வியாழன், 25 டிசம்பர், 2025

தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில் – இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FIRA) – 13ஆம் தேசிய மாநாடு (திருச்சி –28.12.2024)

பெரியார் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர், பொன்னாடை போர்த்தி சிறப்பு




 தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளான இன்று (28.12.2024)

‘‘பெரியார் சிந்தனைகளை” வங்க மொழியில் மொழி பெயர்த்த சுப்ரியா தருண்லேகா பந்தோபத்யாயா, பஞ்சாபியில் மொழி பெயர்த்த முனைவர் ஜஸ்வந்த்ராஜ், மலையாளத்தில் பல நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுவரும் லால்சலாம், ஒடியாவில்் மொழி பெயர்த்த தானேஸ்வர் சாகு ஆகிய நால்வருக்கும் திராவிடர் கழகத் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார்.

தந்தை பெரியார், திராவிடர் கழகம்

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டில் திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள்!


அகில இந்திய 13 ஆவது பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்தார். தொடர்ந்து அகில இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நரேந்திர நாயக் அவர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார். அகில இந்தியப் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சுடேஷ் கோதேராவ் அவர்களுக்குத் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திமுக செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு இரா.தமிழ்ச்செல்வன், பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கு நரேந்திர நாயக், மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் அவர்களுக்குப் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வி.மோகன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தனர்.

- விடுதலை நாளேடு,28.12.24

மாநாட்டில் பங்கேற்ற அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார் தமிழர் தலைவர்

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (29.12.2024) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசை வழங்கினர். உடன் மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், வா.தமிழ்ப்பிரபாகரன், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, ஆகியோர் உள்ளனர்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாள் மாட்சிகள்– காட்சிகள்

திருச்சி, டிச.29 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இரண்டு நாள்களாக – டிசம்பர் 28, 29இல் (சனி – ஞாயிறு) இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டை, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
நேற்று (டிசம்பர் 28) மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தேறின. தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவருக்கு விருது
தொடக்க விழாவில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, தெலங்கானா மானவ விகாச வேதிகா – பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பாக 2024 ஆம் ஆண்டுக்கான ‘தேசிய மனிதநேயர் விருது’ வழங்கப்பட்டது. விருதுப் பட்டயத்துடன் ரூ.10,000த்துக்கான விருதுத் தொகையினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் பி.சாம்பசிவராவ் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்ந்து ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினர்.

விருதுத் தொகையினை தமிழர் தலைவர்
‘பெரியார் உலகத்திற்கு’ வழங்கினார்
விருதுத் தொகை ரூ.10,000–க்கான காசோலையினை திருச்சி – சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் வழங்கினார்.


பெரியார் உலக வளாகத்தில் 153 மரக்கன்றுகள் நடந்தன!


இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பேராளர்களால், திருச்சி சிறுகனூர் பெரியார் உலக வளாகத்தில் 42 பாதாம், 72 பூவரசு,
39 புங்கம் என 153 மரக்கன்றுகள்
இன்று (29.12.2024) நடைபெற்றன.


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் அறிவியல் மனப்பான்மை வழியில் நடப்போம்; இன்றும்! என்றும்!


திருச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய வாக்கத்தான் நிகழ்ச்சி!

திராவிடர் கழகம்

திருச்சி, டிச.29 திருச்சியில் வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்து முன்வரிசையில் நடந்தார். திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆசிரியரைப் பின்பற்றி நடந்தனர்.
வாக்கத்தான் நிகழ்ச்சி
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும்
13 ஆம் அகில இந்திய மாநாடு திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி நிறுவன வளாகத்தில் டிசம்பர் 28,29 இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவுடன் மூன்று அமர்வுகள் மற்றும் பஞ்சாப் மாநிலம் மற்றும் தமிழ்நாடு தோழர்கள் சார்பாக, ”மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சிகள், திராவிடர் கழக கலைத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ’தீ’ விளையாட்டு போன்றவை நடைபெற்றன. அடுத்தநாளான இன்று (29.12.2024) அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியாக வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (29.12.2024) காலை 7 மணிக்கு வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். முன்னதாக வெள்ளை நிற பனியன் பின்புறம் ”அறிவியல் வழி நடப்போம்” என்று தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. தமிழர் தலைவர் தொடங்கி தோழர்கள் அனைவருக்கும் பனியன் வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் முதலில் நடக்க மற்றவர்கள் மூவர் மூவராக வரிசையாக அவரைப் பின் தொடர்ந்தனர். ஒலி முழக்கங்கள் எதுவும் இல்லாமல் கைகளில் அறிவியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுகின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி தோழர்கள் நடந்தனர். நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா. நேரு, பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் சுப்பிரமணியம், பெரியார் மருத்துவ குழும இயக்குநர் குன்னூர் மருத்துவர் கவுதமன், மூதறிஞர் குழுத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், பொ.நாகராஜன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர்கள் மோகன், வெங்கடேசன், பகுத்தறிவு கலைத் துறை தலைவர் பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன், புதுச்சேரி தலைவர் சிவ. வீரமணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, ஊடகத்துறை மாநிலத் தலைவர் அழகிரிசாமி, தொழிலாளர் அணி மாநில செயலாளர் சேகர், தங்கமணி தனலட்சுமி, பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர் மாரி கருணாநிதி, மடிப்பாக்கம் பாண்டு, அரக்கோணம் லோகநாதன், கும்மிடிப்பூண்டி டார்வி, சண்முகநாதன், மாணிக்கம், வேணுகோபால், திருவொற்றியூர் கே .ஆர். ஆசைத்தம்பி, விடுதலை நகர் ஜெயராமன், குமார், ஆவடி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் (29.12.2024)

விடுதலை நாளேடு,29.12.2024


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக