உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம்
- உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.
- ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூபியாகவும் இருப்பது உண்மையே.
- உண்மை ஆனந்தத்தின் தாய். உண்மை மக்களை நாகரிகப் படுத்துகிறது; உண்மை மக்கள் உள்ளத் திலே உன்னத லட்சியத்தைத் தோற்று விக்கிறது; மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.
- உண்மையை அறிவதைவிட உயர்வான லட்சியம் மக்களுக்கு இல்லவே இல்லை.
- நன்மை செய்வதற்கான அபார சக்தியை உண்மை மனிதனுக்குக் கொடுக்கிறது.
- உண்மையே கட்கமும் (வாள்) கவசமும்.
- உண்மையே ஜீவியத்தின் புனித ஒளி.
- உண்மையைக் கண்டுபிடிக்கும் மனிதன் வாடா விளக்கு ஏற்று கிறான்.
- பகுத்தறிவின் உதவியால் ஆராய்ச்சி செய்து, சோதனை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண் டும்.
- அவரவர் ஆற்றலுக்கும், விருப் பத்துக்கும் தக்கபடி உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவருக்கும் வசதி அளிக்க வேண்டும்.
- உலக இலக்கியங்களெல் லாம் மக்களுக்குப் பொது. அவற்றை எல்லோரும் படிக்க வசதியிருக்க வேண்டும்; எத்தகைய தடையும் இருத்தல் கூடாது.
- சாமானிய மக்களால் அறிய முடியாதபடியான எந்த விஷயமும் அவ்வளவு உயர்வானதல்ல - புனித மானதல்ல.
- நூல்களைச் சுயமாக வாசித்து அவரவருக்கு விருப்பமான முடிவுக்கு வர ஒவ்வொருவருக்கும் வசதியும் சுதந்தரமும் அளிக்க வேண்டும்.
- அவனவனுக்குத் தோன்றும் உண்மையான அபிப்பிராயங்களை வெளியிடவும் தடையேற்படுத்தக் கூடாது.
- -விடுதலை.1.3.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக