சனி, 29 அக்டோபர், 2016

சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

மதத்துக்கும் - கடவுள் நம்பிக்கைக்கும் புதைகுழி சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

 

ஸ்டாக்ஹோம்,அக்.28நாத்திகக் கருத்துகள்அதிகம்ஏற்றுக் கொண்டவர்கள் சுவீடன் நாட் டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அந்த நாட்டில் கடவுள் மறுப்பு சிந்தனை உள்ளவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு என்று தனிகல்லறைத்தோட்டம் திறக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு முன்மாதிரி யாக சுவீடன் திகழ்கிறது.
சுவீடனில் உள்ள பொர் லங்கே என்ற பகுதியில் தான் உலகில் முதல்முதலாகநாத் திகர்களுக்கென்று  கல்லறைத் தோட்டம் ஒன்றை சுவீடன் அரசு திறந்துள்ளது. இந்தக் கல்லறைத்தோட்டம்புகழ் பெற்றஸ்டோராடூனாதேவா லயத்திற்குஅருகில்உள்ளது. இந்தக் கல்லறைத் தோட்டத் திற்குநாத்திகர்களுக்கானகல் லறை என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. நாத்திகக் கொள் கையில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினர்எவ்விததயக் கமும் இன்றி அவரது உடலை இங்கே புதைக்கலாம். புதைப்பதற்கான அனைத்து செலவுகளையும்அரசுஏற்றுக் கொள்ளும்.நாத்திகக்கொள் கையில்நம்பிக்கைஉடையவர் களின்உடலைஎவ்விதமதச் சடங்குகள் இன்றிப் புதைக்க லாம். மேலும் கல்லறையின் எந்தஒருஇடத்திலும்,மத அடையாளங்களோ அல்லது மதத்தைக் குறிக்கும் வார்த் தைகளோ இருக்காது.
ஆசிரியர் ஒருவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம்!
சுவீடன் நாட்டின் அரசுக்கு இப்படி ஒரு கல்லறைத் தோட்டம் குறித்த திட்டத்தை முன் வைத்தவர் ஜோசஃப் எர்டன் ஒரு ஆசிரியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். துருக்கியிலிருந்து குடிபெயர்ந்து தற்போது சுவீடனில் வசிக் கும் இந்த ஆசிரியர் மதக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னைப் பற்றிக்கூறும்போது,மனி தன் இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கையாக என்றால் மத ரீதியான அடிமை காரணிகளை விட்டு இயற்கையான சிந்தனையோடு வாழவேண்டும்என்றுகூறிய இவர் கடவுள் மறுப்பாளர் களுக்கு ஒரு கல்லறைத் தோட் டம் ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
சுவீடனுக்கு வந்து குடி யேறிய பெரும்பாலான பிற நாட்டு மக்கள் நாத்திகக் கருத்து களைக் கொண்டவர்கள். இவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் கலாச்சார வழக்கப்படிநல்லடக்கம்செய் யப்படுகின்றனர்.எந்தஒரு கலாச்சார, மத பழக்கவழக்கங்க ளுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது கொள்கைகள் புறந்தள் ளப்பட்டு, கலாச்சாரம், மதம் என்ற வரையறைக்குள் வந்து அவரைப் புதைக்கின்றனர்.
மேலும் இந்த நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் தேவா லயங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் தான் புதைக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தானாகவே அவருக்கு மத அடையாளம் வந்துவிடுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் கடந்த கோடைக்காலத்தில் இந்தத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்திருந்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு தனியாக நாத்தி கர்களுக்கு என்று ஒரு கல்லறைத்தோட்டம் உருவாக்கி பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
சுவீடன் நாத்திகக் கருத்து களை உள்வாங்கிக் கொண்ட நாடாகும். இங்கு கடவுள் நம்பிக்கை, மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் போன்றவைகள் இல்லை,இங்குள்ளவர்களில் மிகவும் குறைந்த விழுக்காட் டினரே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்விலும் மதங் களின் தாக்கம் அன்றாட வாழ் வில் மிகவும் குறைந்த அளவே உள்ளது.
சுவீடனைச்சேர்ந்ததத்து வவியலாளர்கரி கிட்டெல்மான் என்பவர் சுவீடன் நாட்டுத் தேசிய தொலைக்காட்சி ஒன் றில் பேசும் போது சுவீடனின் நாத்திகம் பற்றி கூறும்போது,
இந்தநாடுநாத்திகக்கருத் துகள்நிறைந்தநாடு,இங் குள்ளமக்கள்மதம்,அதன் கொள்கைகளைக் கடைபிடிப் பது ஒருவித மனநோய் என்று நினைக்கின்றனர்.உண்மை யில் கூறப்போனால் எங்க ளின் ஒருவித மனநோய்கூற்று  மெய்ப்பிக்கும் ஓர் உண்மையா கும், என்று கூறியிருந்தார்.

விடுதலை,28.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக