வெள்ளி, 13 நவம்பர், 2015

டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை!


பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடை பெற்ற ஏலத்தில் 1.97 லட் சம் டாலர்களுக்கு (சுமார் ரூ.1.3 கோடி) விற்பனை யானது. நியூயார்க் நகரி லுள்ள ஏல மய்யத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனை யாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
எனினும், எதிர் பார்த்ததைவிட இரு மடங் குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனை யானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்த கத்தை தாம் புனித நூலா கக் கருதவில்லை எனவும், இயேசு கிறிஸ்துவை கட வுளின் குழந்தை என நம் பவில்லை எனவும் டார் வின் குறிப்பிட்டுள்ளார்.
மத நம்பிக்கையற்ற டார்வின், மத நம்பிக்கை கொண்ட தனது நண்பர் கள், உறவினர்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அது குறித்து வெளிப்படையாகப் பேசு வதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், மதம் குறித்து தனது கருத்தைத் தெரிவிக்குமாறு டார்வி னின் நண்பர் மெக்டெர் மட் என்பவர் அவருக்கு கடிதம் எழுதினார்.
அது குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் மெக்டெர் மட் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கடிதம் மூலம் டார்வின் தெளிவு படுத்தினார்.
மெக்டெர் மட்டும் அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். 100 ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதம் குறித்து வெளியுல குக்குத் தெரிய வந்தது.
-விடுதலை,25.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக