திங்கள், 17 அக்டோபர், 2016

பகுத்தறிவாளர்கள் படுகொலைகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி




பெங்களூரு, செப்.7 சமூக செயற்பாட்டா ளர்கள்மீது தேசவிரோத குற்றச்சாட்டை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற அரசுகள், பகுத்தறிவாளர்கள் கொலை வழக்குகளில் முன்னேற்றம் காணாமல் இருப்பதேன்? என்று பேராசிரியர் கல் புர்கி நினைவு நாளில் நடைபெற்ற பேரணியில் பலரும் கண்டனத்தை தெரிவித்தார்கள்.

“நீங்கள் எங்களை மவுனமாக்கிவிட லாம், ஆனால், உண்மையை மவுன மாக்கிவிட முடியாது’’ என்கிற பேராசி ரியர் எம்.எம்.கல்புர்கியின் சொற்கள் யாவும் கருநாடக மாநிலத்தில் தார் வாட்நகர்த்தெருக்கள்எங்கும்எதிரொ லித்தன.30.8.2016அன்றுபகுத்தறி வாளர் பேராசிரியர் எம்.எம்.கல் புர்கி படுகொலை செய்யப்பட்ட முதலா மாண்டு நினைவுநாளில் கூடிய பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டனப் பேரணியில் பங்கேற்றார்கள்.

பேரணியில் குருதியை உறையச் செய்யும் படுகொலைகளான கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலைகளைக் கண்டித்து பேரணியில் சற்றேறக்குறைய 8000 பேர் கலந்து கொண்டார்கள்.

ஜாதியை விமர்சித்து வந்தவர் பேராசிரியர் கல்புர்கி.  சமூக செயற் பாட்டாளராகிய கோவிந்த் பன்சாரே காந் தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு புகழ்பாடுவதா? என்கிற விமர்சனத்தை முன்வைத்தவர்.இந்துக்களின்அடை யாளமாகக் கூறப்படுகின்ற  சிவாஜி யின் வாழ்க்கை வரலாற்று நூலை பன்சாரேஎழுதியவர்.அந்தநூல் ஏராளமாக விற்பனையாகி மிகவும் பிரபலமடைந்ததாகும். அந்நூலில், சிவாஜிகுறித்து இதுவரை கூறப் பட்டுவந்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிவா ஜியின் படையிலேயே தளபதிகளாக, படைவீரர்களில் மூன்றில் ஒரு பங் கினராக முசுலீம்களே இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், தங்களைத் தாங்களே சாமியார் என்று கூறிக்கொள்பவர்கள், போலிகளின் மொத்த உருவமாக இருக் கின்ற அற்புதங்களை செய்வதாக கூறிக் கொள்பவர்கள் ஆகியோரை தோலுரித்தும் பேசிவந்த பகுத்தறிவாளர் ஆவார். இம்மூன்று அறிஞர் பெருமக்களையும் இந்துத்தவா குழுக்கள் கொன்றுவிட்டன.

பேராசிரியர் கல்புர்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று அவருடைய மாணவர்கள் என்று கூறிக்கொண்ட இளைஞர்கள் இருவரால்   அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆண்டு முழுவதும் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் விசாரணை செய்து வந்த போதிலும், ஒருவர்கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் புனேவில் தபோல்கர் சுட்டுக் கொல் லப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பன்சாரே சுடப்பட்டு இறந்தார். இம்மூன்று கொலைகளும் இன்னமும் காவல்துறையினராலும், புலனாய்வுத் துறையினராலும் தீர்க்கப் படாமல் கிடப்பில் உள்ளன.

கண்டனப் பேரணி

பேராசிரியர்கல்புர்கியின்முதலா மாண்டு நினைவு நாள் பேரணியை  அவரது வாழ்விணையர் உமா தேவி கல்புர்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தபோல்கர் வாழ்விணையர் சைலா தபோல்கர், பன்சாரே வாழ் விணையர் உமா பன்சாரே மற்றும் மக்களுக்காக பாடுபட்டுவரும் 90 சமூக நிறுவனங்களின் சார்பில் ஏராள மானவர்களும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
தார்வாட் நகரில் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் இல்லத்திலிருந்து கண்டனப் பேரணி தொடங்கியது.

Ôவகுப்புவாதமே நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்Õ, Ôகொள்கைகளை துப்பாக் கிகளால் அடக்கிவிட முடியாதுÕ, Ôசிந்தனையாளர்களை கோழைகள் கொன்றார்கள். கொலையாளிகளை கோழைகள் காப்பாற்றி வருகிறார்கள்Õ  என்னும் பதாகைகளைத் தாங்கியபடி  அமைதியாக ஊர்வலத்தில் சென்றார்கள்.

கருநாடகாபல்கலைக் கழகம், பச வேஷ்வரா குதிரைமீது அமர்ந்திருக்கும் சிலை, அரசமைப்பு சட்டத்தை கையிலேந்தி, எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டும் நிலையில் பொன்னிற டாக்டர் அம்பேத்கர் சிலை, தார்வார்ட் சிபிடி, ஆர்.எல்.எஸ் கல்லூரி வழியே நினைவு நாள் பேரணி சென்றது.

அப்பகுதியில் உள்ள 10 கல்லூரி களிலிருந்தும்  மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் கல்புர்கி நினைவு நாள் பேரணியில் கலந்துகொண்டனர்.
இளைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “பேராசிரியர் கல்புர்கி எங்களுக்கு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆதரவாக இருந்தார்’’ என்றார்.

பேராசிரியர் கல்புர்கி மற்ற பேரா சிரியர்களை மிகவும் நேசித்தார். ஆனால், அவர் கொள்கைவழி செயல்பாடுகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவருக்கு எச்சரிக்கையாக காவல் துறையில் புகார், அச்சுறுத்தல்கள் என்று தொடர்ச்சியாக இருந்து இறுதியில் கொல்லப்பட்டுவிட்டார்.

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், சிறீ ராம் சேனா மற்றும் சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அவரைத் தொடர்ச்சியாக  கண்காணித்து வந்துள்ளன.
தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்குகளில் சனாதன் சன்ஸ்தா விசாரணை வளையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வமைப் பிலுள்ளவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், இம்மூன்று வழக்குகளும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இந்துத்துவா கொள்கைகள் கொடும் நஞ்சாக இருப்பதை எடுத்துக்காட்டி, இந்துத்துவாவுக்கு எதிராக கல்புர்கி, பன்சாரே மற்றும் தபோல்கர் மூவரும் வெளிப்படையாகவே பேசினார்கள்.
ஜாதி, வகுப்புவாதம், மூட நம் பிக்கைகள்,தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களை அடக்கி ஒடுக்கு வது,ஆகியபிரச்சினைகளுக்குஎதி ராகவும், பகுத்தறிவையும், அறிவி யல் மனப்பான்மையையும் நிலை நிறுத்தும்வகையிலும் முற்போக்கான கருத்துகளை  பேசினார்கள்.

பேராசிரியர் கல்புர்கி

பேராசிரியர் கல்புர்கி ஹம்பியில் உள்ளகருநாடகபல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிறந்த கல்வியாளராகவும்நாடகஎழுத்தா ளராகவும்,கொள்கைவழியில் செயற் பாட்டாளராகவும் செயல்பட்டு வந்த வராவார். 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவரும், 700 அறிவுபூர்வ கட்டுரைகளை எழுதியவரும் ஆவார். மேலும், கல்வெட்டியல், நாட்டுப்புறக் கதைகள், வரலாறு, யாப்பிலக்கணம், கவிதை மற்றும் மொழியியல் தொடர்பு என பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர்.

உண்மைக்கு மாறான வரலாற்று திரிபுவாதங்களை  முறியடிக்கும் வண் ணம், உண்மையான வரலாற்றினை ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி என்பது முற்றிலும் வர லாறு மட்டுமல்ல, உண்மைக்கு மாறானவற்றை வரலாறு என்று கூறிக்கொண்டு தற்போது இலாபம் அடைந்துகொண்டிருப்பவர்களை தோலுரித்துக்காட்டுவதும் ஆகும்.

கருநாடகாவின் 12 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதி பசவன்னாவின் கொள் கைகளுக்கு புத்துணர்வை ஊட்டி, இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட மோச மான ஜாதிய முறைகளுக்கு எதிராக போராடினார்.

பசவன்னாவும் கவிஞர் ஆவார். அவருடையகவிதைவரிகளில் ‘நிலை கொண்டிருப்பவை வீழ்ச்சி அடையும், ஆனால், எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பவை நிலையாக இருக்கும்’ (மாற்றம் என்பதே மாறாதது) என்று ஜாதி ஒழிப்புகுறித்து கூறியுள்ளார்.

பேராசிரியர்கல்புர்கிஎழுதியÔபச வன்னா வாழ்க்கை வரலாற்று நாடகÕத் தில், அவர் ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக பசவன்னாவின் தொண்டு மற்றும்  பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாடுகள்,  அர்ச்சகர் ஆச்சார முறைகள் குறித்த விமர்சனங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

12ஆம் நூற்றாண்டில்  பசவன்னா கூறியதை 21 ஆம் நூற்றாண்டில் எடுத் துக்காட்டியதால் பேராசிரியர் கல்புர்கி கொல்லப்பட்டுள்ளார்.

1924ஆம் ஆண்டில் பெல்காமில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் காந்தி குறிப்பிடும்போது, Ôபசவன்னா நம்முடைய காலத்தில் வாழ்ந் திருந்தால், பின்பற்றத்தக்க மதிப்புக்குரிய துறவியைப் பெற்றிருந்திருப்போம்Õ என்றார்.

இன்றும் இந்தியாவில் எங்கும் ஜாதியின் கொடூரம் நிறைந்துள்ளது.

ஜாதி இந்துக்களால் பசவன்னா மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளானார். காந்தி இந்து மகாசபாவின் பெய ரால்ஆர்.எஸ்.எஸ்.காரரால்கொல்லப்பட்டார். கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொன்றவர்களும் இந்துத்துவா வலதுசாரி அமைப்பினைச் சேர்ந்தவர்களே என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்து ஜாதிய நீண்ட கால பழைமைவாதத்தின் நிழ லாக கொலைகள் தொடர்ந்து கொண் டிருக்கின்றன.

பேராசிரியர்கல்புர்கியின் நினைவு நாள் பேரணி தொடக்கத்தில் டிரம் கள் இசைக்கப்பட்டு, சீர்திருத்தக் கவிஞர் பசவன்னாவின் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. சமுதாய சீர்திருத்தவாதி ஜோதிபா புலே, பகத்சிங் வழியில் கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகி யோருக்கும் இறப்பே கிடையாது என்று முழக்கங்கள் வானைப்பிளந்தன.

எழுத்தாளர் அஞ்சும் ராஜாபாலி கூறும்போது, “இதுபோன்ற காலகட்டங் களில் நம்முடைய சிந்தனைச் சுதந்திரம், கருத்து சுதந்திரம், அரசியல் தேர்வு என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இதுபோன்ற சுதந்திரங்களின் மதிப்புகளைஅறிந்திருப்பதோடு,அவற் றுக்காக போராடவேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். பேராசிரியர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய இம்மூன்று பகுத்தறிவாளர்கள்நமக்கானஉணர் வுகளை அளிப்பவர்களாக இருக்கிறார் கள். இம்மூவரையும் கொலையாளிகள் கொன்றதன்மூலமாக,மூவரின்கொள் கைகளையும்அழித்துவிடமுடியாது. அரசிடம் நாங்கள் வலியுறுத்துவதெல் லாம், இம்மூவரின் கொலை வழக் குகளில் புலனாய்வுத்துறை தீர்க்கமான முடிவுகளை சட்டத்தின் துணைகொண்டு வெளிப்படுத்திட வேண்டும் என்பது தான்’’ என்றார்.

பேரணியில் ஏராளமான பேச்சாளர் களின் கருத்து மழைக்கிடையே எழுத் தாளர் அஞ்சும் ராஜாபாலி பேசிவிட்டு விமானத்தைப் பிடிக்கச் சென்றார்.

மாநிலகாவல்துறையின்மீதுநம் பிக்கைஇல்லாதநிலையில்,தேசிய புலனாய்வுத்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவு என அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இம்மூவரின் கொலை வழக்குகளில் உண்மையை வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

நாட்டின் புலனாய்வுத்துறை மற் றும் நீதித்துறைக்கு கவனத்துடன் செயல்படவேண்டிய அளவில் இந்த மூன்று கொலை வழக்குகளும் உள்ளன. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியில் தலையீடுகள் இருந்துவருவதாலேயே நம்பகத்தன்மை இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில், காவல்துறையினர் மத்தியில் சமுதாய பிரச்சினைகளில் அக்கறைகொண்டு பேசுபவர்கள்மீது தேச விரோத சட்டங்களை போடுவதில் மகிழ்ச்சி அடைகின்ற நிலை இருந்து வருவதோடு, இந்துத்துவா பயங்கரவாதம் மீதான  வழக்குகளை முன்னெடுப்பதில் விருப்பமின்மை அல்லது செயலற்ற தன்மையே வெளிப்பட்டு வருகின்றது.

ஒற்றைக்கோரிக்கையாக மதசார் பற்ற ஜனநாயகம் மற்றும் குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற நம்மு டைய அரசமைப்பை நிறுவிய முன் னோடிகளின் கனவை நிறைவேற்ற, இந்திய அரசமைப்பின் மகத்துவத்தை நிலைநாட்ட, உண்மையாக்கிட முன் வருவார்களா?

அண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், மாணவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்கு தல்களின்மீதான எதிர்ப்புகளின் பிரதி பலிப்பாக, இந்துத்துவா இருண்ட பாசீசத்துக்கு எதிரான எதிர்கால வெளிச்சக் கீற்றுகளாக பிரகாசிக்கத் தொடங்கியதன் சாட்சியாக பேராசிரியர் கல்புர்கியின் நினைவுநாள் பேரணி வரலாறை பதிவு செய்துள்ளது.

-விடுதலை,7.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக