செவ்வாய், 26 நவம்பர், 2019

எழுச்சியுடன் தொடங்கியது பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு

விருதுநகர், நவ.16 பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு இன்று (16.9.2019) விருதுநகரில் காலை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.

விருதுநகர் ராமமூர்த்தி சாலை எஸ்எஸ்கே சரஸ்வதி திருமண அரங்கில் சுயமரியாதைச் சுடரொளிகள் வடசேரி இளங்கோவன், புதுவை மு.ந.நடராசன், தூத்துக்குடி பொறியாளர் சி.மனோகரன், விருதுநகர் அ.வெங்கடாசலபதி நினைவரங்கத்தில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் அணிவகுத்து நடைபெற்றன.

கலைநிகழ்ச்சி

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக பகுத்தறிவு கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

‘தாமிரபரணி கலைக்குழு’வினர் கலை நிகழ்ச்சியை பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினர்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் கலைநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டுத் திறப்பு

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர், மாநாட்டு வரவேற்புக்குழு செய லாளர் கா.நல்லதம்பி வரவேற்றார்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செய லாளர் இரா.தமிழ்செல்வன் இணைப்புரை வழங்கினார்.

புயல் சுகுமார், ந.காமராசு, ச.அழகிரி, தங்க.வீரமணி, ஆடிட்டர் சண்முகம், வி.மோகன், கு.பெரியார், கருணா, முழுமதி, சீ.தங்கதுரை, உ.சிவதாணு, கு.ரஞ்சித் குமார், நெ.நடராசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாநாட்டின் தலைவரை முன் மொழிந்து மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் கோபு.பழனிவேல் உரையாற்றினார்.

அ.மன்னர்மன்னன், குடந்தை மோகன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், புதுவை நடராசன்,  இர.கிருட்டினமூர்த்தி, புலவர் இரா.சாமிநாதன் மற்றும் ந.ஆனந்தம், ஜி.எஸ்.எஸ். நல்லசிவம், கவிஞர் அறிவுடைநம்பி, கோவி.கோபால்,  பெ. ரமேஷ், இரா.வாசுதேவன், தங்க.சிவ மூர்த்தி, இரா.சிவக்குமார்ஆகியோர் வழி மொழிந்தார்கள்.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையேற்று உரை யாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

படத்திறப்பு

பன்னாட்டளவில் பகுத்தறிவு நெறி பரப்பிய அறிஞர் பெருமக்களின் படங் களைக் கொண்ட பகுத்தறிவுப்போராளிகள் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார்.

தந்தைபெரியார் படத்தைத் திறந்து வைத்து பேராசிரியர் க.அருணன் உரை யாற்றினார்.

அறிவியல் கண்காட்சி திறப்பு

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்  அறிவியல் கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

கருத்தரங்கம்

‘புதியதோர் உலகு செய்வோம்’ தலைப் பில் கருத்தரங்கம்  பகுத்தறிவு எழுத்தாளர்  மன்றத் தலைவர் வா.நேரு தலைமையில் நடைபெற்றது.

பா.இரா.இராமதுரை, கோவி.அன்பு மதி, ஆர்.பெரியார்செல்வன்,  கே.எம்.கருப் பண்ணசாமி,  வீ.சுப்ரமணி,  ச.தருமராஜ், பெ.நடராசன், ச.பால்ராசு முன்னிலை வகித்தனர்.

ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கருத்தரங்க தொடக்க உரையாற்றினார்.

‘பெரியாரை உலகமயமாக்குவோம்’ தலைப்பில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து, ‘ஜாதி ஒழிப்பு’ தலைப்பில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், ‘முறியடிப்போம் மூட நம்பிக்கைகளை’ தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘மதவெறி மாய்ப்போம்’ தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன், ‘பெண் விடுதலை நோக்கி,பாலியல் சமத்துவம்’ தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிரணி அமைப்பாளர் பேரா சிரியர் மு.சு.கண்மணி ஆகியோர் கருத் தரங்க உரையாற்றினார்கள்.

மாநாட்டில் அறிஞர் பெருமக்கள்

இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் நரேந்திரநாயக், 2019ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றவரும், பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி கிளை பொறுப்பாளரும், ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமாகிய உல்ரிக் நிக்லஸ், கேரள மாநில பகுத்தறி வாளர் திருவனந்தபுரம் சுகுமாறன் தனு வச்சாபுரம் உள்ளிட்ட அறிஞர் பெரு மக்கள் நாடுமுழுவதுமிருந்து மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்கள்.

மாநாட்டு அரங்கில் தமிழர் தலைவர்

மாநாட்டின் அரங்கில் குடும்பம் குடும்பமாக இருந்த கழகத் தோழர்களுக்கு புன்னகையுடன் வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க உற்சாகத்துடன்  அனைவரிடமும் கைகுலுக்கி நலன் விசாரித்தபடி திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார்கள்.

தந்தை பெரியார் வாழ்க, தந்தை பெரியாரை உலகமயமாக்கும் தலைவர் வீரமணி வாழ்க, உலகப்பகுத்தறிவாளர் களின் தலைவர் வீரமணி வாழ்க, அமெ ரிக்காவில் மனிதநேய வாழ்நாள் சாதனை யாளர் விருது பெற்ற தலைவர் வீரமணி வாழ்க, தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு வீரமணி வாழ்க, உலக நாத்திகர்களின் ஒப்பற்ற தலைவர் வீரமணி வாழ்க உள் ளிட்ட கழகத் தோழர்களின் வரவேற்பு முழக்கங்கள் வானைப்பிளந்தன.

மாநாட்டு அரங்கில் இருந்த பகுத்தறி வாளர்கள், பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் கழகத் தோழர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினர்.

நாத்திகர்கள்தான் நீண்ட நாள்கள் வாழ்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஏராளமானோர் இருக்கிறார்கள். விருதுநகரில் நமது கழகத்திற்கு தக்க ஆலோசனைகளை வழங்கிவரும் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் சகோதரர் பேராசிரியர் திருமாறன் (வயது 94) - செந்தாமரை இணையருக்கு பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா மாநாட்டில் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன் முக்கிய பொறுப்பாளர்கள் (விருதுநகர், 16.11.2019).

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க விழா மாநாட்டில் பங்கேற்க விருதுநகருக்கு வந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (விருதுநகர், 16.11.2019)

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க விழா மாநாட்டில் திரண்டிருந்தோர் (விருதுநகர், 16.11.2019)

- விடுதலை நாளேடு, 16 11.19

பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாடு - கருத்தரங்கம், பட்டிமன்றம்

பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடி தேவை.... ஆண்களுக்கா? - பெண்களுக்கா? என்ற பட்டிமன்றத்தின் நடுவர் ஊடகவியலாளர் கோவி. லெனின் உரையாற்றினார்.உடன்: 'ஆண்களிடமே' என்ற அணியில் உரையாற்றிய பா.மணியம்மை, இறைவி, இன்பக்கனி, தே.அ. ஓவியா, 'பெண்களிடமே' என்ற அணியில் உரையாற்றிய அதிரடி க. அன்பழகன், இரா. பெரியார்செல்வன், வெ. குமாரராசா, அறவரசன் மற்றும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், சி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

- விடுதலை நாளேடு 19 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக