சனி, 29 அக்டோபர், 2016

சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

மதத்துக்கும் - கடவுள் நம்பிக்கைக்கும் புதைகுழி சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

 

ஸ்டாக்ஹோம்,அக்.28நாத்திகக் கருத்துகள்அதிகம்ஏற்றுக் கொண்டவர்கள் சுவீடன் நாட் டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அந்த நாட்டில் கடவுள் மறுப்பு சிந்தனை உள்ளவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு என்று தனிகல்லறைத்தோட்டம் திறக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு முன்மாதிரி யாக சுவீடன் திகழ்கிறது.
சுவீடனில் உள்ள பொர் லங்கே என்ற பகுதியில் தான் உலகில் முதல்முதலாகநாத் திகர்களுக்கென்று  கல்லறைத் தோட்டம் ஒன்றை சுவீடன் அரசு திறந்துள்ளது. இந்தக் கல்லறைத்தோட்டம்புகழ் பெற்றஸ்டோராடூனாதேவா லயத்திற்குஅருகில்உள்ளது. இந்தக் கல்லறைத் தோட்டத் திற்குநாத்திகர்களுக்கானகல் லறை என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. நாத்திகக் கொள் கையில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினர்எவ்விததயக் கமும் இன்றி அவரது உடலை இங்கே புதைக்கலாம். புதைப்பதற்கான அனைத்து செலவுகளையும்அரசுஏற்றுக் கொள்ளும்.நாத்திகக்கொள் கையில்நம்பிக்கைஉடையவர் களின்உடலைஎவ்விதமதச் சடங்குகள் இன்றிப் புதைக்க லாம். மேலும் கல்லறையின் எந்தஒருஇடத்திலும்,மத அடையாளங்களோ அல்லது மதத்தைக் குறிக்கும் வார்த் தைகளோ இருக்காது.
ஆசிரியர் ஒருவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம்!
சுவீடன் நாட்டின் அரசுக்கு இப்படி ஒரு கல்லறைத் தோட்டம் குறித்த திட்டத்தை முன் வைத்தவர் ஜோசஃப் எர்டன் ஒரு ஆசிரியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். துருக்கியிலிருந்து குடிபெயர்ந்து தற்போது சுவீடனில் வசிக் கும் இந்த ஆசிரியர் மதக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னைப் பற்றிக்கூறும்போது,மனி தன் இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கையாக என்றால் மத ரீதியான அடிமை காரணிகளை விட்டு இயற்கையான சிந்தனையோடு வாழவேண்டும்என்றுகூறிய இவர் கடவுள் மறுப்பாளர் களுக்கு ஒரு கல்லறைத் தோட் டம் ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
சுவீடனுக்கு வந்து குடி யேறிய பெரும்பாலான பிற நாட்டு மக்கள் நாத்திகக் கருத்து களைக் கொண்டவர்கள். இவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் கலாச்சார வழக்கப்படிநல்லடக்கம்செய் யப்படுகின்றனர்.எந்தஒரு கலாச்சார, மத பழக்கவழக்கங்க ளுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது கொள்கைகள் புறந்தள் ளப்பட்டு, கலாச்சாரம், மதம் என்ற வரையறைக்குள் வந்து அவரைப் புதைக்கின்றனர்.
மேலும் இந்த நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் தேவா லயங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் தான் புதைக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தானாகவே அவருக்கு மத அடையாளம் வந்துவிடுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் கடந்த கோடைக்காலத்தில் இந்தத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்திருந்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு தனியாக நாத்தி கர்களுக்கு என்று ஒரு கல்லறைத்தோட்டம் உருவாக்கி பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
சுவீடன் நாத்திகக் கருத்து களை உள்வாங்கிக் கொண்ட நாடாகும். இங்கு கடவுள் நம்பிக்கை, மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் போன்றவைகள் இல்லை,இங்குள்ளவர்களில் மிகவும் குறைந்த விழுக்காட் டினரே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்விலும் மதங் களின் தாக்கம் அன்றாட வாழ் வில் மிகவும் குறைந்த அளவே உள்ளது.
சுவீடனைச்சேர்ந்ததத்து வவியலாளர்கரி கிட்டெல்மான் என்பவர் சுவீடன் நாட்டுத் தேசிய தொலைக்காட்சி ஒன் றில் பேசும் போது சுவீடனின் நாத்திகம் பற்றி கூறும்போது,
இந்தநாடுநாத்திகக்கருத் துகள்நிறைந்தநாடு,இங் குள்ளமக்கள்மதம்,அதன் கொள்கைகளைக் கடைபிடிப் பது ஒருவித மனநோய் என்று நினைக்கின்றனர்.உண்மை யில் கூறப்போனால் எங்க ளின் ஒருவித மனநோய்கூற்று  மெய்ப்பிக்கும் ஓர் உண்மையா கும், என்று கூறியிருந்தார்.

விடுதலை,28.10.16

பரந்து பட்ட உலகில் பகுத்தறிவுத் தந்தை பெரியார்





தந்தை பெரியார் தம் பிறந்த நாளை செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு கொண்டாடிய நிலையில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய நினைவு அலைகள்...

தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டைவிட பெருகிக் கொண்டே வருகின்றன. பிறந்த நாள் கொண்டாட்டம் மாநில, நாட்டு எல்லைகளைத் தாண்டி உலகின் பல நாடுகளிலும் பெருகி, தந்தைப் பெரியார்தம் மானிடம் போற்றிய - பகுத்தறிவு - சுயமரியாதை கொள்கைச் சிறப்பிற்கு பெருமை சேர்த்து வரு கிறது. செய்தி ஊடகங்களிலும் - அச்சு ஊடகம் மற்றும் மின் ஊடகங்கள் - தந்தை பெரியார் பற்றிய பதிவுகள் பெருகி வருகின்றன. இந்த ஆண்டு தந்தை பெரியார் 138ஆம் பிறந்த நாளையொட்டி ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் ஏதாவது ஒரு தளத்தில் தந்தை பெரியார் பற்றிய செய்திகளை, சிறப்புகளை பதிவு செய்துள்ளன.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் மானமிகு கோ.ஒளிவண்ணன் தந்தை பெரியாரது 138ஆம் பிறந்த நாளையொட்டி பெரியாரது வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய, எழுதிய கட்டுரை “தி டைம்ஸ் ஆப் இந்தியா” (The Times of India) இதழில் செப்டம்பர் 20, 2016 அன்று பிரசுரமாகி உள்ளது. தந்தை பெரியார் பற்றிய ஆங்கில கட்டுரை மற்றும் அதன் தமிழாக்கத்தினை “விடுதலை” வாச கர்களுக்கு வெளியிடுகிறோம்.

- ஆசிரியர்


1931ஆம் ஆண்டின் குளிர்காலம். கப்பல் ஒன்றின் அழுக்குப் படிந்த நான்காம் வகுப்பு அறை; மனிதர்களும், பண்டங்களுமாக நிரம்பி வழிந்தது. அதில் அய்ம்பத்திரண்டு வயதான தாடி நரைத்த ஒரு மனிதர் ஒரு நிலக்கரிச் சாக்கு மூட்டையின் மீது அமர்ந்திருந்தார். நான்காம் வகுப்பு என்பது கப்பலின் அடித்தளத்தில் இருக்கும். மேல் வகுப்புப் பயணம் கட்டுபடி ஆகாத கூலிக்காரர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் ஆனது. அளவுச் சாப்பாடுதான் கிடைக்கும். நாளுக்கு இரண்டுமுறை அவித்த உருளைக் கிழங்கும், வேர்க்கடலையும், தானியங்களும், பன் ரொட்டியும் கலந்த உணவு தருவார்கள்.

அந்த மனிதர் அப்போதுதான் காய்ச்சல் வந்து குணமாகியிருந்தார். அவ்வப்போது இருமல் வந்து தொந்தரவு கொடுத்தது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வசதியான அறை ஒன்றில் பயணம் செய்திருக்கலாம். எனினும் அவர் நான்காம் வகுப்பில் பயணம் செய்ய முன் வந்ததன் காரணம் அது வணிக முறைப் பயணமோ, உல்லாசப் பயணமோ அல்ல என்பதுதான். உலகின் பல நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல், சமூக இயக்கங்கள் பற்றியும், அவை எப்படி அந்தச் சமூகங்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவின என்பது பற்றியும் தெரிந்து கொள்வதே அவரது பயணத்தின் நோக்கம். அவர்தான் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.இராமசாமி.

1931ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று எஸ்.இராமநாதனையும், ஈரோடு இராமுவையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் அய்ரோப்பாக் கண்டத்தில் பத்து மாதம் பயணம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

போகும் வழியில் கொழும்புவில் சில நாள் தங்கி மூடநம்பிக்கை, ஜாதி, சமயம் அனைத்தையும் கண்டித்துப் பல கூட்டங்களில் பேசினார். ஜாதி இந்துக்களின் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் ஆதிதிராவிடர்களின் சங் கத்தில் உரையாற்றினார். ஆதிதிராவி டர்கள் வலுப்பெற வேண்டுமெனில் சமுதாயம்முழுவதும்ஒன்றுசேர்ந்து ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிக் கொடு மைகளையும் எதிர்த்து நின்றால்தான் அது சாத்தியம் என்று வலியுறுத்தினார். அடுத்து எகிப்து, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.மார்க்சும்,ஏங்கல்சும்வெளி யிட்டிருந்த பொதுவுடைமை அறிக் கையைப் (Communist Manifesto) படித்திருந்த காரணத்தால் ரஷ்ய மக் களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினார். ரஷ்ய நாட்டு ஆட்சி முறை அவரை மிகவும் கவர்ந்தது.

1932 ஜூன் மாதம் அவர் இங்கி லாந்து நாட்டின் பார்ன்ஸ்லி (Barnsley) என்னுமிடத்தில் தொழிற் கட்சியைச் சேர்ந்த 30,000 தொழிலாளர்கள் குழுமி யிருந்த அவையில் உரையாற்றினார். பிரிட்டன் - தொழிற் கட்சியின் தலைவரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜார்ஜ் லான்பரி (George Lanbery) அவையில் இருந்து பெரியாரின் உரையைச் செவி மடுத்தார். சொந்த நாட்டில் கொண்டிருந்த கொள்கைகளுக்கு நேர்மாறாக எப்படி ஆங்கில அரசு இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தைக் கொடுமைப்படுத்துகிறது என்பதை அவரிடமே கிண்டலாகத் தெரிவித்தார் பெரியார். இங்கிலாந்தில் இருந்த பொதுவுடைமைக் கட்சி அலுவலகங்கள் பலவற்றையும் சென்று பார்த்தார். இங்கி லாந்து நாடாளுமன்றத்தின் முதல் பொது வுடைமை கட்சி உறுப்பினரான சாபூர்ஜி சக்லத்வாலா (Shapurji Saklatwala)வைச் சந்தித்தார். ஜெர்மனியில் சோஷியலிஸ்ட் அமைப்புகள் பலவற்றிற்கும் சென்றார். அத்தோடு நிர்வாணச் சங்கம் ஒன்றிற்கும் சென்று அவர்களின் வாழ்க்கைக் கோட் பாடுகளைத் தெரிந்து கொள்ள முற்பட்டார்.

இந்தப் பயணத்தை மேற்கொண்டதில் பெரியாரின் முதன்மையான நோக்கம் மற்ற நாடுகளில் செயல்பட்டு வரும் முற்போக்கு இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே. பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகு அந்த நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப்பற்றியும், நிர்வாக அமைப்பு,  நிதி அமைப்புகள் பற்றியும் “குடிஅரசு” இதழில் விரிவாக எழுதினார்.

1929 இல் மலேசிய நாட்டில் சுயமரி யாதை இயக்கத்தை வளர்க்க விரும்பிய நண்பர்களின்வேண்டுகோளைஏற்று அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொள்வதற்காக டிசம்பர் 15ஆம் நாளன்று நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பெரியாரைப் பினாங்கு துறை முகத்தில் 50,000க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து வரவேற்றார்கள். மலேசியா விலும்,சிங்கப்பூரிலும்நிகழ்த்திய சொற் பொழிவுகள் அனைத்திலும் பெரியார் வலியுறுத்தியது சமயத்தையும், சமயச் சடங்குகளையும் நீக்கி விட்டுப் பொருளாதார முன்னேற்றத்தில் அனை வரும் கவனம் செலுத்தவேண்டும் என்பதே. மலேசியத் தமிழர்கள் தாயகம் திரும்புவதைப்பற்றி யோசிக்காமல் மலேசியக் குடிமக்களாக ஆகிவிடுவதே நல்லது என்று அறிவுரை கூறினார். இறுதிவரை அவரைவிட்டுப் பிரியாமல் தோழமையுடனிருந்த அவரது தாடி இந்தப் பயணத்தின்போதுதான் வளரத் தொடங்கியது.

பெரியார் 1954இல் மீண்டும் ஒருமுறை மலேசியா சென்றார். அப்போது பர்மாவில் பன்னாட்டுப் பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பர்மாவில் இரண்டு வார காலம் சுற்றுப்பயணம் செய்தபின் டிசம்பர் 11 அன்று பினாங்கு வந்தார். பர்மாவில் இருந்தபோது அம்பேத்கர் அவர்களைச் சந்தித்தார். பெரியாரைப் பவுத்த மதத்தில் சேருமாறு வேண்டிய அம்பேத்கரிடம், இந்து மத்திலேயே இருந்தால்தான் அதனை எதிர்க்க இயலும் என்று பதில் கூறினார் அவர்.

புத்தகங்களில் கண்ட விவரங் களைப் பெரியார் ஒருபோதும் அப் படியே நம்பிவிட மாட்டார், ஒரு ஆராய்ச்சியாளராக இருந்து தன்னுடைய அனுபவத்திலிருந்தும், முயற்சிகளில் இருந்தும் அறிவு பெறுவதையே விரும் பினார். அறிவைத் தேடி இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் மேற்கொள்வதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை, அதனால் ஏற்படும் தொல்லைகளை அவர் பொருட்படுத் தியதில்லை. மற்றவர்கள் அதிகம் சென் றிராத பாதையில் பயணம் மேற்கொள்ள விரும்பி முன்வந்தவர் அல்லவா அவர்?

கோ.ஒளிவண்ணன்
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் கழகத்தின் பொருளாளர்
(தமிழில்: அ.அய்யாசாமி)
-விடுதலை,23.9.16

திங்கள், 17 அக்டோபர், 2016

பகுத்தறிவாளர்கள் படுகொலைகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி




பெங்களூரு, செப்.7 சமூக செயற்பாட்டா ளர்கள்மீது தேசவிரோத குற்றச்சாட்டை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற அரசுகள், பகுத்தறிவாளர்கள் கொலை வழக்குகளில் முன்னேற்றம் காணாமல் இருப்பதேன்? என்று பேராசிரியர் கல் புர்கி நினைவு நாளில் நடைபெற்ற பேரணியில் பலரும் கண்டனத்தை தெரிவித்தார்கள்.

“நீங்கள் எங்களை மவுனமாக்கிவிட லாம், ஆனால், உண்மையை மவுன மாக்கிவிட முடியாது’’ என்கிற பேராசி ரியர் எம்.எம்.கல்புர்கியின் சொற்கள் யாவும் கருநாடக மாநிலத்தில் தார் வாட்நகர்த்தெருக்கள்எங்கும்எதிரொ லித்தன.30.8.2016அன்றுபகுத்தறி வாளர் பேராசிரியர் எம்.எம்.கல் புர்கி படுகொலை செய்யப்பட்ட முதலா மாண்டு நினைவுநாளில் கூடிய பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டனப் பேரணியில் பங்கேற்றார்கள்.

பேரணியில் குருதியை உறையச் செய்யும் படுகொலைகளான கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலைகளைக் கண்டித்து பேரணியில் சற்றேறக்குறைய 8000 பேர் கலந்து கொண்டார்கள்.

ஜாதியை விமர்சித்து வந்தவர் பேராசிரியர் கல்புர்கி.  சமூக செயற் பாட்டாளராகிய கோவிந்த் பன்சாரே காந் தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு புகழ்பாடுவதா? என்கிற விமர்சனத்தை முன்வைத்தவர்.இந்துக்களின்அடை யாளமாகக் கூறப்படுகின்ற  சிவாஜி யின் வாழ்க்கை வரலாற்று நூலை பன்சாரேஎழுதியவர்.அந்தநூல் ஏராளமாக விற்பனையாகி மிகவும் பிரபலமடைந்ததாகும். அந்நூலில், சிவாஜிகுறித்து இதுவரை கூறப் பட்டுவந்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிவா ஜியின் படையிலேயே தளபதிகளாக, படைவீரர்களில் மூன்றில் ஒரு பங் கினராக முசுலீம்களே இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், தங்களைத் தாங்களே சாமியார் என்று கூறிக்கொள்பவர்கள், போலிகளின் மொத்த உருவமாக இருக் கின்ற அற்புதங்களை செய்வதாக கூறிக் கொள்பவர்கள் ஆகியோரை தோலுரித்தும் பேசிவந்த பகுத்தறிவாளர் ஆவார். இம்மூன்று அறிஞர் பெருமக்களையும் இந்துத்தவா குழுக்கள் கொன்றுவிட்டன.

பேராசிரியர் கல்புர்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று அவருடைய மாணவர்கள் என்று கூறிக்கொண்ட இளைஞர்கள் இருவரால்   அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆண்டு முழுவதும் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் விசாரணை செய்து வந்த போதிலும், ஒருவர்கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் புனேவில் தபோல்கர் சுட்டுக் கொல் லப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பன்சாரே சுடப்பட்டு இறந்தார். இம்மூன்று கொலைகளும் இன்னமும் காவல்துறையினராலும், புலனாய்வுத் துறையினராலும் தீர்க்கப் படாமல் கிடப்பில் உள்ளன.

கண்டனப் பேரணி

பேராசிரியர்கல்புர்கியின்முதலா மாண்டு நினைவு நாள் பேரணியை  அவரது வாழ்விணையர் உமா தேவி கல்புர்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தபோல்கர் வாழ்விணையர் சைலா தபோல்கர், பன்சாரே வாழ் விணையர் உமா பன்சாரே மற்றும் மக்களுக்காக பாடுபட்டுவரும் 90 சமூக நிறுவனங்களின் சார்பில் ஏராள மானவர்களும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
தார்வாட் நகரில் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் இல்லத்திலிருந்து கண்டனப் பேரணி தொடங்கியது.

Ôவகுப்புவாதமே நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்Õ, Ôகொள்கைகளை துப்பாக் கிகளால் அடக்கிவிட முடியாதுÕ, Ôசிந்தனையாளர்களை கோழைகள் கொன்றார்கள். கொலையாளிகளை கோழைகள் காப்பாற்றி வருகிறார்கள்Õ  என்னும் பதாகைகளைத் தாங்கியபடி  அமைதியாக ஊர்வலத்தில் சென்றார்கள்.

கருநாடகாபல்கலைக் கழகம், பச வேஷ்வரா குதிரைமீது அமர்ந்திருக்கும் சிலை, அரசமைப்பு சட்டத்தை கையிலேந்தி, எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டும் நிலையில் பொன்னிற டாக்டர் அம்பேத்கர் சிலை, தார்வார்ட் சிபிடி, ஆர்.எல்.எஸ் கல்லூரி வழியே நினைவு நாள் பேரணி சென்றது.

அப்பகுதியில் உள்ள 10 கல்லூரி களிலிருந்தும்  மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் கல்புர்கி நினைவு நாள் பேரணியில் கலந்துகொண்டனர்.
இளைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “பேராசிரியர் கல்புர்கி எங்களுக்கு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆதரவாக இருந்தார்’’ என்றார்.

பேராசிரியர் கல்புர்கி மற்ற பேரா சிரியர்களை மிகவும் நேசித்தார். ஆனால், அவர் கொள்கைவழி செயல்பாடுகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவருக்கு எச்சரிக்கையாக காவல் துறையில் புகார், அச்சுறுத்தல்கள் என்று தொடர்ச்சியாக இருந்து இறுதியில் கொல்லப்பட்டுவிட்டார்.

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், சிறீ ராம் சேனா மற்றும் சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அவரைத் தொடர்ச்சியாக  கண்காணித்து வந்துள்ளன.
தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்குகளில் சனாதன் சன்ஸ்தா விசாரணை வளையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வமைப் பிலுள்ளவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், இம்மூன்று வழக்குகளும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இந்துத்துவா கொள்கைகள் கொடும் நஞ்சாக இருப்பதை எடுத்துக்காட்டி, இந்துத்துவாவுக்கு எதிராக கல்புர்கி, பன்சாரே மற்றும் தபோல்கர் மூவரும் வெளிப்படையாகவே பேசினார்கள்.
ஜாதி, வகுப்புவாதம், மூட நம் பிக்கைகள்,தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களை அடக்கி ஒடுக்கு வது,ஆகியபிரச்சினைகளுக்குஎதி ராகவும், பகுத்தறிவையும், அறிவி யல் மனப்பான்மையையும் நிலை நிறுத்தும்வகையிலும் முற்போக்கான கருத்துகளை  பேசினார்கள்.

பேராசிரியர் கல்புர்கி

பேராசிரியர் கல்புர்கி ஹம்பியில் உள்ளகருநாடகபல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிறந்த கல்வியாளராகவும்நாடகஎழுத்தா ளராகவும்,கொள்கைவழியில் செயற் பாட்டாளராகவும் செயல்பட்டு வந்த வராவார். 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவரும், 700 அறிவுபூர்வ கட்டுரைகளை எழுதியவரும் ஆவார். மேலும், கல்வெட்டியல், நாட்டுப்புறக் கதைகள், வரலாறு, யாப்பிலக்கணம், கவிதை மற்றும் மொழியியல் தொடர்பு என பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர்.

உண்மைக்கு மாறான வரலாற்று திரிபுவாதங்களை  முறியடிக்கும் வண் ணம், உண்மையான வரலாற்றினை ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி என்பது முற்றிலும் வர லாறு மட்டுமல்ல, உண்மைக்கு மாறானவற்றை வரலாறு என்று கூறிக்கொண்டு தற்போது இலாபம் அடைந்துகொண்டிருப்பவர்களை தோலுரித்துக்காட்டுவதும் ஆகும்.

கருநாடகாவின் 12 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதி பசவன்னாவின் கொள் கைகளுக்கு புத்துணர்வை ஊட்டி, இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட மோச மான ஜாதிய முறைகளுக்கு எதிராக போராடினார்.

பசவன்னாவும் கவிஞர் ஆவார். அவருடையகவிதைவரிகளில் ‘நிலை கொண்டிருப்பவை வீழ்ச்சி அடையும், ஆனால், எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பவை நிலையாக இருக்கும்’ (மாற்றம் என்பதே மாறாதது) என்று ஜாதி ஒழிப்புகுறித்து கூறியுள்ளார்.

பேராசிரியர்கல்புர்கிஎழுதியÔபச வன்னா வாழ்க்கை வரலாற்று நாடகÕத் தில், அவர் ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக பசவன்னாவின் தொண்டு மற்றும்  பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாடுகள்,  அர்ச்சகர் ஆச்சார முறைகள் குறித்த விமர்சனங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

12ஆம் நூற்றாண்டில்  பசவன்னா கூறியதை 21 ஆம் நூற்றாண்டில் எடுத் துக்காட்டியதால் பேராசிரியர் கல்புர்கி கொல்லப்பட்டுள்ளார்.

1924ஆம் ஆண்டில் பெல்காமில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் காந்தி குறிப்பிடும்போது, Ôபசவன்னா நம்முடைய காலத்தில் வாழ்ந் திருந்தால், பின்பற்றத்தக்க மதிப்புக்குரிய துறவியைப் பெற்றிருந்திருப்போம்Õ என்றார்.

இன்றும் இந்தியாவில் எங்கும் ஜாதியின் கொடூரம் நிறைந்துள்ளது.

ஜாதி இந்துக்களால் பசவன்னா மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளானார். காந்தி இந்து மகாசபாவின் பெய ரால்ஆர்.எஸ்.எஸ்.காரரால்கொல்லப்பட்டார். கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொன்றவர்களும் இந்துத்துவா வலதுசாரி அமைப்பினைச் சேர்ந்தவர்களே என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்து ஜாதிய நீண்ட கால பழைமைவாதத்தின் நிழ லாக கொலைகள் தொடர்ந்து கொண் டிருக்கின்றன.

பேராசிரியர்கல்புர்கியின் நினைவு நாள் பேரணி தொடக்கத்தில் டிரம் கள் இசைக்கப்பட்டு, சீர்திருத்தக் கவிஞர் பசவன்னாவின் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. சமுதாய சீர்திருத்தவாதி ஜோதிபா புலே, பகத்சிங் வழியில் கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகி யோருக்கும் இறப்பே கிடையாது என்று முழக்கங்கள் வானைப்பிளந்தன.

எழுத்தாளர் அஞ்சும் ராஜாபாலி கூறும்போது, “இதுபோன்ற காலகட்டங் களில் நம்முடைய சிந்தனைச் சுதந்திரம், கருத்து சுதந்திரம், அரசியல் தேர்வு என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இதுபோன்ற சுதந்திரங்களின் மதிப்புகளைஅறிந்திருப்பதோடு,அவற் றுக்காக போராடவேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். பேராசிரியர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய இம்மூன்று பகுத்தறிவாளர்கள்நமக்கானஉணர் வுகளை அளிப்பவர்களாக இருக்கிறார் கள். இம்மூவரையும் கொலையாளிகள் கொன்றதன்மூலமாக,மூவரின்கொள் கைகளையும்அழித்துவிடமுடியாது. அரசிடம் நாங்கள் வலியுறுத்துவதெல் லாம், இம்மூவரின் கொலை வழக் குகளில் புலனாய்வுத்துறை தீர்க்கமான முடிவுகளை சட்டத்தின் துணைகொண்டு வெளிப்படுத்திட வேண்டும் என்பது தான்’’ என்றார்.

பேரணியில் ஏராளமான பேச்சாளர் களின் கருத்து மழைக்கிடையே எழுத் தாளர் அஞ்சும் ராஜாபாலி பேசிவிட்டு விமானத்தைப் பிடிக்கச் சென்றார்.

மாநிலகாவல்துறையின்மீதுநம் பிக்கைஇல்லாதநிலையில்,தேசிய புலனாய்வுத்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவு என அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இம்மூவரின் கொலை வழக்குகளில் உண்மையை வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

நாட்டின் புலனாய்வுத்துறை மற் றும் நீதித்துறைக்கு கவனத்துடன் செயல்படவேண்டிய அளவில் இந்த மூன்று கொலை வழக்குகளும் உள்ளன. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியில் தலையீடுகள் இருந்துவருவதாலேயே நம்பகத்தன்மை இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில், காவல்துறையினர் மத்தியில் சமுதாய பிரச்சினைகளில் அக்கறைகொண்டு பேசுபவர்கள்மீது தேச விரோத சட்டங்களை போடுவதில் மகிழ்ச்சி அடைகின்ற நிலை இருந்து வருவதோடு, இந்துத்துவா பயங்கரவாதம் மீதான  வழக்குகளை முன்னெடுப்பதில் விருப்பமின்மை அல்லது செயலற்ற தன்மையே வெளிப்பட்டு வருகின்றது.

ஒற்றைக்கோரிக்கையாக மதசார் பற்ற ஜனநாயகம் மற்றும் குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற நம்மு டைய அரசமைப்பை நிறுவிய முன் னோடிகளின் கனவை நிறைவேற்ற, இந்திய அரசமைப்பின் மகத்துவத்தை நிலைநாட்ட, உண்மையாக்கிட முன் வருவார்களா?

அண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், மாணவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்கு தல்களின்மீதான எதிர்ப்புகளின் பிரதி பலிப்பாக, இந்துத்துவா இருண்ட பாசீசத்துக்கு எதிரான எதிர்கால வெளிச்சக் கீற்றுகளாக பிரகாசிக்கத் தொடங்கியதன் சாட்சியாக பேராசிரியர் கல்புர்கியின் நினைவுநாள் பேரணி வரலாறை பதிவு செய்துள்ளது.

-விடுதலை,7.9.16