வியாழன், 9 மார்ச், 2023

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் தந்தை பெரியார் பிறந்த நாள் - கழகக் கொடியேற்று விழா

 

ஆவடி, அக். 8- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம், மற்றும் கொடியேற்று விழாக்கள் என மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை யில் சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

"பகுத்தறிவு உலகை நோக்கிய பயணம்" என்ற தலைப்பில் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 4.10.2022 அன்று ஆவடி பெரியார் மாளிகையில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமையில், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க.இளவர சன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத்தலைவர் சிவ.இரவிச்சந்திரன், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் இரா.வேல் முருகன்,  மாவட்ட துணைச்செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கழகத் தோழர்கள், 14 புதிய உறுப் பினர்கள் உட்பட 28 பேர் கலந்து கொண்டனர். தோழர்கள் தன்அறிமுகம் செய்த பின்பு, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ரா.முருகேசன் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார்.

"பகுத்தறிவு உலகை நோக்கிய பயணம்" என்ற தலைப் பில் தலைமை உரையை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் ஆற்றினார். உரையில் தொழிலாளர் களிடமும், மக்களிடமும் பகுத்தறிவுச் சிந்தனைகளை கொண்டுச் செல்வதற்கான தேவையை வலியுறுத்தினார்.

 மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க.இளவரசன் ஆகியோர் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகளை விளக்கினர். அவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழக ஆவடி நகரச் செயலாளர் இ. தமிழ்மணி அதே தலைப்பில் சிறப்புற தம் உரையை நிகழ்த்தினார். அவரது உரையில் தாம் இயக்கத்தில் இணைந்த சூழலையும் காரணத்தையும் விளக்கியதுடன் புத்தக வாசிப்பின் அவசியங்களை விளக் கினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பகுத்தறிவாளர் கழகத் தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழகத்தினை வளப்படுத்த பல்வேறு வழித்திட்டங்களை முன்னிறுத்தி உரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் "பகுத்தறிவு உலகை நோக்கிய பயணம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். அவரது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்கம், வளர்ச்சி, ஆற்றிய பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் ஆகியவற்றையும், பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் செயல்பட வேண்டிய தேவையையும் விளக்கி, கழக ஏடுகளான  ‘விடுதலை', ‘உண்மை', ‘Modern Rationalist', ‘பெரியார் பிஞ்சு' போன்ற ஏடுகளைப் படித்தல் மற்றும் பரப்புதலின் அவசியத்தை விளக்கினார். ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் பெரியார் உலகம் நன்கொடை பற்றிய முக்கியத்து வத்தையும், மற்றும் வருகிற 29 , 30 அக்டோபர் ஆகிய தினங்களில் நடைபெறவிருக்கும் அகில இந்திய பகுத்தறி வாளர் சம்மேளனம் மாநாட்டை பற்றியும் (Federation of Indian Rationalist Association) (FIRA) எடுத்து ரைத்தார்.

இறுதியாக, பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் துணை செயலாளர் கே. கார்த்திகேயன், கூட்டத்தின் தீர் மானத்தை முன் மொழிந்து நன்றியுரையாற்றினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ஆவடி மாநகராட்சி மற்றும் இதனை சுற்றி அமைந்துள்ள பல்வேறு நகராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான மேல்நிலை பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், இவ்வட்டார மாணவர்களின் உயர் கல்விக்கான அரசு கல்லூரி எதுவும் அருகில் இல்லை. எனவே ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளின் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி ஒன்றை நம் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைக்க வேண்டும் என்று இக்கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. அதற்கான முயற்சிகளை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளகிறது.

இக்கூட்டத்தில் இறுதியாக ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட புது மண இணையரை (பால கணபதி - தாரணி) நமது மாநில பொறுப்பாளராகள் வாழ்த்தினர்.

கூட்டத்தில் ஆவடி நகரச் செயலாளர் கோ.முருகன், வச்சிரவேலு, பேபி ஜெயராமன், மு.சுந்தரவடிவேலு, எ.கண்ணன், கன்னடப்பாளையம் தமிழரசன், கலைச் செல்வன், ரகு, மைனர் சேவுகன், ரூபன், அழகொளி, தாரணி, பாலகணபதி, சுந்தர்ராஜன், ஆவடி நாகராஜ், சந்தோஷ், இளந்தென்றல் மணியம்மை, வை.கலையரசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு முன் இணை நிகழ்வாக புதிய இரண்டு இடங்களில் மாவட்டத் துணைச் செயலாளர் கார்த்திகேயன் முயற்சியில் உருவான கழகக் கொடியேற்றமும் நிகழ்ந்தது.

கோவர்த்தனகிரி பேருந்து நிறுத்தம்

முதலாவதாக கோவர்த்தனகிரி பேருந்து நிறுத்தத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ரா.முருகேசன் தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்  கழகக் கொடியேற்றினார். இதில் ப.க. மாவட்டத் தலைவர் ஜானகிராமன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் க.இளவரசன், ஆவடி ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, மாயாதேவி, சுஜிதா கார்த்தி கேயன், சவிதா சட்டக் கல்லூரி மாணவர் சந்தோஷ் பெரியார் பிஞ்சுகள் சமிக்ஷா, இளந்தென்றல் மணியம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செல்வா நகர்

அடுத்து கோவர்த்தனகிரி செல்வா நகரில் தோழர் கார்த்திகேயன் இல்லத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொடிமரத்தில் ப.க.மாவட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமையில் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் கொடி யேற்றினார். இதில் சுஜித்ரா கார்த்திகேயன், துளசி பாண்டு ரங்கன், கமலி செல்வம், கோவிந்தம்மாள் கண்ணபிரான், கயல்விழி சேகர், மாயாதேவி ஜெயபால், செந்தில் உள்ளிட்ட தோழர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக