சனி, 19 ஆகஸ்ட், 2017

நாத்திகம் பற்றி  வெளிநாட்டு அறிஞர்கள் 


* நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன். 
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து, வரலாற்று ஆசிரியர்)

* நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)

* தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)

* கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)

* கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)

* மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது. 
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)

* இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள்.
(கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)  
-விடுதலை,11.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக