வியாழன், 4 அக்டோபர், 2018

அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா



தந்தை பெரியார், பகுத்தறிவாளர் ராம் சுவரூப் சர்மா இருவரின் பிறந்த நாள் விழா அலகாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சோஷித் சமாஜ் தள் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது, இவ்விழாவில் சோஷித் சமாஜ் தள் அமைப்பின் உத்தரப்பிரதேச பொதுச்செயலாளர் சி.சி.சிங், அலகாபாத் நகர பொதுச்செயலாளர் துருஷ்த் வர்மா, அலகாபாத் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாலிக் சந்திரகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் தந்தை பெரியார் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்யபலி சிங் (வழக்குரைஞர், அலகாபாத் உயர்நீதிமன்றம்) பெரியாரின் சமூக நீதிக்கான போராட்டமும், அதன்பலனாக இன்று நாம் அனுபவிக்கும் நன்மைகள் குறித்தும் பேசினார்.  இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும், வழக்குரைஞர்களும் மற்றும் கல்வியாளர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 2.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக