சனி, 28 செப்டம்பர், 2019

அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்புகளின் சார்பில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்



தெலங்கானா மாநிலத்தில் அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பகுஜன் மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவ அமைப்புகளின்  முயற்சியால் செப்டம்பர் 17 அன்று தந்தை  பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

- விடுதலை நாளேடு, 28 .9. 19

புதன், 25 செப்டம்பர், 2019

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருது

விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை;

பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப்பட்டுள்ளது-பெரியார்தாம் விருதுக்கு உரியவர்

இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது

விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை


வாஷிங்டன், செப்.23 ‘‘மனிதநேய சாதனையாளர் விருது'' தனிப்பட்ட முறையில் எனக்கு வழங்கப்படவில்லை. பெரியாரின் தொண்டன் என்பதனால்தான் வழங்கப்பட் டுள்ளது; பெரியார்தாம் விருதிற்கு உரியவர். இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான ‘‘மனிதநேய வாழ் நாள் சாதனையாளர் விருது'' வழங்கப்பட்டது. அவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்.

அவரது உரையின் சுருக்கம் வருமாறு:

விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையில், ‘‘விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட வில்லை; பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப் பட்டுள்ளது. பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது மேலும் பணியாற்றுவதற்கு - இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப் பிற்குக் கிடைத்த விருது'' எனக் குறிப்பிட்டு மிகவும் நெகிழ்ச்சி கரமாகப் பேசினார். உலகளாவிய அளவில் ‘‘சுயமரியாதை மனித நேயம்'' பற்றிய நீண்டதொரு ஆழமான உரையினை வழங்கினார்.

அதற்கு முன்னதாக,  கலிபோர்னியா பெர்க்லிபி பல்கலைக் கழக தமிழ்ப்புல மேனாள் தலைவரும், சமஸ்கிருத அறிஞரு மான பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்  ‘‘செவ்வியல்,  தமிழி லக்கியங்களில் மனிதநேயக் குறிப்புகள்'' எனும் தலைப்பில் ஓர் ஆய்வுரையினை வழங்கினார்.


அடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது. விருது வழங்கிடும் நிகழ்வின் வரவேற் புரையினை பேராசிரியர் முனைவர் அரசு செல் லையா வழங்கினார். அமெரிக்கா மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருது பெறவுள்ள தமிழர் தலைவர்பற்றிய சிறப்பினை எடுத்துரைத்து விருதினை தமிழர் தலைவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் ‘மனிதநேயமும் திராவிட இயக்கமும்' எனும் தலைப்பில் திராவிட இயக்க சாதனைகள்பற்றி உரையாற்றினார்.

அடுத்து ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழக தென் ஆசிய & தென்கிழக்கு ஆசியப் புலம் பேராசிரியர் முனைவர் ஸ்வென் வொர்ட்மென் ‘பரிணாமம் மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். எழுத்தாளர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன், ‘பெரியாரும் மனிதநேயமும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்து ‘மாற்ற அறிவியல் - ஆதாரம் அடிப்படையிலான செயல்பாடு' எனும் தலைப்பில் டெப்பி கோடார்டு உரை யினை வழங்கினார்.

நண்பகல் உணவிற்குப் பின்னர் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கின. கருத்துகள நிகழ்ச்சியினை ஊடகவியலாளர் ப.திருமாவேலன் முகவுரையாற்றி தொடங்கி வைத்தார்.

கருத்துக் களத்தில் மருத்துவர் சரோஜா இளங்கோவன், ‘பெண்ணின் நிலை: பெரியாருக்கு முன், பெரியாருக்குப்பின்' எனும் தலைப்பிலும்,

அகத்தியன் பெனடிக்ட், ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு..... தந்தை பெரியார்' எனும் தலைப்பிலும்,

பெனிசில்வேனியா பன்னீர்செல்வம் இராஜமாணிக்கம், ‘வைகறை - வைக்கம் பெரியார்' எனும் தலைப்பிலும், சிகாகோ செல்வி அகிலா செல்வராஜ், ‘இன்றைய கல்வியும், கேள்விக் குறியாகும் சமூகநீதியும்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

கருத்துக் களத்தில் அடுத்து எம்.வி.கனிமொழி, ‘திராவிட இயக்கம் பதித்த தடங்களும் இன்று சந்திக்கும் பிரச்சினை களும்' எனும் தலைப்பிலும்,

துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், ‘உயர்ஜாதி ஒதுக்கீடும் சமூகநீதியும்' எனும் தலைப்பிலும்,

சிகாகோ சரவணக்குமார், ‘அறிவியக்கத்தின் தேவை' எனும் தலைப்பிலும்,

வேல்முருகன் பெரியசாமி, ‘பெரியாரைத் துணைக்கோடல் இன்றைய தேவை' எனும் தலைப்பிலும்,

மேரிலாந்து மணிக்குமார், ‘ஒரு நாடு, ஒரு மொழி, ஒரே மதம் - பொய்' எனும் தலைப்பிலும் கருத்துகளை வழங்கி னார்கள்.

அடுத்து ஊடகவியலாளர் ப.திருமாவேலன், ‘தமிழ்த் தேசியமும், பெரியாரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். திராவிடம் என்பதில் தமிழ்த் தேசியம் அடங்கும் என்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன், ‘மனிதநேயமும் சமூகநீதியும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

எழுச்சித் தமிழர் உரையாற்றுவதற்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் மாநாடு நடந்த விதம்பற்றி சுருக்கமாக உரையாற்றினர்.


மாநாட்டு நிறைவு அமர்வில் அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் மேனாள் செயல் இயக்குநரும், ‘தி ஹியூமனிஸ்ட்'  (The Humanist) ஆங்கில ஏட்டின் மேனாள் ஆசிரியருமான பிரட் எட்லர்ட்ஸ், ‘மகிழ்ச்சியான வாழ்வு' என்பதுபற்றி உரையாற்றினார்.

மாநாட்டின் நிறைவுரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘எதிர்காலம்' எனும் தலைப்பில் செய்யவேண்டிய பெரியார் பணிகள்பற்றி அரியதொரு உரையினை ஆற்றினார்.

அமெரிக்க தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருவதற்கான ‘சேவை விருது'களை மருத்துவர் சரோஜா இளங்கோவன், குழந்தைவேலு ராமசாமி, ஜெயந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பரிசினை வழங்கினார்.

இரண்டாம் பன்னாட்டு மாநாடு முதலாம் பன்னாட்டு மாநாட்டைவிட  ஏற்பாட்டிலும், பேராளர்கள் பங்கேற்பிலும் வெகுசிறப்பாக நடந்தேறியது. முதல் நாள் மாநாட்டை பெரியார் பன்னாட்டு மய்யம் மட்டும் நடத்தியிருந்தது. இரண்டாம் நாள் மாநாட்டை அமெரிக்க மனிதநேயர் சங்கத்துடன் இணைந்து நடத்தியது மாநாட்டு சிறப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இரண்டு நாள் மாநாட் டிலும் சிறப்பாகப் பங்கேற்று, 2021  ஆம் ஆண்டு நடை பெறவுள்ள பன்னாட்டு மாநாட்டிலும் பங்கேற்றிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பேராளர்கள் விடைபெற்றனர். பெரியார் கொள்கைகளை உலக மயப்படுத்துதலில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு ஒரு சாதனை மைல் கல்லாகும்.

- விடுதலை நாளேடு, 23. 9. 19

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது


வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவுப்பரிசாக புத்தகங்கள் வழங்கினார். உடன் அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் ஆகியோர் உள்ளனர்.
வாஷிங்டன், செப். 22 அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யமும், அமெரிக்க மனிதநேயர் சங்கமும் இணைந்து நடத்திடும் வாஷிங்டன் நகர் - மேரிலாந்துப் பகுதியில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு வெகு சிறப்பாகத் தொடங்கியது.
அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் மனிதநேயர்கள், பெரியார்தம் சுயமரியாதைக் கருத்தாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிட வருகை தந்தனர்.
இரு நாள்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழா செப்டம்பர் 21ஆம் நாள் தொடங்கியது. மேரிலாந்து பகுதியில் அமைந்துள்ள மாண்ட்கோமரி கல்லூரியின் கலாச்சார கலை மய்யத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது.
தொடக்க விழாவில் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் முகவுரை வழங்கிட, அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெர்க்ஹார்ட் வரவேற்புரை ஆற்றினார்.
புத்தக வெளியீடு
பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகளான இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தந்தை பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' - ஜெர்மன் மொழி பெயர்ப்பு (மொழி பெயர்ப்பாளர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ்) நூலும், பெரியாரின் வழித் தடமும் அவரது சீடர் ஆசிரியர் (Periyars Footprints and His Disciple Asiriyar) ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பேராசிரியர் அ. அய்யாசாமி - மூலநூல் மஞ்சைவசந்தன் எழுதிய 'வியப்பின் மறுபெயர் வீரமணி' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
அமெரிக்க மனிதநேய சங்கத்தின் ராய் ஸ்பெக்ஹார்ட் புத்தகங்களை வெளியிட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி புத்தகங்களை வெளியிட்ட ராய் ஸ்பெக்ஹார்ட் அவர்களுக்கு நினைவுப் பரிசாக 'தந்தை பெரியாரின் பணிகள்'(COLLECTED WORKS OF PERIYAR E.V.R.) நூலினை வழங்கினார்.
தொடக்க விழாவினைத் தொடர்ந்து பல்வேறு அமர்வுகளில், பல்வேறு தலைப்புகளில் மனிதநேய அறிஞர்கள் கருத்துரை வழங்கிட உள் ளனர்.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ”அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் மனிதநேயமும் சுயமரியாதையும்” என்ற தலைப்பிலான கலந்தாய்வு அமர்வில்  தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டின் துவக்க முதல் அமர்வில் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அறிமுக உரையாற்றினார். முதல் அமர்வில் 'மதமின்மையே சிறப்பு' எனும் தலைப்பில் ஜெர்மனியைச் சார்ந்த  பிலிப் மொல்லர் கருத்துரை வழங்கினார். 'வரவேற்புரை' எனும் தலைப்பில் மாநாட்டிற்கு வந்திருந் தோரை வரவேற்கும் வகையில் அமெரிக்கா - மேரிலாந்து 8ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் உரையாற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப் பின் தொடங்கிய இரண்டாம் அமர்வில், 'மனிதநேயர் கண்ணோட்டத்தில் பெண்ணியம்' எனும் தலைப்பில் பெண்ணுரிமைப் போராளி டோனி வான் பெல்ட் உரையாற்றினார். அடுத்து திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், 'தந்தை பெரியாரும், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும்' எனும் தலைப்பில் தமது ஆய்வுரை யினை வழங்கினார். பின்னர் 'மனிதநேயப் பணியில் இளைஞர் களை எப்படி பங்கேற்றிட செய்வது?' எனும் தலைப்பில் ரியான் பெல் உரையாற்றினார்.
சிறார் பங்கேற்பு
அடுத்த அமர்வு சிறார் பங்கேற்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. 'மனித நேயம்' எனும் தலைப்பில் யாழினியும், 'மனிதநேயமும் பருவ நிலை மாற்றமும்' எனும் தலைப்பில் மோனா சந்திரசேகரன் உரையாற்றிய பின்னர் 'பெரியாரும் கடந்த காலத் தலைவர்களும்' எனும் தலைப்பிலும் உரை யாற்றினர்.
அம்பேத்கர், நாகம்மையார், மணியம்மையார், ரோசா பார்க் ஆகியோர் போல் வேடமணிந்து சிறார்கள் அரங்கத்திற்கு வந்து  அனைவரின் கரவொலியினைப் பெற்றனர்.  போட்டியில் பங்கேற்ற சிறார்களுக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சான்றிதழினையும், பரிசுப் பொருள்களையும் வழங்கினார்.
மாநாட்டில் புதிய புத்தகங்களை வெளியிட்ட அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் அவர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களையும், நினைவுப்பரிசினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார்.
அடுத்து நடைபெற்ற அமர்வில் பெரியார் பன்னாட்டு மய்ய ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர்
மனிதநேயக் கண்ணோட்டத்தில் பெண்ணியம் என்னும் தலைப்பில் உரையாற்றிய டோனிவான் பெல்ட் அவர்களுக்கு தமிழர் தலைவர் நினைவுப் பரிசினை வழங்கினார்.
முனைவர் உல்ரிக் நிக்லஸ் 'உலக மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். தமது உரையினை நிறைவு செய்து 'புதிய வானம், புதிய பூமி,  எங்கும் தமிழ் மொழி பரவுகிறது' எனப் பாடி அனைவரது பாராட்டுதலைப் பெற்றார். பின்னர் நடைபெற்ற அரங்கில் அறிமுக உரையினை குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் சித்தானந்தம் ஆற்றிட கனடா வான்கூவர் நகரிலி ருந்து வருகை தந்திருந்த தென் ஆசிய மனிதநேயர் சங்கத்தின் வெளியுறவுச் செயலாளர் டாக்டர் மாத்வி போட்லூரி 'ஜாதி அமைப்பும் டி.என்.ஏ. பரிசோதனையும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் உணவிற்குப் பின்னர் நடைபெற்ற அமர்வின் ஒருங்கிணைப்பாளரான திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி 'சமூகநீதி' பற்றி உரையாற்றித் தொடங்கி வைத்தார். பெண்ணியலாளரும், உளவியல் நிபுணருமான கிளாரா ஆர்தரும், கருப்பினர் அமைப்பின் தலைவர் நார்ம் ஆர் ஆலனும் 'சமூகநீதியும் விளிம்பு நிலை மனிதரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  சிறப்பு விருந்தினர்களுக்கு பகுத்தறிவு நூல்களை அளித்தார்
பின்னர் நடைபெற்ற அமர்வில் வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர் ராமசாமி அறிமுக உரையாற்றிட, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் தமிழ்க் கல்விப் புலத்தின் மேனாள் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் சிறப்புப் பேச்சாளரான டாக்டர் ஆர். பிரபாகரன் பற்றிய குறிப்பினை வழங்கினார். 'திருக்குறளில் மனிதநேயம்' எனும் தலைப்பில் டாக்டர் ஆர். பிரபாகரன் ஆழ்ந்த ஆய்வுரையினை வழங்கினார். 'மனித நேயர்களின் பொறுப்புகள்' எனும் தலைப்பில் அமெரிக்க மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பினைச் சார்ந்த டெப்பி ஆலன் சிறப்புரை ஆற்றினார்.

- விடுதலை நாளேடு, 25.9.19