செவ்வாய், 31 ஜூலை, 2018

அறிவுலக மாமேதை இங்கர்சால்

நினைவு நாள்: ஜூலை 21

வை.கலையரசன்

 


இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833-ஆம் வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தையான ரெவரெட் ஜான் என்பவர் ஒரு பாதிரியார். அவருடைய தந்தை வேதப் புத்தகத்தின் (ஙிவீதீறீமீ) ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறவராய்க் கடவுள் நம்பிக்கையோடு இருந்தவர். இங்கர்சாலை அவர் கண்டிப்புடனேயே வளர்த்தார்.

இங்கர்சாலும் தகப்பனார் கட்டளைப்படி பைபிளை வரிவரியாகவே வாசித்தார். அவர் மிக்க அறிவாளியாக  இருந்தபடியால், படிக்கப் படிக்கச் சந்தேகங்கள் அவருக்கு அதிகமாகவே ஏற்பட்டன. ஆனாலும், அவரது தந்தை இவ்விஷயத்தில் அவரை அடித்துத் தொந்தரவு செய்து, அவரது மூளையைக் கெடுக்காமல், அவரது மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும்படிச் சொல்லிவிட்டார்.

இங்கர்சாலுக்குப் பள்ளிப் படிப்பு குறைவு. ஆனால், நினைவாற்றல் மிக்கவர், பேசுவதிலும், கதை சொல்வதிலும், மொழிகளைச் சரியாக உபயோகிப்பதிலும் அதிகத் திறமைவாய்ந்தவர். தானாகவே நூல்களைப் படிக்க ஆரம்பித்து அவருடைய அரிய நினைவாற்றலால் சகல செய்திகளையும் அப்படியே சேமித்து வைத்துக் கொண்டார். இருபதாம் வயதில் தாமாக ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளித்தார். அப்பொழுது ஞானஸ்நானத்தைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தைச் சில பாதிரிகள் கேட்டபொழுது அவர் விளையாட்டாக, “என்னுடைய அபிப்பிராயத்தில் சோப்போடு (கீவீtலீ ஷிஷீணீஜீ) ஞானஸ்நானம் செய்வது நல்ல காரியந்தான்’’ என்றார்.பின்னர் அவர் சட்டங்களைப் படித்துத் தன்னை 1854ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞர் (ஙிணீக்ஷீ-ணீt-றீணீஷ்)ஆக ஆக்கிக் கொண்டார். அவர் ‘இல்லினாய்’ மாநிலத்தில் ‘பியோரியா’ என்ற நகரில் தன்னுடைய வக்கீல் தொழிலை நடத்தி, அதிகப்பேரும் புகழும், வருமானமும் பெற்றார்.

1862-ஆம் ஆண்டு பகுத்தறிவாளரான ஈவா பார்க்கரை காதலித்து மணந்தார்.  சண்டைக் காலத்தில் போர்வீரனாக இருந்த படியால், ‘கர்னல்’ இங்கர்சால் என்ற பட்டமும் பெற்றார். அதன் பின்னர்த் திரும்பவும் 1863ஆம் வருடம் முதல், வக்கீல் தொழிலை அதிகச் செல்வாக்குடன் நடத்தினார்.

அவர் 34-ஆம் வயதிலேயே இல்லினாய் மாநிலத்திற்கு, ‘அட்டர்னி ஜெனரல்’ என்ற பெரிய பதவியை இரண்டு வருடங்கள் வகித்து நடத்தினார். அவருக்குக் கவர்னர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பிருந்தும், அவர் தன்னுடைய கொள்கைகளைச் சிறிதளவும் விட்டுக் கொடுக்காததால்  விலகச் சொன்னது.  “என்னுடைய நம்பிக்கை என்னைச் சேர்ந்தது. அது இல்லினாய் மாநிலத்தைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே மன்னராக ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்டமுடியாது’’ என்று சொல்லி அப்பதவியை நிராகரித்து விட்டார்.

அரசியல் விஷயங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அப்படியே கேட்பார் இதயங்களை இளகச்செய்து இழுத்து, அவர் வயப்படச் செய்தன. 1877-ஆம் வருடத்தில், “ஆண், பெண், குழந்தை, அவர்தம் சுதந்திரம்’’ எனும் தலைப்பில் ஓர் அரிய சொற்பொழி வாற்றினார். ‘சொல்லினைத் தேனிற் குழைத்து உரைக்கும்’ இவர்தம் ஆற்றல் வியக்கத்தக்கது.

1884_-85-ஆம் ஆண்டுகளில் இவர், ‘வைதிகம்’, ‘அறவழி’, ‘பொய்யும் அற்புதமும்’ என்ற விஷயங்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் செய்தார். 1894-ஆம் வருடத்தில், ‘ஆபிரகாம் லிங்கன்’, ‘வால்ட்டேயர்’, ‘வேதப்புத்தகம்’ என்பவைகளைப் பற்றிய இவரது சொற்பொழிவுகள் வெளியாயின. 1897-ஆம் வருடத்தில், ‘நான் ஏன் கடவுள் கவலையற்றவன்’, ‘மனிதரை சீர்திருத்தும் விதம்‘  என்பவை பற்றிய இவரது பெரும் சொற்பொழிவுகள் உலகிற்குக் கிடைத்தன.

இவரது ‘உண்மை’, ‘கடவுள்கள்’ போன்ற எண்ணற்ற சொற்பொழிவுகளும், கொள்கைகளும் இவருக்கு ஏராளமான விரோதிகளை உண்டுபண்ணி விட்டன. இவரை உண்மையாகத் தெரிந்துகொள்ள முயன்றவர் சிலர். ஒன்றும் தெரியாமலே ‘நாத்திகர்’ என்று தூற்றியோர் பலர். மத நம்பிக்கையுடைய பெரிய கலைவாணர்கள் எல்லாம் இவருக்கு எண்ணற்ற மறுப்புகள் எழுதி எழுதி வெளியிட்டனர். அவைகளுக்கெல்லாம் ஆணித்தரமான பதில்களை இடைவிடாது சரமாரியாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இவர் கடைசியாக ‘மதமென்றால் என்ன?’ என்ற விஷயத்தைப் பற்றி 2.6.1899-இல் பாஸ்டன் நகரத்தில் சொற்பொழிவு செய்தார். சாதாரணப் போக்கிரிகள் முதல் கிளாட்ஸ்டன் (நிறீணீபீ ஷிtஷீஸீமீ) போன்ற பெரிய அறிவாளிகள் வரை இவருக்கு எதிர்ப் பிரச்சாரங்கள் செய்தனர்.

இங்கர்சால் வருடத்திற்கு 20,000 பவுன்கள் வீதம் பல வருடங்கள் சம்பாதித்தார். இதில் நாலில் ஒரு பாகம் அறச்செயல்களுக்காகச் செலவழிக்கப்பட்டு வந்தது.

தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பதினான்கு வருடங்களை இங்கர்சால் நியூயார்க் பட்டணத்திலேயே கழித்தார். அவர் 21.7.1899இல் அமைதியாக உயிர் நீத்தார். அவருக்கு மரணச் சடங்குகள் நடக்கவில்லை. அவருடைய புத்தகங்களிலிருந்து சில பாகங்களை அவருடைய நண்பர்கள் வாசித்தனர். அவருடைய மரணத்தைக் கேட்டு அமெரிக்கா முழுவதுமே துக்கமடைந்தது.

1911-ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் அவருடைய உருவச்சிலை ‘பியோரியா’ என்ற ஊரில் திறக்கப்பட்டது. அவர் உலகில் தோன்றி நூறாண்டுகளாயிற்று.

இவரது அனைத்து நூல்களையும் தந்தை பெரியார் இலண்டன் பகுத்தறிவாளர் சங்கத்திடமிருந்து அனுமதி பெற்று 1930களிலேயே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- உண்மை இதழ், 16-31.7.18

திங்கள், 30 ஜூலை, 2018

சந்திரகிரகணம் குறித்து மக்களின் மூடநம்பிக்கை, அச்சங்களை தவிடு பொடியாக்குவது பகுத்தறிவாளர் கழகமே!





சென்னை, ஜூலை 28- சந்திர கிரகணம் குறித்த அறிவியல் விளக்கங்கள் மற்றும் சந்திர கிரகணம் குறித்த மூடநம் பிக்கைகள் குறித்த புரிந்துணர்வுக்கான நிகழ்வு பகுத்தறி வாளர் கழகம் சார்பில் நேற்று மாலை (27.7.2018) சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ‘பூமி, நிலா சுற்றுவதை பார்க்கலாம் வாங்க’ எனும் தலைப்பில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பு ரையாற்றினார். புராணங்களுக்கும், அறிவியலுக்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கி உரையாற்றினார். மக் களின் மூடநம்பிக்கைகளை, அறியாமையை மூலதன மாக்கும் பிற்போக்கான மதவாதிகளின் முகமூடியை தகர்க்கும் வண்ணம் அறிவியல் வகுப்பாக விளக்க உரையாற்றினார். கிரகணம் என்று மூடநம்பிக்கைகள் பயத்தை உருவாக்குவது முட்டாள்தனமானது என்று தந்தை பெரியார் பேசியுள்ளார். திராவிடர் கழகம்தான் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அவ்வப்போது முறி யடித்து வருகிறது. பகுத்தறிவாளர்கழகம் ஏற்பாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். இது பாராட்டுக் குரியது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற் றோர், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட பலரும் பெரிதும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாலை தொடங்கிய நிகழ்வு நள்ளிரவைக் கடந்து அதிகாலை வரை தொடர்ந் தது.

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் வரவேற்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

கும்பகோணம் மாணவர் கழக மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் கும்பகோணத்திலிருந்து காணொலி மூலமாக கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர் கள் சூரியன், பூமி, நிலவு அறிவியல் விளையாட்டுகள் ஒநிகழ்வைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.



அறிவியலாளர்கள்  படத்திறப்பு, விண்வெளி அறி வியல் திரையிடல், பாராட்டரங்கம், இசையரங்கம், நிலாச்சோறு, தொலைநோக்கி மூலம் பூமியின் நிழல், நிலவில் படர்ந்து விலகுவதையும் மற்றும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களைக் காணுதல் நிகழ்ச்சி கள் அடுத்தடுத்து களைகட்டின.

அறிவியல் ஆர்வலர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டி, நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.

டைகோ பிராகே, நிக்கோலஸ் கோபர்நிகஸ், புரூனோ, அய்சக் நியூட்டன், எரடோஸ்தனிஸ், கலி லியோ ஆகிய அறிவியலாளர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. அறிவியலாளர்களின் அரும்பெரும் பணிகள்குறித்து விளக்கப்பட்டது-.

ராசிபலன், மூடநம்பிக்கைஒழிப்புக் கருத்தரங்கத்தை பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன் தொடங்கிவைத்தார். 12இராசிகள், 27 நட்சத்திரங்கள், திதிகள், நேரம், காலம், ஏழரைச்சனி,  மண்டலம், 108 தேங்காய¢, 16ஆம் நாள் காரியம் ஆகி யவை குறித்த அறிவியல் விளக்க ஒலி,ஒளிக் காட்சிகளை திரையிட்டு, பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை அமைப்பாளர் பெ.செந்தமிழ்ச்செல்வன் விளக்க உரை யாற்றினார்.

திரைத்துறை கலைஞர் செ.கனகா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் கோவி.கோபால், மா.ஆறுமுகம், மு.இரா.மாணிக்கம், சிறீ.அருள்செல்வன், வானவிய லாளர்கள் குழுமம் அ.த.அரசு, முனைவர் இரா.சம்பத் குமார்,  மா.ஆறுமுகம், இராமு, உடுமலை வடிவேல், ஆ.செ.வசந்தன், மு.கவுதம் உள்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

ப.முத்தையன், அம்பேத்கர் ரவி, தாமோதரன், மா. குணசேகரன், சு.மோகன்ராசு, மாலா பாண்டியன் ஆனந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டப்பெற்றனர்.

‘காதல்பூமி’ எனும் தலைப்பில் பாவலர் கீர்த்தி மற்றும் பாடகர்கள் இசைநிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.



- விடுதலை நாளேடு 28.7.18

சனி, 28 ஜூலை, 2018

சுடுகாட்டிலேயே திருமண நாள் கொண்டாடிய  பகுத்தறிவாளர்கள்



கருநாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் நந்திகூர் கிராமத்தில் மூடநம்பிக் கைகளை ஒழிக்கின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனிதா, பவன்குமார் வல கேரி இணையர் சுடுகாட்டில் தங்களின் 18ஆம் திருமண நாளைக் கொண்டாடி னார்கள்.

பவன்குமார் வலகேரி சமூகப்பணிகளில் அதிகம் நாட்டம்கொண்டு சமூக அக்கறை யுடன் செயல்பட்டுவருபவர் ஆவார். அவர் வாழ்விணையர் அனிதாவும் அவருடன் இணைந்து சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.

சமுதாயத்தில் புரையோடிப்போய் இருக்கின்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தி வரும் அனிதா மற்றும் அவர் கணவர் பவன்குமார் வலகேரி இணையர் இருவரும் தங்களின் 18ஆம் திருமண நாளில் மூடநம்பிக்கை ஒழிப்பை செயல்முறையில்  நடைமுறைப் படுத்த விரும்பினார்கள்.



சுடுகாட்டில் மணவிழாக் கொண்டாட்டம்


அதன்படி, தங்கள் திருமண நாளில் நந்திகூர் கிராமத்திலுள்ள சுடுகாட்டுக்கு உறவினர்கள், நண்பர்களுடன் சென்ற அனிதா, பவன்குமார் வலகேரி இணையர் சுடுகாட்டுப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தினார்கள். சுடுகாட்டுப்பகுதியில்  மரக்கன்றுகளை நட்டார்கள்.

பெண்களுக்கு தையல் பயிற்சி, குருதிக்கொடை


இதுகுறித்து பவன்குமார் வலகேரி கூறியதாவது:

சுடுகாட்டுப்பகுதி கேட்பாரற்று தூய்மைக் கேடாக இருந்து வந்தது. எங்கள் திருமண நாளில் சுடுகாட்டை தூய்மைப்படுத்த விரும்பினோம். இதுகுறித்து எங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிவித்த போது, அவர்கள் முதலில் உடன்பட மறுத்தார்கள். பின்னர் ஒப்புக்கொண்டு வந்தார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து சுடுகாட்டுப்பகுதியை சுத்தப்படுத்தினோம்.  பின்பு மரக்கன்றுகளை நட்டோம்.

அதன்பின்னர் சுடுகாட்டிலேயே எங்களின் திருமண நாளைக் கொண் டாடுவதையொட்டி, மாலை மாற்றிக் கொண்டோம். நண்பர்கள், உறவினர்கள், கிராமத்தினர் எங்களை வாழ்த்தினார்கள்.

முதல்நாளில் சுடுகாட்டை சுத்தப் படுத்தி, மரக்கன்றுகளை நட்டோம். அடுத்த நாளில் சுற்றியுள்ள கிராமங்களான கோட்நூர், கானாதல், பனேகாம், இட்டாகா, சித்தானூர் மற்றும் நந்திகூர் ஆகிய கிராமங்களிலுள்ள பெண்களுக்கு தையல்பயிற்சி அளித்தோம். எங்களையும் சேர்த்து 30 பேர் குருதிக்கொடை வழங் கினோம். தனியார் மருத்துவமனை யிலுள்ள குருதிவங்கியிலிருந்து குருதி யைப் பெற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு பவன்குமார் வலகேரி கூறினார்.

- விடுதலை ஞாயிறுமலர் -14.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல்



சென்னை, ஜூலை 2 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 18.6.2018 அன்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு கூட்டத்தின் நோக்கம் பற்றியும், கலந்து கொண்டுள்ள தோழர் தோழியர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறி கூட்டத்தினை தொடங்கிவைத்தார்.

கூட்டத்திற்கு தலைமை ஏற்ற கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என்னும் அமைப்பு ஏற்கெனவே இருந்ததையும், பல்வேறு செயல்பாடுகளை அந்த அமைப்பு ஆற்றியதையும், மதுரையில் மறைந்த பேரா.பு.இராசதுரை அவர்கள் தலைவராக இருந்தபொழுது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில மாநாடு நடைபெற்ற தையும் குறிப்பிட்டார். முதலில் நமது தோழர்களை வாசகர் கடிதங்கள் எழுதச் சொல்லவேண்டும். அப்புறம் ஒவ்வொரு பக்கத்திற்கு தங்கள் கருத்துக்களை எழுதச்சொல்லவேண்டும். இவை பத் திரிகைகளில் வெளியானால் தோழர்க ளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். தொடர்ந்து எழுத ஆரம்பிப்பார்கள். எழுத்தாளர்களை ஒன்றிணைக்கவேண் டும். பெரியார் இப்போது எங்கும் பரவி இருக்கின்றார். பெரியாரின் கருத்து களுக்கான தேவை இன்று மிகப்பெரிய அளவில் இருக்கிறது. எனக்குறிப்பிட்டு தனது அனுபவங்கள், தான் எழுத ஆரம் பித்தது எப்படி என்பதையெல்லாம் குறிப்பிட்டு மிக விரிவான ஆக்கபூர்வ மான கருத்துக்கள் அடங்கிய உரையினை அளித்தார்கள்.  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் அவர்கள் , இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வாறெல்லாம் செயல்படலாம் என்பதனை விரிவாக எடுத்துக்கூறியதோடு ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், மற்ற மொழிகளில் எழுதுபவர்கள் தேவை இன்றைக்கு இருக்கின்றது, புத்தகம் எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும், இது ஒரு ஆரம்பம்தான், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு சரியான வழிகாட்டுதலை நமக்கு அளித்திருக்கின்றார்கள். கவிஞர் அவர்கள் பல செய்திகளை இங்கு எடுத்துரைத்தார்கள். மிக விரிவான திட்டங்களோடு நாம் செயல்படுவோம் எனக்குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல் 'இந்தக் கூட்டம் ஒரு ஆலமரத்திற்கு ஊன்றும் விதை போன்று தோன்றுகிறது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தனது கண்முன்னால் இப்போதே தோன்றுகிறது 'என்றும் குறிப்பிட்டு தனது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேஸ்புக்கில் வந்த ஒரு கவிதை அரங்கம் தன்னை எப்படி ஈர்த்தது என்பதையும் அதனுடைய அனுபவங்களையும் பெரி யார் திடல் கலை பகிர்ந்துகொண்டார். வழக்குரைஞர் பா.மணியம்மை தான் ஒரு பேச்சாளர் என்ற நிலையில் இருந் தாலும் எழுத்தாளர் என்னும் நிலைக்கு உயர இந்தக்கூட்டம் நம்பிக்கை தரு கின்றது என்றார்.எழுத்தாளர் ந.தேன் மொழி அவர்கள் குடியாத்தம் நூலகத்தின் மாதாந்திரக் கூட்டம் பற்றியும் அதில் நடைபெறும் நூல் திறனாய்வு பற்றியும் குறிப்பிட்டார். எழுதுவதில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் ,பெரியார் அரங்கம் போன்ற நிகழ்வையும் குறிப் பிட்டு விளைச்சலை எதிர்பார்ப்போம் என்றார்.

குறும்படங்கள் எடுக்க பயிற்சி

அன்புமதி குணசேகரன் அவர்கள், சிறுகுழந்தைகளை, பிள்ளைகளை ஈர்க் கும் விசயங்களைக் கண்டுபிடிக்கவேண் டும். பாட்டு & வீடியோ மூலம் எப்படி குழந்தைகள் ஈர்க்கப்படுகின்றார்கள் என் பதனைக் குறிப்பிட்டார். நாம் சின்னச் சின்ன குறும்படங்களை குழந்தைகளுக் காக உண்டாக்க வேண்டும். பழகுமுகாம் போன்றவைகளில் பிள்ளைகளை குறும் படம் எடுக்க பயிற்சிகொடுக்க வேண் டும். கதை சொல்லல் என்னும் கலையை நாம் ஊக்குவித்து ,அவர்களின் தனித் திறனை கண்டறிய வேண்டும், ஹிக் கிம்பாதம்ஸ் போன்ற புத்தகக்கடைகள் புதுமாதிரியான வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் எனக்குறிப்பிட்டார்.  மயிலாடுதுறை மாவட்டத்தின் திராவிடர் கழகத்தலைவர், கி.தளபதிராஜ், தூத் துக்குடி சு.காசி, சொ.நே.அன்புமணி, செந்துறை சா.இராசேந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்துவைத்தனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம்- முதலில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அமைப் பைக் கட்டவேண்டும். திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் களைத் தொடர்புகொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள எழுத்தாளர்களை அடையாளம் காணவேண்டும் என்றார். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தர்மபுரி ஊமை.ஜெயராமன், கலை இலக்கிய இரவுகள் நடத்த வேண்டும். முக நூலில் எழுதும் நமது தோழர்களையே அழைத்து எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்து எழுதச்செய்ய வேண்டும் .ஆண்டிற்கு ஒருமுறை மிகப்பெரிய நிகழ்வாக நடத்தவேண்டும் எனக்குறிப்பிட்டார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் தனது உரையில், நாம் புதிய படைப்பாளிகளை எப்படி ஊக்கப்படுத்தலாம்? என்பதனை யோசிக்க வேண்டும், புத்தகமாக்கும் முயற்சிக்கு உறுதுணை செய்கின்றோம், இன்னும் செய்வோம், மண்டலப் பொறுப்பாளர்களை மட்டும் போட்டுக் கூட ஆட்களை அடையாளம் காணலாம். சிறுகதை எழுத பயிற்சி முகாம் நடத் தலாம். என்பனவற்றை குறிப்பிட்டுக் கருத்துரைத்தார்.

இணையத்தில் விழிப்புணர்வு

ப.க., மாநிலப்பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாவட்டந்தோறும் அமைப்பாளர்கள் போடவேண்டும். உண்மையுடன் இணைந்து கதை, கட் டுரைப்போட்டிகளை மாவட்டந்தோறும் பகுத்தறிவாளர் கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யலாம். இலக்கிய அமைப் புகளில் உள்ளவர்களை அடையாளம் காணலாம். விருதுகள் வழங்கலாம்" எனக்குறிப்பிட்டார்.

மாநில மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி "மாநாடுகள் மாவட்டந்தோறும் நடத்த லாம். கலை இலக்கிய மாநாடாக அதனை நடத்தலாம். அதற்கு மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்

டும்" எனக்குறிப்பிட்டார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை மா.அழகிரிசாமி "இணையத்தில் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். கவியரங்கங்கள் நடத்தலாம். மாவட்ட அளவில் அமைப் பாளர்களை நியமிக்கவேண்டும். எழுத்து ஈர்ப்பு கொடுக்கக்கூடியது. பயிற்சி கொடுக்கவேண்டும் "எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு, ஏறத்தாழ 3 மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற் றுள்ளது. ஆக்கபூர்வமான பல கருத்துகள் கிடைக்கப்பெற்றோம். இதனை செயல் படுத்த அனைவரும் உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டார்.

தர்மபுரி மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளராக பாவலர் பெரு.முல்லையரசு, பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளராக முனைவர். தங்க பிரகாசம் ஆகியோர் கூட்டத்தில் அறி விக்கப்பட்டனர்.

- விடுதலை நாளேடு, 2.7.18