சனி, 29 பிப்ரவரி, 2020

ஒடிசா மாநில அமைச்சரிடம் தந்தை பெரியார் நூல்கள் அளிப்பு

புவனேசுவர், பிப்.18 ஒடிசா மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.ரானேந்திர பிரதாப் ஸ்வைன் அவர்களையும், ஒடிசா மாநில முதல்வர் திரு. நவீன் பட்நாயக் அவர்களின் சிறப்பு ஆலோசகர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ். அவர் களையும், 17.2.2020 அன்று காலை ஒடிசா மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஒடிசா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததற்கும், ஜாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்திட வேண்டும் என மாநிலத்தின் சார்பாக மத்திய அரசுக்கு தெரிவித்ததற்கும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் முயற்சியால் உருவான 69% இட ஒதுக்கீடு சட்டம் போன்று ஒடிசா மாநிலத்திலும் உருவாக்கிடவும் வேண்டு கோள் விடுத்தார்.

"தந்தை பெரியார் பொன்மொழிகள்", "சுயமரியாதை இயக்கம்" மற்றும் "69% இட ஒதுக்கீடு ஏன்" என்ற நூல்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, ஒடிசா மாநில ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கத்தின் மேனாள் செயலாளர் பிரபுல்ல குமார் குண்டியா, ஒடிசா மாநில யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத் தின் பொதுச் செயலாளர் மதுசூதன் சமல் ஆகியோரும் உடனிருந்தனர்.

- விடுதலை நாளேடு 18 2 20