வியாழன், 1 நவம்பர், 2018

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞருக்கு சிங்கப்பூரில் வீரவணக்கம்



சிங்கப்பூர், நவ.1 மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு சூவா சுகாங் வட்டாரத்தில் உள்ள பன்னோக்கு மண்டபத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி காலை நடைபெற்றது.

வீ. கலைச்செல்வம் குடும்பத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர் கழக தலைவர்  நா. ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். அவர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் முத்தமிழறிஞரின் தமிழ் இலக்கியப் பணிகளைப்பற்றி பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழறிஞர் முனைவர் சுப.திண் ணப்பன் அவர்களின் உரையை தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் திரு சுப. அருணாச்சலம் அவர்கள் வாசித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்மொழி பண்பாட்டுக்கழக தலைவர் மு. ஹரிகிருஷ்ணன், கவிமாலை அமைப்பின் தலைவர் இறை மதியழகன், காப்பாளர்  அன்ப ழகன்,பெரியார்பெருந்தொண்டர் நாகராசன், சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக சேவை அமைப்பின் தலைவர் மு.ஜஹாங்கீர், மக்கள் கவிஞர்மன்ற தலைவர் உத்தி ராபதி, கவிஞரேறு அமலதாசன், கவிஞர் இளங் கோவன், பொன்சுந்தராசு, ஜெகதீசன், ஜாகூர் உசேன்,  விசுவலிங்கம், மதியழகன், மணிமாலா,  சாரதா, மீனா, ரேணு, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின்  மாறன்,  கவிதா, ராஜராஜன், தமிழ்ச் செல்வி, பூபாலன், பல்கலைக் கழக மாண வர்கள் குந்தவை, வானதி, வளவன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் உறுப்பினர்கள், வெளி நாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு மறைந்த தலை வருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இறுதியாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக