செவ்வாய், 25 மே, 2021

விஜயவாடா-நாத்திக மய்ய கோ.விஜயம் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் போற்றுதல் உரை

‘நாத்திகம் என்பது மனித நேயமே' விஜயவாடா-நாத்திக மய்ய கோ.விஜயம் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் போற்றுதல் உரை

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் தலைவர் முனைவர் கோ.விஜயம் மறைந்து ஓராண்டு நிறைவு நாள் காணொலி நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று விஜயம் அவர்களின் நினைவுகளைப் போற்றி உரை ஆற்றினார். நாத்திக மய்யத்தின் நிறுவனர் கோரா வலியுறுத்திய நேர்மறை நாத்திகம் (Positive atheism) மனித நேயம் சார்ந்ததே என கருத்து விளக்கத்தினை தமதுரையில் வழங்கினார்.

22.5.2021 அன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடை பெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியினை நாத்திக மய்யத்தினர் காணொலி மூலம் ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல நாத்திகர் - மனிதநேயர் தலைவர்களும். செயல்பாட்டாளர் களும் பங்கேற்று விஜயம் அவர்களின் மனிதநேய பணிக்கு புகழாரம் சூட்டினர். தந்தை பெரியார் காலத்திலிருந்து - இராமச்சந்திரா கோரா நாத்திக மய்யத்தை நிறுவிய நாளிலிருந்து மூன்று தலைமுறைகளாக திராவிடர் கழகமும், விஜயவாடா-நாத்திக மய்யமும் இணைந்து நாத்திக நன்னெறியினை  தொடர்ந்து பிரச்சாரப் பணியினை மேற்கொண்டு வருவதை நினைவு கூர்ந்து தமிழர் தலைவர் உரையாற்றினார்.

நாத்திக நன்னெறி

நாத்திகக் கொள்கை உலகெங்கிலும் அந்தந்த பகுதி களில் நிலவிடும் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு பரப்புரை செய்யப்படுகிறது. நாத்திகம் என்பது வறட்டு சித்தாந்த மல்ல; அது வாழ்வியல் நெறி. மனிதரை மனிதராக வாழ்ந்திட வழி ஏற்படுத்திடும் ஒரு நன்னெறி. ஆனால் பொதுவெளியில் ‘நாத்திகம்' என்பது கடவுள் மறுப்பு என கருதப்படுகிறது. இந்த விளக்கம் உண்மை என்றாலும், அதையும் தாண்டி உண்மை நிலை - அதன் அவசியம் இருக்கிறது.

‘கடவுள் மறுப்பு' பற்றிக் கூறிய தந்தை பெரியார் ‘கடவுளை மற' என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. நிறுத்தியிருந்தால் ‘நாத்திகம்' என்பது ஒரு மறுப்புக் கொள்கையாக, எதிர்மறையாக இருந்திருக்கும். ஆனால் தந்தை பெரியார் கடவுள் மறுப்பையும் கடந்து ஆக்கரீதி யான, மனித குல மேம்பாட்டிற்கான நேர்மறை கருத்தாக ‘மனிதனை நினை' என மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

தமது வாழ்நாள் காலத்திற்கு பின்பும் அந்தப் பிரச் சாரம் தொடர வேண்டும் என்று ஒரு அமைப்பினையும் உருவாக்கினார். இந்து மதம் என்று அழைக்கப்படத் தொங்கிய காலம் வரை பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட நிலைமை இருந்தது. அந்த நம்பிக்கைகள் பல ஒன்றுக்கொன்று முரணாக இருந்தது - இப்பொழுதும் தொடருகின்ற நிலைமைகள் உள்ளன.

அப்படிப்பட்ட பலவித நம்பிக்கை, வழிபாட்டு முறை களை உள்ளக்கிய கலவைதான் இந்து மதம். ‘நாத்திகர்' என அறியப்படுபவர்களையும், உள்ளடக்கியது. இந்து மதத்தைப் பொறுத்த அளவில் ‘நாத்திகம்' என்பது கடவுள் மறுப்பு அல்ல; வேத மறுப்புகள், வேதங்கள் கூறும் சடங்குகள் மறுப்புதான்.

இப்படி பலவித நம்பிக்கைகளின் கலவையாக உள்ளது, ஓர்மைத்தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. இவைகளை யெல்லாம் தாண்டி, பல்வேறு நம்பிக்கை களையும் தாண்டி மனிதரை, மனித குலத்தை நினைத்து சமுதாயப் பணியைத் தொடங்கினார் பெரியார். மனித நேயம் அற்ற சமத்துவமின்மையை நீக்கிட பாடுபட்டார். பெரியாரின் ‘நாத்திகம்' என்பது சமத்துவத்திற்கு எதிரான அத்துணை தடைகளையும் தகர்த்து மனித நேயம் நிறைந்த சமுதாயத்தைப் படைப்பதே.

மேற்கத்திய நாடுகளில் ‘நாத்திகம்' என்பது 'atheism' எனும் பெயரில் அறியப்படுகிறது. ‘Atheism' எனும் ஆங்கிலச் சொல்லாக்கம் எதிர்மறை அடிப்படையிலா னது. ‘Atheism' என்று சொல்லப்படும் ஆங்கிலச் சொல் லாக்கத்தின் எதிர்மறை நிலையே ‘atheism'. ஒரு நேர் மறையான கருத்து எதிர்மறை நிலையில் அறியப்படு கிறது. இதன் விளக்கமாக நாத்திகத்தை (atheism), நேர்மறை நாத்திகம் (positive atheism) என பரப்புரை செய்து வந்தார் நாத்திகர் மய்யத்தை நிறுவிய கோரா. அவர் கூறிய நேர்மறை நாத்திகம், மனித சமத்துவத்தை வலியுறுத்துவதே என விஜயம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது தமிழர் தலைவர் குறிப்பிட்டுக் கூறினார்.

தந்தை பெரியார் பரப்புரை செய்த நாத்திகம் என்பது மனித சமத்துவம், மனிதநேயம் என்பதை மேற்கத்திய கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டு நேர்மறை நாத்திகம் (positive atheism) என விளக்கமளித்தார்.

கோரா பரப்புரை செய்த நேர்மறை நாத்திகம், தந்தை பெரியார் கூறிய மனித நேயத்தை மய்யப்படுத்திய நாத்திகமே என்பதை தமிழர் தலைவர் தமது 13 நிமிட உரையில் கூறினார்.

தமிழர் தலைவர் உரை

விஜயம் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

கோ.விஜயம் அவர்களின் முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி  நினைவில் நிலைத்து நிற்கும் நிகழ்ச்சி ஆகும். துயரம் நிறைந்த நெஞ்சத்துடன், விஜயம் அவர் கள் ஆற்றிய பணியினை நினைத்துப் பார்க்கிறோம். விஜயவாடா நாத்திக மய்யத்தின் நிறுவனர் கோரா, பின்னர் அவரது துணைவியார் சரஸ்வதி கோரா, அவரது மூத்த சகோதரர் லவனம் ஆகியோருக்குப் பின் நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநராக பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் விஜயம் சிறப்பாகப் பணி ஆற்றி வந்தார். திராவிடர் கழகத் தோழர்களுக்கு மிகவும் அறிமுகமான, பழக்கமுள்ள நாத்திக மய்யத்தின் தலைவர் விஜயம் “நாமெல்லாம் சக போராளிகள்" (co-fighters) எனச் சொல்லுவார். அவர் ஆற்றிய பணி வெறும் சமூகச் செயல்பாடு மட்டுமல்ல, அதற்கும் மேலே சமூகப் போராட்டம் என்பதை மய்யப்படுத்தியதாக இருந்தது.

கரோனா தொற்று பரவி வரும் காலத்தில் நாம் இருக் கிறோம். தொற்றைத் தடுப்பதற்கு - கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ சூழலில் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஆட்சியில் உள்ள பழமை வாதிகளால் அறிவியலுக்குப் புறம்பான பல செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

‘நாட்டு மாட்டு மூத்திரம்' குடித்து வந்தால் கரோனா தாக்காது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பரப்புரை செய்து வருகிறார். அந்த உறுப்பினரே கரோனா தொற் றின் முதல் அலையில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் பேசுகிறார்.

போலி அறிவியல் ஆட்சி அதிகார வலிமையோடு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கும் பணியில், பரப்புரை செய்யும் நிலையில் நாம் உள்ளோம். அத் தகைய பணிகளை ஆற்றி வந்தார் விஜயம்.

விஜயம் ஆற்றிவந்த நேர்மறை நாத்திகம் என்பது மனித குலத்தை, மனிதர் நலம் சார்ந்ததே. விஜயம் அவர் கள் தனது இறுதி மூச்சு வரை நாத்திகராக, மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தார். அப்படிப்பட்டவர்களுக்கு ‘மறைவு' என்பது இல்லை. இந்த நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர், பிஞ்சுக் குழந்தைகள் நாத்திகம் பற்றிப் பேசியதன் மூலம் விஜயம் கொள்கை ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகம் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டு ஏற்பாட்டில் உறுதுணையாக விளங்கியவர் விஜயம். வேண்டும் பொழுதெல்லாம் சென்னை - பெரியார் திடலுக்கு உடனே வருகை புரிவதை வழக்கமாகக் கொண்டவர்.

தற்போதைய நிர்வாகப் பொறுப்பில் உள்ளோர் விஜயம் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் சிறப் பாகச் செய்து வருகின்றனர்.

நாத்திகம் என்பது உண்மை நிலை. அதை உரக்கச் சொல்லி, சமத்துவ, மதச்சார்பற்ற மனிதநேயம் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க பணியாற்றுவதே நாம் விஜயம் அவர்களுக்கு செய்திடும் போற்றுதல் ஆகும் நாத்திக, மனிதநேயப் பணியில் தொடர்ந்து பயணிப்போம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப் பிட்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

விஜயம் நினைவுநாள் நிகழ்ச்சியில் சோன்ஜா எக் கெரிக்ஸ், (சுவிட்சர்லாந்து, மேனாள் தலைவர், பன் னாட்டு மனிதநேய நாத்திகர் ஒன்றியம் - International Humanist and Ethical Union) வோக்ஸ் முல்லர், ஜெர்மனி பகுத்தறிவாளர் கழகம், பேராசிரியர் தானே சுவர் சாகு (தலைவர், ஒடிசா பகுத்தறிவாளர் மன்றம்), கே.நந்தேசு சேனாபதி, ரமணமூர்த்தி, கோரா குடும்பத் தினர், டாக்டர் சமரம், நியாயந்தா, டிமாஸ் கோரா, அரிசுப்பிரமணியம், ஜசுதி கோரா மழலையர் சன்ஜால் கோரா, ஏலோஸ் கோரா மற்றும் ஷரிப் கோரா பங் கேற்றனர்.

பார்வையாளர்களாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, பெங்களூரு முல்லைகோ மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை விஜயம் அவர்களின் புதல்வர் விகாஸ் கோரா ஒருங்கிணைத்து நடத்தினார்.

தொகுப்பு: வீ.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக