புதன், 3 ஜனவரி, 2018

நாத்திகம் என்பது தவறான சொல் அல்ல!


நாத்திகம் என்ற சொல் ஒன்றும்தவறானதல்ல. கடவுள் மறுப்பாளர்களைநாத்திகர்கள் என்று சொல்லுவதுசரிதான். மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூடநாத்திகம் என்ற சொல்லுக்குதெய்வமின்மை நிரீஸ்வரம் என்றேபொருள் கூறுகிறது.

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்(பக்கம் 626) என்ன கூறுகிறது?

நாத்திகம் (Atheism): தெய்வம்அல்லது தெய்வ நம்பிக்கை போன்றபொருண்மை சாராதவற்றைத்திறனாய்தல். கடவுள் உள்ளாரா என்றுவினா எழுப்பி சடப்பொருட்களில் மட்டும்நம்பிக்கை கொள்ளும் உலகாயதம்போலல்லாமல் நாத்திகம் கடவுளைமுற்றிலும் மறுக்கிறது. பல தத்துவமுறைகளில் இது வேரூன்றியுள்ளது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளானடெமாகிரிட்டஸ், எபிக்யுரஸ் ஆகியோர்பொருண்மைத்துவம் குறித்துப்பேசுகையில் இதை ஆதரித்துவாதிட்டுள்ளார். 18ஆம் நூற்றாண்டில்டேவிட் ஹ்யூம், இம்மானுவல் கான்ட்ஆகியோர் நாத்திகவாதிகளல்லர்எனினும், கடவுள் இருப்பதற்கான மரபுவழிச்சான்றுகளுக்கு எதிராக வாதிட்டனர். கடவுட்பற்றே நம்பிக்கைக்குக் காரணம்என்றனர். லுட்விக் ஃபாயர்பாக் போன்றநாத்திகவாதிகள் கடவுள் என்பது மனிதலட்சியங்களின் உருவகப் புனைவுஎன்றும், இந்தப் புனைவை அடையாளம்காண்பது தன்னை உணர்தலைச்சாத்தியமாக்குகிறது என்றும் கூறினர். மார்க்ஸியம் நவீனபொருண்மைத்துவத்தின் வடிவமாகத்திகழ்கிறது. ஃபிரடெரிக் நீட்ஷேயிலிருந்துதொடங்கிய இருத்தலியல் நாத்திகம், கடவுளின் மரணத்தைப் பிரகடனப்படுத்தி, மதிப்பையும் பொருளையும்நிர்மாணிக்கும் மனித உரிமையைஅறிவித்தது. தர்க்க நேர்காட்சி வாதம்(லாஜிகல் பாசிடிவிஸம்) கடவுள்இருக்கிறாரா இல்லையா என்றபிரச்சினையே முட்டாள்தனமானதுஅல்லது பொருளற்றது என்று கூறுகிறது. இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்டசகாப்தத்தில் சார்வாகர் என்ற அறியப்பட்டரிஷியின் சார்வாகக் கொள்கையும்நாத்திகம் சார்ந்ததே. பவுத்த மதத்தின்ஸ்தாபகரான புத்தர் கடவுளை ஏற்கவோமறுக்கவோ இல்லை. எனவே பவுத்த மதம்எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைவழிபடுவதில்லை. தமிழகத்தில் நாத்திகவாதத்தை முன்னெடுத்துச்சென்றவர்களில் பெரியார் என்றுஅழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமிமுக்கியமானவர் என்கிறது பிரிட்டானிகாதகவல் களஞ்சியம்.

இன்னும் சொல்லப்போனால் இந்துமதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டுஎன்று பெருமையாக சொல்லிக்கொள்பவர்கள், நாத்திகத்தை ஏன்வெறுக்க வேண்டும். சாருவாகனம்என்பதெல்லாம் நாத்திக வாதம் தானே.

இந்து மதத்தில் ஒரு வினோதம்என்னவென்றால் கடவுளை மறுப்பவர்கள்நாத்திகர்கள் அல்லர், மாறாக வேதத்தைமறுப்பவர்தான் நாத்திகர்.

மனுதர்மம் 2ஆம் அத்தியாயம்11ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?

வேதம் (சுருதி), தரும சாஸ்திரம்(ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்கயுக்தியைக் கொண்டு மறுப்பவன்நாஸ்திகனாகின்றான். இத்தகையநாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால்தெய்வத்தை நிந்திக்கின்றவனாவான்.

நாத்திகத்துக்கு மனுதர்மம் கூறும்விளக்கம் இது:

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்னசொல்லுகிறார்?

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிதீச்வர வாதம்என்றுதானே இப்போது நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக்கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்கமுடியும்.

அப்படிப்பட்ட பலபேர்இருந்திருக்கிறார்கள். இது என்னவேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால்என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில்நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்.

வைதிக வழக்கைஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதேஞானசம்பந்தரின் கொள்கையாகவும்இருந்திருக்கிறது. ஈசுவர பக்திஇல்லாமலிருப்பதுங்கூட அல்ல  (தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)

இப்பொழுது புரிகிறதா - நாத்திகம் - ஆத்திகம் என்பதற்கான விளக்கம்?

1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில்நடைபெற்ற சட்டப் பேரவைத்தேர்தலின்போது சேலத்தில் திராவிடர்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டமூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுஊர்வலத்தில் ஜனசங்கத்தினர் தந்தைபெரியார் மீது செருப்பினை வீச, அந்தசெருப்பினை இலாவகமாகப் பிடித்தகருஞ்சட்டைத் தோழர் மூடநம்பிக்கைஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டராமன் படத்தினை அந்தசெருப்பைக்கொண்டு அடிக்க - தேர்தல்நேரம் என்பதால் பார்ப்பனர்கள் குறிப்பாகதுக்ளக், தினமணி போன்ற ஏடுகள்அதைப் பெரிதுபடுத்தி, தேர்தல்பிரச்சாரமே இதனை மய்யப் புள்ளியாகக்கொண்டு சுழன்றது.

அப்பொழுது தவத்திரு குன்றக்குடிஅடிகளார் அவர்கள் திருக்குறள்போலஇரண்டு வரிகளில் தம் கருத்தைப் பதிவுசெய்தார்.

இன்று ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம். இன்று நாஸ்திகம்என்பது பெருவாரியான தமிழ் மக்களின்நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்?என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். (விடுதலை 19.2.1971)

இராமனை தி.க.வினர்செருப்பாலடித்து விட்டனர்; அப்படிப்பட்டதி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டுஎன்று எதிரிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவு என்ன தெரியுமா? இராமனை செருப்பாலடிப்பதற்கு முன்பு1967இல் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்றஉறுப்பினர்களின் எண்ணிக்கை 138, செருப்படிக்குப் பிறகு மிகப் பெரியஅளவில் தீவிரமாகப் எதிர்ப் பிரச்சாரம்செய்த நிலையில் தி.மு.கவுக்குக்சட்டமன்றத்தில் கிடைத்த இடங்கள் 186.

அப்பொழுது ராஜாஜிகையொப்பமிட்டு கல்கி இதழில் (4.4.1971) என்ன எழுதினார் தெரியுமா?

இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத்தகுதி இழந்து விட்டது. இந்தராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிடவேண்டும் என்று சில மகா புருஷர்கள்உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று எழுதினார். தமிழ்நாட்டில்தந்தை பெரியார் உறுதி செய்த நாத்திகம்எத்தன்மையுடையது என்பதை இதன்மூலம் நன்கு அறியலாமே!

ஆன்மீக அரசியல் பேசுவோருக்கும்இது காணிக்கை!

இராமாயணத்தில் தசரதன்அமைச்சரவையில்கூட ஜாபாலி என்றநாத்திகர் இருந்தார். அவர் ஒரு பார்ப்பனர்.

நாத்திக வாதமென்றால் ஜாபாலிசொன்னதுபோல் இருக்க வேண்டும். பவுத்த மதம், ஜைன மதம் நம்மிடம்நாத்திக வாதம் பேசி இருக்கிறது. புனர்வாதம், புத்திவாத மெல்லாம் பேசிஇருக்கிறார்கள் என்று காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மணியனின் இதயம் பேசுகிறது இதழுக்கு(10.7.1988) அளித்த பேட்டியில்கூறியதுண்டே!

உண்மைகள் இவ்வாறு இருக்கநாத்திகம் என்றால் தவிர்க்கப்படவேண்டிய பெருமையற்ற வார்த்தையல்ல - எதிர்மறையான சொல்லாடலும் அல்ல. பகுத்தறிவை உள்ளடக்கிய தலைநிமிர்ந்துசொல்லக்கூடிய சிந்தனைக்கூர்மையுடைய கம்பீரமான பொருள்பொதிந்த சொல்லே.

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதைஇல்லையோ,

சமத்துவத்திற்கு இடமில்லையோ,

அங்கெல்லாம் இருந்துதான்நாஸ்திகம் முளைக்கிறது.

- தந்தை பெரியார், குடிஅரசு 07.09.1930

- கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக