உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும்
குண்டூரைச் சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா, ஷேக் அலிக் ஆகியோர் பொதுச்செயலாளரிடம் கடிதம் கொடுத்தபோது...
4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.
இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
3.1.96 பிற்பகல் 3.10 மணிக்கு 'பினாகினி' விரைவு தொடர்வண்டி 108 தமிழ்நாடு நாத்திக பேராளர்களை சுமந் துகொண்டு விஜயவாடா நோக்கி புறப் பட்டுச் சென்றது. அதில் நானும் ஒருவராகச் சென்றேன். வண்டி இரவு 10 மணிக்கு விஜயவாடாவை சென்று அடைந்தது. எங்களை விஜயவாடா நாத்திக மய்யத்தில் 'கோரா' அவர்களின் துணைவி சரசுவதி கோரா மற்றும் அவரது மகன் இலவணம் அவர்களின் உடன்பிறப்பு டாக்டர் ஜி. விஜயம் அவர்கள் வரவேற்றார்.
மூன்று நாட்களுக்கும் தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தனர்.
பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டுப் பேராளர்களுக்கு 10 சிந்தனைகளை எடுத்து வைத்து பேசினார். அனைவரின் கவனத்தையும் இந்த சிந்தனையும், பேச்சும் கவர்ந்தது.
மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது. தந்தை பெரியார் தொண்டர்களையும், பெரியார் இயக்கத்தையும், பெரியாரின் தொண்டையும் ஒவ்வொருவரிடமும் பன்னாட்டு நாத்திகர்கள் சிறப்பாக பாராட்டினர்.
லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஹூ மணிஸ்டு அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் 'ஹாரி ஸ்டேப்ஸ் ரோப்' என்பவர், எங்களை எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டார்; நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெரியாரிஸ்டுகள் என்றேன். உடனே அகமகிழ்ந்து என்னை கட்டித்தழுவி; தந்தை பெரியாரை 'மாமனிதர், அவர் பணி அரும்பணி' என்று மனந்திறந்து பாராட்டினார். அதனுடன் 'நான் 13 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்தேன். அப்போது தங்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன், வியந்தேன்' என்று கூறினார். சென்னையில் நடை பெறவிருக்கும் மாநாட்டுக்கு வருமாறு கூறிய போது; கட்டாயம் வருவேன் என்று கூறினார். அதே போல் சென்னை பகுத்தறிவாளர் கழக மாநில
மாநாட்டிற்கு வருகை தந்தார்.
4-வது உலக நாத்திகர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஆயிரம் (1000) துண்டறிக்கைகளை தாம்பரம் மாவட் டம் மற்றும் தென் சென்னை மாவட்டம் சார்பில் விஜயவாடாவிலேயே தெலுங்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங் கினோம்.
தி.இரா. இரத்தினசாமி (தாம்பரம் மாவட்டத் தலைவர்) அவர்கள் விஜயவாடாவில் துண்டறிக்கையை வழங்கியபோது...
அந்த துண்டறிக்கையில் ‘தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு தத்துவம் மற்றும் 'சர்வ சக்தி சாமிக்கு தெலுங்கு - தமிழ் தெரியாதா?' என்ற முழக்கமும் அச்சிட்டோம். துண்டறிக்கையில் பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் கடவுள் மறுப்பு தத்துவத்தை அச்சிட் டோம். இத்துண்டறிக்கைகளை பெற் றுக் கொண்டபின் பொதுமக்கள் பரபரப்பாக காணப்பட்டனர். மாநாட்டைப் பற்றி தெரியாமல் இருந்த பொதுமக்கள். 'மாநாட்டின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர். பலர் துண்டறிக்கைகளை வாங்கிப் படித்துவிட்டு, கேள்விகளைக் கேட்டனர். எங்களுக்குத் தெரிந்த தெலுங்கு சொற்களை வைத்து தமிழ் -தெலுங்கு ஆங்கிலம் என்று கலந்து கலந்து பதில்களை கூறி தெளிவுபடுத்தினோம்.
தாம்பரம் மாவட்ட அமைப்பாளர் வீரபத்திரன் அவர்களுக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியுமாதலால் பலருக்கு அவர் தெலுங்கில் விளக்கம் கொடுத்தார்.
இத்துண்டறிக்கையை அச்சிட அச்சுக் கூடங்களை அணுகியபோது, அச்சிட மறுத்தனர். நாத்திக மய்யத்திலே அச்சுக் கூடம் இருப்பதை அறிந்து அங்கேயே அச்சிட்டோம்.
இதைக் கேள்விப்பட்ட 'இலவணம்' அவர்கள் 'நாத்திக கருத்தை பரப்ப பணம் வாங்குவதா?' என்று கூறி, எங்களிடமிருந்து அச்சிட வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறு கூறி விட்டார்.
நாத்திக மய்யத்தில் மருத்துவமனை, அச்சுக்கூடம், சமூக நலக் கூடம், நூலகம், புகைப்பட அரங்கு மற்றும் அறிவியல் மய்யம் முதலியவைகள் உள்ளன. இதே போன்று சிறிய அளவில் நமது பெரியார் திடலிலும் ஓர் அறிவியல் மய்யம் அமைத்தால் நன்றாயிருக்கும்.
மாநாட்டிற்கு பேராளர்கள் மட்டுமே வந்தார்களே தவிர, பொதுமக்கள் வர வில்லை. போதிய அளவு பிரச்சாரமும், விளம்பரமும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
குழுக் கலந்துரையாடல் கூட்டத்தில் அ. அருள்மொழி அவர்கள் பேசியதை அனைவரும் பாராட்டினர்.
குண்டூரை (ஆந்திரா) சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா என்பவரும், ஷேக் அலிக் என்பவரும் அருள்மொழியின் பேச்சைக் கேட்டுவிட்டு இந்த மாதிரி ஒரு பேச்சை இதுவரையில் கேட்டதில்லை. தெலுங்கில் பேசி இருந்தால் இன்னும் நன்றாக புரிந்து கொண்டிருப்போம் என்று எங்களிடம் கூறினார்கள்.
அருள்மொழி அவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தினோம் அருள் மொழிக்கும் தெலுங்கு தெரியும் என்று கூறியவுடன் குண்டூருக்கு வந்து பிரச்சாரம்

டாக்டர் ஹாரிஸ்டேப்ஸ்-ரோப்
(இலண்டன்) உடன் செ.ர. பார்த்தசாரதி
செய்யும்படியும், அதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்கள்.
இருவரும் கழக பொதுச் செயலாளரிடம் ஆந்திராவில் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும்படி கடிதம் கொடுத்தனர். அக்கடிதத்தில், 'இங்கே பிரச்சாரமே செய்யப்படுவதில்லை. வெளியே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டாம்' என்று கூறுகின்றனர். அறைக்குள்ளேயே கூட்டத்தை நடத்திவிடுகின்றனர். தாங்கள் இங்கே வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தந்தை பெரியாரின் பணியை பாராட்டுகிறோம். அவரின் பணி பெரும்பணி' என்று எழுதிக் கொடுத்தனர். அவர்களை சென்னை மாநாட்டிற்கு வருமாறு அழைத்தோம். அவர்களுள் ஷேக் அலிக் என்பவர் முன்கூட்டியே சென்னை மாநாட்டிற்கு வந்து பேரணியிலும் கலந்து கொண்டார். நமது பணிகளை நேரில் கண்டு வியந்து மாநாட்டு முடிவில் கழக பொதுச் செயலாளரிடம் 1000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
தந்தை பெரியாரின் பணியும், மற்ற நாத்திகர்களின் பணியும் ஒன்றாக ஒப்பிட முடியாதது. தந்தை பெரியார் செய்த அரும் பணியால் தான் தமிழ்நாட்டில் நாத்திகம் வெற்றிகரமாக, மக்கள் இயக்கமாக நடைபெறுகிறது. இதே போல் மற்ற இடங்களில் நடைபெறாத தற்குக் காரணம் தந்தை பெரியாரின் வேலை திட்டங்கள் போல் இல்லாதது தான் காரணம்.
-செ.ர.பார்த்தசாரதி
திராவிடர் கழக தென் சென்னை இளைஞர் அணி பொருளாளர்
- விடுதலை நாளேடு, 19.01.1996
உலக நாத்திகர் மாநாடு (விஜயவாடா)
ஜனவரி 4,5,6 1996
4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.
இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.
மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட திராவிடர் கழக தென் சென்னை, தாம்பரம் மாவட்ட தோழர்கள்














