ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்! - தந்தை பெரியார்

 

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்!

2022 பெரியார் ஜூன் 16-30 2022

தந்தை பெரியார்

இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற இக்கழகத்தினைத் துவக்கும் வகையில் இப்பெரும் கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்-களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்-களாகவும் மக்களுக்கேற்ப கருத்துகளை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்-கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவல ரவர்கள். அண்ணா அவர்கள் நகைச் சுவையோடு, அடுக்குத் தொடரோடு எடுத்துச் சொல்வார்கள்; நாவலரவர்கள் புள்ளி விவரங்களோடு மக்களுக்குப் புரியும் தன்மையில் பேசக் கூடியவராவார்கள். இவர்கள் இருவரது பேச்சுகளைக் கேட்பதற்காகவென்று மக்கள் அதிகமாகக் கூடுவார்கள்.

மனிதனா-மிருகமா?
அமெரிக்காக்காரன் சந்திரமண்டலத்திற்கு சென்று வர சாதனம் கண்டுபிடித்ததைப்போல நாம் சிறந்த காரியமாக பகுத்தறிவாளர் கழகம் என்கின்ற இதனைக் கண்டுபிடித்திருக்கிறோம்; மக்களுக்கு அறிவை எடுத்துச் சொல்கிற – மிருகமாக இருக்கிற மக்களை மனிதர்களாக்குகிற இயக்கம் என்பதுதான் இதற்குப் பொருள். பகுத்தறிவுச்- சிந்தனை _ தாராள சுதந்திர நோக்குள்ளவன்தான் மனிதன். இவை இல்லாத மற்றவை மிருகங்கள். நாம் ஏறக்குறைய அப்படித்தான் இருந்து வருகின்றோம். இப்போதுதான் மனிதரா-கின்றோம். இந்த நாட்டில் இத்துறையில் பாடுபட யாருமே தோன்றவில்லை.
«««
இந்த இயக்கம் வளருமேயானால் மேனாட்டு-காரர்களை விட அதிகமாக நாம் வளருவோம். அறிவில் மட்டுமல்ல, பல அதிசய அற்புதங்களையும் காணுவோம். நமது நாட்டில் அறிவுள்ள மனிதன் என்று சொல்ல ஒரு ஆளில்லை. படித்தவர்கள், பணம் படைத்தவர்-கள், பெருமை பெற்றவர்கள் இருக்கலாம். அறிவாளி என்று சொல்லும் படியாக ஓர் ஆள் கிடையாது. நம் சமுதாய மக்களிடையில் இன உணர்வு நட்பு இல்லாமல் போய் விட்டது. பொது உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்த ஸ்தாபனத்தை நல்ல வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழர்கள் எல்லோரும் அங்கத்தினர்-களாக வேண்டும். தங்கள் மனைவிமார்களையும் இதில் சேர்க்க வேண்டும். பிரச்சார ஸ்தாபனம் ஒன்று இதற்காகத் துவக்க வேண்டும். பத்திரிகைகள் ஆரம்பிக்க வேண்டும். நிறைய புத்தகங்கள் போடவேண்டும். தாங்களாகவும் மற்றவர்களை அழைத்தும் பிரச்சாரம் செய்து, மக்களைப் பகுத்தறிவாளர்-களாக்க வேண்டும்.

ஒழுக்கம் நாணயம் வேண்டும்
இதற்கு மரியாதை வேண்டுமானால் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டும். நாம் தீவிரமான கருத்துகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். நம்மிடம் ஒழுக்கம், நாணயம் இல்லையென்றால் மதிப்பிருக்காது. இப்போது நாங்கள் “கடவுள் இல்லை- கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கு-கிறவன் காட்டுமிராண்டி” என்கின்றோம்.
முட்டாளை முட்டாள் என்று சொல்வதில், திருடனை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறேன். யாராவது நீங்கள்தான் சொல்லுங்களேன்? கடவுளை நம்புகிறவன் முட்டாளாக இல்லாவிட்டால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொள்வானா?

மறு பிறப்பும் பிதிர்லோகமும் முரண் அல்லவா?
அடுத்த ஜன்மத்கில் நாயாக, கழுதையாகப் பிறப்பாய் என்கிறான். பிறகு பிதிர்லோகத்தில் ஆத்மா தங்கி இருக்கிறது, அதற்கு உணவுக்கு அரிசி, உப்பு, புளி அனுப்ப வேண்டு மென்கின்றான். பெரிய எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படித்தவனெல்லாம் இதை நம்பித்தானே தெவசம் கொடுக்கின்றான், கருமாதி செய்கின்றான். நாமிங்கு கடவுள் மறுப்புச் சொல்வது போன்று ஒவ்வொரு நாட்டிலும் இது போல் செய்கிறார்கள்.

விழிப்பூட்டும் ஏடுகள் வேண்டும்!
நானும் காலம் சென்ற இராமநாதன் அவர்களும் பாரிசுக்கு ஒரு நாத்திக சங்கத்திற்கு சென்றிருந்தோம். அவர்கள் ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகையின் தலைப்பில் ஒரு சிலுவையைப் போட்டு அதை ஒரு மனிதன் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியைக் காலால் மிதித்துக் கொண்டு மறுபகுதியைக் கையால் பிடித்து இழுப்பது போலப் படம் போட்டிருக்கிறார்கள். அப்படம்தான் அந்தப் பத்திரிகையின் “எம்பிளம்” ஆகும். அப்போதே அப்பத்திரிகை 50, 60 ஆயிரம் போகிறது என்றார்கள். அது போன்று இங்கும் நிறைய பத்திரிகைகள் தோன்ற வேண்டும்.

கடவுளை முழுமையாக நம்புகிறவர் யாரும் இல்லை!
மனிதன் – அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை, முட்டாள்தனத்தோடு நம்பு-கின்றான். அதனால் இவன் மடையனாவ-தோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வசக்தி-யுள்ளது என்று சொல்கிறானே தவிர, அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா என்று கேட்கிறேன்…
சங்கராச்சாரியைச் சொன்னாலும் சரி, மடாதிபதியானாலும் சரி, பெரிய பக்தனானாலும் சரி ஒருவனைச் சொல்லுங்கள், -எவன் கடவுள் சர்வ சக்தியுள்ளது என்று நம்புகின்றான்? ஒருவன் கூட இல்லையே!

அடிமையாக நாமிருக்கிறோம்
தீவிரமான காரியங்களில் ஈடுபடுகிற நம்மீது சிறு குற்றம்கூட இருக்கக் கூடாது. நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும். நமக்கு ஒரு குறிப்பு மோனோகிராம் (பேட்ஜ்) இருக்க வேண்டும். மேல் நாடுகளில் இதுபோன்ற இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் சட்டையின் ஒரு பகுதியில் அணிந்திருப்பார்கள். அதுபோன்று இந்தக் கழகத்தினைச் சார்ந்த அங்கத்தினர்கள் அணிந்து கொள்ள வேண்டும்.
«««
அதுபோன்று இக்கழகத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்-கொருவர் அண்ணன் தம்பிபோல் பழக வேண்டும். நமது நிலை என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா; நமது மதத்தின் பெயர் இந்து. இதற்கு எந்த ஆதாரமும் இருக்கிறதா என்றால் இல்லை. இந்நாட்டிற்குரிய நமக்கென்று எதுவுமே இல்லை. அனாமதேயமாக இருக்கி றோம். அரசியலிலும் அனாமதேயமாக இருக்-கிறோம். நமக்கென்று நாம் எதையும் செய்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நடித்தால் போதும்
நாமெல்லாம் சகோதரர்கள் என்கின்ற உணர்ச்சி வர வேண்டும். இதனால் சிலருக்குத் தொல்லை வரலாம். தியாகம் செய்தாக வேண்டும். நம்மவன் என்றால் அன்பாய் நடந்து கொள்ள வேண்டும் தம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். பகுத்தறிவின் பெயரால் நாடகங்கள் நடத்த வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடத்துவதில் அண்ணா முக்கியமான பாகத்தில் நடிப்பார் 3_4 ஆயிரம் வசூலாகும். நமது கடவுள் கதைகளை – உள்ளபடி நடித்தால் போதும்- _ அறிவோடு பார்ப்பவன் நிச்சயம் திருந்துவான். இதற்கு ஒரு நிதி திரட்ட வேண்டும். பத்திரிகை சம்பந்தமாக நண்பர் திரு. வீரமணி அவர்கள் உதவி செய்வார்கள். (‘விடுதலை’ 23.9.1970)

தந்தை பெரியார் தந்த நிதியுதவி!
பகுத்தறிவாளர் கழகத்தைத் துவக்கி வைத்து அறிவுரை ஆற்றிய வணக்கத்திற்குரிய தந்தை பெரியார் அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு.சி.டி.நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித்தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில் கழகம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பலவகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் துவங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்-தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல்., கருத்தரங்கு-கள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் (ணினீதீறீமீனீ) ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள்.
கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தி-யமைக்கு ஆதரவாக ரூபாய் 129_30 காசு வசூலாகியது. (‘விடுதலை’ – 7.9.1970)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக