சனி, 21 டிசம்பர், 2019

மலேசியாவில் திராவிடர் எழுச்சி!

மலேசியா நாடு முழுதும் முக்கிய தலைநகர்களில் திராவிடர் கூட்டமைப்பு பிரச்சார பெருமழை

தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரைகள்

சிலிர்த்தெழுந்த சிங்கம் போல் தொடர் நிகழ்ச்சிகள்

மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் இயக்க செயல் வீரர்கள் - மானமிகு சுயமரியாதைக்காரர்கள் என அனைத்து அமைப்பினரும் முதல் முறையாக கடந்த 24.11.2019 அன்று கிரவுன் பிளாசா ஓட்டலில் Harbour Crew No.217, Persiaran Raja Muda musa, 4200 Pelabuhan Klang - Selangor என்ற அரங்கில், ஆசிரியர் கி.வீரமணி (தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர்) அவர்களின் தலைமையில் கலந்துறவாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை ஒத்த குரலில் பரிமாறிக் கொண்டு புதிய சரித்திரத்தின் - முதல் வரிகளை எழுதத் தொடங்கினர். இதன் அடிப்படையில்தான் தந்தை பெரியாரின 46ஆவது ஆண்டு நினைவு நாள் (24.12.2019) தொடர் நிகழ்வை மிகுந்த சிறப்புடன் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக