திங்கள், 21 ஆகஸ்ட், 2017

ஜெர்மனி மாநாட்டுக்குச் சென்ற பேராளர்களுக்குப் பாராட்டு


“உலகத் தலைவர் பெரியார்”, “ஜாதி ஒழிப்புப் புரட்சி”
நூல்கள் வெளியீட்டு விழா - பெரும் திரளாக மக்கள் வருகை



தமிழர் தலைவர் ஜெர்மன் மாநாட்டு வெற்றிக்கு உழைத்தோரைப் பாராட்டிப் பேசினார்.

சென்னை, ஆக. 21- ஜெர்மனி-கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக் கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்ற பேராளர்க ளுக்குப் பாராட்டும், நூல் வெளியீட்டு விழாவும் வெகு சிறப்புடன் நடைபெற்றது - பல்துறைப் பெரு மக்கள் ஏராளமாக வந்திருந்தனர்.

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில்  கடந்த ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்கள் நடை பெற்ற பெரியார் பன்னாட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் பங்கேற்ற பேராளர்களுக்கு பாராட்டுவிழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (20.8.2017) மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

மாநாட்டுக் காட்சிப்பதிவு

விழாவில் பெரியார் பன்னாட்டு சுயமரியாதை இயக்க  மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் காட்சிப்பதிவு திரையிடப்பட்டது. காண்போரை மாநாட்டு அரங்கத்தில் அமர்ந்து காண்பதுபோன்ற உணர்வை அளிக்கும் வண்ணம் மிகச்சிறப்பாக அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு காட்சி களாக திரையிடப்பட்டன.

நூல்கள் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய  உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’ (தொகுதி 6) மற்றும் தந்தை பெரியார் பேச்சுகள், எழுத்துகளைக் கொண்ட தொகுப்பு நூலாக  ஜாதி ஒழிப்புப் புரட்சி  நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இரண்டு நூல்களின் மதிப்பு ரூ.770, விழாவையொட்டி ரூ.600க்கு வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் பெரி தும் ஆர்வத்துடன் உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டார்கள்.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 6)  நூலை வரியியல் வல்லுநர் ச.இராசரத் தினம் வெளியிட்டு உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

ஜாதி ஒழிப்புப் புரட்சி  நூலை  கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட்டார்¢. அரூர் இராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

நூலினை வெளியிட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் உள்ளிட்ட பேராளர்களுக்கும், தந்தை பெரியார் கொள்கைகளை பன்னாட்டளவில் பரப்பி வருகின்ற அவர்தம் பணிகளுக்கும் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

ஜெர்மனி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பன்னாட்டு கட்டுரைப்போட்டியில் மருத்துவர் பிரியதரிசினி இராஜேந்திரன் முதல் இடம் பெற்றார். பேராசிரியர் நாகநாதன் மகன் மருத்துவர் எழிலன் வாழ்விணை யரான டாக்டர் பிரியதரிசினிக்கு 500 டாலர் முதல் பரிசுத் தொகையை பெரியார் பன்னாட்ட மைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் வழங் கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பரிசு மற்றும் இயக்க வெளியீடுகளை வழங்கிப் பாராட்டினார்.

அதேபோல் இரண்டாம் பரிசு பெற்ற உதயக்கு மாருக்கு பரிசு அளிக்கப்பட்டது.  போட்டியில் பங் கேற்ற 35 பேரில் சி.துரை, சி.ரம்யா உள்ளிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டு

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத் துவர் சிகாகோ இளங்கோவனின் பணிகளைப்பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

பெரியார் பன்னாட்டமைப்பின் ஜெர்மன்  கிளை யின் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் பணி களைப் பாராட்டி கழகப்பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி பயனாடை அணிவித்தார். நினை வுப் பரிசை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார்.

சுயமரியாதை இயக்கம் எனும் தலைப்பில் முதன் முதலில் ஆய்வு செய்த பேராசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன் பணியைப்பாராட்டி மயிலை நா. கிருஷ்ணன் பயனாடை அணிவித்தார். தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் நினைவுப்பரிசை வழங்கினார்.

பெரியார் சுயமரியாதை  ஆங்கில நூலை எழுதிய பேராசிரியர் முனைவர் அ.அய்யாசாமி அவர்களைப் பாராட்டி பேராசிரியர் முனைவர் நாகநாதன் பயனாடை அணி வித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினை வுப்பரிசை வழங்கினார்.

நூற்றாண்டில் திராவிடன் இதழ்  நூலாசிரியர், ஆய்வியல் நிறைஞர் இரா.பகுத்தறிவு அவர்களைப் பாராட்டி புலவர் பா.வீரமணி பயனாடை அணிவித் தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பரிசை வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு சுயமரியாதை மாநாட்டின் நிகழ்வுகளை பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ள கழகத்தின் மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பணியைப்பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்தார்.

மாநாட்டின் அத்துணை சிறப்புக்கும் காரணமான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநாட்டின் வெற்றி மகிழ்வில் பயனாடை அணிவிக்கப்பட்டது டாக்டர் சோம.இளங்கோவன் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
பேராளர்களுக்குப் பாராட்டு

மாநாட்டில் பங்கேற்ற பேராளர்களாகிய 92 வயது கணேசன், திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரி யர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். மேலும், அனைத்து பேராளர்களுக்கும் கழகப்பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, வெற்றிசெல்வி கலி.பூங்குன்றன், தாம்பரம் பி.சி. செயராமன், தாம்பரம்  மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், அரக்கோணம் கு.சோமசுந்தரம்,  கோபிசெட்டிப் பாளையம் இராஜமாணிக்கம், செம்பனார்கோயில் அன்பழகன், கரூர் வழக்குரைஞர் இராசசேகரன், கள் ளக்குறிச்சி ம.சுப்பராயன், மதுரை முனியசாமி, எழுத் தாளர் கலைச்செல்வன், வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், அமைப்புச்செயலாளர் ஊமை.செயரா மன்,   பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, குவைத் பெரியார் நூலகம் லதாராணி, அரூர் பகுத்தறிவாளர் இராசேந்திரன், காரைக்கால் நாராயணசாமி, முனைவர் தேவதாஸ், திருவாரூர் கோவிந்தராஜன், பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் உதவியாளர் தேசிங், மருத்துவர் சரோஜா இளங்கோவன் மற்றும் மோகனா வீரமணி அம்மையார் ஆகியோருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், மருத்துவர் சோம.இளங்கோவன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு தங்க.தனலட்சுமி பயனாடை அணிவித்து பாராட்டி மகிழ்ந்தார். திருச்சியில் 2018ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டு நிதியாக தங்க.தனலட்சுமி, தங்கமணி இணையினர் ரூபாய் 10ஆயிரம் தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் எழுதிய நாகம்மையார் வாழ்க்கை வரலாறு நூல் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.

பெரியார் திடலில் இயங்கிவருகின்ற பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு குருதிஅழுத்த சோதனைக்கருவியை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்  மகள், மருமகன் வழங்கினார்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை பட்டயம் பகுதிநேர படிப்புகுறித்த அறிவிப்பை முனைவர் தேவதாஸ் வெளியிட்டார்

பாராட்டப்பட்ட பேராளர்கள் உரை

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர்  மருத்துவர் சோம.இளங்கோவன் (யு.எஸ்.ஏ-.), பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி கிளைத் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், பேராசிரியர் அ.அய்யாசாமி, முனைவர் ந.க.மங்கள முருகேசன், ஆய்வியல் நிறைஞர் இரா.பகுத்தறிவு ஆகியோர் உரையாற்றினார்கள்.

விழா நிறைவாக  உலகெங்கும் பெரியார்  எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

விழா முடிவில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறினார்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, வடசென்னை பகுத்தறிவாளர்கழகம் தங்க.தனலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், புதுவை மாநிலத் தலைவர் சிவ. வீரமணி, மதுரை முனியசாமி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், கோவிந்தராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செந்துறை இராசேந்திரன், கொடுங்கையூர் தி.சே.கோபால், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், அரக்கோணம் கு.சோமசுந்தரம், லதாராணி, பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் புதுவை நடராசன், பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், சைதை மதியழகன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் நாத்திகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் காரைக்குடி சாமி.திராவிடமணி, க.பார்வதி, திருவாரூர் மண்டலத் தலைவர் ஜெகதீசன், திருவண்ணாமலை கவுதமன், செம்பனார்கோயில் அனபழகன், மருத்துவர் க.வீரமுத்து உள்ளிட்ட ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.



.





-விடுதலை,21.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக