வெள்ளி, 27 ஜனவரி, 2017

ரசல்




பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970) ஒரு பிரித்தானிய மெய் யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்க வாதி), சமூக சீர்திருத்த வாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் பெரும்பாலும் இங்கி லாந்தில் தன் வாழ்க் கையைக் கழித்தாலும், வேல்சில் மறைந்தார்.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப் பாளர், தடையிலா வணி கத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித் தவர், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தவர்.

ரசலுக்கு, "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காக வும்" 1950 இல், இலக்கியத் திற்கான நோபல் பரிசு கிடைத்தது".

ரசலின் மதம் பற்றிய கருத்துகள் `நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை` `மதம், இத்தியாதி ,பற்றிய இதர கட்டுரைகள்` என்ற இரு நூல்களில் காணப் படும். நான் ஏன் கிருஸ் துவன் இல்லை என்கிற தலைப்பில் 1927ல் மார்ச் மாதம் ஆறாம் நாளில் பாட்டர்சீ நகர மாளி கையில் தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண் டன் கிளையின்சார்பில் உரை ஆற்றினர், ஓராண்டு கழித்து அது துண்டு வெளியீடாக வந்தது. அதில் கடவுள் நம்பிக்கை யின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையி யல் பற்றியும் பேசுகிறார்.

(தமிழில் மொழிபெயர்த்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி யிட்டது) நான் மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பி னாலும், கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் முதல் காரணி வாதம் கிழிக்க முடியாத தாக தோன்றியது.

18ஆம் வயதில், கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன், அதில் அவர் தந்தை `என்னை செய்தவர் யார்` என்பதற்கு பதில் இல்லை, ஏனெனில் அது `கடவுளை யார் செய்தனர்` என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் என சொல்வதாக படித்தேன். அதிலிருந்து முதல் காரணி வாதத்தை கைவிட்டு, நாத்திகனா னேன்.

(பெர்ட்ரண்டு ரசல் - சுயசரிதை - ப 36) (இன்று ரசல் பிறப்பு -1872)

- மயிலாடன்
-விடுதலை,18.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக