சனி, 19 ஆகஸ்ட், 2017

இங்கர்சால்

இராபர்ட் கிரீன் இங்கர் சாலின் தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். சிறுவயதி லிருந்தே கூரிய சிந்தனைத் திறன் பெற்றவ ராக திகழ்ந்தார். உயர்கல்விக்குப் பின் சட்டப் படிப்பை பயின்றார். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது படைத்தளபதியாக பணியாற்றி னார். போர் முடிந்ததும் அரசிய லில் நுழைந்தார்.

கடவுளே இவ்வுலகைப் படைத்தார், சில விதிகளை வகுத்தார், மனிதர்களைப் பல கீன மானவர்களாகவும், அறி யாமையில் உழல்பவர்களாக வும் விட்டு விட்டார் என்பன போன்ற சிந்த னைகளைக் கண்டு சீறினா£ர். மனிதர்கள் இவ்வுலகில் துன்பப் பட்டாலும், மறுஉலகில் இன்பம் பெறுவர் எனும் நம்பிக்கையையும், துன் பம் மனிதனை தூய்மை யாக் கும் போன்ற கோட்பாடுகளை யும் குறித்து வைத்துத் தாக்கி னார். அவரது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவும், நேர் மையினாலும், திறமையினா லும் இல்லியான்ஸ் மகாணத்தின் ஆளுநராகும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் இங்கர்சாலை சந்தித்து தங்கள் சமயம் சார்ந்த விமர்சனங் களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே தங் களது பெயரை ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப் போம் என்றனர்; கொள்கைக்கு முன் கோட்டை முக்கியமல்ல என்று கர்ச்சித்தார்.

மனிதர்கள் மீதுகொள்ளும் அன்பே உலகிலேயே தலை சிறந்த கொள்கை என்றார். இறை நம்பிக்கை, போதனை, பிரார்த் தனை இவற்றைவிட மனிதர் களை அன்பு செய்வதே உயர்ந் தது என வாதிட்டார். மனிதனை நேசிப் பதே முக்கியம் என்றார்.

பெரும்பாலான கடவுள் களை ஆண்களாக படைத்தது ஏன் என்று கேட்டார். பெண் களை தொடர்ந்து ஆண் களுக்கு அடங்கி உள்ளவர் களாக வைத்துக்கொள்ளுவதற் கான ஒரு ஏற்பாடே மதமும், கடவுளும் என்றார்.  இங்கர்சால் பகுத்தறிவு அறிஞராக மட்டுமல் லாமல் பகுத் தறிவுக் கருத்துப் பரப்புரையாளராகவும் விளங்கி னார். அவரது கூட்டங்களுக்கு வரும் மக்கள் வெள்ளத்தால் மதகுரு மார்க ளுக்கு பெரும் அச்சமூட்டுப வராக இங்கர்சால் இருந்தார். கடவுள் நம்பிக் கையாளர்களும் பெருந்திர ளாகக் கட்டணம் கொடுத்து இங்கர்சாலின் உரை வீச்சினைக் கேட்கக் காத்திருந் தனர்.

ஒருமுறை ஞானஸ்தானம் பற்றிய உங்களது கருத்து என்ன? என்று இங்கர்சாலிடம் கேட்ட பொழுது ஞானஸ் தானத்தை விட சோப்புஸ்தானம் சிறந்தது எனப் பளிச்சென பதில் கூறினார். கேலி, நகைச்சுவை அவர் உரையில் ததும்பும்.

மனிதநேய மாண்பாளர் இங்கர்சால்  1899ஆம் ஆண்டு மறைந்தார்.

தந்தை பெரியார் கொள்கை யைப் பெரும்பாலும் ஒத்ததாக இருந்தது இங்கர்சாலின் கருத்து. தந்தை பெரியார் போலவே பிரச்சாரத்தின்மூலம் பெரும் மாற்றத்தைக் கண்ட மாமேதை இங்கர்சால்.

இன்று அவர் பிறந்த நாள் (1883)

- மயிலாடன்

-விடுதலை,11.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக