ஞாயிறு, 8 நவம்பர், 2015

வட அமெரிக்கா: சீக்கிய குருத்வாராவில் பெரியார் விழா


வட அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள பிரஸ்னோ நகரில் அமைந்துள்ள சிறீ குரு ரவிதாஸ் சீக்கிய குருத்வாராவில் பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 4.10.2015 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. சீக்கிய பன்னாட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விழாவில், பெரியாரின் சிந்தனைகள், பகத்சிங் தூக்கி லிடப்பட்ட போது பெரியார் எழுதிய தலை யங்கம் ஆகிய கருத்துகள் விழாவில் பேசப்பட்டன.
சீக்கிய பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் அம்ரிக் சிங், பஜன்சிங் பிந்தர், எம்.பி.சிங் மற்றும் சிலர் உரையாற்றினர்.
தந்தை பெரியார் நூலினை எடுத்துக் காட்டி அதிலிருந்து பல கருத்துகள் படித் துக் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிய குருத்வாராவில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடுவது இதுவே முதன்முறை. செப்டம்பர் 12-ஆம் தேதி வட அமெரிக்காவின் பிரிமாண்ட் நகரில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவையும், பெரியார் பன்னாட்டமைப்பு மற்றும் சில அமைப்புகளுடன், சீக்கிய பன்னாட்டமைப்பு இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மண்டை சுரப்பை உலகு தொழும்.
-விடுதலை,5.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக