ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இங்கர்சால் பொன்மொழிகள்



உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம்
  • உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.
  • ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூபியாகவும் இருப்பது உண்மையே.
  • உண்மை ஆனந்தத்தின் தாய். உண்மை மக்களை நாகரிகப் படுத்துகிறது; உண்மை மக்கள் உள்ளத் திலே உன்னத லட்சியத்தைத் தோற்று விக்கிறது; மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.
  • உண்மையை அறிவதைவிட உயர்வான லட்சியம் மக்களுக்கு இல்லவே இல்லை.
  • நன்மை செய்வதற்கான அபார சக்தியை உண்மை மனிதனுக்குக் கொடுக்கிறது.
  • உண்மையே கட்கமும் (வாள்) கவசமும்.
  • உண்மையே ஜீவியத்தின் புனித ஒளி.
  • உண்மையைக் கண்டுபிடிக்கும் மனிதன் வாடா விளக்கு ஏற்று கிறான்.
  • பகுத்தறிவின் உதவியால் ஆராய்ச்சி செய்து, சோதனை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண் டும்.
  • அவரவர் ஆற்றலுக்கும், விருப் பத்துக்கும் தக்கபடி உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவருக்கும் வசதி அளிக்க வேண்டும்.
  • உலக இலக்கியங்களெல் லாம் மக்களுக்குப் பொது. அவற்றை எல்லோரும் படிக்க வசதியிருக்க வேண்டும்; எத்தகைய தடையும் இருத்தல் கூடாது.
  • சாமானிய மக்களால் அறிய முடியாதபடியான எந்த விஷயமும் அவ்வளவு உயர்வானதல்ல - புனித மானதல்ல.
  • நூல்களைச் சுயமாக வாசித்து அவரவருக்கு விருப்பமான முடிவுக்கு வர ஒவ்வொருவருக்கும் வசதியும் சுதந்தரமும் அளிக்க வேண்டும்.
  • அவனவனுக்குத் தோன்றும் உண்மையான அபிப்பிராயங்களை வெளியிடவும் தடையேற்படுத்தக் கூடாது.
  • -விடுதலை.1.3.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக