வெள்ளி, 24 நவம்பர், 2023

புதுச்சேரியில் மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட எழுச்சி!(புதிய பொறுப்பாளர்கள்)


பகுத்தறிவாளர் கழக பல்வேறு அணிகளும் பங்கேற்பு!

தமிழர் தலைவர்  தலைமையேற்று சிறப்புரை

8

புதுச்சேரி, நவ. 24 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் நடை பெற்றது. 

2023 நவம்பர் 19ஆம் தேதி காலை ஆசிரியர் புதுச்சேரி எல்லையில் மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி அன்பரசன், புதுச்சேரி நெ.நடராசன், இராசா, திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பழனி, சிவராசன் ஆகியோரது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப் பட்டார்.

விடுதியிலிருந்து  ஆசிரியர் புறப்பட்டு புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் படிப்பக கட்டடத்தை பார்வை யிட்டு அதனை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத் தினார்.

கலந்துரையாடல் கூட்ட அரங்கில் காலை 7 மணி முதலே தோழர்கள் வருகை புரிய தொடங்கினர். 100 பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வருகை தந்த தோழர்கள் காலை உணவை உண்டனர். தொடந்து 9 மணிக்கு அரங்கில் வருகைப் பதிவு தொடங்கியது. 

காலை 10 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பையர் தெரு, தென்றல் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டங்கள் வருகை பதிவுக்காக ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருவர் அமர்தப்பட்டு அவர்களிடம் மாவட்ட வாரியாக பதிவுத்தாள் வழங்கப்பட்டு வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொருவரும் தமது வருகையை பதிவிட்டதும் அவர்களுக்கு பேட்ஜ் மற்றும் பகுத்தறிவாளர் கழக இலச் சினை பொறிக்கப்பட்ட பேனா வழங்கப்பட்டது. பதிவு செய் தவர்கள் அரங்கத்தில் அமர்ந்தவுடன் கூட்டம் தொடங் கியது.

கூட்டம் நடைபெற்ற வீதி ஆரம்பத்திலிருந்து ஆசிரியர் அவர்களை மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், புதுவை நடராஜன், மற்றும்தோழர்களோடும், துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் அவர்களது தலைமையில் பறை இசை முழங்கிட, பெரிய மேளம் அதிர்ந்திட, மாடாட் டம், மயிலாட்டம் நடத்தியும் அரங்கிற்கு அழைத்துவந்தனர்.

10

காலை 10.15 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பையர் தெரு, தென்றல் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக புரவலர் “தகைசால் தமிழர்” ஆசிரியர் கி.வீரமணி தலைமை ஏற்றார்கள்.

அனைவரையும் வரவேற்று புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ.நடராசன் உரையாற்றினார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட அமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமாக எடுத்துரைத் தனர்.

கோவை சின்னதுரை, கோபி குப்புசாமி, மயிலாடுதுறை செல்லதுரை, விருத்தாசலம் ராஜா, தேனி முருகன், வட சென்னை கோபால், தென்சென்னை மாணிக்கம், இராம நாதபுரம் பேரின்பம், செய்யாறு வெங்கட்ராமன், செஞ்சி திருநாவுக்கரசு, குடந்தை பேரா. சேதுராமன், கிருட்டினகிரி கிருட்டிணன், சேலம் வீரமணி ராஜூ, திருப்பத்தூர் திருப்பதி, சிவகங்கை இராசாங்கம், அரூர் ராசேந்திரன், திண்டிவனம் ஏழுமலை, ஆத்தூர் முருகானந்தம், காஞ்சிபுரம் சிதம்பரநாதன், தூத்துக்குடி பொன்ராஜ், திருவொற் றியூர் ஆசைத்தம்பி, அரியலூர் தங்க.சிவமூர்த்தி, கும்மிடிப் பூண்டி டார்வி, திருவண்ணாமலை வெங்கட்ராமன், புதுக்கோட்டை மலர் மன்னன்,தருமபுரி அண்ணாதுரை, ஆவடி கார்த்திகேயன், தஞ்சாவூர் அழகிரி, சிதம்பரம் நெடுமாறன், திருவாரூர் ஈவேரா, மன்னார்குடி கவுதமன், அறந்தாங்கி அம்பிகாபதி, செங்கல்பட்டு சிவக்குமார், மேட்டூர் அன்புமதி, திருச்சி மலர் மன்னன், காளையார் கோயில் முத்துகுமார் ஆகியோர் தங்களது மாவட்டங்களின் செயல்பாடுகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன், ஊடகப்பிரிவு தலைவர் அழகிரிசாமி,எழுத்தாளர் மன்றம் தலைவர் நேரு, பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.

கடந்த காலங்களில் குறிப்பிடத்தகுந்த வகையில் பகுத்தறிவாளர் கழகத்தில் செயலாற்றியவர்களுக்கு பகுத் தறிவாளர் கழக புரவலர் பயனாடை அணிவித்து சிறப்பித் தார்கள்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்கள் வேண்மாள் நன்னன், வேல்.சோ. நெடுமாறன், இல. மேக நாதன், ஆடிட்டர் இரஞ்சித்குமார், தஞ்சை கோபு.பழனி வேல், பொன்னமராவதி ஆ.சரவணன் ஆகியோரும், மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

தஞ்சாவூர், அரூர், சேலம், கும்பகோணம், புதுச்சேரி, விழுப்புரம், மன்னார்குடி, செங்கல்பட்டு, திருச்சி, ஆவடி  ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கும், காளை யார் கோயில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார்கள்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் படித்தார்.

9

பெரியார் -1000 தேர்வு தொடர்புடைய அறிவிப்பையும், தேர்வு முறையையும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் பவர் பாயிண்ட் மூலம் விளக்கத்தினை அளித்தார்கள்.

ஆசிரியர் வந்தவுடன் திராவிடர் கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தனது உரையை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார். ஆசிரியர் அவர்களது பணி பற்றி உருக்கமாக எடுத்துரைத்தார். 

தொடந்து பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி பதிவு செய்தார். 

அவரைத் தொடர்ந்து திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் உரையாற்றினார். தனது உரையில் பகுத்தறி வாளர் கழகம் ஏன் என்பதையும், THE RATIONALAISTS’ FORUM என்பதன் விளக்கத்தையும் கூறி, ஆசிரியரின் கனவான ‘பெரியார் உலகம்’ பற்றி கூறினார்.

தனது உரையில் மனிதம் பற்றி எடுத்துரைத்தார்.. பகுத்தறிவாளர் கழகம் தொடங்கிய நிகழ்வை தந்தை பெரியார் “மனிதர்கள் கழகம்“ தொடங்கியதாக  நினைவு கூர்ந்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்புகளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

51A [H]  பற்றியும், அதனை பொதுவெளியில் எடுத்து சொல்வதும் நாம் தான் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்.

“எதையும் நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே.. உன் அறிவைப் பயன்படுத்தி அது சரி என்றால் ஏற்றுக்கொள்” இல்லையென்றால் விடு என்று அய்யா என்பதையும், அது தொடர்பாக குடியாத்தம் கல் லூரியில் நடைபெற்ற நிகழ்வையும் குறிப்பிட்டு பேசினார்.

அறிவுச்சுதந்திரம் என்பது பற்றி எடுத்துச்சொன்னார். அதை வளர்ப்பது பகுத்தறிவாளர் கழகம் என்பதையும் எடுத்துக்கூறினார்.

மூடநம்பிக்கையை தோலுரித்துக்காட்டி பேசினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது பற்றி பேசினார்.

‘இனி வரும் உலகம்’ நூலில் உள்ள அய்யாவின்  கருத்துகளை எடுத்துக்காட்டினார்.

பெரியாரின் பெருந்தொண்டு காலத்துக்கும் பயன் தரும்.நேர்மை பற்றி தந்தை பெரியார் கூறியது என்ன என்பதை எடுத்துக்கூறினார்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் நேர்மையான வாழ்க்கை என்பதாகும்.

பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளைப் பற்றி கூறினார். அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத்தில் மகளிர் அதிகமாக சேர்க்கப் பட வேண்டும் என்பதையும் கூறினார்.

பகுத்தறிவாளர் கழக இலச்சினை பற்றி அழகாக எடுத் துக் கூறினார். கேள்விக்குறி என்பதை அழகாக விளக்கிக் கூறினார். சமூக வலைதளங்களைப் பற்றி கூறினார்.

புதிய உற்சாகத்துடன் செயல்படுங்கள்.என்று கூறி முடித்தார்.

இறுதியில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் 46 மாவட்டத்திலிருந்து 250-க்கும் அதிகமான மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.


தீர்மானங்கள் - திட்டங்கள்!

1. அனைத்து மாவட்டங்களிலும் அமைப்புகளை ஏற்படுத்துதல்

2. பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் பகுத்தறி வாளர்களை ஒருங்கிணைத்தல்.

3. பெண்கள் அதிகம் சேர்க்கப்பட வேண்டும்.

4. ஒன்றிய, மாநில அரசுகளில் பணியாற்றும் பகுத்தறி வாளர்களை அடையாளம் காணுதல் - அங்கு பணி யாற்றுவோரில் ஒருவர் கிடைத்தாலும், அவரை அமைப் பாளராக்கி, அவர் மூலம் சம்பந்தப்பட்ட, அலுவலகத் திலிருந்து தோழர்களை பகுத்தறிவாளர் கழகத்திற்கு கொண்டு வருதல்.

5. பெயரளவுக்கு அமைப்புகள் இல்லாமல், அவை செயல்படும் வகையில் மாநிலப் பொறுப்பாளருடன் தொடர்புகள் அறுபடாமல் இருக்க வேண்டும்.

6. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற தலை வர்களின் பிறந்த நாளில் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல்.

7. பள்ளிகளில் “மந்திரமா தந்திரமா” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தல். 

8. மாவட்டந்தோறும், அடுத்து ஒன்றியந் தோறும் அறிவியல் பகுத்தறிவுக் கண்காட்சிகளை நடத்துதல்.

9. மாநில மாவட்ட அமைப்புகளில் உரிய பதிவேடுகள்.

10. மாவட்டங்களில் பகுத்தறிவுக் கருத்தரங்கம் - பயிற்சிப் பட்டறை நடத்துதல்.

11. பகுத்தறிவு ஏடுகளைப் பரப்புதல்

12. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்துதல்

13. மாதம் ஒரு முறை மாவட்டங்களில் பகுத்தறி வாளர்களின் கலந்துரையாடல் கூட்டமும், 3 மாதத்திற்கு ஒருமுறை குடும்ப சந்திப்பு நடத்துவது.

14. அரசியல் பிரச்சினைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளல்.

15. பகுத்தறிவாளருக்கான இலச்சினை (பேட்ஜ்) தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்குதல்.

16. அகில இந்திய பகுத்தறிவாளர் அமைப்பில் (FIRA)  தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பங்கை மேன்மைப் படுத்தி - தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை உறுதி செய்தல் - அத்தகைய நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் பிரதி நிதிகள் பங்கேற்று தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர் செயல் பாடுகளை விளக்குதல்.

17. பெரியார் பன்னாட்டு அமைப்பு வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளில் வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்றல்.

18. பெரியார்-1000 நிகழ்ச்சியில் மாணவர்கள் அதிகம் பேர் பங்கேற்க ஆவன செய்தல்.

19. மூடநம்பிக்கையால் சில பல செயல்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு உரியவர்களை தகுதியானவர் களை அழைத்துச் சென்று, அப்பகுதியில் உள்ள இளை ஞர்கள், மாணவர்களைப் பயன்படுத்தி விளக்கங்களை அளித்தல்.

20. பகுத்தறிவு ஆசிரியர் அணியோடு இணைந்து செயல்படுதல்.

21. கலைநிகழ்ச்சிக் குழு ஒன்றை உருவாக்குதல்.

22. எழுத்தாளர்கள், பேச்சாளர்களை அடையாளம் கண்டு பயன்படுத்தல். ஊடகத் துறையில் பங்கேற்று விவாத அரங்கில் பங்கேற்கப் பயற்சி அளித்தல்.

23. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தல்.

மேற்கண்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத் துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


பகுத்தறிவாளர் கழகம்

THE RATIONALISTS’ FORUM

புரவலர் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

மாநிலத் தலைவர்: இரா. தமிழ்ச்செல்வன்

பொதுச்செயலாளர்கள்: வி.மோகன், 

ஆ.வெங்கடேசன் (தலைமை நிலையம்), 

வா.தமிழ் பிரபாகரன் (ஆசிரியர்கள் பிரிவு) 

மாநில பொருளாளர்: முனைவர் சி. தமிழ்ச்செல்வன்

மாநில துணைத்தலைவர்கள்: கே.டி.சி. குருசாமி, இல.மேகநாதன்,  வேல்.சோ.நெடுமாறன், வேண்மாள் நன்னன், ந.கரிகாலன், பேரா. முனைவர் நா.சுலோச்சனா, பேரா.முனைவர் எஸ்.அருள்செல்வன்.

மாநில துணைப் பொதுச்செயலாளர்கள்: (பயிற்சி வகுப்புகள்) :  

அண்ணா சரவணன், பேரா. மு.சு.கண்மணி, வி.இளவரசி சங்கர்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்: 

முனைவர் வா.நேரு (மாநில தலைவர் )

கோ.ஒளிவண்ணன் (மாநில துணைத்தலைவர்), ம.கவிதா (மாநில துணைத்தலைவர்), 

செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர்)

பகுத்தறிவு ஊடகப் பிரிவு: மா. அழகிரிசாமி (தலைவர்), ஆவடி ரா.முருகேசன் (செயலாளர் ).

பகுத்தறிவு கலைத்துறை: மு.கலைவாணன் (தலைவர்), மாரி. கருணாநிதி (செயலாளர்)


பகுத்தறிவாளர் கழகம்: 

மாநில அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு மாவட்டங்கள்

அ.தா.சண்முகசுந்தரம் - தென்சென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம்

கோவி.கோபால் - திருவொற்றியூர், ஆவடி, வடசென்னை

கு.ரஞ்சித்குமார் - திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம்

இரா.பெரியார் செல்வம் - கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

தங்க.சிவமூர்த்தி - அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி

அ.சண்முகம் - துறையூர், லால்குடி

கோபு.பழனிவேல் - தஞ்சை, கும்பகோணம், திருச்சி

சி.இரமேஷ் - மன்னார்குடி, பட்டுக்கோட்டை

ஆ.சரவணன் - புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம்

ஒ.முத்துக்குமார் - காரைக்குடி, சிவகங்கை, 

இரா.முத்துக்கிருஷ்ணன் - காரைக்கால், நாகப்பட்டினம்

புயல். சு.குமார் - மயிலாடுதுறை, திருவாரூர்

பேரா.சி. மகேந்திரன் - உசிலம்பட்டி, மேலூர், மதுரை

வ.மாரிமுத்து - திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி

ஆலடி எழில்வாணன் - இராஜபாளையம், தென்காசி, விருதுநகர்

இரா.முத்துகணேஷ் - திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி

தரும.வீரமணி - கோவை, பொள்ளாச்சி, நீலமலை, மேட்டுப்பாளையம்

வழக்குரைஞர் ப.இளங்கோ - தாராபுரம், நாமக்கல், கரூர்

அ.குப்புசாமி - ஈரோடு, கோபி, திருப்பூர்

இரா.மாயக்கண்ணன் - சேலம், மேட்டூர், ஆத்தூர் 

ந.அண்ணாதுரை - ஓசூர், கிருட்டினகிரி, தருமபுரி, அரூர்

இர.அன்பரசன் - திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை

காஞ்சி. பா.கதிரவன் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செய்யாறு

சி.நீ.வீரமணி - திருவள்ளூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி