ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஜெர்மனி உலகப் பகுத்தறிவாளர் மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு






புதுச்சேரி, செப். 12_ புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் 6.9.2015 புதுச்சேரி ராசாநகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கைலாச நெ.நடராசன் வரவேற்பு ரையாற்றினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமை தாங் கினார். புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீர.இளங்கோ வன், மண்டல கழகச் செய லாளர் கி.அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கள் ஜி.கே.எம், லோ.பழனி, மேனாள் ப.க.தலைவர் கோ.கிருட்டிணராசு ஆகி யோர் முன்னிலை வகித்த னர். புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட பகுத்தறிவா ளர் கழக துணைத் தலை வர் மு.ந.நடராசன் இணைப் புரையாற்றினார். முன்னதாக கன்னட மூத்த எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியு மான பகுத்தறிவாளர் எம். எம் கல்புர்கி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து ஒரு நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப் பட்டு வீரவணக்கம் செலுத் தினர். மறைந்த ஏவுகணை விஞ்ஞானி ஆ.ப.ஜெ. அப் துல்கலாம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்க ணம் தந்த அறிஞர் இரா பர்ட் கால்டுவெல் ஆகி யோரின் படங்களை பகுத் தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் மா.அழகிரி சாமி அவர் கள் கழக பொறுப்பாளர் கள் முன்னிலையில் திறந்து வைத்தார். எதிர்வரும் காலங்களில் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் செயல்படவேண்டியது பற்றி கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவா ளர் கழக பொறுப்பாளர் கள் தெரிவு செய்யப்பட்டு பொதுச்செயலாளர் மா. அழகிரிசாமி அவர்கள் அறிவிப்பு செய்தார்கள்.
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள்
புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகப் புரவலராக மேனாள் திராவிடர் கழ கப் பொருளாளர் தொழில் அதிபர் இரா.சடகோபன் அவர்களும், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவராக மீண்டும் வீர. இளங்கோவன் அவர்க ளும், துணைத்தலைவராக பட்டய கணக்காளர் கு. இரஞ்சித்குமார் அவர் களும், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகச் செயலாள ராக கைலாச நெ.நடராசன் அவர்களும், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராக கோ. கிருட்டிணராசு அவர்க ளும், துணைச் செயலாள ராக தோழர் செ.கா.பாஷா அவர்களும் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன், மாநில தலை வர் சிவ.வீரமணி ஆகி யோர் கருத்துரைக்கு பின் தமிழக பகுத்தறிவாளர் கழ கப் பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி அவர்கள் கழகபொறுப்பாளர்கள் புதிய உறுப்பினர்களை ஈர்த்து கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க செய்ய வேண்டும் எனவும், நடைபெறவிருக்கின்ற பெரியார் 1000 வினா விடை போட்டியில் அதிக மாணவ மாணவியர்களை கலந்து கொள்ள செய்ய பகுத்தறிவாளர் கழகம் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும் ப.க.உறுப் பினர் பட்டியல் முகவரியு டன் சரியாக இருக்க வேண்டும் எனவும் கருத் தரங்குகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என் றும் பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் ஆண்டு இறுதியில் பொதுக்கூட் டம் நடத்த வேண்டும் மேலும் நம்முடைய கருத் துக்களை பெரியார் கருத் துக்களை நவீன முறையில் யீணீநீமீதீஷீஷீளீ, ஷ்லீணீஜீ மூலம் பரவ செய்ய வேண்டும் எனவும் சிறப்பாக நகைச் சுவையுடன் எடுத்துக் கூறினார். இறுதியில் பகுத் தறிவாளர் கழக தமிழக அமைப்புச் செயலாளர் தோழர் தமிழ் செல்வன் அவர்கள் தமது உரை யில்:_ தந்தை பெரியார் அவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என கொசுக்கடியையும் பொருட்படுத்தாது இயக்க தோழரின் வீட்டுத் திண் ணையில் உறங்கி இயக்க வளர்ச்சிக்கு உழைத்தது பற்றி சுவை பட எடுத்து கூறினார். மேலும் ப.க.தோழர்கள் கருத்தரங்குகளுக்கு ஒருவர் இன்னொருவரை அழைத்து வரவேண்டும் எனவும், அரசு அலுவல கங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கருப்பு சட்டையுடன் சென்று நம்மை அடையாளப்படுத் தினால் நமக்கு ஆதரவா னவர்களை நாம் அடை யாளம் கண்டு இயக்க வளர்ச் சிக்கு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் என வும் ஆண்டுக்கு ஒரு முறை ப.க.கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும், பெரி யார் 1000 வினா போட்டி களை கழகத் தலைவர் செயலாளர்களுடன் ப.க. தலைவர், செயலாளர் பொறுப்பாளர்கள் இணைந்து சிறப்பாக அதிக அளவில் கலந்து கொள்ள செய்து நடத்த வேண்டும் எனவும், ஜெர் மனியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் புதுச்சேரி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.
இடையில் பகுததறிவா ளர் கழக அமைப்புச் செய லாளர் சமீபத்தில் வெளி யான இராபர்ட் இங்கர் சால் வாழ்க்கை வரலாற்று நூலை அறிமுகப்படுத்தி பொறுப்பாளர்கள் முன் னிலையில் வெளியிட்டு வழங்கினார். தோழர்கள் ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர். முடிவில் ஜெ.ஜீவன் சார்வாகன் நன்றி கூறினார்.
-விடுதலை,12.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக