சனி, 8 ஆகஸ்ட், 2026

உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் -செ.ர.பார்த்தசாரதி, திராவிடர் கழக தென் சென்னை இளைஞர் அணி பொருளாளர்

  உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும்


குண்டூரைச் சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா, ஷேக் அலிக் ஆகியோர் பொதுச்செயலாளரிடம் கடிதம் கொடுத்தபோது...


4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.


இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


3.1.96 பிற்பகல் 3.10 மணிக்கு 'பினாகினி' விரைவு தொடர்வண்டி 108 தமிழ்நாடு நாத்திக பேராளர்களை சுமந் துகொண்டு விஜயவாடா நோக்கி புறப் பட்டுச் சென்றது. அதில் நானும் ஒருவராகச் சென்றேன். வண்டி இரவு 10 மணிக்கு விஜயவாடாவை சென்று அடைந்தது. எங்களை விஜயவாடா நாத்திக மய்யத்தில் 'கோரா' அவர்களின் துணைவி சரசுவதி கோரா மற்றும் அவரது மகன் இலவணம் அவர்களின் உடன்பிறப்பு டாக்டர் ஜி. விஜயம் அவர்கள் வரவேற்றார்.


மூன்று நாட்களுக்கும் தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தனர்.


பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.


தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டுப் பேராளர்களுக்கு 10 சிந்தனைகளை எடுத்து வைத்து பேசினார். அனைவரின் கவனத்தையும் இந்த சிந்தனையும், பேச்சும் கவர்ந்தது.


மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது.  தந்தை பெரியார் தொண்டர்களையும், பெரியார் இயக்கத்தையும், பெரியாரின் தொண்டையும் ஒவ்வொருவரிடமும் பன்னாட்டு நாத்திகர்கள் சிறப்பாக பாராட்டினர்.


லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஹூ மணிஸ்டு அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் 'ஹாரி ஸ்டேப்ஸ் ரோப்' என்பவர், எங்களை எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டார்; நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெரியாரிஸ்டுகள் என்றேன். உடனே அகமகிழ்ந்து என்னை கட்டித்தழுவி; தந்தை பெரியாரை 'மாமனிதர், அவர் பணி அரும்பணி' என்று மனந்திறந்து பாராட்டினார். அதனுடன் 'நான் 13 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்தேன். அப்போது தங்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன், வியந்தேன்' என்று கூறினார். சென்னையில் நடை பெறவிருக்கும் மாநாட்டுக்கு வருமாறு கூறிய போது; கட்டாயம் வருவேன் என்று கூறினார். அதே போல் சென்னை பகுத்தறிவாளர் கழக மாநில

மாநாட்டிற்கு வருகை தந்தார். 


4-வது உலக நாத்திகர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஆயிரம் (1000) துண்டறிக்கைகளை தாம்பரம் மாவட் டம் மற்றும் தென் சென்னை மாவட்டம் சார்பில் விஜயவாடாவிலேயே தெலுங்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங் கினோம்.

தி.இரா. இரத்தினசாமி (தாம்பரம் மாவட்டத் தலைவர்) அவர்கள் விஜயவாடாவில் துண்டறிக்கையை வழங்கியபோது...


அந்த துண்டறிக்கையில் ‘தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு தத்துவம் மற்றும் 'சர்வ சக்தி சாமிக்கு தெலுங்கு - தமிழ் தெரியாதா?' என்ற முழக்கமும் அச்சிட்டோம். துண்டறிக்கையில் பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் கடவுள் மறுப்பு தத்துவத்தை அச்சிட் டோம். இத்துண்டறிக்கைகளை பெற் றுக் கொண்டபின் பொதுமக்கள் பரபரப்பாக காணப்பட்டனர். மாநாட்டைப் பற்றி தெரியாமல் இருந்த பொதுமக்கள். 'மாநாட்டின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர். பலர் துண்டறிக்கைகளை வாங்கிப் படித்துவிட்டு, கேள்விகளைக் கேட்டனர். எங்களுக்குத் தெரிந்த தெலுங்கு சொற்களை வைத்து தமிழ் -தெலுங்கு ஆங்கிலம் என்று கலந்து கலந்து பதில்களை கூறி தெளிவுபடுத்தினோம்.


தாம்பரம் மாவட்ட அமைப்பாளர் வீரபத்திரன் அவர்களுக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியுமாதலால் பலருக்கு அவர் தெலுங்கில் விளக்கம் கொடுத்தார். 


இத்துண்டறிக்கையை அச்சிட அச்சுக் கூடங்களை அணுகியபோது, அச்சிட மறுத்தனர். நாத்திக மய்யத்திலே அச்சுக் கூடம் இருப்பதை அறிந்து அங்கேயே அச்சிட்டோம்.


இதைக் கேள்விப்பட்ட 'இலவணம்' அவர்கள் 'நாத்திக கருத்தை பரப்ப பணம் வாங்குவதா?' என்று கூறி, எங்களிடமிருந்து அச்சிட வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறு கூறி விட்டார்.


நாத்திக மய்யத்தில் மருத்துவமனை, அச்சுக்கூடம், சமூக நலக் கூடம், நூலகம், புகைப்பட அரங்கு மற்றும் அறிவியல் மய்யம் முதலியவைகள் உள்ளன. இதே போன்று சிறிய அளவில் நமது பெரியார் திடலிலும் ஓர் அறிவியல் மய்யம் அமைத்தால் நன்றாயிருக்கும்.


மாநாட்டிற்கு பேராளர்கள் மட்டுமே வந்தார்களே தவிர, பொதுமக்கள் வர வில்லை. போதிய அளவு பிரச்சாரமும், விளம்பரமும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.


குழுக் கலந்துரையாடல் கூட்டத்தில் அ. அருள்மொழி அவர்கள் பேசியதை அனைவரும் பாராட்டினர்.


குண்டூரை (ஆந்திரா) சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா என்பவரும், ஷேக் அலிக் என்பவரும் அருள்மொழியின் பேச்சைக் கேட்டுவிட்டு இந்த மாதிரி ஒரு பேச்சை இதுவரையில் கேட்டதில்லை. தெலுங்கில் பேசி இருந்தால் இன்னும் நன்றாக புரிந்து கொண்டிருப்போம் என்று எங்களிடம் கூறினார்கள்.


அருள்மொழி அவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தினோம் அருள் மொழிக்கும் தெலுங்கு தெரியும் என்று கூறியவுடன் குண்டூருக்கு வந்து பிரச்சாரம்



டாக்டர் ஹாரிஸ்டேப்ஸ்-ரோப்

(இலண்டன்) உடன் செ.ர. பார்த்தசாரதி


செய்யும்படியும், அதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்கள்.


இருவரும் கழக பொதுச் செயலாளரிடம் ஆந்திராவில் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும்படி கடிதம் கொடுத்தனர். அக்கடிதத்தில், 'இங்கே பிரச்சாரமே செய்யப்படுவதில்லை. வெளியே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டாம்' என்று கூறுகின்றனர். அறைக்குள்ளேயே கூட்டத்தை நடத்திவிடுகின்றனர். தாங்கள் இங்கே வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தந்தை பெரியாரின் பணியை பாராட்டுகிறோம். அவரின் பணி பெரும்பணி' என்று எழுதிக் கொடுத்தனர். அவர்களை சென்னை மாநாட்டிற்கு வருமாறு அழைத்தோம். அவர்களுள் ஷேக் அலிக் என்பவர் முன்கூட்டியே சென்னை மாநாட்டிற்கு வந்து பேரணியிலும் கலந்து கொண்டார். நமது பணிகளை நேரில் கண்டு வியந்து மாநாட்டு முடிவில் கழக பொதுச் செயலாளரிடம் 1000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.


தந்தை பெரியாரின் பணியும், மற்ற நாத்திகர்களின் பணியும் ஒன்றாக ஒப்பிட முடியாதது. தந்தை பெரியார் செய்த அரும் பணியால் தான் தமிழ்நாட்டில் நாத்திகம் வெற்றிகரமாக, மக்கள் இயக்கமாக நடைபெறுகிறது. இதே போல் மற்ற இடங்களில் நடைபெறாத தற்குக் காரணம் தந்தை பெரியாரின் வேலை திட்டங்கள் போல் இல்லாதது தான் காரணம்.


-செ.ர.பார்த்தசாரதி

திராவிடர் கழக தென் சென்னை இளைஞர் அணி பொருளாளர்


  • - விடுதலை நாளேடு, 19.01.1996

 

_______________________________________________________________________________

உலக நாத்திகர் மாநாடு (விஜயவாடா)

ஜனவரி 4,5,6 1996

4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.


இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.


மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது. 

மாநாட்டில் கலந்து கொண்ட திராவிடர் கழக தென் சென்னை, தாம்பரம் மாவட்ட தோழர்கள்








திங்கள், 16 பிப்ரவரி, 2026

மதம் கலவாத அரசியலைக் கட்டமைக்கச் செய்ய வேண்டியது என்ன? எர்ணாகுளத்தில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரை


திராவிடர் கழகம்

எர்ணாகுளம், பிப். 16- கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் “சார்வாகா 2026” என்ற தலைப்பில் பகுத்தறிவு, அறிவியல் தொடர்பான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் 2026 பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். யுக்திவாத பாடனகேந்திரம் என்ற அமைப்பு, அதன் 14-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் எர்ணாகுளம் டவுன் ஹால் – ஈ.எம்.எஸ் அரங்கில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது.

மலையாள முற்போக்கு எழுத்தாளர் எம்.என்.காரசேரி இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அறிவியல் விரிவுரையாளர் பாப்புட்டி – ராகுகாலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சமகால சமூகமும், பெண்களிடையே நிலவும்  மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மருத் துவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

நேபாள் நாட்டில் நடந்த இளையோர் புரட்சி தொடர்பாக அந்நாட்டு மனிதநேய சங்கப் பொறுப்பாளர் ரகு கே.கனாம் உரையாற்றினார். ஓமியோபதி குறித்து பேராசிரியர் சிறீகுமார் உரையாற்றினார்.

மதிய உணவுக்குப் பின்னான அமர்வில், “மதமற்ற அரசியலை உருவாக்குதல்” குறித்த கருத்துரையாடல் முதல் நிகழ்வாக நடைபெற்றது. அமர்வை, நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கேரள வழக்குரைஞர் கோபகுமார் நெறியாள்கை செய்தார்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தெலங்கானா நாத்திகர் சங்கத்தின் பொறுப்பாளர் ஜோஷி பிரசாந்த், எழுத்தாளர் பீர் முகம்மது, யுக்திவாத பாடனகேந்திரத்தின் ஷிபு எரிக்கல் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

வந்தே மாதரம் தேசியப் பாடலலாக ஏற்கப்படாதது ஏன்?

நாட்டில் தற்போதைய பெரும் பிரச்சினையாகத் திகழும் மதவெறி, மதவாத அரசியல் போக்குகளையும், அதன் தற்போதைய வெளிப்பாடான வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்குதல் உள்ளிட்டவற்றையும் குறித்து உரையாடல் தொடங்கியது. 1937 முதலே நடந்துவரும் விவாதங்களில், வந்தே மாதரம் பாடல் தேசியப் பாடலாக ஏற்கப்படாதது ஏன் என்பது குறித்தும், மதவெறியூட்டும் பாடலாக வந்தே மாதரமும், ஆனந்த மடம் நாவலும் இருப்பதையும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எடுத்துக்காட்டினார். 2014க்குப் பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள், இடையூறுகள், தமிழ்நாட்டின் எதிர்வினைகள் குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, தந்தை பெரியார் காலத்திலிருந்து திராவிடர் கழகம் ஆற்றிவந்த பிரச்சாரம் காரணமாகத் தமிழ்நாட்டில் பாபர் மசூதி இடிப்பு காலத்தில் கூட மதக் கலவரங்கள் நடக்காததையும், திருப்பரங்குன்றம் போன்ற பிரச்சினைகளைத் திட்டமிட்டுக் கிளப்பும் சங் பரிவாரின் சதிகள் தொடர்ந்து தோற்று வருவதையும், தமிழ்நாட்டு மக்கள் 2014 முதல் மூன்று தேர்தலாக ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட பா.ஜ.க.வுக்கு வழங்காததையும் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்புச்
சட்டத்திற்கு ஆபத்து

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், இறையாண்மை ஆகியவற்றுக்குப் பெரும் ஆபத்து வந்திருப்பதையும், அதைக் களைய பரப்புரைகளும், கல்வி நிறுவனங்களில் பாடங்களும், வகுப்புகளும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சிகளும் அவசியம் என்பதையும், அதில் அரசு மற்றும் பகுத்தறிவாளர் அமைப்புகளின் கடமைகளையும் சுட்டிக்காட்டினார். கலந்துரையாடலில் பங்கேற்ற மற்றவர்களும் பல்வேறு செய்திகளை முன்வைத்தனர். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பதில் அளித்தார்.

பார்வையாளர் கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாட்டில் நடைபெறும் பகுத் தறிவாளர் மாநாடுகளில் பங்கேற்பதையும், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர் களின் உரைகளைக் கேட்டு, கழகத்துடன் தொடர்பில் இருப்பதையும் 89 வயது டாக்டர் தொடுப்புழா பத்மநாப் நினைவு கூர்ந்து வாழ்த்துத் தெரிவித்தார்.

‘பேய்’களின் வருகை குறித்து ஆய்வுரை

கருத்தரங்கின் இரண்டாம் நாளான நேற்று, இந்தியாவை உடைக்கும் ஸநாத னம், இந்துத்துவ மயமாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரைகளும்  இளை ஞர்கள் அரங்கமும், மலையாள சினி மாத் துறையில் ‘பேய்’களின் வருகை குறித்த இயக்குநர் சஜீவன் அந்திக் காடு அவர் களின் உரை உள்ளிட்ட நிகழ்வு களும் நடக்கவுள்ளன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பின் தலைவர் ஏ.சி.ஜார்ஜ், செயலாளர் சாந்தி சிவன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.கோபகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 

வெள்ளி, 9 ஜனவரி, 2026

மராட்டிய மண்ணிலே சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு

 மராட்டிய மண்ணிலே ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே“


ஆரியத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து,

அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்த முயற்சி புரட்சிகரமனது!

தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் இயக்கம் – இதன் தாக்கமே!

மராட்டிய மண்ணில் நடந்த
சமூக நீதிப் பெருங்குரல்!

திருப்பு முனையைச் சுட்டிக்காட்டி
கழகத் தலைவர் ஆசிரியர் உரை வீச்சு!

மும்பை, ஜன.4  மாமனிதர் ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே, சாகுமகராஜ் ஆகியோரை நினைவு கூர்ந்தும், ”இவர்களின் தாக்கமே தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாகக் காரணமானது” என்றும் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவாய்க்கான மூல காரணத்தை சுட்டிக்காட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மும்பை மாநாட்டில் எழுச்சி உரை ஆற்றினார்.

மும்பை பெருநகரத்தில் பாண்டூப் பகுதியில் உள்ள கல்வித் தந்தை தேவதாசன்  உருவாக்கிய “பிரைட் உயர்நிலைப் பள்ளியில், கல்வித் தந்தை தேவதாசன் அரங்கத்தில் நேற்று (3.1.2026)  அன்று மாலை 5.30 மணியளவில், “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இரண்டும் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து இன்று வரை தொடர் வண்டி மற்றும் விமானப் பயணம் என 50 க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். மாலை 5.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மும்பை ’பவாய்’ பகுதியிலிருந்து மாநாடு வளாகத்திற்கு வந்து சேர்ந்தார். மும்பையைச் சேர்ந்த “இடி, மின்னல் தாரை தப்பட்டை இசைக்குழுவினர் அதிரடி இசை மூலம் கழகத் தலைவரை எழுச்சிகரமாக வரவேற்றனர். பிரைட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர், திருவள்ளுவருக்கு மரியாதை செய்துவிட்டு, அரங்கத்தினுள் நுழைந்தார். இரண்டு பக்கமும் இருந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திராவிடர் கழகத் தலைவருக்கு எழுந்து நின்று உள்ளன்புடன் மரியாதை செய்தனர். பதிலுக்கு ஆசிரியர் புன்முறுவலுடன் அனைவருக்கும் இரு கை கூப்பி வணக்கம் செலுத்தியவாறு அதே உற்சாகத்துடன் மேடைக்கு வருகை தந்தார்.

தோழர்கள் உரை!

மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். செயலாளர் ஜெ.வில்சன் அனை வரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். தொடர்ந்து மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தோழர்கள் ம.தயாளன், சோ.ஆசைத்தம்பி, சிவக்குமார் சுந்தர்ராஜன், எம்.இராமச்சந்திரன், ந.வசந்தகுமார், மாறன் ஆரியசங்காரன், டென்சிங் ஆரோக்கியதாஸ், பெரியார்  பாலா ஆகியோர் முன்னிலை வகித்துப் பெருமை சேர்த்தனர். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இடையுரையுடன், தந்தை பெரியாரின் கொள்கையை விளக்கும் அனிமேசன் காணொலி ஒன்று திரையிடப்பட்டது. தொடர்ந்து, படக்காட்சிகள் மூலம் பெரியார் உலகத்தின் அருமை பெருமைகளை விளக்கியும், மும்பை மாநாட்டை வாழ்த்தியும் பேசினார். தொடர்ந்து மும்பை – இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், மும்பை புறநகர் தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் அலிசேக் மீரான், மும்பை தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் ம.சேசுராசு, கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்து மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  கழக தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.

முன்னதாக கழகத் தலைவர்,  சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மலர் செல்வின், சுகுணா அன்பழகன் ஆகியோர் முறையே சாவித்திரிபாய் ஃபூலே, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் உருவப்படங்களை அரங்கில் உள்ளோரின் பலத்த கைதட்டல்களுக்கிடையே திறந்து வைத்தனர். அதேபோல, பெரியார் என்.வி.சண்முகராஜன், ஆ.பாலசுப்பிரமணியம், கு.தர்மலிங்கம், இரா.ஒம்பிரகாஷ் (புனே) ஞான.அய்யாப்பிள்ளை, எஸ்.பி.செழியன் ஆகியோருக்கு, ”பெரியார் விருது” வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை சூட்டி நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். அதைத்தொடர்ந்து, வி.சி.வில்வம் தொகுத்த “கொள்கை வீராங்கனைகள்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில், 100 மகளிர் தோழர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். அனைவரும் கழகத் தலைவருடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தொடர்ந்து மாநாட்டின் மிகமுக்கிய நிகழ்வாக எட்டு தீர்மானங்கள் வடிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. திராவிடர் கழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பாந்தரா தோழர் பாஷியம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செய்தனர்.  மகாராட்டிரா அரசைப்  போல், தமிழ்நாடு அரசும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை வழங்க வழிவகை காண வேண்டும் என்றும், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முன்பிருந்தபடியே ஒன்றிய அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சமஸ்கிருதத்தில் இருப்பதை மாற்றி அந்தந்த மாநில் மொழிகளில் வெளியிட வழி செய்யப்பட வேண்டும் என்றும், நீதிபதி பணிகளில் எல்லா பிரிவினருக்கும் சமூகநீதிப்படி இட ஒதுக்கீடுபடி நிரப்பப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்றும்,  சு.குமணராசன் 8 தீர்மானங்களை முன்மொழிந்தார். ஒட்டுமொத்த அரங்கத்தினரும் இணைந்து கையொலி செய்து அதை வழிமொழிந்து நிறைவேற்றித் தந்தனர்.

ஆசிரியர் உரை

அதைத் தொடர்ந்து, மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர். அத்துடன் மும்பை தி.மு.க. தோழர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், ஜோதிராவ் ஃபூலே, சாவிரித்திரிபாய் பூலே ஆகியோருடன்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடுவில் இருக்கும் ஒளிப்படம் மற்றும் பூச்செண்டு வழங்கி மரியாதை செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மும்பை மாநாட்டுப் பொறுப்பாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து மும்பை இலக்கிய அணி சார்பில் தமிழ்நேசன் மரியாதை செய்தார். மும்பை செழியன் மலர்மாலை அணிவித்து மகிழ்ந்தார். பள்ளி வளாகத்தின் சார்பில் அம்பேத்கர் தொகுப்பு நூல் வழங்கப்பட்டது. மும்பை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் மும்பை திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவருக்கு ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே சிலைகள் வழங்கப்பட்டன. மும்பை பெரியார் பிஞ்சுகள் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர். கோவிட் 2021 சமயத்தில் கழகத் தலைவர் மூலமாக காணொலி நிகழ்ச்சிகளில் பெயர் சூட்டப்பட்ட மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலாவின் மகள் குழந்தை மகிழினி மற்றும் இரா.ச.ராஜேந்திரன் தனது பெயர்த்தியுடன் உண்டியலுடன் சேர்த்து ரூபாய் 15,000/- கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். கழகத் தலைவர் மிகவும் உற்சாகமாகவும், இன்முகத்துடனும் அனைத்தையும் ஏற்று மகிழ்ந்தார். இறுதியாக கழகத் தலைவர் இரவு 8.20 மணிக்கு உரையாற்றினார்.

 

அவர் தமது உரையை, ”இந்த மாநாட்டில் மும்பை, தமிழ்நாட்டுப் பேராளர்களால் அரங்கம் நிரம்பி வழிகின்றது போல், என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது” என்ற உவமையுடன் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினார். தொடர்ந்து, ”மாராட்டிய மண்ணிலே சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவது பெருமைக்குரியது” என்றார். அதற்கான காரணங்களாக, மாமனிதர் ஜோதிர்ராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே, சாகுமகராஜ் ஆகியோரின் தொண்டை நினைவு கூர்ந்தார். ”இவர்களின் தாக்கம்தான் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தது” என்று சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவாய்க்கான மூல காரணத்தைக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “பெரியாரின் பொது வாழ்க்கை தலைகீழானது. தான் வகித்து வந்த 29 பதவிகளிலிருந்து ஒரு கையெழுத்து மூலமாக  பதவி விலகிவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்தவர்” என்றும், “பொது வாழ்க்கைக்கு வருகிறவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும்” என்றும் தந்தை பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டார். மேலும் அவர், “சுயமரியாதை இயக்கம் பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கும் நாங்கள் மும்பை மண்ணில் இருந்து சொல்கிறோம். இன்றைக்கு வரலாற்றின் பெருமைக்குரிய நாள்; சாவித்திரிபாய் ஃபூலே அவர்களின் 196 ஆம் பிறந்தநாள் இன்று (3.1.2026)’’ என்று உச்சரித்ததும் கையொலிகளால் அரங்கம் அதிர்ந்தது. மேலும் அவர், “ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே இரண்டு பேரும், ஆரியத்தை எதிர்த்து, வேதத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று செய்த புரட்சி சாதரணமானது அல்ல” என்று  சொல்லத் தொடங்கி முடிக்கும் வரை பலத்த கைதட்டல்கள் தொடர்ந்து அரங்கை அதிரவைத்தது.

தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றே தீரும்!

மேலும் அவர், தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றே தீரும் என்பதைச் சொல்லிவிட்டு, “உத்தமமான தலைமை! உறுதியான கொள்கை! நாணயமான தொண்டர்கள்! யோக்கியமான பிரச்சாரகர்கள்! இந்த நான்கும் இருந்தால் வெற்றி உறுதி” என்று சொல்லி, சுயமரியாதை இயக்கம் வெற்றி மேல் வெற்றி பெற்று வருவதற்கான இலக்கணத்தை சுட்டிக்காட்டினார். மேலும் அவர், சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே, தந்தை பெரியார் கலந்துகொண்ட வைக்கம் போராட்டத்தை நினைவுபடுத்தி, ”முதலில் கோயில் தெருக்களில் நடக்கப் போராட்டம், அடுத்து கோயிலுக்குள் நடக்கப் போராட்டம்; பின்னர் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை செல்லப் போராட்டம்; அதற்கும் அடுத்து கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம். அதுவும் சாதாரணமாக அல்ல, 50 ஆண்டுகால சட்டப் போராட்டம்” என்று காங்கிரஸ்; சுயமரியாதை இயக்கம்; திராவிடர் கழகம்; திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒட்டுமொத்த திராவிடர் இயக்கம் ஜாதி ஒழிப்பில் காட்டிய அசாத்திய அக்கறையை; செயல்பாட்டை பட்டியலிட்டார். அதனால் பெற்ற பயன்களாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பெற்று, உலகெங்கிலும் சென்று அறிவுப்புலத்தில் கோலோச்சுகின்ற தமிழர்களை சுட்டிகாட்டினார். தொடர்ந்து, சத்ய ஜோதக் சமாஜம் பற்றியும், ஒரு சமூகத்தின் தலைவராக தவறாகக் கொண்டாடப்படும் உலக அறிவாளி அம்பேத்கர் 1938 இல் எழுதிய கட்டுரை பற்றியும், அது மாநாட்டில் வெளியிட முடியாத சூழலையும், ஆங்கிலத்தில் இருந்த அக்கட்டுரையை தந்தை பெரியார்தான் தமிழில் மொழிபெயர்த்து, ”ஜாதியை ஒழிக்க என்ன வழி” என்ற பெயரில் வெளியிட்டதையும் சுருக்கமாகக் கூறினார். தொடர்ந்து, “இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல்தான் இன்றைய இளைஞர்கள் மின்மினிப் பூச்சிகளை மின்சாரமாகக் கருதுகின்றார்கள்” என்று நாகரிகமாக புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் தொண்டர்களை விமர்சனம் செய்தார்.

ஆசிரியர் உரை ஆசிரியர் உரை

திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கு நேர் எதிரான ஆர்.எஸ்.எஸ். பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை அவர். மேலும் “சுயமரியாதை இயக்கம் தான் நமக்கு மானத்தையும், அறிவையும் கொடுத்த இயக்கம். அது இன்றைக்கு உலகெங்கிலும் பரவி வருகிறது. விஞ்ஞானத்தை யாராவது தடுக்க முடியுமா? அதுபோலத்தான் பெரியாரின் கொள்கைகளை உலகமயமாவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே, ஜாதியை; மூடநம்பிக்கைகளை; பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டி, அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கை அடைந்தே தீருவோம்” என்று சூளுரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

கழகத் தலைவரின் உரை நிறைவடைந்ததும் மும்பை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இ.அந்தோணி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி மிகச்சிறப்பாகவும், மனநிறைவாகவும் ஏற்பாட்டாளர்களுக்கும் கலந்துகொண்ட பேராளர்களுக்கும் அமைந்தது. அனைவருக்கும் சுவையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வந்திருந்தவர்கள் சிறிது வயிற்றுக்கும் ஈந்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து பங்கு பெற்ற பேராளர்கள்!

நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுப் பேராளாளர்களாக தோழர்கள் சோமசுந்தரம், மோகன், மீனாம்பாள், ஜெயராமன், தமிழினியன், மணிகண்டன், சின்னதம்பி, அமுதா, மதுபாலா, த.மரகதமணி, நா.பார்த்திபன், இறைவி, பூவை செல்வி, இசையின்பன், பசும்பொன் செந்தில்குமாரி, முத்தையன், நாகவள்ளி, நூர்ஜஹான், தேன்மொழி, காமராஜ், பெரியார் செல்வி, சி.வெற்றிச்செல்வி, கவுதமி, வளர்மதி, உமா, செல்வராஜ், முகப்பேர் செல்வி, முரளி, கீதா, தளபதிராஜ், வை.கலையரசன், கார்த்திகேயன், அன்புமதி, மூர்த்தி, நவீன்குமார், இளவழகன், ஆர்.டி.வீரபத்திரன், பாண்டு, கலைச்செல்வன், திருவேங்கடம்,  தாமோதரன், துரை.இராவணன், உத்ரா, ராஜவர்மன், சீ.லட்சுமிபதி, ராஜா, அசோக் நாகராஜன், தியாக முருகன், மாணிக்கம், பொ.நாகராஜன், கோ.தங்கமணி, தனலட்சுமி, நாத்திகன், எல்லப்பன், இ.தமிழ்மணி, நன்னன், இனியன், சுகந்தி, லட்சுமிபதி, இளவழகன், உடுமலை வடிவேல், புகழேந்தி ஆகியோரும், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மும்பை இளங்கோ அப்பாதுரை, ஆரே காலனி பாண்டு, அ.கண்ணன், மு.கணேசன், காரை கரு.ரவீந்திரன், பூ.சு.அழகுராஜா, கி.அறிவுமலர், அரண்செய் மகிழ்நன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்த இயக்கப் புத்தகங்கள் விற்பனையை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, த,மரகதமணி, நா.பார்த்திபன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முதல் நாளில் ரூபாய் 9,000/- க்கு மேல் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 4.1.26

சனி, 27 டிசம்பர், 2025

திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆம் தேசிய மாநாடு (இரண்டாம் நாள்)

 


இரண்டாம் நாள் காட்சிகள் – மாட்சிகள்

திராவிடர் கழகம்

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist associations – FIRA) – 13ஆம் தேசிய மாநாடு டிசம்பர் 2024 – 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் இரண்டாம் நாள் நடவடிக்கைகள் பல தரப்பு நிகழ்ச்சிகளோடு நடந்து நிறைவடைந்தது. FIRA அமைப்பானது இந்திய அளவில் – அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்ற பகுத்தறிவாளர் அமைப்புகளை, உறுப்பினர் அமைப்பாகக் கொண்டு செயல்பட்டு வரும் கூட்டமைப்பாகும். இந்த மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்தும் பகுத்தறிவாளர் தோழர்கள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டது மாநாட்டின் சிறப்புகளுள் ஒன்றாக இருந்தது.
முதல் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பெரிதும் உள் அரங்க நிகழ்வுகளாக நடைபெற்ற நிலையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெளியிடங்களிலும், உள் அரங்கங்களிலும் பல்வேறு தளங்களில் நடந்தேறியது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
மாநாட்டில் பேசுபவர்கள் இரு தரப்பினராகப் பங்கேற்ற – ஒரு நிகழ்வு தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள மாநாட்டுப் பேராளர்கள் மற்றும் தோழர்களை உள்ளடக்கி ‘அறிவியல் வழியில் நடப்போம்; அறிவியல் மனப்பான்மை கொண்டு செயல்படுவோம்’ என்ற செய்தியினை வெளிப்படுத்தும் வகையில் பெருந்திரள் நடை (Mass March) நடைபெற்றது. திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கி புத்தூர் – பெரியார் மாளிகையில் பெருந்திரள் நடை நிறைவடைந்தது.
பெருந்திரள் நடை தொடங்குவதற்கு முன்பாக தந்தை பெரியாரின் சிலைக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் செயலாளர்கள் வீ. மோகன், வெங்கடேசன், தமிழ்ப் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பகுத்தறிவாளர் கழகப் புரவலரான தமிழர் தலைவர் ‘பெருந்திரள் நடை’யினை தொடங்கி வைத்தார். பெருந்திரள் நடையில் பங்கேற்றோர் அனைவரும் ‘அறிவியல் வழி நடப்போம்’ ‘அறிவியல் மனப்பான்மை கொண்டு செயல்படுவோம்’ என்று கூறும் செய்தியினை தாங்கிய பதாகைகள் மற்றும் செய்தி அட்டைகளை (Placards) கையில் தாங்கிய வண்ணம் அமைதியாகச் சென்றனர். முழக்கம் எதுவுமின்றி செய்தியை மட்டும் வெளிப்படுத்திடும் வகையில் பொது மக்கள் கவனத்தை ஈர்த்திடும் வகையில் நடைபெற்று பெரியார் மாளிகை வளாகத்தில் பெருந்திரள் நடை நிறைவடைந்தது.

‘பெரியார் உலகம்’ – பார்வையிடல் –
மரக்கன்றுகள் நடுதல்
மற்றொரு நிகழ்வாக வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த தோழர்கள் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ (Periyar World) அமைந்து வருவதை பார்வையிடச் சென்றனர்.
‘பெரியார் உலகம் கட்டமைக்கப்படும் இடத்தில் தற்போது உள்ள நிலைமையையும், திட்டப்படி கட்டி முழக்கப்பட உள்ள விவரங்களையும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பேராளர்களுக்கு எடுத்துரைத்தார். தமிழ்நாட்டிலேயே உயரமான சிலையாக (155 அடி – 95 அடி சிலை + 60 அடி பீடம்) தந்தை பெரியார் சிலை அமைந்திட உள்ளதையும், அந்த இடத்தில் பெரியார் ஆய்வகம், நூலகம், அறிவியல் பூங்கா, குழந்தைகள் பூங்கா இன்னும் பல கருத்தூட்டும் பகுதிகள் உருவாகிட உள்ளதையும் அறிந்து பேராளர்கள் வியப்பும், மகிழ்ச்சியும் கொண்டனர்.

மரக்கன்று நட்டனர்
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டின் பேராளர்கள் ‘பெரியார் உலகம்’ அமையும் இடத்திற்கு வந்ததன் நினைவாக ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டனர். மொத்தம் 153 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மீண்டும் அரங்க நிகழ்ச்சிகள்
நான்காவது ஆய்வரங்கம் ‘பெண்களும் மூடநம்பிக்கைகளும்’ என்ற தலைப்பில் தொடங்கியது. ஆய்வரங்கத்தின் தலைவராக FIRA அமைப்பின் மமதா நாயக் உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைகளை மருத்துவர் ராதிகா முருகேசன் (தமிழ்நாடு), காரே மல்லேசம் (தெலங்கானா), பஸந்தி ஆச்சார்யா (ஒடிசா) ஹரிஷ் கே. தேஷ்முர் (மகாராட்டிரா) சமர்ப்பித்து உரையாற்றினர். தொகுப்புரையினை FIRA அமைப்பின் மோனிகா சிறீதர் புரதன் ெஷட்டி வழங்கினார்.

சிறப்பரங்கம்
அடுத்து ‘மதச்சார்பற்ற, அறிவியல் சார்ந்த, சுயமரியாதை புத்துலகை நோக்கி…’ எனும் தலைப்பில் சிறப்பரங்க அமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அனைந்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளருமான கோ. கருணாநிதி தலைமை வகித்து உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரும், சீரிய பகுத்தறிவாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தனது உரையில் அமைச்சர் குறிப்பிட்டதாவது:
இன்றைக்கு தமிழ்ச் சமூகம் ஒப்பீட்டளவில் உயர்நிலைக்கு வந்ததற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஆற்றிய சமுதாய அரசியல் பணிகள் ஆகும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மக்களுக்கு ஆவன செய்து புத்துலகிற்கான பயணத்தை நடத்தி வருகிறார். அரசியல் அதிகாரத்தால் மக்களை வளப்படுத்துவது எப்படி என்பதற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார். ஒரு பகுத்தறிவாளராக ஆட்சி நடத்தி வருவது பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கே ஒரு முன் மாதிரி ஆட்சியாக வழங்கிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்ட நிகழ்ச்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை கேரள மாநில அரசின் ஒத்துழைப்புடன் சேர்ந்து நடத்தி முடித் துள்ளார். போராட்டம் நடந்த வைக்கம் சென்று வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தினசரி பேருந்து பயண சேவையினை வழங்கியுள்ளதை தமிழ்நாடு அரசு பெருமையாக கருதுகிறது.
இவ்வாறு அமைச்சர் தன் சிறப்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழர் தலைவர் உரை
சிறப்பரங்கத்தின் நிறைவுரையில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறியதாவது:
நாட்டில் பரவலாக – குறிப்பாக வடபுலத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லப்படுவது ‘ஸநாதனம்’ என்பதாகும். அதன் பொருள் ‘என்றைக்கும் மாறாதது; நிரந்தரமானது’ என்பதாகும். எந்நாளும் மாறாதது என்பது அறிவியலுக்கு புறம்பானது. மாறி வரும் சூழலில், கடைப்பிடிக்கப்படும் ‘நம்பிக்கையும்’, மாறுதலுக்கு உரியதே. ‘மாறாதது என்றால் மக்களுக்குப் பயனளிக்காதது’’ என்பதே அதன் பொருளாக இருக்க முடியும்.
அத்தகைய ‘ஸநாதனத்தை’ அன்றைக்கே எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். ‘பெரியார்’ எனும் சொல் அடிக்கடி பயன்பாட்டில் இருப்பது, ஒரு தலைவரின் பெயரை – போற்றுவதற்கு மட்டுமல்ல; ஒரு தத்துவத்தின் பெயர் மக்களை சமத்துவ நிலைக்கு, அறிவியல் சார்ந்த நிலைக்கு கொண்டு சென்று மானமும் அறிவும் மிக்க சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட வழி காட்டிடும் தத்துவத்தினை போற்றுவதற்காகும்.

பெரியாருடைய போர் முறை என்பது எதிரியின் (கொள்கையின்) மூலபலத்தை முறிப்பதாகும். அப்படிப்பட்ட நிலையில்தான் சமூக உயர்வு – தாழ்வுகளை ‘தானே’ ஏற்படு்த்தியதாகக் கூறும் கடவுளை உண்மையில் இல்லாத கடவுளை – அந்த ‘கடவுள் நம்பிக்கை’ மக்கள் சமத்துவ நிலைக்கு கொண்டு செல்லவில்லை என்பதாக கடுமையாக எதிர்த்து சமுதாய பணி ஆற்றினார். மருத்துவ முறைகளில் இரண்டு வகைகள் உண்டு. நோயை மருந்து கொடுத்து குணப்படுத்துவது ஒரு வகை – மற்றொன்று அறுவைச் சிகிச்சை செய்து நோயிலிருந்து குணப்படுத்துவது – பெரியாரின் சமுதாயப் பணி என்பது அறுவை சிகிச்சை அளித்து குணப்படுத்துவது (Surgeon’s Cure) போன்றதாகும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் உலகில் எங்குமே வரலாற்றில் காணப்படவில்லை. பெரியாருடைய தத்துவம் மானுட மேம்பாட்டிற்கானது. அந்த வகையில் ஒரு பகுதிக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் உரிய வகையில் அவர்களை உயர்வடையச் செய்து இழிநிலை வாழ்வை போக்கி இன்ப வாழ்வு வாழச் செய்திடும் தத்துவமாகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இணையரங்க நிகழ்ச்சி

திராவிடர் கழகம்
மாநாட்டு நடவடிக்கைகள் அதுவரை ஓர் அரங்க நிகழ்ச்சிகளாக தொடர்ந்தவை – பிற்பகல் உணவிற்குப்பி்ன்னர் இணையாக இரண்டு அரங்கங்களாக நடைபெற்றன. ஒரு அரங்கில் FIRA அமைப்பின் பொதுக் குழு, தீர்மான நிறைவேற்றம், தேர்தல் ஆகிய நடவடிக்கைகள் நடைபெற்றன.
மற்றொரு அரங்கில் ஆய்வு அமர்வு நடடிக்கைகள் தொடர்ந்தன. நான்கு தலைப்புகளில் முன்னர் நடைபெற்ற ஆய்வரங்கங்களில் கால நெருக்கடி காரணமாக தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வாய்பில்லாதவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றினர்.
இந்த அமர்விற்கு பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் தலைமை வகித்து உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரகளை எஸ்.என். அன்புமணி (தமிழ்நாடு), வி. இளவரசி சங்கர் (புதுச்சேரி), பர்வீன் ரதே (ஒடியா), கு. சோமசுந்தரம் (தமிழ்நாடு), சிப்பிராஜ் (தமிழ்நாடு) எம். சபீர் முகம்மது (தமிழ்நாடு) பாபு பித்தோலன் (கேரளா), இசட் பிரையன் ஆடம்ஸ் ஜான் (தமிழ்நாடு), சுவப்னா சுந்தர் (தமிழ்நாடு), நல்லயன் நடராஜன் (தமிழ்நாடு), ஜி. ஆறுமுகம் (PMIST, வல்லம், தமிழ்நாடு) ஆகியோர் சமர்ப்பித்து விளக்கவுரையாற்றினர்.
ஆய்வரங்கத்தின் தொகுப்புரையினை திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீ.ம.வீரமர்த்தினி வழங்கினார்.

நிறைவு நிகழ்ச்சி
இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் FIRA பொதுக் குழு ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் குரல் எடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட FIRA பொறுப்பாளர்கள் பாராட்டப் பட்டனர். FIRA தேசிய தலைவர் பேராசிரியர் நரேந்திரநாயக், தேசிய செயலாளர் முனைவர் சுரேஷ் கோதேராவ் உரைக்குப் பின்னர் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வீ. மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவுரை
FIRA மாநாட்டின் நிறைவுத் தொகுப்புரையினை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் வழங்கினார். மாநாடு நடைபெற அனைத்து ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நிலையில் நன்றி கூறினார். இறுதியாக இரண்டு நாள் FIRA மாநாட்டின் நிகழ்வுகளுக்கு நன்றி தெரிவித்து துணைத் தலைவர் இ.டி. ராவ் உரையாற்றினார்.
இரண்டு நாள் மாநாடு, பல்வேறு கொள்கை சார்ந்த உரைகள், விவாதங்களுடனும் செயல் திட்டங்களுடனும் நடைபெற்று இனிதாக நிறைவுபெற்றது.

-விடுதலை நாளேடு,30.12.24


இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) திருச்சியில் 13ஆம் தேசிய மாநாடு

 

புத்தக வெளியீடு

மாநாட்டின் இரண்டாம் நாளன்று சிறப்பு அரங்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிய ஆங்கில மொழியாக்கத்தில் புத்தகம் வெளியிடப்பட்டது. மகாராஷ்டிரா அந்தஷிரத்த நிர்மூலன் சமிதி அமைப்பின் மூத்த தலைவர் ஹாரிஷ் கே. தேஷ்முக் எழுதிய Superstitions – Myths and Realities (மூடநம்பிக்கைகளும் – புரட்டும் உண்மை நிலையும்) எனும் நூலை பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட முதல்படியினை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் பகுத்தறிவாளர் எஸ்.எஸ். சிவசங்கர் பெற்றுக் கொண்டார். மராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல், குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மாற்றம் பெற்று ஏற்கெனவே வெளி வந்தது. ஆங்கில மொழியாக்க நூலை கேரள மைத்திரி புக்ஸ் பதிப்பகத்தின் லால்சலாம் வெளியிட்டுள்ளார்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 2024 டிசம்பர் 28 & 29 ஆகிய இரு நாள்களும் நடைபெற்ற FIRA மாநாட்டு நிகழ்வுகளில் பல ஆய்வரங்க அமர்வுகள் நடைபெற்றன. மாநாட்டு நடவடிக்கைகளுள் FIRA அமைப்பின் செயல் அரங்க அமர்வுகளும் இணையரங்கங்களும் சேர்ந்தே நடைபெற்றன.

மாநாட்டிற்கு முந்திய நாள் டிசம்பர் 27 அன்று FIRA அமைப்பின் செயற்குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையில் நடந்தேறியது. மாநாட்டு நடவடிக்கைகள் பற்றிய விவாதங்களும் நடைபெற்று இறுதி வடிவம் பெற்றது.

மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 28 அன்று பிற்பகலில் FIRA அமைப்பில், அங்கம் வகிக்கும் உறுப்பினர் அமைப்புகள் பஞ்சாபில் கடந்த முறை நடந்த மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்த அரங்க அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பின் பிரதிநிதிகளும் தங்களின் அமைப்பின் செயல்பாடுகளை வாசித்து அதன் அறிக்கையிைன FIRA தலைமை அமைப்பிடம் தந்தனர். பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகள் குறித்துப் பேசி, கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. மோகன் அறுிக்கையினை வழங்கினார்.
இரண்டாம் நாளான டிசம்பர் 28 அன்று நண்பகல் உணவிற்குப் பின்னர் கட்டுரைகள் வாசித்தளித்திட இணையரங்கமும், FIRA அமைப்பு அரங்கமும் தனித்தனியாக நடந்தேறின.

FIRA அமைப்பின் பொதுக் குழு

FIRA அமைப்பில் உள்ள உறுப்பினர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற பொதுக்குழு தனி அரங்கத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பினரும், அதன் பேராளர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்து FIRA அமைப்பின் வருங்காலச் செயல்பாட்டிற்கு ஆலோசனைகளையும் வழங்கினர். இறுதியில் அந்த ஆலோசனைகளைப் பற்றிய FIRA தலைமைக் குழுவின் விளக்கங்களை வழங்கி, ஏற்றுக் கொள்ள வேண்டியவை பற்றியும், நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என் பதையும் வகை பிரித்து வழங்கினர்.

தீர்மானங்கள் ஒப்புதல் – நிறைவேற்றம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் மேலும் ஏதேனும் தீர்மானங்களில் சேர்க்கப்பட வேண்டியவை, நீக்கப்பட வேண்டியவை குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்று தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன.

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள்:

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. இந்த நிலையில் கீழ்க்கண்ட வகையில் மதச் சார்பற்ற அரசின் அலுவலர்கள் நடந்து கொள்வது சட்டப்படியானதாகும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அ) அரசுப் பணியாளர்கள் எந்த மதச் சின்னங்களையும் அணியக் கூடாது.

ஆ) அரசு அலுவலகங்களில் வளாகங்களில் எந்தவித மதச்சின்னங்களோ, அடையாளங்களோ, கட்டுமானங்களோ, இடம் பெறச்கூடாது.

இ) அரசுக்குச் சொந்தமான இடங்களில், நடைபாதைகளில் எந்தவித மதவழிபாட்டுக் கட்டமைப்புகளும் இருக்கக்கூடாது; ஏற்ெகனவே இருக்கும் அத்தகைய கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
2010 செப்டம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைபாதைக் கோயில்கள் அகற்றப்பட வேண்டும். அப்படி அகற்றப்படாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு நேரில்வந்து விளக்கம் தரவேண்டும்.
இதன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதையும், இம்மாநாடு நினைவூட்டுகிறது.

ஈ) அரசுப் பணியாளர்கள் எந்த மத உபந்நியாசங்களிலும் ஈடுபடக் கூடாது.
மேற்கண்ட தீர்மானங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை (SECULARISM) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இம்மாநாடு தெரிவிக்கிறது.
தீர்மானம் எண்.2 கல்விப் பாடத்திட்டங்கள் – விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பாடங்கள் அமையவேண்டும் என்றும் மூடநம்பிக்கைக்கு எந்தவகையிலும் வழிகோலக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்.3 மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய 50 விழுக்காடுள்ள பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சட்டமன்றம், நாடாளுமன்றங்களிலும் கண்டிப்பாக 50 விழுக்காடு கிடைக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்றும், சமூகநீதியில் பாலியல் நீதி என்பதும் உள்ளடக்கம் என்பதையும் இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்.4 ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு (INTER – CASTE, INTER – RELIGION) செய்யும் வகையில் ஒன்றிய அரசு தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்.5 விஞ்ஞான கண்டுபிடிப்புகளான ஊடகங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அஞ்ஞானக் கருவிகளாகச் செயல்படுவது அறிவு நாணயக் கேடு என்பதை இம்மாநாடு தெரிவிப்பதுடன், மக்களை வஞ்சிக்கும் – வளர்ச்சியைத் தடைப்படுத்தும் இந்தப் போக்கினைக் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ற பிரிவு வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

பொதுக்குழு நடவடிக்கைகளின் நிறைவாக புதிய செயற்குழுவினை தெரிந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. நீண்ட விவாதங்கள், உரையாடல்களுக்குப் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், ஒருமனதாக தெரிவும் செய்யப்பட்டனர்.

FIRA அமைப்பின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

முனைவர் பிரந்திரநாயகர், தலைவர் (கர்நாடாகா), முனைவர் சுடேன் கோதேவராவ், பொதுச் செயலாளர் (மகாராட்டிரம்), சி. சையட், பொருளாளர் (கேரளா), இ.டி.ராவ், துணைத் தலைவர் (ஒடிசா), இரா. தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் (தமிழ்நாடு), லால்சலாம் துணைத் தலைவர் (கேரளா), ஹரிஷ் கே. தேஷ்முக் துணைத் தலைவர் (மாகராட்டிரம்), ஓய். கிருஷ்ணன், துணைத் தலைவர் (ஆந்திரா), மனோகர் பன்சட் துணைத் தலைவர் (மகாராட்டிரா), சாம்பசிவராவ், செயலாளர் (தெலங்கானா), எம்.என். புத்தா, செயலாளர் (ஆந்திரா), வி. மோகன், செயலாளர் (தமிழ்நாடு), கங்காதர் சாகு, செயலாளர் (ஓடிசா), ராம்குமார், செயலாளர் (பஞ்சாப்), ஹிரிபா பதோடு செயலாளர் (மகாராட்டிரம்), திரஷ்யா ஜான், அமைப்புச் செயலாளர் (கேரளா), விஜய் காக்கூரால், உறுப்பினர் (மகாராட்டிரம்), கிரிஞ்ஞால கிருஷ்ணன், உறுப்பினர் (கேரளா), எம்.எஸ்.என். மூர்த்தி, உறுப்பினர் (ஆந்திரா), பசந்த் ஆச்சாரியா, உறுப்பினர் (ஒடிசா), மோனிகா சிறீதர், உறுப்பினர் (தெலங்கானா), மம்தா நாயக், உறுப்பினர் (ஒடிசா), மயூர்ெஷட்டி, உறுப்பினர் (கர்நாடகா), தானேஸ்வர் சாகு, புரவலர் (ஒடிசா).

நிறைவேற்றப்பட்ட மாநாட்டு தீரமானங்களும், புதிய செயற்குழு பொறுப்பாளர்களும் நினைவரங்க நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.

இரண்டு நாள் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வுகளை சிறப்பாக நேர்த்தியாக தொகுத்து வழங்கினார் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்.

FIRA அமைப்பின் இரண்டு நாள் 13ஆம் தேசிய மாநாட்டின் சிறப்புகள்:

1. இதுவரை நடைபெற்ற FIRA தேசிய மாநாடுகளில் பங்கேற்ற பேராளர்களை (Delegates) விட அதிக அளவில் பங்கேற்றனர்.

2. உறுப்பினர் அமைப்பின் பேராளர்களில் மிகப் பலர் மாநாட்டில் நிகழ்வுகளில் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்று தங்களது பணியினைச் செய்தனர்.

3. புத்தக வெளியீடும் முத்தாய்ப்பாக நடந்தேறியது.

4. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரண்டு நாள்களில் மூன்று சிறப்புரை வழங்கி கருத்துப் பரவலுக்கு வலு சேர்த்தார். FIRA உறுப்பினர் அமைப்பின் மூத்த இளைய பேராளர்கள் தமிழர் தலைவருடன் நெருக்கமாக இருந்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

5. தமிழ்நாடு மாநில அரசின் இந்நாள் அமைச்சர், ஒன்றிய அரசின் மேனாள் அமைச்சர், நாடாளுமன்ற, பகுத்தறிவாளர் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்று உரையாற்றினர்.

6. பேராளர்கள் தங்குமிடங்கள், இரண்டு நாள் உணவு வழங்கலும் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு, பேராளர்கள் அதை மாநாட்டுபற்றிய கருத்துரை வழங்கலின் பொழுது வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

7. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள கொள்கைப் புத்தகங்கள், கருத்தியல் கட்டுரைப் புத்தகங்கள் குறிப்பாக ஆங்கிலத்தில் உள்ளவைகளை அதிக அளவில் பேராளர்கள் வாங்கிச் சென்றனர்.
ஒட்டு மொத்தத்தில் FIRA அமைப்பின் 13ஆம் தேசிய மாநாடு, பகுத்தறிவாளர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் திட்டமிட்டவாறு செம்மையாக நடத்தி முடிக்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் உள்ள பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஒத்துழைப்பு, செயல்பாடு நிறைவாக தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் மாநாட்டின் சிறப்பிற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

தொகுப்பு: வீ. குமரேசன்

-விடுதலை நாளேடு,31.12.25

- வ