சனி, 7 ஜனவரி, 2017

ஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை
‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வை
ஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம்
புத்தர் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அமராவதியில் ஆந்திர மாநில தலைநகர் உருவாகி வருகிறது. அதற்கு முன்பே பிரம்மாண்டமான 130 அடி உயரமுள்ள புத்தர் சிலை கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைக்கப் பட்டு அந்த வளாகம் புத்தர் பற்றிய செய்திகளை விளக்கும் கூடமாக விளங்கி வருகிறது.
திருச்சி - சிறுகனூரில் அமைக்கப்பட வுள்ள ‘பெரியார் உலகம்’ பற்றிய அமைப்புக்காக உதவிடும் குறிப்புகள் மற்றும் அவை தொடர் பான பணிகள் பற்றி அறிந்து ஆய்ந்திட திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் தலைமையில், குழுவினர் விஜய வாடா - அமராவதிக்கு 4.1.2017 அன்று சென்றிருந்தனர். குழுவில் பொறியாளர் மற்றும் கட்டட கலை நிபுணர் முனைவர் சுந்தரராசுலு அங்கம் வகித்தார்.
புத்தர் சிலை மற்றும் வளாகத்
தினை பார்வையிட்டு அவை பற்றிய
செய்திகளை,  சிலை அமைப்பதற்கு அங்கிருந்த ஆய் வாளர்கள் எடுத்திட்ட முயற்சிகள் பற்றியும் அறிந்து வந்தனர்.
புத்தர் சிலை அமைப்பின் பொறுப் பாளராக, தனிப்பட்ட முயற்சி மேற் கொண்ட ஆந்திர மாநில சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் மல்லிகார்ஜூன் அவர்கள், பொதுச் செயலாளர் மற்றும் குழுவினருக்கு சிலை அமைப்பு தொடக்கம் முதல் நிறைவு வரை  அவரால் எடுத்திட்ட முயற்சிகள் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார்.
‘பெரியார் உலகம்’ அமைத்திடுவதில் தமக்கும் ஆர்வம் உள்ளதைத் தெரிவித்த அவர் ‘பெரியார் உலகம்’ நிறுவிடும் பணியில் தொழில் நுட்ப அடிப்படையில் ஆலோசனை வழங்கிட அணியமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் உறுதியளித்தார்.
அமராவதி சென்ற ‘பெரியார் உலகம்’ நிறுவிடும் ஆயத்தக் குழு வினை, சமூகநீதி அமைப்பின் தேசியத் தலைவர் சங்கர்ராவ் மற்றும் வழக் குரைஞர் ராமகோடீஸ்வர ராவ் வர வேற்று ஆவன உதவி அளித்தனர்.
மேலும் இந்திய நாத்திக சங்கத்தின் துணை அமைப்பான மாணவர் அறி வியல் மன்றத்தின் தலைவர் நரேஷ் பைரி மற்றும் அவரது அமைப்பினர் விஜயவாடாவில் குழுவினரை வர வேற்று பணிமுடித்துக் கிளம்பும் வரை உதவிகரமாக உடனிருந்தனர்.
அமராவதியில் அமையப்பெற்ற புத்தர் சிலை அமைப்பில் கிடைத்த பட்டறிவினை அறிந்து ‘பெரியார் உல கம்’ பல மடங்கு சிறப்புடன் அமைத்திடும் எண்ணம் மேலோங்கிடும் வகையில் அரிய ஆலோசனைகள் மற்றும் நேரடி செய்திகளுடன் குழு வினர் சென்னை திரும்பினர்.
இந்த பயணத்தில் கிடைத்த ஒரு மணிநேரத்தில் விஜயவாடாவில் அமைந்துள்ள அரசு சமூகநலத்துறை பெண்கள் இல்லப் பள்ளிகளில் சுமார் 500 மாணவியர்களிடையே உரையாடி பெரியார் பற்றி கூறி அவர்களுக்கு மன எழுச்சியை ஊட்டி வரும் பெரியார் வினா - விடைப் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து விட்டு வந்தார்கள்.
-விடுதலை,7.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக