திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நான் பெரியாரிஸ்ட் நடிகை குஷ்பூ


தந்தி தொலைக்காட்சி கேள்விக் கென்ன பதில் நிகழ்ச்சியில் நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களிடம்  நெறியாளர் ரங்கராஜ் பாண்டே கேட்டது
கேள்வி: வடக்கில் இருந்த வந்த நீங்கள் தமிழகத்தில் அரசியலில் இறங்கும்போது ஏன் தி.மு.க.வில் இணைந்தீர்கள்?
திருமதி குஷ்பூ: நான் மத சார்பற்றவள், என்னுடைய கொள் கைகளுக்கு ஒத்துப்போகும் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்தேன்.
காரணம் நான் பெரியார் பாலோயர், நான் பெரியாரிஸ்ட் எனவே அதில் சேர்ந்தேன். மேலும், எளிதில் சந்திக்கும் தலைமையை கொண்ட இயக்கமாகவும், என் னுடைய திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கட்சியாகவும் தி.மு.க.இருந்தது,
(இந்த பதிலை சொல்லியதும் ரங்கராஜ் பாண்டே முகத்தில் ஒரு குத்து விழுந்தது போல இருந்தது)
மேலும் பி.ஜே.பி.யில் சேரப் போவதாக செய்தி உலவிய நேரத் தில் ஏன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந் தீர்கள்? என்று பாண்டே கேட்டார்.
உடன் சற்றும் தாமதிக்காமல் பதில் சொன்னார் குஷ்பூ,
பி.ஜே.பி. ஒரு மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்கிற கட்சி,அதுவும் இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்கிற கட்சி, எனக்கு அது ஒத்து வராது, என்னுடைய கொள்கைகளுக்கு உடன்படாத கட்சியில் நான் எப்படி சேர முடியும்.
இவ்வாறு பேசினார்.
(09.08.2015 ஞாயிறு இரவு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேள்விக்கென்ன பதில் பேட்டியில்)
தகவல்: தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி
-விடுதலை ஞா.ம.,16.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக