வெள்ளி, 16 ஜூன், 2017

மலேசிய திராவிடர் கழகம் பினாங்கு மாநிலத்தின் 32ஆவது பேராளர் மாநாடு - புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

பினாங்கு, மே 23- மலேசிய திராவிடர் கழகம், பினாங்கு மாநி லத்தின் 32ஆவது  பேராளர் மாநாடும், 2017-2019ஆம் ஆண் டுக்கான  ஈராண்டு பொறுப்பா ளர் தேர்வும்; கடந்த 14-.5.-2017 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, பினாங்கு வீணை தங்கும் விடுதியில் மலேசிய திராவிடர் கழக பினாங்கு மாநிலத் தலைவர் ச.த. அண்ணாமலை  அவர்க ளின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டை தேசிய ம. இ.கா.வின் பினாங்கு மாநிலத் துணைத் தலைவரும், மத்திய செயலவை உறுப்பினரும், மதிப்பிற்குரிய மாண்புமிகு டத்தோ மு.ஞானசேகரன் அவர் கள் அதிகாரபூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மலேசிய திராவிடர் கழகம் மற்றும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் 1946ஆம் ஆண்டில் நான்கு மாத இடைவெளியில் அமைக்கப்பட்ட  இயக்க வர லாற்றுப் பதிவை நினைவுபடுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மலேசிய நாட்டிற்கு 1929 மற்றும் 1954ஆம்  ஆண்டுகளில் பினாங்கு மாநிலத்தில்  காலடி பதித்ததையும் தனது பகுத்தறி வுச் சிந்தனைகளை  விதைத்ததையும் மலேசிய திராவிடர் கழக  பினாங்கு மாநிலத்துக்கு கிடைத்த வரலாற்றுப்  பதிவு என்றும் பேராளர்களின் மத்தி யில் மகிழ்வுடன் பதிவு செய்தார்.

மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவரின் சிறப்பு ரையில் தமிழர்களின் வரலாற்று பின்புலத்தை பினாங்கு மாநிலம் கொண்டுள்ளது. பினாங்கு மாநிலத்தின் அதிநவீன வளர்ச்சி மிகுந்த உயரத்தை அடைந்துள்ள வேளையில்; கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் தொழில் துறையில் இந் நாட்டில் வாழும் தமிழர்கள் சிறந்திருந்தும்,  இன்னும் அவர்கள் மத்தியில் அறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களும், மூடநம்பிக்கைகளும் தொடர்வது வருத்தத்திற்குரியது என்றார்.

இதனை திராவிடர் கழகம் பினாங்கு மாநிலக் கிளை தொடச்சியாக அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும், சிந்தனை களையும் தமிழர்களின் மத்தியில் முன்னிலைப் படுத்தவேண்டும் என்று  தமதுரையில் கூறினார்.

மலேசிய திராவிட கழக பினாங்கு மாநிலத்தின் ஈராண் டுக்கான பொறுப்பாளர் தேர் வினை கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்வாச கம் அவர்கள் நடத்தி நடப் பாண்டிற்கான பொறுப்பாளர்களை  தேர்வு செய்தார். தேர்வு பெற்ற மாநிலத் தலைவர் ச.த. அண்ணாமலை மற்றும் மாநி லப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த் துகளை தெரிவித்துக்கொண்டார்.

தேர்வு பெற்றவர்களின் விவரம் வருமாறு:

 

தலைவர்: ச.த. அண்ணா மலை, துணைத் தலைவர்: இரா.பா.ஜெயச்சந்திரன், செயலாளர்: சொ.மருதமுத்து, துணைச் செயலாளர்: பெ.இராஜேந்திரன், பொருளாளர்: மு.சுப்பரமணியம், செயலவை உறுப்பினர்கள்:

லெட்சுமணன், ச.முனியாண்டி, இரா.பரமேஸ் வரி, இரா.ஆபேல், இளைஞர் பிரிவுத் தலைவர்: இரா.காளி தாஸ், இளைஞர் பிரிவுச் செய லாளர்: நா.பாரத்ராஜ், மகளிர் பிரிவுத் தலைவி: இரா.யோகேஸ் வரி, மகளிர் பிரிவுச் செயலாளர்: இரா.அமுதேஸ்வரி, உட்கணக் காய்வாளர்: கோ.முனிநாதன், மு.தாமரை.

இந்நிகழ்வில் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் கழகத் தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் மு.முரளி,தேசிய உத வித் தலைவர் செ.குணாளன் மற்றும் கழகத்தின் தேசியப் பொருளாளர் சா.ரா.பாரதி அவர்கள் சிறப்பு வருகை அளித்தனர்.

-விடுதலை,23.5.17

புதன், 14 ஜூன், 2017

‘இ.எம்.எஸ்.’

நம்பூதிரிகளைத் தவிர வேறு யாருக்கும் வேதங்கள் பயிலுவதற்கோ, உச்சரிப்பதற்கோதகுதியில்லை. தகுதியற்ற‘‘கீழ்ஜாதிக்காரர்கள்’’ தகுதி யுள்ளவர்கள் சொல்கின்ற வேத உச் சரிப்புகளைக் கேட்பதுகூட ‘‘பாவமானது!’’ தகுதியுள்ளநம்பூதிரிகளிலேயேபெண் கள் - ஆண்கள் வேதம் உச்சரிப்பதைக் கேட்கலாமே தவிர, சுயமாகக் கற்பதற்கோ, உச்சரிப்பதற்கோ தகுதியற்றவர்களாவர்!

சமூகத்தில் மிகச் சிறுபான்மையோ ரைத் தவிர மிகப் பெரும்பாலோருக்கு வேதங்கள் உச்சரிப்பதும், கற்பதும், கற் பிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

###

இந்தியர்களானநாமெல்லாம்பெரு மைப்படக்கூடிய இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ‘ஆரியர்கள்’ என்ற பேரில் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். அதன் காரணமாக பண்டைக்கால இந்திய கலாச்சாரத்தை ‘ஆரிய கலாச் சார’மென்றும் அந்தக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் வேதங்களாக இருந்ததனால் வேத கலாச்சாரமென்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர்.

இதுதான் இந்தியாவின் மிகவும் புராதனமான கலாச்சாரம், அதனை உருவாக்கிய ஆரியர்கள் இங்கு வரு வதற்கு முன்னால் இங்கு வாழ்ந்த மக்கள் முற்றிலும் நாகரிகமற்றவர்களாக இருந்தவர்கள் என்றுதான் நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் நிலவிவந்த இந்திய வரலாற்றுப் பாட நூல்கள் எங்களுக்குக் கற்பித்தன. வேதங்களின் புனிதத்தன்மைப்பற்றி ஏற்கெனவே இருந்து வந்த கருத்தை ஒரு வகையில் பலப்படுத்திய வரலாற்றுக் கண்ணோட்டமாக அது இருந்தது.

முன்னால் இருந்து வந்த கருத் தைப்போலவே இதுவும் தவறானது என்று நிரூபிக்கக் கூடிய பல உண் மைகளை அப்போதே வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இன்றையபாகிஸ்தானில்உள்ளஹரப் பாவிலும்மொஹஞ்சதரோவிலும் பூமிக்கடியிலிருந்து தோண்டியெ டுக்கப்பட்ட பல புராதனப் பொருள்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கியுள்ளது. ஆரியர்கள் வருவதற்கு பல நூற் றாண்டுகளுக்குமுன்னாலேயேஆரி யர்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந் திருந்த ஒரு மக்கள் பிரிவினர் அன்றைய இந்தியாவில் வாழ்ந்து வந்தனர்.

இந்த உண்மையைத் தெளிவாக்கிய புராதனப்பொருட்களின்மிச்சசொச் சங்கள்கண்டெடுக்கப்பட்டதுசிந்து நதிக்கரையை ஒட்டிய பிரதேசங்களில் தான். ஆகவே, அவைகள் சுட்டிக்காட் டுகின்ற கலாச்சாரம் ‘சிந்து கலாச்சாரம்‘ என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய பல்வேறு அம்சங்கள் இன்னும் தெளிவுப்பட வேண்டியுள்ளது. அதற்கான ஆய்வும் ஆராய்ச்சியும் தொடருகிறது. ஆனால், ஒரு விஷயம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட் டுள்ளது. ஆரியர்கள் வருவதற்கு முன் இந்தியா முழுவதும் அநாகரிக மக்கள் சமுதாயத்தின் வாழ்நிலமாக இருந்தது என்று ஏற்கெனவே இருந்து வந்த கருத்து முற்றிலும் தவறானது.

###

வருணவேற்றுமையின்மூல மாக ஜாதி ஆதிக்கத்தை நோக்கி வளர்ச்சியடைந்த இந்திய சமூகத் திற்கும் அடிமை முறையின் மூல மாகநிலப்பிரபுத்துவமாகவும்பின் னர்முதலாளித்துவமாகவும்வளர்ச்சி யடைந்த அய்ரோப்பிய சமூகங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும். அடிமைகளும் - உடை மையாளர்களும், பிரபுக்களும், தொழி லாளர்களும் - முதலாளிகளும் என இவ்விதமான வர்க்க வேறுபாடுகள்தான் அங்கே உருவாகின. வெளிப்படையான சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் நடத்தி எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி சுரண்டுவோர் சுரண்டப்படுவோரை அடக்கி ஆளுகின்ற அமைப்பின் பல்வேறு வடிவங்கள்தான் அங்கே தோன்றின என்பதே இதன் பொருள்.

இந்தியாவின்வருண(ஜாதி)பிரிவினையில்,சுரண்டலும்,ஒடுக்கு முறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது. ‘கீழ்ஜாதி’கள் ‘மேல்ஜாதி’களுக்கு அடி பணிந்து வாழ்ந்த போதிலும் ஒவ்வொரு ஜாதியைச்சேர்ந்தவர்களுக்கும்அவ ரவர்களுடையதானசகோதரஉணர் வும்சமத்துவமும்இருந்தன. புராதன பொதுவுடைமை கோத்திர அமைப்பில் கோத்திர வர்க்க ஜன நாயகம் என்பதுபோல வருண (ஜாதி) அமைப்பிலும் ஜாதிக் குழுக்கள், அவைகளின்மூலம் வெளிப்படுகின்ற ஜாதியசமத்துவம்,ஜனநாயகம்ஆகிய வையெல்லாம் வருண (ஜாதி) அமைப் பின் ஆரம்ப காலத்தில் இருந்தன.

(நூல்: ‘‘வேதங்களின் நாடு’’ இ.எம்.எஸ். நம்பூதிபாட், தமிழில்: பி.ஆர்.பரமேஸ்வரன்).

குறிப்பு: இன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பிறந்த நாள். இந்தியப் பொதுவுடைமைக் (1909) கட்சியின் முன்னணித் தலைவர்; கேரள மாநில மேனாள் முதலமைச்சர்.

- மயிலாடன்

-விடுதலை,13.6.17