ஞாயிறு, 27 நவம்பர், 2016

கடவுள் இல்லை லாலா.லஜபதிராய் கருத்து

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து
(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.
நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.
இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,
சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.
மிருகத்தனமானது
வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.
இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.
ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?
வேதங்கள் பொய்
சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?
அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?
லாலாஜி வாழ்க்கை
இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
(பகுத்தறிவு, 1933)

தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
  • கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.
  • -விடுதலை,26.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தூக்கிலிடப்பட்ட பகத்சிங் - குற்றப் பத்திரிகையில் அவர் பெயர் கிடையாது


பகத்சிங் தூக்கிலிடப்பட்டு எண்பது ஆண்டுகள் கழிந்தபின்னர், லாகூர் காவல்துறை யினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவு களை ஆராய்ந்து, பகத்சிங் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையைக் கண்டறிந்தார்கள் அதில் பகத்சிங் பெயர் இல்லை.
1928இல் பிரிட்டிஷ் போலீஸ் ஆபிசரைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, பகத்சிங்கிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதும், குற்றமற்றவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..
பகத்சிங் நினைவு ஃபவுண்டேஷன் தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேசி என்பவர், பிரிட்டிஷ் காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக, பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகலைக் கோரி மனுச் செய்திருந்தார்.
பகத்சிங் மேற்படி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 23 வயதாக இருக்கும்போதே, 1931இல் லாகூர் சாத்மான் சௌக் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டு 80 ஆண்டுகள் கழித்து, ஒரு நீதிமன்ற ஆணையின் கீழ் லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து பார்த்து, சாண்டர்ஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த முதல் தகவல் அறிக்கை அனார்கலி காவல் நிலையத்தில் 1928 டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணிக்கு இரு `அடையாளம் தெரியாத துப்பாக்கி வைத்திருந்தவர் (Unknown gunmen)களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட் டிருந்தது. அனார்கலி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்தான் இந்த புகாரின் முறையிடுபவரும் கண்ணால் கண்ட சாட்சியு மாவார்.
அவர், சாண்டர்ஸைத் துப்பாக்கியால் சுட்ட நபரை அவர் பின்தொடர்ந்ததாகவும், அவர் 5 அடி 5 அங்குலம் உயரம் உடையவ ராகவும், இந்து முகத்தைக் கொண்டவராகவும், சிறிய மீசையுடன் காணப்பட்டதாகவும், ஒல்லியான மற்றும் வலுவான தேகத்தைப் பெற்றவராகவும், வெள்ளை பைஜாமாவும், சாம்பல் நிற குர்தா அணிந்திருந்ததாகவும், சிறிய கறுப்புநிறத் தொப்பி அணிந்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
நீதிமன்றம் மேற்படி முதல் தகவல் அறிக்கையின் நகலை குரேசிக்குக் கொடுத்திருக்கிறது. குரேசி இது தொடர்பாக, பகத்சிங் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அடங்கிய நடுவர்மன்றம் வழக்கில் 450 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அவர்களை விசாரிக்காமலேயே பகத்சிங்கிற்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்தது என்றும், பகத்சிங் சார்பில் வாதாடிய வழக்குரைஞருக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பே அளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
குரேசி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மீளவும் நடத்தவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் அப்பழுக்கற்றவர் என்பதை நிறுவிட நான் விரும்புகிறேன், என்று அவர் கூறினார். லாகூர் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விரிவான அமர்வாயத்தை அமர்த்தக்கோரி, தலைமை நீதியரசருக்கு அனுப்பி இருக்கிறது.
-விடுதலை ஞா.ம.,26.3.16

முசுலிம் நாட்டிலும் நாத்திகம் முளைக்கிறது


இசுலாமிய மதத்தைச் சார்ந்த மன்னராட்சி உள்ள சவுதி அரேபி யாவில் சமூக வலைத்தளங்களில் நாத்திகக் கருத்துகள் பதிவுகள் பெருகி வருகின்றன. 28 வயது இளைஞர் ஒருவர் சமூகவலைத் தளமான டிவிட்டரில் தன்னுடைய நாத்திகக் கருத்துகளை பதிவு செய் திருந்தார். நாத்திகக் கருத்துகளைப் பதிவிட்டதில் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அவ்விளைஞர் தண் டனைக்கு உள்ளானார்¢.
சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் மதக்கருத்து களைக் கண்காணித்து வரும் காவல் துறையின் ஒரு பிரிவு டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங் களின்மூலமாக மதம் தொடர்பான கருத்துகள் பதிவிடுவதைக் கண் காணித்து வருகிறது.
காவல்துறையினர் கண்காணிப் பில் 600க்கும மேற்பட்டோர் கடவுள் இருப்பதாகக் கூறப்படுவதை மறுக் கின்ற கருத்துகளை பதிவிட்டுள் ளார்கள். குர்ஆன் வசனங்களிலும் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதுடன், கடவுள் கருத்துகள் என்று கூறப்படுபவை யாவும் உண்மைக்கு மாறானவையாகவும், பகைமை உணர்ச்சிகள் நிரம்பி, அதையே கற்பிப்பதுமாக உள்ளன என்று கடவுள், மதம் உள்ளிட்டவை குறித்து தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
28 வயதுள்ள ஓர் இளைஞர் நூற் றுக்கணக்கிலான நாத்திக கருத்துப் பதிவுகளை பதிவிட்டிருந்தார். அப்பதிவுகளைக் கொண்டு கண் காணிப்பு காவல்துறையினர் அவ் விளைஞரிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது தன்னை கடவுள், மத நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகன் என்றும், தான் பதிவிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரி விக்கப் போவதில்லை என்றும், எனக்கு சரி என்று பட்டதை எழுதி யுள்ளேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விளைஞர் அவ்வாறு குறிப் பிட்டதைத் தொடர்ந்து,  சவுதி அரேபியா நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் 2000 சாட்டை அடிகள் கொடுக்கவும் உத்தர விட்டது. மேலும் அவ்விளைஞருக்கு 20ஆயிரம் ரியால் தண்டத் தொகை செலுத்தவேண்டும் என்றும் தீர்ப் பளித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப் பில் 5,300 டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சத்து 63 ஆயிரம் ஆகும்.
விடுதலை ஞ.ம.,5.3.16

வியாழன், 3 நவம்பர், 2016

மீரட் நகரில் நாத்திகப் பிரச்சாரத்துக்கு எதிராக இந்துத்துவாக் கும்பல் வன்முறை வெறியாட்டம்

நாத்திகம் குறித்த தேசிய அளவிலான இரண்டாவது மாநாடு -- நான் ஏன் நாத்திகனானேன்? பகத்சிங் குறித்த அமர்வில் செய்தியாளர் சந்திப்பில் நாத்திக சம்மேளனம் அமைப்பினர்.

மீரட், நவ.2 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாமியாராக இருந்தவர் நாத்திகராக மாறினார்.அவருடையநாத்திகப்பிரச் சாரத்துக்கு எதிராக அம்மாநிலக் காவல் துறையினரின்துணையுடன்இந் துத்துவா கும்பல் வெறியாட்டம் போட்டுவருகிறது

வட இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பிந்து சேவா சன்ஸ்தான் தொடர்ந்து பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பிவருகின்ற நாத்திக அமைப்பாக இயங்கிவருகின்ற அமைப்பாகும்.

சுவாமி பாலெண்டு மத பரப்புரை செய்பவராக இருந்தவர். நாத்திகராக மாறி, தொடர்ந்து நாத்திகப் பிரச்சாரத்தை பிந்து சேவா சன்ஸ்தான்  அமைப்பின்மூலமாக தொடர்ந்து செய்துவருபவர் ஆவார்.

கடந்த 14.10.2016 அன்று மீரட் நகரில் கூட்டம் நடத்துவதாக அறிவித் திருந்தார். மத உணர்வுகளைப் புண் படுத்துவதாகக் கூறி, இந்துத்துவா கும்பல் அப்பகுதிக்கு திரண்டு வன் முறைத் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினரிடம் பாலெண்ட் புகார் கொடுத்தார். ஆனால், வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள்.

சுவாமி பாலெண்ட்மீது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சாமியார்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாலெண்டை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின் றனர்.
-விடுதலை,2.11.16