புதன், 25 அக்டோபர், 2017

மகாராட்டிர மாநில அமைச்சருக்கு தந்தை பெரியார் நூல்கள் வழங்கி பாராட்டு



மும்பையில் மகாராட்டிர மாநில கால்நடைத்துறை, பால்பண்ணை தொழில் வளர்ச்சி மற்றும் மீன்வளர்ச்சித்துறை அமைச்சர் அலுவலகத்தில்  அமைச்சர் மகாதேவ் ஜாங்கர் அவர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் நலச்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி நேரில் சந்தித்து தந்தைபெரியார் புத்தகங்களை வழங்கினார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் நலச்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதிக்கு அமைச்சர் மகாதேவ் ஜாங்கர்  நெருங்கிய நண்பர் ஆவார்.  அமைச்சர் மகாதேவ் ஜாங்கர் அவர்களிடம்  தந்தைபெரியார் புத்தகங்களை வழங்கியபோது, யூனியன் வங்கியின் பிற்படுத்தப்பட்டவர்கள் நலச் சங்கப் பொறுப்பாளர்கள் ஜி.மலர்க்கொடி, பொருளாளர் ஜி.எஸ்.டி.இரவிக்குமார், செயலாளர் பிரகாஷ் மஜூம்தார், இந்திய ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச் சங்க மேனாள் தலைவரும், ஆர்.எஸ்.பி கட்சியின் செயலாளருமாகிய எஸ்.அக்கிசாகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்  (மும்பை, 11.10.2017).
-விடுதலை நாளேடு, 12.10 .17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக