வியாழன், 26 ஜனவரி, 2017

நேருவின் பஜனை?

நேருவைப் பொறுத்தவரையில் அவர் முழுக்க முழுக்க ஒரு பகுத்தறிவு வாதியாகவே கடைசிவரை வாழ்ந்து மறைந்தார். சந்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம், தான் ஒரு கடவுள் மறுப்பாளர் - மதவெறுப்பாளர் என்பதை முத்தி ரைப்படுத்தியே காட்டி வந்தார். தான் எழுதி வைத்த உயிலில் கூட அதை உறுதிப்படுத்தி இருந்தார்.
ஆனால் நேரு இறந்த பிறகு என்ன நடந்தது? அவர் சாவுமாட்டில் பஜகோவிந்தங்கள் என்ன - வேதப் பாரா யணங்கள் என்ன - கொஞ்ச நஞ்சமல்ல.
ஆச்சாரியார் அவர்களோ நேருவைவிட ஒரு பக்தி மானைக் காண்பதரிது என்று எழுதினார்.
அகில இந்திய வானொலியோ ‘நேரு தினமும் பஜனை செய்வார் என்றும், தனக்கு மனநிம்மதி இல்லாத போதெல்லாம் பஜனையில் ஈடுபடுவார்' என்றும் ஒலி பரப்புச் செய்தது.
இதை வானொலியில் கேட்ட ‘பிளிட்ஸ்’ ஏடு தனது நிருபரை அனுப்பி, நேருவின் பேரர்களான ராஜிவ், சஞ்சய் ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, அவர்கள் அதை வன்மையாக மறுத்து இருக்கிறார்கள்.
‘‘எங்கள் தாத்தாவுக்கு கடவுள், மதம் என்றால் அறவே பிடிக்காது என்று பதில் கூறி இருக்கிறார்கள்.’’
தங்கள் முகத்தை இப்போது எங்கே கொண்டு போய் வைக்கப்போகிறார்கள் இந்தப் புனைசுருட்டுப் பூசுரர்கள்?
கேவலம் இப்படியும் ஒரு பிழைப்பு நடத்திட வேண்டுமா இந்தக் கேடுகெட்ட மதவாதிகள்?

கடவுள் காப்பாற்றமாட்டார்!
சோமநாதபுரத்தில் இருந்த மிகப்பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளாகப் பக்தர் களால் அளிக்கப்பட்ட செல்வம் குவிந்து கிடந்தது. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார் களாம்.
ஏதாவது அற்புதம் நிகழும், தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பக்தர்களின் கற்பனையாலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது அபூர்வமாகத் தானே இருக்கிறது. ஆகவே அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. முகம்மது கோயிலை இடித்துப் பாழாக்கினான். பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்று நம்பியிருந்த 50,000 பேர் அவனால் கொல்லப் பட்டனர்.
நேரு எழுதிய
உலக வரலாறு


நேருபற்றி... 

இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருது கிறார்கள். முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் தங்கள் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழுவுவது என்று அக்பர் ஒருமுறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக் பருடைய கேள்வி நியாயமானது. ஆனால் அது கிறிஸ்தவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை. தங்கள் குறிப்பேட்டில்,
“எல்லா நாத்திகர்களுக்குரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது நாத்திகர் தங்கள் பகுத்தறிவை மதநம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள். ஒரு நாத்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாத்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.
- ஜவகர்லால் நேரு (உலக சரித்திரம் - பக்கம் 157)
காந்தியார் புகுத்திய குழப்பம்!
ஒத்துழையாமை இயக்கத்தில் காந்தியார் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறை யில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.
நமது அரசியலில் இந்த மதம் புகுந்து வளர்வது கண்டு எனக்குக் கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்குப் பிடிக்கவே இல்லை. மவுல்விகளும், மவுலானாக் களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதியை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம். பொருளாதாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மை களைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.
- ஜவகர்லால் நேரு (உலக சரித்திரம் - பக்கம் 139)

-விடுதலை,19.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக