புதன், 12 செப்டம்பர், 2018

கவுரி லங்கேசை பரசுராம் வாக்மோர் தான் சுட்டுக் கொன்றார் : தடயவியல் ஆய்வில் உறுதி

பெங்களூரு, செப்.7 பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை அவருடைய வீட்டில் வைத்து அடையாளம் தெரி யாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி நடந்தது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த படுகொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

கவுரி லங்கேஷ் கொல்லப் பட்டு ஒரு ஆண்டு நிறைவு அடையும் நிலையில் வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செ ய்யப்பட்டு உள்ளனர். இதில் அமோல் காலே உள்பட 3 பேரை முற்போக்கு சிந்தனை யாளரான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் காவ லில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு சம்பந்தமாக கைதான பரசுராம் வாக்மோர் தான் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று இருக்கலாம் என்று சிறப்பு விசாரணை குழுவினர் கருதினர். இதை உறுதி செய்யும் வகையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கிய வீடியோவை சிறப்பு விசா ரணை குழுவினர் குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வு மய் யத்துக்காக அனுப்பி வைத் தனர். இதில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஹெல்மெட் அணிந்து மோட் டார் சைக்கிளில் செல்லும் 6 வினாடிகள் ஓடும் வீடியோவும் அடங்கும்.

மோட்டார் சைக்கிளில் பய ணிக்கும் நபர் பரசுராம் வாக் மோர் தான் என சந்தேகித்ததால் அவரை மோட்டார் சைக்கிள் ஓட்ட செய்து இன்னொரு காணொலியையும் காவல் துறையினர் பதிவு செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத் தனர். இந்த 2 காணொலி களையும் கெய்ட் முறையில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த முறையில் காணொலி களில் இடம்பெற்றிருக்கும் நபரின் உடல் அசைவுகள் மற்றும் அமைப்புகள் ஒப்பிடப் படுகின்றன. இந்த ஒப்பிட்டு முறையில் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக் கிளில் பயணித்த நபரின் உருவம், பரசுராம் வாக்மோ ருடன் பொருந்தியது. இந்த ஆய்வு அறிக்கை தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, கவுரி லங் கேசை சுட்டு கொன்றதாக சிறப்பு விசாரணை குழு வெளியிட்ட வரைபடம் பரசுராம் வாக்மோருடன் பொருந்துவ துடன், கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்ட நபரின் உயரம் 5 அடி 2 இன்ச் என கணக்கிடப்பட்டது. இந்த அம்சமும் பரசுராம் வாக்மோ ருடன் பொருந்தியுள்ளது.

இதுதவிர, சீகேஹள்ளி வாடகை வீட்டில் பரசுராம் வாக்மோர் தங்கி இருந்ததும், கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் அவர் வீட்டை காலி செய்த விவரங்களை வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவல் மூலம் சிறப்பு விசா ரணை குழுவினர் அறிந்து கொண்டனர்.

இந்த நிலையில், தற்போது தடயவியல் ஆய்வு முடிவும் பரசுராம் வாக்மோருடன் பொருந் துவதால், கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் தான் சுட்டு கொன்றான் என்பதை சிறப்பு விசாரணை குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 7.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக