புதன், 19 ஜூன், 2019

எவ்வித சடங்குகளும் இன்றி அரசுமரியாதையையும் மறுத்து பகுத்தறிவாளர் கிரீஷின் இறுதி நிகழ்வு



பெங்களூரு, ஜூன் 12 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “வெறுப் புணர்வுக் கெதிராக வாக்களியுங்கள்”  என்று பகிரங்கமாக மோடி அரசுக்கெதிராக அறைகூவல் விடுத்த வரும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற அறிவுத் துறையினரை அர்பன் நக்சல்கள் என்ற பெயரில் மோடி அரசு பழிவாங்கல் நடவடிக்கைக்கு இரையாக்கிய போது தானும் ஓர் ‘அர்பன் நக்சல்’ என்று பகிரங் கமாக அறிவித்துக்கொண்டவருமான புகழ்பெற்ற நாடகாசிரியர், நடிகர், திரைப் பட இயக்குநர், பாரதீய ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னார்ட்  காலமானார் (19 மே1938 - 10 ஜூன் 2019).

யயாதி, ஹயவதனா, துக்ளக், நாகமண்டலா, தலெதண்டெ போன்ற நாடகங்களை எழுதி இந்திய நாடகங்களின் முகவரியை மாற்றியவர்.  தொன்மங்களை, வரலாற்றுப் போக்குகளை மறுவாசிப்புக் குட்படுத்தி சமகாலக் கண்கொண்டு அவற்றில் பொதிந்துள்ள இருத்தலியக் கேள்விகளை அலசுகிற அவரது நாட கங்கள் இந்திய  நாடகங்களின் எல்லைகளை விரிவு செய்வதாயிருந்தன.

சம்ஸ் காரா, ஒந்தனொந்து காலதள்ளி, மந்தன், நிஷாந்த், போன்ற படங்களின் மூலம் திரைக்கதையாசிரியராகவும் வம்ச விரு சக்‌ஷா, உத்சவ் போன்ற படங்களின் திரை இயக்குநராகவும் பணியாற்றி இந்தியாவின் நியோ ரியலிச திரை இயக்கத்திற்கு வலு சேர்த்தவர்.

கடந்த பல ஆண்டுகளாய் மேலெ ழுந்து வரும் பாசிச அபாயத்திற்கெதிராய் உரத்து குரல் கொடுத்தவர்.

நரேந்திர தபோல்கர், கல்புர்கி, பன் சாரே, கவுரி லங்கேஷ் என சங்கப் பரி வாரத்தின் கொல்லப்பட வேண்டிய வர்களின் வரிசையில் கிரீஷ் கர்னார்ட் பெயரும் இருந்ததை உளவுத்துறை சுட்டிக் காட்டியபோதும் அதிகாரத்திற் கெதிராக உண்மைகளை உரத்துப் பேசுகிறவராயிருந்தார்.

அவரது இருப்பும் பன்முகப் பங்களிப் பும் முன்னிலும் கூடுதலாக தேவைப் படுகிற இக்காலத்தில் மறைந்துள்ளார்.
-  விடுதலை நாளேடு, 12.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக