பெரியார் நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜனவரி, 2020

மலேசியா-பேராக் மாநிலம் ஈப்போ நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

ஈப்போ, டிச. 28- மலேசியா நாட்டு பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளை மலேசியா திராவிடர் கழகத்தினர் வெகு சிறப்பாக - கொள்கைப் பிரச்சார விழாவாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சி 27.12.2019 அன்று ஈப்போ நகர் மேடான் இஸ்தானா - ரிஷிபவன் உணவக மேல்தளத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் வருகை தந்திருந்தார். மக்கள் நீதிக் கட்சியின் (மலேசியா நாட்டு ஆளும் அரசியல் கூட்டணியில் அங்கம் வகித்து வரும்) சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மானமிகு இரா.கோபி வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தின் பொழுது, செல்வி.எல்லீஸ் ஏலன் தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையினை வாசித்தார். நிகழ்ச்சி நிறைவின் பொழுது பத்திரிகையாளர் எம்.ஏ.அலி 'யார் இவர்' எனும் தலப்பில் பெரியார் பற்றிய குறுங்கவியினை வாசித்தார். நிகழ்ச்சியில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக.பஞ்சு, ஆலோசகர் ரெ.சு.முத்தையா, பேராக் பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி.முனியரசன், மலேசிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் கு.கிருஷ்ணன், ஈப்போ நகர் கிளைத் தலைவர் ஏலன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம்

மலேசிய நாடாளுமன்றத்தின் சுங்கை சிப்புட் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்ரமணியம் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:

"நான் தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் கூட்டத் திற்கு வேண்டி விரும்பி பங்கேற்றுள்ளேன். தொடக்கத்தில் திராவிடர் கழகத்தைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. 2008ஆம் ஆண்டு சென்னை நகருக்குச் சென்றபொழுது அங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகள் ஓர் அரங்கில் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி எழுதியுள்ள புத்தகங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றுள் சில புத்தகங்களை வாங்கி வந்து படித்தேன். பெரியாரைப் படிக்க படிக்க என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு ஒருவித புதிய தன்னம்பிக்கை, புதிய துணிச்சல், விரிவாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு ஏற்பட்டது. தந்தை பெரியாரின் உழைப்பினால் மலேசிய நகர்த் தமிழ்ச் சமுதாயம் சுயமரியாதை உணர்வுடன் வாழ்வில் முன்னேறி இங்கு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். பெரியாருடைய கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டங்கள் வழி வகுக்கும். அடுத்த ஆண்டு தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியினை நாங்களே ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திடுவோம்.

இவ்வாறு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் தமது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகப் பொருளாளர் உரை

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் முதன் முதலாக வெளிநாட்டுச் சுற்றுப் பயணமாக மலேசிய நாட்டிற்குத்தான் வந்தார். பினாங்கு நகருக்கு கப்பலில் வந்த பெரியார் அடுத்த நாள் (21.12.1929) இந்த ஈப்போ நகரில் நடைபெற்ற தமிழர் சீர்திருத்த மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது மலேசிய நாடும், இந்தியாவும் பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தன. அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. இந்தியாவில் இயற்றப்பட்டதைப்போல பால்ய திருமண தடைச் சட்டம் மலேசியாவிலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், விதவை மணத்தை ஒவ்வொருவரும் ஆதரித்துக் கைக்கொள்ள வேண்டும் எனவும், குடும்ப சமுதாய நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைக் கைவிட்டு சிக்கனமாக நடத்திட வேண்டும் எனவும், மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமக்குள் நாட்டு வேற்றுமை பாராட்டாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியார் அன்றைய மலாய் நாட்டின் பல ஊர் களில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார். மக்களைச் சந்தித்து அவர்களது உயர்விற்கான வழிமுறைகளை வலி யுறுத்தினார். அந்த வருகை ஏற்படுத்திய தாக்கங்களை 1954ஆம் ஆண்டு மீண்டும் மலேயா நாட்டிற்கு பெரியார் வந்த பொழுது நேரடியாக பார்த்தார். 25 ஆண்டுகால இடைவெளியில் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இன்று அதைவிடப் பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டு, தமிழர்கள் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலைமைகள் ஏற்பட அன்றே வித்திட்டவர் தந்தை பெரியார். அந்த நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடாக தந்தை பெரியாரின் கொள்கைகளை மேலும் பரப்பிட இந்த நினைவுநாள் கூட்டத்தை மலேசிய திராவிடர் கழகத்தினர் நடத்துகின்றனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகள் எளிதாக நடை முறைக்கு வந்துவிடவில்லை. பலத்த எதிர்ப்புக்களுக்கிடையில் நடைமுறைக்கு வந்தது. பயன்பெற வேண்டிய மக்களே தொடக்க காலத்தில் எதிர்த்தனர். காரணம் அந்த அளவிற்கு பழைமைக்கு ஆட்பட்டு சமூக அடிமை வாழ்விற்குப் பழக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர். படிப்படியாக உண்மை நிலை உணர்ந்து முன்னேறினர். இன்றைக்கு தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு உலகம் முழுவதும் வரவேற்கப்படும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டு நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு நிகழ்வுகளாக, உலகினருக்கு எடுத்துக் கூறக்கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.

மலேசியாவில் தமிழர்கள் பலர் அரசியல் களத்தில் ஆளும் தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். ஏற்கெனவே தந்தை பெரியாரின் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சட்ட அனுமதியுடன் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால்தான். தமிழ் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலமே பெரியாரின் கொள்கைக் கடைப்பிடித்து மேலும் முன்னேறி வளம் பெற வேண்டும். அதற்கு அமைப்பு ரீதியான பிரச்சாரப் பணிகள் ஆக்கம் பெற வேண்டும். இந்த நினைவு நாள் கூட்டம் அப்படிப்பட்ட நிகழ்வாகும். தொடர்ந்து, அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள், பலரது பங்கேற்புடன் நடைபெற வேண்டும். இவ்வாறு வீ.குமரேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.

நிறைவாக மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேந்திரன் நன்றி கூறினார்.

இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது, பொதுப்படையான தமிழர்கள் பலரும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தது சிறப் புக்குரியதாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகம் நடத்திய தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முழுமையான கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்றது.

- விடுதலை நாளேடு 28 12 19

மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் தந்தை பெரியாரின் 46ஆம்ஆண்டு நினைவு நாள் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பங்கேற்பு

மலேசியாவில் தந்தைபெரியாரின் கொள்கை யினை ஏற்று இயங்கி வருகின்ற திராவிடர் அமைப்புகளான மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், மலேசிய தமிழர் தன்மான இயக்கம் மற்றும் பேராக் மாநில பெரியார் பாசறை ஆகியவற்றின் கூட்டமைப்பின்  ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சார விழாவாக கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.

24.12.2019 அன்று மாலை 7 மணி அளவில் தொடங்கிய கூட்டம், கோலாலம்பூர் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள விஸ்வமாதன் சம்பந்தன் தான் சிறீடத்தோ கே.ஆர். சோமா அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை தலைமை வகித்தார். நினைவு நாள் கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்று மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் சுடர்மதி அம்மையார்  'பெரியார் தமிழரா' எனும் தலைப்பில் ஒரு ஆளுமையான கவிதையினைப் படைத்தார். கூட்டத்தில் மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் கெ. வாசு,   பேராக் மாநில பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி. முனியரசன், மலேசிய மலாக்கா மாநில  திராவிடர் கழகத்தின்  ஆலோசகர் ரெ.சு. முத்தையா, மலேசிய தமிழ்  மொழிக் கழகத்தின் தேசிய தலைவர் திருமாவளவன் மற்றும் பகான் மாநில சபாய் சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மின்னல் பண்பலை வானொலியின் அறிவிப்பாளர் புலவர் பொன் கோகிலம் கவிதை வாசித்தார். நிறைவாக தமிழக திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் எடுத்த முயற்சி வெற்றி

மலேசிய திராவிடர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் நவம்பர் 2019இல் கோலாலம்பூர் வருகை தந்த திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக அனைத்து மலேசிய திராவிடர் அமைப்புகளும் இணைந்து செயல்பட முன்வந்ததுபற்றி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இணைந்து செயல்படுவதன் அவசியத்தை உறுதி செய்து உரையாற்றினர். கூட்டமைப்பின் தலைவர்கள் தந்தை பெரியார் மலேசிய நாட்டிற்கு இருமுறை வந்து சென்றது பற்றியும், ஆதலால் தமிழர் தம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்  நன்றி கலந்த வெளிப்பாட்டுடன் உரையாற்றினர்.

தமிழ் மொழிக் கழகத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன் முதன் முறையாக கருப்புச்சட்டை அணிந்து தனது வாழ்வில் ஓர் புதிய அத்தியாயத்தை கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம்  தொடங்கியுள்ளதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மலேசிய பகான் மாநில சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு அவர்கள் பெண் விடுதலைக்கு தந்தை பெரியார் ஆற்றிய அரும் பணிபற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். மேலும் பெரியார் இயக்கத்தின் 'கடவுள் மறுப்பு' கொள்கையினை மறுத்துப் பேசிய தானும் கடவுளைப் பார்த்திட முடிய வில்லை என்பதை ஏதார்த்தமாக தனது கடவுள் மீதான நம்பிக்கை அற்ற நிலையினை வெளிப்படுத்தினார்.

கழகப் பொருளாளர் சிறப்புரை

நினைவுநாள் கூட்டத்திற்கு சிறப்பு வருகை தந்த  தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழகம் தாண்டி, தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் நிலையில் சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று அமைப்பு ரீதியில் செயல்பட்டு வரும் ஒரே நாடு மலேசியா. 1946ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலேசிய திராவிடர் கழகம் தமிழர் தம் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்தது. பெரியார் பற்றாளர்கள் பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாரின் 46ஆம்  நினைவு நாள் நடைபெறுவது தமிழர் தம் ஒற்றுமை கலந்த செயல்பாட்டு உணர்வினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தந்தை பெரியாரது சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகள்  தமிழகத்தில் மட்டுமல்லாது உலக மனிதர்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில், மனித குல மேம்பாட்டை வலியுறுத்துகின்ற வகையில் 'பெரியார் உலகமயம்' என்பதாகப் கொள்கைப் பரவல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. புரட்சிக் கவிஞரின் தந்தை பெரியாரின் 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்'  காலம் உருவாகி வருகிறது. 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பொழுதே தந்தை பெரியார் தமதுஉலகம் தழுவிய பார்வையினை உறுதிப்படுத்தினார். பெரியார்தம் கொள்கைகளை ஏற்று வாழ்பவர்கள், சமுதாயப் பணி ஆற்றுபவர்கள் மேம்பட்ட நிலையில்தான் உள்ளனர்; எந்தவிதமாற்றுக் கொள்கையினர்களைவிட செம்மாந்து வாழ்ந்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மனிதரின் முழு ஆற்றலை மனித மேம்பாட்டுக்குப் பயன்படுத்திட வழி அமைத்துள்ளது. 'இனிவரும் உலகம்' என அறிவியல் வளர்ச்சியினை தொலைநோக்கி மக்களிடையே அறிவியல் மனப்பான்மை பெருகிட வித்திட்டவர் தந்தைபெரியார். மக்களில் பாதியினரான பெண்களின் சமூகநிலை அனைத்து நாடுகளிலும் உரிய உரிமைகளுடன் இல்லை. பெண்கள் விடுதலை பெற்ற சமுதாயந்தான் முழு வெற்றி பெற்ற சமுதாயமாக வாழ்ந்திட முடியும் என உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில் தந்தை பெரியார் தமது மனிதநேயக் கருத்துகளை விதைத்து, அவரது வாழ் நாளிலேயே   அதன் விளைச்சலை பார்த்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகள், கொள்கைப் பரப்பை மேற்கொண்டு அடுத்த தலைமுறைக்கும் அவற்றை எடுத்துச் செல்கின்ற வகையில் மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் பணி அமைந்திட வேண்டும்.  பெரியார் தம் கொள்கைகளை உலகமயப்படுத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சிப் பணிகளுக்கு ஆக்கம்  ஊட்டிட நினைவு நாளில் உறுதியேற்போம், செயல்படுவோம்.

இவ்வாறு வீ. குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்ச்சியில் நன்றியுரையினை மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் சா.இரா. பாரதி வழங்கினார். நிகழ்ச்சியினை  ஒருங்கிணைத்து, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் தலைவர் பஞ்சு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் மலேசியாவின் பெரியார் இயக்க முன்னோடிகள், இன்றைய பொறுப்பாளர்கள் பலர் திரளாகக்  கலந்து கொண்டனர். பெரியார் நூலகத்தினை மலேசிய பள்ளிகளில் அமைத்து வரும் பணியினை தொடர்ந்து ஆற்றி வரும் மு.கோவிந்தசாமி மற்றும் கே.ஆர்.ஆர்.  அன்பழகன் உள்பட  மகளிர் பலர் வருகை தந்திருந்தனர். தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு கூட்டத்தின் வாயிலாக மலேசியத் தமிழர் வாழ்வில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு ஏதுவாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.  அனைவரின் பாரட்டுதலுக்கும், பெருமைக்கும் உரியதாக இருந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஒரு குடும்ப விழாவாக தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இனிதே நடந்தது.

(மேலும் தகவல்கள் 3ஆம் பக்கம் காண்க)

மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.

25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் ஓர் உலகத் தலைவர்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.

மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.

பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 - விடுதலை நாளேடு, 26.12.19

மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.

25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் ஓர் உலகத் தலைவர்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.

மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.

பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 26 12 19