சனி, 23 ஜூன், 2018

*பகுத்தறிவாளர் யார்?*

*இதோ பெரியார் சொல்கிறார் கேளுங்கள்*

1. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னி றுத்தி, தன்னம்பிக்கையுடன் இயங்குபவர்.

2. மனஉறுதியும், தெளிவான சிந்தனையும் பெற்றவர்.

3. அஞ்சாமையுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப்பணிகளில் ஈடுபடுபவர். நல்ல நோக்கத்துடன் தீமையைக் களைந்திட அறிவுப்பணி ஆற்றவும் தயங்காதவர்.

4. எங்கும் எதிலும், யாரிடத்திலும் என்றும் உண்மையை ஆராய்ந்து அறிவோர்.

5. சிந்தனையே அனைத்து ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோர்.

6. கடவுள், மதம், சாதி முதலிய பொய்மைகளினின்றும் விடுபடுவதுடன் - நாடு, இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலான எல்லைகட்கும் அப்பாற்பட்டு இயங்குபவர்.

7. ஆண், பெண் வேறுபாடுகளைக் கருதாதவர்; பொதுஉரிமையுடன் கூடிய பொதுவுடைமைச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுபவர். புரட்சி - மனப்பான்மை மிக்கவர்.

8. அடக்கமும், அமைதியும் உடையவராய்த் தற்பெருமையும், தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோர்.

9. துன்பம், தடை, சிக்கல், ஒழுக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவர்.

10. மனித உடல் பல நுட்பங்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்தில் கொண்டு உடலை ஓம்பி, எந்நிலையிலும் மாள அஞ்சாதவர்.

11. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுபவர்.

12. மனிதரைச் சமநோக்குடன் அணுகி, மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத்தூய்மையும், மிக்கவராய் ஊக்கமுடன் உழைப்பவர்.

13, தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றுபவர்

  *தந்தை பெரியார்*

புதன், 20 ஜூன், 2018

உலகளவில் நாத்திகர்கள்



உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது.

globalnation.inquirer.net இணையத்தில் (9.5.2018) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டுவரை பன்னாட்ட ளவில் 68 நாடுகளில் சுமார் 68,000பேரிடம் மத நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் மத நம்பிக்கையற்றவர்கள்குறித்து புள்ளிவிவரம் திரட்டப்பட்டது.

சீனாவில் 67 விழுக்காட்டினர் நாத்திகர்கள்


அப்புள்ளிவிவரத்தின்படி, சீனாவில் 67 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்ற நாத்தி கர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பத்துபேரில் ஏழு பேர் நாத்திகர்களாக உள்ளனர்.  வேறு எந்த நாட்டையும்விட, இருமடங்கு அளவில் 23 விழுக்காட்டினர் மத மற்றவர்களாக அறிவித்துக்கொண்டுள்ளனர்.

சீனாவில் 9 விழுக்காட்டினர் மட்டுமே தங்களை மத நம்பிக்கை கொண்டவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து நாடுவாரியாக நாத்திகர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஜப்பான் நாட்டில் 29 விழுக்காடு, சுலோவேனியா நாட்டில் 28 விழுக்காடு, செக் குடியரசில் 25 விழுக்காடு, தென்கொரியாவில் 23 விழுக்காடு, அய்ரோப்பிய நாடுகளான பெல்ஜியம் 21 விழுக்காடு, பிரான்சு 21 விழுக்காடு, சுவீடன் 18 விழுக்காடு, அய்ஸ்லாந்து 17 விழுக்காடு அளவில் நாத் திகர்களாக தங்களை அறிவித்துக்கொண் டுள்ளனர்.

நம்பிக்கையில் பல விதங்கள்


மதநம்பிக்கையைச் சார்ந்துள்ளவர்களாக 62 விழுக்காட்டினர் தங்களை மதநம்பிக்கை உள்ளவர்கள் என்று கூறியுள்ளனர். மத நம்பிக்கை உள்ளவர்களிடையே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புபவர்களாக 74 விழுக்காட்டினரும், கடவுள் நம்பிக்கை யாளர்களாக 71 விழுக்காட்டினரும், சொர்க்கம் என்று இருப்பதாக நம்புபவர்களாக 56 விழுக்காட்டினரும், மறுபிறப்பு உள்ளதாக 54 விழுக்காட்டினரும், நரகம் என்ற ஒன்று இருப்பதாக 49 விழுக்காட்டினரும் உள்ளதாக புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.

வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப் பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே மதம், கடவுள், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகிய நம்பிக்கைகள் மிகுந்துள்ளதாக கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனப் புள்ளிவிவரத்தகவல் கூறுகிறது. மங்கோலியா நாட்டில் 8 விழுக்காடு, வியட்நாம் 6 விழுக்காடு, இந்தியா 2 விழுக்காடு, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தில் ஒரு விழுக்காடு நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

ஆக, மதத்தை நம்புவோரிடையே ஆன்மா, சொர்க்கம், மறுபிறப்பு, நரகம், கடவுள் ஆகிய கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள் என்று இப்புள்ளி விவரத்தகவல்கள் மூலம் தெரிகிறது.

வருவாய், கல்வி, சமூக பண்புநலன்கள் பெருக நாத்திகம்


புள்ளிவிவரத் தகவலின்படி, மதநம்பிக்கை குறைவாக உள்ள நிலையில் வருவாய் மற்றும் கல்வி நிலை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

மத நம்பிக்கை சார்ந்தவர்களிடையே குறைவான வருவாய் கொண்டவர்களாக 66 விழுக்காடும்,

மத நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர் களில்  50 விழுக்காட்டளவில் அதிக வருவாய் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

அதேபோன்று மத நம்பிக்கை மிகுந்தவர்களிடையே 83 விழுக்காட்டளவில் கல்வி நிலையில் குறைந்து காணப்படு வதாகவும், மதநம்பிக்கையற்றவர்களிடையே  49 விழுக்காட்டளவில் கல்விநிலையில் உயர்ந்து காணப்படுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. புள்ளிவிவரத்தின்படி, மதம் சார்ந்த நம்பிக்கை மற்றும் சமுதாயத்தில் மக்களின் பண்புநலன்களிடையே ஒப்பீட்டளவில் வயது, வருவாய், கல்வி நிலை உள்ளிட்டவற்றில் மதநம்பிக்கை இல்லாதவர்களின் நிலை ஓங்கியும், மத நம்பிக்கையாளர்களின் நிலை குறைந்தும் காணப்படுகிறது. மேலும் இளைஞர்கள் ஒரே மதத்தைச் சார்ந்திராமல், பன்மத நம்பிக்கையாளர்களாக அதிகரித்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சமுதாயத்தில் மதத்தை ஏற்றுக்கொள்வதில் கூட, கல்வியின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக  தகவல்கள் கூறுகின்றன.

பன்னாட்டளவில் தனிமனிதர்களின் வாழ்வில் மதம் பொருந்தக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் வரலாற்றைப் பொருத்தவரையிலும்கூட,கல்விநிலைமட்டுமே குறிப்பிடத்தக்க மதிப்புகளை பெறுவதாக இருந்து வருகிறது.

- இவ்வாறு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது

- விடுதலை ஞாயிறுமலர், 12.5.18