திங்கள், 19 நவம்பர், 2018

மும்பையில் நவ. 24 மாநில சமூகநீதி மாநாடு



மும்பை, நவ.17 மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  மாநில மாநில சமூகநீதி மாநாடு 24.11.2018 அன்று நடைபெறுகிறது.

மும்பை செம்பூர் ஆர்.சி.மார்க் பைன் ஆர்ட்ஸ் ஆடிட்டோரியம் சிவசாமி குளிர் அரங்கத்தில் 24.11.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சமூகநீதி மாநாடு தொடங்குகிறது.

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.அன் பழகன்  நினைவரங்கத்தில் மும்பை பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமையில் மாநில சமூக நீதி மாநாடு (ஜாதி தீண்டாமை ஒழிப்பு) நடைபெறுகிறது.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் புதிய மாதவி நெறியாள்கையில், மும்பை புறநகர் திமுக சொற்பொழிவாளர் முகமது அலி ஜின்னா  மாநாட்டின் தொடக்க வுரையாற்றுகிறார்.

புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை நீதிபாய் புலே, நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், எம்அய்டிசி தலைமை நிர்வாக அதிகாரி பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ், மும்பை சயான், கோலிவாடா தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன், மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை, மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்புச்செயலாளர் து.ஆ.கனகராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

‘ஏன் அவர் பெரியார்?’ தலைப்பில் தலை மைக்கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் கருத்துரையாற்றுகிறார்.

படத்திறப்பு


தந்தை பெரியார் படத்தை இரத்தினம் தொல்காப்பியன், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை புஷ்பம் பொற்கோ, மகாத்மா ஜோதிபா ஃபுலே படத்தை சற்குணம் ஆரிய சங்காரன், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் படத்தை தவமணி சண்முகராசன் ஆகியோர் திறந்துவைக்கிறார்கள்.

பரிசளிப்பு


பெரியார், அம்பேத்கர் வினா விடைப் போட்டியில் பங்கேற்ற மும்பை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார்.

விருது அளிப்பு


திராவிடப் பெருந்தகை விருது நிகழ்வில் மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத் தலைவர் வி.தேவதாசன் கலந்துகொள்கிறார்.

மாநாட்டுத் தீர்மான அரங்கம்


சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா ஆரிய சங்காரன், உமா கணேசன், ஜூலியட் இரவிச்சந்திரன், பேரரசி காமராசு ஆகியோர் தீர்மானங்களை முன்மொழி கிறார்கள்.

ஜாதி, மத வாதத்தை முறியடிப்போம்,


சமூக நீதிக் கொடியை உயர்த்திப்


பிடிப்போம் உரைவீச்சு


கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை புறநகர் மாவட்டச் செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச் சாமி, மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேரா.சமீரா மீரான், விடுதலை சிறுத் தைகள் கட்சி மும்பை மாநகர செயலாளர் த.சு.சாலமன் இராசா ஆகியோர் உரையாற்று கின்றனர்.

மாநாட்டின் சிறப்புரை


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மாநாட்டின் முடிவில் ஆர்.பரமசிவம், மு.சசிகுமார்  நன்றி கூறுகின்றனர்.

நவ.25 இல்


‘இடஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’-கருத்தரங்கம்


மும்பை மாத்துங்கா சி.ஆர். புதிய பூக்கடை, தெலங் சாலையில் குஜராத்தி சேவா மண்டலில் மும்பை பகுத்தறிவாளர் கழகம், மும்பை திராவிடர் கழகம் சார்பில் ‘இட ஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஏ.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார்.

மராட்டிய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் டாக்டர் பி.அன்பழகன் அய்.ஏ.எஸ்., நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், குஜராத் வருமான வரித்துறை இணை ஆணையர் நாத்திகர் மற்றும் பவுத்த நெறியாளர் அரவிந்த் சொந்தாக்கே அய்.ஆர்.எஸ், மும்பை தமிழ் எழுத்தாளர்கள் சங்க அமைப்புச் செயலாளர் அமலா ஸ்டான்லி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மும்பை டாடா சமூக அறிவியல் பயிலகம் பேராசிரியர் ஏ.ராமய்யா ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.

கருத்தரங்க முடிவில்மும்பை யூனியன் வங்கி முதன்மை மேலாளர் (ஓய்வு) எஸ்.நல்லசேகரன் நன்றி கூறுகிறார்.

மராட்டிய மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கம், மும்பை எழுத்தாளர்கள் சங்கம், புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சமூக நீதி மாநாடு மற்றும் இடஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் பெருந் திரளாக கலந்துகொள்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 17.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக