்வேறு கலாச் சாரங்கள் உள்ள நிலை யில், பின்னிப்பிணைந் துள்ள கடவுள் கருத்து களால், தாங்கள் மகிழ்ச்சி யாக இருப்பதாக எண்ணு கிறவர்களும் இருக்கிறார் கள். அப்படி என்றால், கற் பனையில் உள்ளவைகளுக் காக தொடர்ச்சியாக பல காலங்களாக சண்டையிட் டுக் கொண்டிருப்பது ஏன்? இந்தக் கேள்வி ஒன் றும் ஆபத்தானதும் அல்ல. பதில்தான் தேவை. தற் பொழுதுள்ள காலகட்டத் தைப்போல் முன்பு எப் போதுமில்லாதவாறு மதங்கள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலை அதிகரித் துக்கொண்டு வருகிறது.
அமைதி, அன்பு, கருணை மற்றும் விழிப் புணர்வு ஆகிய அனைத் தும் ஒருங்கே அமைந் துள்ள கருத்துருவை நாம் அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம்.  மக்களி டையே தன்னம்பிக்கையை விதைப்பவையாக உள் ளன. ஆனால், அவை களை அச்சுறுத்தலின் மூலமாக திணிப்பது, அவைகளை வலியுறுத்துவ தாகக்கூறி குருதியை சிந்தச் செய்வது, தொல் லைகளைத் தருவது சரி யான வழி அல்ல. இது போன்ற வழிமுறைகள், நாம் பார்க்கின்ற நாத்தி கர்களை, கடவுளைப்பற் றிய கவலையற்றவர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இல்லை என்பதைப் பார்க் கலாம்.
1.சுவீடன் நாத்திகர்கள், கடவுள் கவலையற்றவர்கள் அதி கரித்துள்ள 11 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவீடன் உள்ளது-. சுவீடன் நாட்டின் மக்கள் தொகை யில் 80 விழுக்காடு மக்கள் மதங்கள் தொடர்பில் கற்பித்துள்ள பழங்கதை களையோ, புராணங் களையோ அவர்கள் எந்த வகையிலும் ஏற்பதாக இல்லை என்று புள்ளி விவ ரங்கள் குறிப்பிட்டுள்ளன.
2. டென்மார்க்
அதிக எண்ணிக்கையி லான நாத்திகர்கள் அல் லது கடவுள் கவலை அற் றவர்கள் அதிகம் கொண் டுள்ள நாடு மட்டும் அல்ல. மிகக்குறைந்த அள விலான மத நம்பிக்கை உள்ள மக்கள் கொண் டுள்ள நாடாகவும் டென் மார்க் இருக்கிறது. 80 விழுக்காடு மக்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு சிறிதளவேனும் இருப்பது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளனர். இந்த ஸ்காண்டினேவியன் நாடான டென்மார்க், பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. ஈஸ்டோனியா
ஈஸ்டோனியா பட்டிய லில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அய்ந்தில் ஒரு வருக்கும் குறைவாக உள்ள வர்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு முக்கிய மான பங்காற்றிவருவ தாகக் குறிப்பிட்டுள்ளனர்.
4.நார்வே
ஸ்காண்டினேவியன் நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டில் கடந்த காலங்களில் கிறித்துவ சர்ச்சுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் பிரபலமா னவை. நார்வே நாட்டின் மக்கள்தொகை, உலகில் உள்ள மதங்களின் எண் ணிக்கையைப்போல் அதி கமாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால், அதுதான் கிடையாது. அதேநேரத்தில், குறைந்த அளவிலான மத நம் பிக்கை உள்ள மக்கள் இருக்கின்றனர். பட்டிய லில் நான்காம் இடத்தில் நார்வே உள்ளது.
5. ஹாங்காங்
சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக சிறப்பு நிர் வாகத்தின்கீழ் தனித்துவ மான சுயாட்சி பெற் றுள்ள நாடாக ஹாங் காங் நாடு, பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
இந்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றி என்பதே அந்நாட்டு மக்கள் மதத்தை விட்டு ஒழித்ததால்தான் சாதிக்க முடிந்துள்ளது.
6. நெதர்லாந்து
நெதர்லாந்து மக்கள் சற்றேறக்குறைய அனை வருமே வாழு, வாழ விடு கொள்கையைப் பின்பற்று பவர்களாக இருக்கிறார் கள். அந்த நாட்டில் உள்ள கடவுளர்கள் அத் தனையும் சுற்றுலாவாசி கள் காண்பதற்காக மட் டுமே இருக்கின்றன. நெதர் லாந்து மக்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற் றத்துக்கான அவர்களின் செயல்களுக்கு குறிப்பிடத் தக்க அளவில் மதத்தின் பங்களிப்பு தேவையெனக் கருதவில்லை.
7. ஜப்பான்
ஜப்பான் நாட்டில் சுற்றுலா வருபவர் எண் ணிக்கை என்பதே சுருக்க மாக இருந்துவருவதாகும். காரணம் உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருப் பதைப்போன்று மதவாதி களுக்கான இடம் என எங்குமே கிடையாது. இன்று மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரண மாகத் திகழக்கூடிய அள வில் பலதுறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.
8. செக் குடியரசு
மகிழ்ச்சிகரமான மக் களின் தொகுப்பு உள்ள நாடாக செக் குடியரசு திகழ்ந்து வருகிறது. முத லில் அந்நாட்டில் குடிப் பிரியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். உழைப்ப தும், களிப்பதுமாக இருந்து வரும் செக் குடியரசு மக் கள் தங்களின் மகிழ்ச்சி கரமான வாழ்வில் கேடு பயக்கும் மதங்களை அனுமதிப்பதே இல்லை.
9. அய்க்கியப் பேரரசு
அய்க்கியப் பேரரசா கிய இங்கிலாந்து நாட்டில் பல்வேறு காலகட்டங் களில் நாடுமுழுவதும் பல்வேறு கிறித்துவ சர்ச் சுகள் அமைக்கப்பட்டுள் ளன. கடந்த காலங்களில் அய்க்கியப் பேரரசில் சில முக்கிய நிகழ்வுகளில் மதங்களின் சர்வாதிகாரத் தன்மைகள் மேலோங்கி இருந்துவந்துள்ளன. நீண்ட காலத்திற்கு அப் படித்தான் இங்கிலாந்தில் இருந்துவந்தார்கள். அதெல்லாம் ஒருகாலம். ஆனால், தற்பொழுது நாத் திகர்கள், கடவுள் கவலை யற்றவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். பட் டியலில் 9 ஆம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
10. பின்லாந்து
ஸ்காண்டினேவியன் நாடுகள் இந்தப் பட்டிய லுக்குள் வருமா? எனக் கருதினால், அது சரியானது தான். பின்லாந்து நாடு, ஸ்காண்டினேவியன் நாடு களில் மிக அதிகஅளவில் மத நம்பிக்கைகளுடன் இருந்து வரும் நாடு. பன் னாட்டளவில் நாத்திகர் கள், கடவுள்குறித்த கவலை யற்றவர்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டிய லில் 10 ஆவது இடத்தில் பின்லாந்து உள்ளது.
11. பிரான்ஸ்
பிரான்சு நாட்டு மக்கள் தங்களின் வாழ்வில் மதம் முக்கியப் பங்காற்றுவது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளார்கள். பன்னாட் டளவிலான கத்தோலிக்க மய்யம் அளித்துள்ள தக வலின்படி, பிரான்சு நாட் டில் சர்ச்சுகள் முக்கியமாக ஒட்டுமொத்தமாக மூடப் பட்டுவரும் நிலை இதை உணர்த்திவருகிறது.
இவ்வாறு பன்னாட் டளவில் நாத்திகர்கள், கடவுள், மதம்குறித்த கவ லையற்றவர்களாக உள்ள வர்கள் அதிகரித்துவரு கிறார்கள் என்பதற்கான 11 நாடுகளின் பட்டியலை இன்சைடர்மாங்கி இணைய தளம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் குறிப் பிட்டுள்ளது.
விடுதலை,1.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக