வியாழன், 14 மார்ச், 2024

பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு

 



தந்தை பெரியாரின் பகுத்தறிவு  பெண்ணுரிமை குறித்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை

பெங்களூரு, மார்ச் 8- தேசிய அறிவியல் நாளையொட்டி கடந்த பிப்ரவரி 28 அன்று கருநாடகத் தலைநகர் பெங்களூரில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பும், நெகிலா யோகி டிரஸ்டின் மானவ பந்துத்வா வேதிகே மற்றும் அகில கருநாடக விசார வாதிகளா டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு நாள் மாநாடு ஒன்றை நடத்தின.
பெங்களூரு குமார பூங்கா கிழக்கிலுள்ள காந்தி பவன் மகாதேவ தேசாய் அரங்கில் காலை 10 மணியளவில் மாநாடு தொடங் கியது. புகழ்பெற்ற எழுத்தாளரும், கருநாடகா சாஹித்ய அகாடமியின் தலைவராக இருந் தவருமான அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித் துறை அமைச்சர் சத்தீஷ் ககோலி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட் டமைப்புத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், நெகிலா யோகி டிரஸ்ட் தலைவர் பேராசிரியர் ஹெ.ஆர்.சுவாமி, பகுத்தறி வாளர் சங்கத் தலைவர் நடேகர் உள்ளிட்ட பெருமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, ஜவகர் லால் நேரு ஆகியோரின் படங்கள் அடங்கிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை முதலே பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத் தாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
காலையில் நடந்த தொடக்க விழாவுக்குப் பிறகு, மதிய உணவு அனைவருக்கும் வழங் கப்பட்டது. காலை முதலே நிகழ்ச்சிகளின் இடையில் புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளையும், ஒடுக்கப்பட்டோர் உரிமை களையும் முன்னிறுத்தும் பாடல்களை வெவ் வேறு குழுவினரும் தொடர்ந்து இசைத்தனர்.

மதியம் முதல் அமர்வாக தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும், பெண்ணுரிமையும் என்ற தலைப்பிலான இரண்டாம் அமர்வு தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை நிகழ்த்தினார்.
45 நிமிடங்கள் உரையும், அதனைத் தொடர்ந்து கேள்வி-பதிலுமாக அந்த அமர்வு நடந்தது. இயல்பாக குழந்தைப் பருவம் முதலே எழுந்த பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை, அவரது கேள்வி கேட்கும் மனப் பான்மை, அதையே ஓர் இயக்கமாக அவர் மாற்றிய பாங்கு ஆகியன குறித்து எடுத்து ரைத்தார். பெரியாரின் பெண்ணியம் எப்படி தனித்தன்மையானது என்பதையும், அதைத் தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கி, எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதை யும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில் அமைந்த உரைக்கு, கன்னட மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்த விவரக் குறிப்புகளின் திரையிடல் அவர்கள் புரிந்து கொள்ளவும் எளிமையாக அமைந் தது. இந்த அமர்வை வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஒருங்கிணைத்தார். அமர்வுக்கு, பகுத்தறிவுச் சிந்தனையாளரும், மறைந்த எழுத்தாளருமான பெரியார் பெருந் தொண் டர் வேமண்ணா அவர்களின் மகன் பாவேந் தன் தலைமை ஏற்றார். கேள்வி-பதில் பகுதி யில் தந்தை பெரியார் குறித்தும், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கு ச. பிரின்சு என்னா ரெசு பெரியார் பதிலளித்தார்.

உரைக்குப் பின்னரும் பல்வேறு அமைப் பினரும், தோழர்களும் பேரார்வத்துடன் வந்து தந்தை பெரியார் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள விழைந்தனர். அடுத்தடுத்த அமர்வுகளில் சாவித்திரி பாய் பூலே பற்றி மகாராட்டிர அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதியின் டாக்டர் சவிதா ஷேத், ஜவகர்லால் நேரு பற்றி ஆய்வாளர் டாக்டர் பிரதீப் மால்குடி ஆகியோரும், நவீன மருத்துவ வளர்ச்சி – பகுத்தறிவுப் பார்வையில் என்ற தலைப்பில் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.




 நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.

வெள்ளி, 8 மார்ச், 2024

கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் – வீர வணக்கம்




Published March 7, 2024, விடுதலை நாளேடு

கேரள மாநிலத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வரும் கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான யு.கலாநாதன் (வயது 84) மலப்புரம் மாவட் டம் வல்லிக் குன்னத்தில் நேற்று (6.3.2024) இரவு மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல மாநாடு களிலும், கூட்டங்களிலும் பங்கேற்றவர். எம்முடனும், பெரியார் இயக்கத் தோழர்களுடனும் அன்புடன் பழகியவர். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற் றியவராவார். கேரள யுக்திவாதி சங்க மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களையும் என்னையும் அழைத்து பங்கேற்கச் செய்தவர்.

அரசியலிலிருந்து மதத்தை முழுமையாகப் பிரித்திட வேண்டும் என்பதை கொள்கைப் பிரச் சாரமாக, இயக்கமாகக் கட்டியமைக்கப் பாடுபட்டவர். இதுகுறித்து டில்லியில் – ஜந்தர் மந்தரில் அவர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
வயது முதுமை சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக, சில ஆண்டுகளாக வெளியூர் பயணத்தைத் தவிர்த்து வந்த நிலையிலும், இறுதி வரை பகுத்தறிவாளராக, மனிதநேயக் கொள்கைக் காகவே வாழ்ந்த பெருமகனார் ஆவார். கலாநாதன் அவர்களின் மறைவு இந்திய பகுத்தறிவாளர் இயக்கத்திற்கு பேரிழப்பு.
கலாநாதன் அவர்களை, மனைவி திருமதி ஷோபனா, மகன் சமீர் ஆகியோர் இறுதிவரை கவனித்து வந்தனர். உடலை மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பது பாராட்டத்தகுந்தது.
மறைவுற்ற யு.கலாநாதன் அவர்களுக்கு பகுத் தறிவாளர் கழகம் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரது மறைவிற்கு குடும்பத்தாருக்கும், கேரள யுக்திவாதி சங்கத்தாருக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.

வாழ்க பகுத்தறிவாளர் கலாநாதன்!
வளர்க அவர் தொடர்ந்த பணிகள்!

கி.வீரமணி
புரவலர்,
பகுத்தறிவாளர் கழகம்

சென்னை
7.3.2024 

குறிப்பு: மறைவுற்ற கலாநாதனின் உடல் இன்று (7.3.2024) பிற்பகல் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது விருப்பப்படி கொடையாக வழங்கப்பட உள்ளது.

‘ஸநாதன’க் கல்விக் கொள்கையை ஒழிப்போம்! மேற்கு வங்கம் – கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் எழுச்சிப் பேரணியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எழுச்சியுரை




 ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் கியாரண்டி என்ன ஆயிற்று?

நாங்கள் ஆர்.எஸ்.எஸ்., மோடி குடும்பம் அல்ல; சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம்!

கொல்கத்தா,மார்ச் 8- இந்தியாவின் முதன்மையான
15 மாணவர் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) சார்பில் கொல்கத்தா பேரணியும், பொதுக்கூட்டமும் 06.03.2024 புதன்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது.
கொல்கத்தாவைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் காலை முதலே திரளத் தொடங்கினர். மேற்கு வங்காளத்தில் எஸ்.எப்.அய், ஏ.அய்.எஸ்.எப், பி.எஸ்.யூ ஆகிய அமைப்புகள் இப் பேரணியை ஒருங்கிணைத்தன.
தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், வழக்குரைஞர் முகமது அஃப்ரிடி ஆகியோரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாணவர் அணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் பூவை ஜெரால்டு, உசிலம்பட்டி வழக்குரைஞர் மகிழன் ஆகியோரும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியச் செயலாலர் சீ.தினேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஹவுரா நிலையம் மற்றும் சேல்தா நிலையம் ஆகிய இருவேறு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் பேரணி புறப்பட்டு, கொல்கத்தாவின் வெகு மக்கள் கூடும் பகுதிகளில் ஒன்றான கல்லூரித் தெருவில் ஒன்று சேர்ந்தது. அந்தத் தெருவில் தான் கொல்கத்தா பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, ஹேர் பள்ளி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. சேல்தா மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியில் கழகக் கொடி ஏந்தி வந்த திராவிட மாணவர் கழகத் தோழர்கள் ஆங்கிலத்தில் பதாகையை ஏந்தி, முழக்கம் எழுப்பியபடி பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் தேசியப் பொதுச் செயலாளர் மாயுக் பிஸ்வாஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாணவர் அணிச் செயலாளர் பிரியங்கா, பி.எஸ்.யூ செயலாலர் நவ்ஃபல் சஃபியுல்லா, ஜே.என்.யூ மாணவர் தீப்ஷிதா, இந்திய மாணவர் சங்க மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தேபான்ஞ்சன் தே, தலைவர் பிரனாய் காஜி, மற்றும் பிகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியக் கல்விக் கொள்கை, பாஜகவை எதிர்த்தும், கல்வி உரிமைக்காகவும் இந்தியிலும், வங்காளத்திலும் முழக்கங் களை எழுப்பினர்.
பேரணியின் முடிவில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர் தலைவர்களின் உரைவீச்சு தொடங்கியது.

கழகத் துணைப் பொதுச் செயலாளர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரின் உரை வருமாறு:
“சமூகநீதி மண்ணாம், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் மண்ணிலிருந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கிறோம். சிறப் பான இந்த மாணவர் பேரணிக்கு எங்கள் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள். நமக்குத் தெரியும் இதே நகரத்தின் இன்னொரு மூலையில் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும், தெருக்களிலும் “மோடி கா கியாரண்டி” என்ற விளம்பர வாசகங்களைப் பார்க்கிறோம். மோடி அவர்களே, நீங்கள் இதுவரை வழங்கிய உத்தரவாதங்கள் எங்கே போயின என்று கேட்கிறோம்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி என்ன ஆயிற்று?
பாஜகவின் நச்சு விதைகள் முளைக்காத மண்ணில், சில கழிவுகளை இட்டாவது உரமாக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாஜக சார்பில் யார் யாரையோ களம் இறக்குகிறார்கள். ஊடகங்களால் ஒருவர் திடீரென புனிதப் பசு ஆக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு ஊரிலும் இதே நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
நேர்மையானவராக, கறாரானவராக ஒருவர் ஊடகங் களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுவார். அரசியல்வாதி களைத் தாண்டி புனிதப்படுத்தப்படுவார். எங்கள் ஊரில் சிங்கம் என்று சொல்லி ஓர் ஆட்டை எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். ஆனால், ஆடு என்றாலே எங்க ளுக்குப் பிரியாணி மட்டும் தான் நினைவுக்கு வரும்.

இங்கே புனிதப் பசுவாக ஒருவரை (மேனாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய) கடந்த சில காலமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் சொல்லியிருக்கிறார் – அரசு அதிகாரிகள் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. நேற்று நீதிபதியாக இருந்தவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த கையோடு பா.ஜ.க.வுடன் இணையப் போகிறார். இதற்கு முன் அவர் வழங்கிய தீர்ப்புகளை எப்படிப் பார்ப்பது?
எப்போதும் எச்சரிக்கையாக இருப்போம். வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தனைச் சர்வாதி காரமும் ஜனநாயகத்தின் வழியில் வந்ததை நாம் பார்த் திருக்கிறோம்.
எங்கள் மீது நீட்டைத் திணித்தீர்கள்; பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தீர்கள். எங்கள் பிள்ளைகளை நீட்டின் பெயரால் சாகடித்தீர்கள். நாங்கள் அனிதாவை இழந்தோம். பிறகு அதே வீராங் கனையின் படத்தைச் சுமந்து நீட்டுக்கு எதிராகப் போராடு கிறோம். நிச்சயம் நீட்டை நீக்குவோம். எங்கள் மீது நீங்கள் திணித்த தேசிய கல்விக் கொள்கை என்பது மனுவாதக் கல்விக் கொள்கை. இதைத் தான் எங்கள் மீது ராஜாஜி திணித்தார். அவரைத் தமிழ்நாடு தூக்கி எறிந்தது.

நாங்கள் ஸநாதனம் பேசும் மோடியின் குடும்பம் அல்ல – சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம், பெரியாரின் குடும்பம், அம்பேத்கரின் குடும்பம், பகத் சிங், ஜோதிராவ் பூலே, கன்சிராமின் குடும்பம். ஜனநாயகத்தின் குடும்பம். போராடுவோம். வெற்றிபெறுவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக் கூட்டத்தில் இந்திய மாணவர் அய்க்கியத்தின் சார்பில் கல்விக்கான கொள்கை அறிக்கை (Education Manifesto) வெளியிடப்பட்டது. தேசியக் கல்விக் கொள்கையை ஒழிப்போம் என்று, அனைத்து மாணவர் பிரதிகளும் கைகோத்து உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளுக்கும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோரின் ஆங்கிலப் புத்தகங்களையும், கழக வெளியீடுகளையும் வழங்கினார். தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழை முகமது அப்ரிடி வழங்கினார். கழகக் கொடிகள் பேரணிச் சாலையில் கட்டப்பட்டிருந்ததுடன், கழகத்தின் சார்பில் முழக்கங்கள் வண்ணச் சுவரொட்டிகளாக கொல்கத்தா வீதிகளில் ஒட்டப்பட்டன.

திராவிட மாணவர் கழகத்தினருக்கு வரவேற்பு
முன்னதாக கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் சென்றடைந்த திராவிட மாணவர் கழகப் பிரதிநிதிகளை எஸ்.எப்.அய் கொல்கத்தா மாநகரப் பொறுப்பாளர் வழக்குரைஞர் ரிதங்கர், சாம்ராட் தத்தா, ஹுவஜித் சர்க்கார், உள்ளிட்ட தோழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேற்குவங்க யூனியன் வங்கி பிற்படுத்தப்படோர் நலச் சங்கப் பொறுப்பாளர்கள் பிரகாஷ் மஜூம்தார், நவ்ஷத் அலி அன்சாரி, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத் துணைத் தலைவர் அசோக் சர்க்கார் உள்ளிட்டோர் பேரணி நடந்த இடத்துக்கு வந்து நமது தோழர்களை வாழ்த்தியும், பேரணியில் பங்கேற்றும் சிறப்பித்தனர்.

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு




Published February 27, 2024, விடுதலை நாளேடு

முதன்முதலாக விசாகப்பட்டினக் கடற்கரை அருகில்
தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர்
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால்!

ஆந்திர மாநிலம் – விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு – நினைவேந்தலில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் புகழாரம்!

விசாகப்பட்டினம், பிப்.27 முதன்முதலாக விசாகப் பட்டினக் கடற்கரை அருகில் தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால். தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றி காண்பதில் மட்டுமல்ல, அதையும் கடந்து தன் அமைப்பிற்கும் மேலாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நல்லுறவோடு சமூகப் பணியாற்றுவதிலும் சிறந்து விளங்கியவர் ஜெயகோபால் என்று அவருக்குப் புகழாரம் சூட்டி நினைவேந்தல் உரையாற்றினார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள்.
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் 7.2.2024 அன்று உடல்நலக் குறைவால் விசாகப்பட்டினத்தில் காலமானார். அவரது நினை வேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் 25.2.2024 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

விசாகப்பட்டினம் – தாபா தோட்டப் பகுதியில் உள்ள அல்லூரி சீதாராமராஜூ விஞ்ஞான கேந்திரம் அரங்கில் காலையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங் கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

டாக்டர் ஜெயகோபால் மறைவினையொட்டி இரங்கல் செய்தியினை அவரது குடும்பத்தாருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அனுப்பி யிருந்தார். ஜெயகோபால் அவர்களது மகன் ஜெ.ரவி அவர்களுடன் கைப்பேசி மூலம் பேசி ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு நிகழ்ச்சியின் தொடக்கமாக வருகை தந்த தலைவர் கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் டாக்டர் ஜெயகோபால் படம் திறக்கப்பட்டது. அவரது நினை வைப் போற்றிடும் வகையில் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழர் தலைவரின் உரை திரையிடல்

படத்திறப்பு நாளன்று தமிழர் தலைவர், முன்னரே ஒத்துக்கொண்ட நிகழ்வு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை. இருப்பினும் டாக்டர் ஜெயகோபால் அவர்களின் சமுதாயப் பணி குறித்தும், நாத்திகக் கொள்கைக்கு அவர் ஆற்றிய அரும்பணி, மற்றும் பெரியாரின் கொள்கைகள் பற்றியும், பெரியார் நிறுவிய இயக்கத்துடனான தொடர்பு பற்றியும் விரிவாகப் பேசி, ஒளி-ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தமிழர் தலைவரின் உரை நினைவேந்தல் நாளன்று வருகை தந்தோர் கவனத்திற்கு திரையிடப்பட்டது. தமிழர் தலைவரது உரை மிகவும் உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. தலைவரது உரை அச்சு வடிவிலும் வருகை தந்தோருக்கு வழங்கப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் உரை

நிகழ்வில் பங்கேற்ற திராவிடர் கழகப் பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் ஆற்றிய நினைவேந்தல் உரை யின் சுருக்கம் பின்வருமாறு:
இந்திய நாத்திகர் குழுவைச் சேர்ந்த தோழர்களே, டாக்டர் ஜெயகோபால் அவர்களின் மகன் தோழர் ரவி அவர்களே, தொண்டறத் திலகமாய் விளங்கிய ஜெய கோபால் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்ப உறுப்பினர்களே, மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரவணக்கம் செலுத்த வருகை புரிந்துள்ள நண்பர்களே, நலவிரும்பிகளே –

அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

ஆந்திர மாநிலத்து இளைஞர்கள் பலரை ஒருங் கிணைத்து முன்னேற்றப் பாதையில், அமைதி வழியில் செல்ல வழிகாட்டியவர் ஜெயகோபால் அவர்கள். நாத்திகர்களாக அவர்களை உருவாக்கி பகுத்தறிவா ளர்களாகவும் மாற்றிய தொண்டறம் மிக்கத் தலைவராக வாழ்ந்தவர் ஜெயகோபால். இளைய தலைமுறையின ரின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு தளம் அமைத்த புகழ்பெற்ற நாத்திகராகவும், மனித நேயராகவும் போற்றப்பட்டவர் அவர். அவருக்கு வீர வணக்கம் செலுத்தவே நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்று கூடியுள்ளோம்.
மறைந்த ஜெயகோபால் அவர்கள், இளைஞர்களி டையே மனமாற்றத்தை ஏற்படுத்துவதோடு நின்று விடவில்லை. கேள்வி கேட்கும் மனப்பான்மையையும், எதையும் விமர்சிக்கும் ஆற்றலையும், துணிவையும் அவர் கூடவே வளர்த்துள்ளார். தன் கொள்கைகளை நாடெங்கும் பரப்பி அரிய களப்பணிகளை ஆற்றவும் அவர் இளைஞர்களைத் தயார்படுத்தியுள்ளார். அவரு டைய வியக்கத்தகு பணிகளால் விழிப்புணர்வு அடைந்த இளைஞர்கள் ஏராளம்! கைதேர்ந்த சிற்பியைப் போல் அவர்களைச் செதுக்கி வடிவமைத்து வளர்ச்சியடையச் செய்தவர் ஜெயகோபால். பொது வாழ்வில் இது எத்தகைய கடினமான பணி என்பதை நாம் அறிவோம். தான் மேற்கொண்ட இலட்சியப் பணியில் ஒருநாளும் சோர்வடைந்ததில்லை அவர். இலக்கை நோக்கி இடையறாது பயணம் மேற்கொண் டார். அவர் காட்டிய பாதையில் சென்று முன்னேறிய பல இளைஞர்கள் இன்று பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர். நாட்டின் பல மாநிலங்களில் நாத்திகர் அமைப்புகளையும் ஜெயகோபாலின் தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தவர் அவர். இருவருமே ஒத்தச் சிந்தனையாளர்களாக பழகிவந்தவர்கள். திராவிடர் கழகத் தலைவரின் நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்தவர் அவர். நிகரற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் உருவாக்கிய பகுத்தறிவாளர், மனித நேயர் இயக்கம் எங்கள் திராவிடர் கழகம். இளம் வயதிலேயே இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் ஜெயகோபால். இயக்கத்தின் கருஞ்சட்டைப் படையினர் அவர்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருந்தனர். அந்தத் தாக்கத்தால் அவரால் உருவாக்கப்பட்ட அமைப்பே Atheist Society of India என்ற அமைப்பு – நாத்திகத் தோழர்களின் கூட்டமைப்பு. கருப்புச்சட்டை இந்த அமைப்பைச் சார்ந்த தோழர்களின் தனிப்பட்ட அடையாளமாகவே மாறிவிட்டது.

தந்தை பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற் றியே திரு.ஜெயகோபால் இந்த Atheist Society of India (ASI) அமைப்பின் பணிகளைத் திட்டமிட்டுச் செய லாற்றி வந்தார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செய லகமாக உள்ள பெரியார் திடலுக்கு பலமுறை அவர் வருகை தந்துள்ளார். பல பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். திராவிடர் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்துக் கொண் டுள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் ஜெயகோபால் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருந்தார். ஜெயகோபால் அவர்களின் அழைப்பின் பேரில் அவர் விசாகப்பட்டினத்திற்கு வந்து, தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று, தலைமை தாங்கி விழாவுக்குச் சிறப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் சிலையை விசாகப்பட்டினக் கடற்கரை அருகில் அமைக்க அரும்பாடுபட்டு அதற்கென அரும்பணியாற்றியவர் ஜெயகோபால். அப்போது ஒன்றுபட்ட மாநிலமாக விளங்கி வந்தது ஆந்திரா. முதன்முதலாக அங்கு தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் ஜெயகோபால். தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றி காண்பதில் மட்டுமல்ல, அதையும் கடந்து தன் அமைப்பிற்கும் மேலாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நல்லுறவோடு சமூகப் பணியாற்றுவதிலும் சிறந்து விளங்கியவர் ஜெயகோபால். ஒத்த சிந்தனையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் நல்லிணக்கம் கொண்டவராக அவர் இருந்தார். பல மாநிலங்களில் இயங்கும் மனிதநேய, தொண்டறப் பணி இயக்கங் களுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந் துள்ளது.

திராவிடர் கழகத்தைச் சார்ந்த நாங்கள் அவரை எங்கள் பெரியார் திடலுக்கு அழைத்து வரச்செய்து சிறப்பான முறையில் கவுரவிக்க எண்ணியிருந்தோம். உடல் நலிவுற்ற நிலையில் ஜெயகோபால் அவர்கள் இருந்ததால், அது இயலாமல் போயிற்று. தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தமது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், ‘பெரியார் விருது’ அளித்து எங்கள் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றிக் கொள் வோம். விரைவில் அதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு, சென்னையில் சிறந்த முறையில் அந்த விழா நடைபெறும் என்று உறுதியளிக்கிறேன்.

அடிப்படையில் நாம் அனைவரும் பகுத்தறிவாளர் கள்தான். உடலால் ஏற்படும் மறைவு நம் எல்லோருக் குமே துயரமான இழப்புதான். இயற்கையால் நாம் எல்லோருமே என்றேனும் ஒருநாள் காலமாகும் நாள் வரப்போவதும் நிச்சயமே. ஆனால் ஜெயகோபாலின் மறைவு மற்ற சாதாரண மனிதர்களின் மறைவுக்கு இணையானதா என்ன! வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கைப் பற்றுடன் வாழ்ந்தவரின் மறைவல்லவா அது! இனிவரும் உலகத் தலைமுறையினருக்கு பாதை அமைத்து விட்டல்லவா மறைந்திருக்கிறார்
அவர்! எனவே தனது தோழர்கள் மத்தியில், தொண் டர்கள் மத்தியில் அவர் மறைந்தும் வாழ்வார் என்பது உறுதி. ஒரு கொள்கை வீரராக நம்மிடையே அவர் காலத்தால் அழியாமல் வாழ்ந்துகொண்டேதான் இருப் பார். நம்மால் அவருக்கு இந்த உறுதியின் மூலமாகத் தான் வீரவணக்கம் செலுத்த முடியும். அதை மன நிறைவோடு இன்று இங்கே செய்வோம். நண்பர்களே! இந்த நாட்டின் ஈடு இணையற்ற பல நாத்திகத் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய ஜெயகோபாலின் புகழ் ஓங்கட்டும்.
வாழ்க அவரது தொண்டறம்!
வாழ்க மனிதநேயம்!
அனைவருக்கும் நன்றி!

– இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தமதுரையில் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளரின் ஆங்கில உரை தெலுங்கில் மொழிபெயர்த்து சொல்லப்பட்டது.

நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்

நிகழ்வில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்களின் விவரம் வருமாறு:
ஜே.வி.வி. சத்தியநாராயணமூர்த்தி – இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில உதவிச் செயலாளர், எம்.வி.எஸ். சர்மா – இந்திய மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த மேனாள் எம்.எல்.சி., வி.வி. ரமணமூர்த்தி – ‘லீடர்’ நாளிதழின் ஆசிரியர், சத்தியநாராயணா – ‘மனபூமி’ தெலுங்கு நாளேட்டின் ஆசிரியர், பல்டேட்டி பென்டாராவ் – தலித் சேனா, டி.லதா – சைதன்ய மகிளா சங்கம், கே.பத்மா – மகிளா சேத்னா, கண்ட மோகன்ராவ் – வழக்குரைஞர், சரத் – மனித உரிமைக் கழகம், சைனி நரேந்திரர் – தலைவர், அனைத்திந்திய ஓபிசி கூட்டு நடவடிக்கைக்குழு, ஜெ.ரவி அஜய், ஆர்.எஸ்.வி. முரளி – இந்திய நாத்திகர் சங்கம் மற்றும் பலர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர், ஆந்திரா நாத்திகர் இயக்கத்தின் முன்னோடி டாக்டர் ஜெய கோபால் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு அவருக்கு உரிய போற்றுதலையும், பெருமையையும் பறைசாட்டிடும் வகையில் வெகு சிறப்பாக அமைந்தது.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

பாரத நாத்திக சமாஜ நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!



விடுதலை நாளேடு,
Published February 8, 2024
ஒருங்கிணைந்த ஆந்திராவில் தந்தை பெரி யாரின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க இளமைக் காலம் முதல் அரும்பாடு பட்டவரான தோழர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80) அவர்கள் நேற்று (07.02.2024) மாலை கால மானார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம். மிக்க துயரப் படுகிறோம்.
1972-ஆம் ஆண்டு அவர் நிறுவிய “பாரத நாஸ்திக சமாஜம்” (Atheist Society of India) ஆந்திராவில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைப்  பாகும். அறிவுத் தளத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், வரலாற்றையும் எழுதியுள்ள அதே வேளையில், எளிய மக்களிடம் கொண்டு செல் வதற்கான நடைமுறைகளையும், பிரச்சார முறைகளை யும் திராவிடர் கழகத்தைப் பின்பற்றி அமைத்தவர் – தொடர்ந்து விடுதலையைப் படிப்பவர்.
கருஞ்சட்டை அணியும் ஏராளமான பெரியாரிய லாளர்களை ஆந்திராவில் உருவாக்கிய பெருமை டாக்டர் ஜெயகோபால் அவர்களுக்கு உரியது. ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பிரிவில் ஊழியராகப் பணியாற்றிய காலத்திலும், அதன் பின்னும் பகுத்தறிவையும், பெரியாரியலையும் கடைப்பிடித்துப் பரப்பத் தயங்காதவர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதல் முறையாக தந்தை பெரியார் முழு உருவச் சிலையை விசாகப் பட்டினம் கடற்கரையில் நிறுவி, அதன் திறப்பு விழாவிற்கு நம்மை அழைத்து எழுச்சிகரமாக விழா நடத்தியவர். நம்முடைய ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் ஏற்றுச் செயல்படக் கூடியவர்.
தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவுநாள் உள் ளிட்டவற்றிற்கு ஆந்திராவில் இருந்து பெருமளவில் தோழர்களைத் திரட்டி வந்து பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அந்த அமைப்பின் செயல்பாடுகளுள் ஒன்றாகவே ஆக்கியவர்.
பெரியாரை உலகமயமாக்கும் நமது செயல் பாடுகள் தீவிரமாகிவரும் காலத்தில் அவரது மறைவு நமக்குப் பேரிழப்பே ஆகும். அவரது மறைவுக்கு உலகப் பகுத்தறிவாளர்கள், பெரியாரியலாளர்கள் சார்பிலும், திராவிடர் கழகத்தின் சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் ரவி உள்ளிட்ட அவரது மூன்று மகன்கள், மகள் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், பாரத நாத்திக சமாஜத் தோழர்களுக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
8.2.2024
குறிப்பு: மறைந்த டாக்டர் ஜெயகோபால் அவர் களது விழிகள் கொடையளிக்கப்பட்டுள்ளன. அவரது உடல் இன்று மாலை விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டு, பின்னர் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப் படவுள்ளது.


வெள்ளி, 24 நவம்பர், 2023

புதுச்சேரியில் மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட எழுச்சி!(புதிய பொறுப்பாளர்கள்)


பகுத்தறிவாளர் கழக பல்வேறு அணிகளும் பங்கேற்பு!

தமிழர் தலைவர்  தலைமையேற்று சிறப்புரை

8

புதுச்சேரி, நவ. 24 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் நடை பெற்றது. 

2023 நவம்பர் 19ஆம் தேதி காலை ஆசிரியர் புதுச்சேரி எல்லையில் மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி அன்பரசன், புதுச்சேரி நெ.நடராசன், இராசா, திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பழனி, சிவராசன் ஆகியோரது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப் பட்டார்.

விடுதியிலிருந்து  ஆசிரியர் புறப்பட்டு புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் படிப்பக கட்டடத்தை பார்வை யிட்டு அதனை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத் தினார்.

கலந்துரையாடல் கூட்ட அரங்கில் காலை 7 மணி முதலே தோழர்கள் வருகை புரிய தொடங்கினர். 100 பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வருகை தந்த தோழர்கள் காலை உணவை உண்டனர். தொடந்து 9 மணிக்கு அரங்கில் வருகைப் பதிவு தொடங்கியது. 

காலை 10 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பையர் தெரு, தென்றல் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டங்கள் வருகை பதிவுக்காக ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருவர் அமர்தப்பட்டு அவர்களிடம் மாவட்ட வாரியாக பதிவுத்தாள் வழங்கப்பட்டு வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொருவரும் தமது வருகையை பதிவிட்டதும் அவர்களுக்கு பேட்ஜ் மற்றும் பகுத்தறிவாளர் கழக இலச் சினை பொறிக்கப்பட்ட பேனா வழங்கப்பட்டது. பதிவு செய் தவர்கள் அரங்கத்தில் அமர்ந்தவுடன் கூட்டம் தொடங் கியது.

கூட்டம் நடைபெற்ற வீதி ஆரம்பத்திலிருந்து ஆசிரியர் அவர்களை மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், புதுவை நடராஜன், மற்றும்தோழர்களோடும், துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் அவர்களது தலைமையில் பறை இசை முழங்கிட, பெரிய மேளம் அதிர்ந்திட, மாடாட் டம், மயிலாட்டம் நடத்தியும் அரங்கிற்கு அழைத்துவந்தனர்.

10

காலை 10.15 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பையர் தெரு, தென்றல் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக புரவலர் “தகைசால் தமிழர்” ஆசிரியர் கி.வீரமணி தலைமை ஏற்றார்கள்.

அனைவரையும் வரவேற்று புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ.நடராசன் உரையாற்றினார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட அமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமாக எடுத்துரைத் தனர்.

கோவை சின்னதுரை, கோபி குப்புசாமி, மயிலாடுதுறை செல்லதுரை, விருத்தாசலம் ராஜா, தேனி முருகன், வட சென்னை கோபால், தென்சென்னை மாணிக்கம், இராம நாதபுரம் பேரின்பம், செய்யாறு வெங்கட்ராமன், செஞ்சி திருநாவுக்கரசு, குடந்தை பேரா. சேதுராமன், கிருட்டினகிரி கிருட்டிணன், சேலம் வீரமணி ராஜூ, திருப்பத்தூர் திருப்பதி, சிவகங்கை இராசாங்கம், அரூர் ராசேந்திரன், திண்டிவனம் ஏழுமலை, ஆத்தூர் முருகானந்தம், காஞ்சிபுரம் சிதம்பரநாதன், தூத்துக்குடி பொன்ராஜ், திருவொற் றியூர் ஆசைத்தம்பி, அரியலூர் தங்க.சிவமூர்த்தி, கும்மிடிப் பூண்டி டார்வி, திருவண்ணாமலை வெங்கட்ராமன், புதுக்கோட்டை மலர் மன்னன்,தருமபுரி அண்ணாதுரை, ஆவடி கார்த்திகேயன், தஞ்சாவூர் அழகிரி, சிதம்பரம் நெடுமாறன், திருவாரூர் ஈவேரா, மன்னார்குடி கவுதமன், அறந்தாங்கி அம்பிகாபதி, செங்கல்பட்டு சிவக்குமார், மேட்டூர் அன்புமதி, திருச்சி மலர் மன்னன், காளையார் கோயில் முத்துகுமார் ஆகியோர் தங்களது மாவட்டங்களின் செயல்பாடுகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன், ஊடகப்பிரிவு தலைவர் அழகிரிசாமி,எழுத்தாளர் மன்றம் தலைவர் நேரு, பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.

கடந்த காலங்களில் குறிப்பிடத்தகுந்த வகையில் பகுத்தறிவாளர் கழகத்தில் செயலாற்றியவர்களுக்கு பகுத் தறிவாளர் கழக புரவலர் பயனாடை அணிவித்து சிறப்பித் தார்கள்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்கள் வேண்மாள் நன்னன், வேல்.சோ. நெடுமாறன், இல. மேக நாதன், ஆடிட்டர் இரஞ்சித்குமார், தஞ்சை கோபு.பழனி வேல், பொன்னமராவதி ஆ.சரவணன் ஆகியோரும், மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

தஞ்சாவூர், அரூர், சேலம், கும்பகோணம், புதுச்சேரி, விழுப்புரம், மன்னார்குடி, செங்கல்பட்டு, திருச்சி, ஆவடி  ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கும், காளை யார் கோயில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார்கள்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் படித்தார்.

9

பெரியார் -1000 தேர்வு தொடர்புடைய அறிவிப்பையும், தேர்வு முறையையும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் பவர் பாயிண்ட் மூலம் விளக்கத்தினை அளித்தார்கள்.

ஆசிரியர் வந்தவுடன் திராவிடர் கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தனது உரையை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார். ஆசிரியர் அவர்களது பணி பற்றி உருக்கமாக எடுத்துரைத்தார். 

தொடந்து பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி பதிவு செய்தார். 

அவரைத் தொடர்ந்து திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் உரையாற்றினார். தனது உரையில் பகுத்தறி வாளர் கழகம் ஏன் என்பதையும், THE RATIONALAISTS’ FORUM என்பதன் விளக்கத்தையும் கூறி, ஆசிரியரின் கனவான ‘பெரியார் உலகம்’ பற்றி கூறினார்.

தனது உரையில் மனிதம் பற்றி எடுத்துரைத்தார்.. பகுத்தறிவாளர் கழகம் தொடங்கிய நிகழ்வை தந்தை பெரியார் “மனிதர்கள் கழகம்“ தொடங்கியதாக  நினைவு கூர்ந்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்புகளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

51A [H]  பற்றியும், அதனை பொதுவெளியில் எடுத்து சொல்வதும் நாம் தான் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்.

“எதையும் நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே.. உன் அறிவைப் பயன்படுத்தி அது சரி என்றால் ஏற்றுக்கொள்” இல்லையென்றால் விடு என்று அய்யா என்பதையும், அது தொடர்பாக குடியாத்தம் கல் லூரியில் நடைபெற்ற நிகழ்வையும் குறிப்பிட்டு பேசினார்.

அறிவுச்சுதந்திரம் என்பது பற்றி எடுத்துச்சொன்னார். அதை வளர்ப்பது பகுத்தறிவாளர் கழகம் என்பதையும் எடுத்துக்கூறினார்.

மூடநம்பிக்கையை தோலுரித்துக்காட்டி பேசினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது பற்றி பேசினார்.

‘இனி வரும் உலகம்’ நூலில் உள்ள அய்யாவின்  கருத்துகளை எடுத்துக்காட்டினார்.

பெரியாரின் பெருந்தொண்டு காலத்துக்கும் பயன் தரும்.நேர்மை பற்றி தந்தை பெரியார் கூறியது என்ன என்பதை எடுத்துக்கூறினார்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் நேர்மையான வாழ்க்கை என்பதாகும்.

பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளைப் பற்றி கூறினார். அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத்தில் மகளிர் அதிகமாக சேர்க்கப் பட வேண்டும் என்பதையும் கூறினார்.

பகுத்தறிவாளர் கழக இலச்சினை பற்றி அழகாக எடுத் துக் கூறினார். கேள்விக்குறி என்பதை அழகாக விளக்கிக் கூறினார். சமூக வலைதளங்களைப் பற்றி கூறினார்.

புதிய உற்சாகத்துடன் செயல்படுங்கள்.என்று கூறி முடித்தார்.

இறுதியில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் 46 மாவட்டத்திலிருந்து 250-க்கும் அதிகமான மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.


தீர்மானங்கள் - திட்டங்கள்!

1. அனைத்து மாவட்டங்களிலும் அமைப்புகளை ஏற்படுத்துதல்

2. பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் பகுத்தறி வாளர்களை ஒருங்கிணைத்தல்.

3. பெண்கள் அதிகம் சேர்க்கப்பட வேண்டும்.

4. ஒன்றிய, மாநில அரசுகளில் பணியாற்றும் பகுத்தறி வாளர்களை அடையாளம் காணுதல் - அங்கு பணி யாற்றுவோரில் ஒருவர் கிடைத்தாலும், அவரை அமைப் பாளராக்கி, அவர் மூலம் சம்பந்தப்பட்ட, அலுவலகத் திலிருந்து தோழர்களை பகுத்தறிவாளர் கழகத்திற்கு கொண்டு வருதல்.

5. பெயரளவுக்கு அமைப்புகள் இல்லாமல், அவை செயல்படும் வகையில் மாநிலப் பொறுப்பாளருடன் தொடர்புகள் அறுபடாமல் இருக்க வேண்டும்.

6. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற தலை வர்களின் பிறந்த நாளில் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல்.

7. பள்ளிகளில் “மந்திரமா தந்திரமா” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தல். 

8. மாவட்டந்தோறும், அடுத்து ஒன்றியந் தோறும் அறிவியல் பகுத்தறிவுக் கண்காட்சிகளை நடத்துதல்.

9. மாநில மாவட்ட அமைப்புகளில் உரிய பதிவேடுகள்.

10. மாவட்டங்களில் பகுத்தறிவுக் கருத்தரங்கம் - பயிற்சிப் பட்டறை நடத்துதல்.

11. பகுத்தறிவு ஏடுகளைப் பரப்புதல்

12. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்துதல்

13. மாதம் ஒரு முறை மாவட்டங்களில் பகுத்தறி வாளர்களின் கலந்துரையாடல் கூட்டமும், 3 மாதத்திற்கு ஒருமுறை குடும்ப சந்திப்பு நடத்துவது.

14. அரசியல் பிரச்சினைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளல்.

15. பகுத்தறிவாளருக்கான இலச்சினை (பேட்ஜ்) தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்குதல்.

16. அகில இந்திய பகுத்தறிவாளர் அமைப்பில் (FIRA)  தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பங்கை மேன்மைப் படுத்தி - தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை உறுதி செய்தல் - அத்தகைய நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் பிரதி நிதிகள் பங்கேற்று தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர் செயல் பாடுகளை விளக்குதல்.

17. பெரியார் பன்னாட்டு அமைப்பு வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளில் வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்றல்.

18. பெரியார்-1000 நிகழ்ச்சியில் மாணவர்கள் அதிகம் பேர் பங்கேற்க ஆவன செய்தல்.

19. மூடநம்பிக்கையால் சில பல செயல்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு உரியவர்களை தகுதியானவர் களை அழைத்துச் சென்று, அப்பகுதியில் உள்ள இளை ஞர்கள், மாணவர்களைப் பயன்படுத்தி விளக்கங்களை அளித்தல்.

20. பகுத்தறிவு ஆசிரியர் அணியோடு இணைந்து செயல்படுதல்.

21. கலைநிகழ்ச்சிக் குழு ஒன்றை உருவாக்குதல்.

22. எழுத்தாளர்கள், பேச்சாளர்களை அடையாளம் கண்டு பயன்படுத்தல். ஊடகத் துறையில் பங்கேற்று விவாத அரங்கில் பங்கேற்கப் பயற்சி அளித்தல்.

23. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தல்.

மேற்கண்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத் துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


பகுத்தறிவாளர் கழகம்

THE RATIONALISTS’ FORUM

புரவலர் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

மாநிலத் தலைவர்: இரா. தமிழ்ச்செல்வன்

பொதுச்செயலாளர்கள்: வி.மோகன், 

ஆ.வெங்கடேசன் (தலைமை நிலையம்), 

வா.தமிழ் பிரபாகரன் (ஆசிரியர்கள் பிரிவு) 

மாநில பொருளாளர்: முனைவர் சி. தமிழ்ச்செல்வன்

மாநில துணைத்தலைவர்கள்: கே.டி.சி. குருசாமி, இல.மேகநாதன்,  வேல்.சோ.நெடுமாறன், வேண்மாள் நன்னன், ந.கரிகாலன், பேரா. முனைவர் நா.சுலோச்சனா, பேரா.முனைவர் எஸ்.அருள்செல்வன்.

மாநில துணைப் பொதுச்செயலாளர்கள்: (பயிற்சி வகுப்புகள்) :  

அண்ணா சரவணன், பேரா. மு.சு.கண்மணி, வி.இளவரசி சங்கர்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்: 

முனைவர் வா.நேரு (மாநில தலைவர் )

கோ.ஒளிவண்ணன் (மாநில துணைத்தலைவர்), ம.கவிதா (மாநில துணைத்தலைவர்), 

செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர்)

பகுத்தறிவு ஊடகப் பிரிவு: மா. அழகிரிசாமி (தலைவர்), ஆவடி ரா.முருகேசன் (செயலாளர் ).

பகுத்தறிவு கலைத்துறை: மு.கலைவாணன் (தலைவர்), மாரி. கருணாநிதி (செயலாளர்)


பகுத்தறிவாளர் கழகம்: 

மாநில அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு மாவட்டங்கள்

அ.தா.சண்முகசுந்தரம் - தென்சென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம்

கோவி.கோபால் - திருவொற்றியூர், ஆவடி, வடசென்னை

கு.ரஞ்சித்குமார் - திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம்

இரா.பெரியார் செல்வம் - கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

தங்க.சிவமூர்த்தி - அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி

அ.சண்முகம் - துறையூர், லால்குடி

கோபு.பழனிவேல் - தஞ்சை, கும்பகோணம், திருச்சி

சி.இரமேஷ் - மன்னார்குடி, பட்டுக்கோட்டை

ஆ.சரவணன் - புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம்

ஒ.முத்துக்குமார் - காரைக்குடி, சிவகங்கை, 

இரா.முத்துக்கிருஷ்ணன் - காரைக்கால், நாகப்பட்டினம்

புயல். சு.குமார் - மயிலாடுதுறை, திருவாரூர்

பேரா.சி. மகேந்திரன் - உசிலம்பட்டி, மேலூர், மதுரை

வ.மாரிமுத்து - திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி

ஆலடி எழில்வாணன் - இராஜபாளையம், தென்காசி, விருதுநகர்

இரா.முத்துகணேஷ் - திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி

தரும.வீரமணி - கோவை, பொள்ளாச்சி, நீலமலை, மேட்டுப்பாளையம்

வழக்குரைஞர் ப.இளங்கோ - தாராபுரம், நாமக்கல், கரூர்

அ.குப்புசாமி - ஈரோடு, கோபி, திருப்பூர்

இரா.மாயக்கண்ணன் - சேலம், மேட்டூர், ஆத்தூர் 

ந.அண்ணாதுரை - ஓசூர், கிருட்டினகிரி, தருமபுரி, அரூர்

இர.அன்பரசன் - திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை

காஞ்சி. பா.கதிரவன் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செய்யாறு

சி.நீ.வீரமணி - திருவள்ளூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி

திங்கள், 29 மே, 2023

எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக தொடர் கலந்துரையாடல் கூட்டங்கள்

  

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

17

6.05.2023 அன்று காலை 10:30 மணிக்கு அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம், அரியலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மண்டல கழக செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், அமைப்பாளர் ரெத்தின.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் அனைவரையும் மாவட்ட ப.க. செயலாளர் துரை.சுதாகர் வரவேற்று உரையாற் றினார்.

தொடர்ந்து, மாநில ப.க.துணைத்தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான ‘‘வைக்கம் போராட்ட நூற்றூண்டுவிழா, இயக்க செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும். பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் “பெரியார் பேசுகிறார்” என்ற தலைப்பில் மாதக்கூட்டங்கள் நடத்துவது, திருக் குறள், புரட்சிக்கவிஞர் - பற்றிய இலக்கிய வட்டங்களின் மூலம் மாணவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டி இளம் தலைமுறைகளை பெரியார் வழியில் அடையாளப்படுத்த வேண்டும் என்றும், இயக்க உறுப் பினர்களை ஆண், பெண் பேதமின்றி அதிகரித்து இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் எனவும் உரை யாற்றினார்.

தொடர்ந்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையாற்றியவர்கள்: இர.இராமச்சந்திரன், ஒன்றிய கழகத் தலைவர். சி.சிவக்கொழுந்து, த.சுப்பராயன், இரா.ராசாராம், மு.முத்தமிழ்செல்வன், இராசா.செல்வ குமார், மு.கோபாலகிருஷ்ணன், கே.வெள்ளமுத்து, மு.ஜெயராஜ்.

பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தை எந்த அளவு வலிமையுள்ள அமைப்பாக நாம் உருவாக்குகிறோமோ, அந்த அளவு நம் எதிர்கால தலைமுறைக்கு வலிமையான சுயமரி யாதை, பகுத்தறிவு, இன உணர்வுள்ள அடித்தளத்தை அமைக்கிறோம் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்'' என்றார். 

தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகம், என்பது திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும்  அமைப் பாகும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். பகுத்தறி வாளர் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர்களையும், ஆதர வளிக்கும் தோழர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாட வேண்டும். நம் பணி என்பது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று மட்டுமே இல்லாமல் ,அறிவுப் பூர்வமான சமூகத்தை அமைப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். வாசகர் வட்டம், இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், கருத்தரங்கம் நடத்துதல். நூல் திறனாய்வு செய்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். பெரியார் 1000 வினா - விடைத்தேர்வுகள் மூலம் மாணவர்களிடம் பெரியாரியலை கொண்டு செல்ல வேண்டும்.  சமூக வலைதளங்களின் மூலம் பெரியாரியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலோடு பரப்பிட வேண்டும். பகுத் தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்ப் பதன் மூலம்தான் ஜாதி, மதச்சிந்தனைகளை கட்டு டைக்க முடியும். மூட நம்பிக்கையையும், பெண்ண டிமைத் தனத்தையும் ஒழிக்க முடியும்.  அதற்கு பகுத்தறிவாளர் கழகம் பரவலாக்கப்பட வேண்டும்'' என்று தனது உரையை முடித்து புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார்.

 இறுதியில் தோழர் சா.பகுத்தறிவாளன் நன்றி கூறியபின் கூட்டம் நிறைவடைந்தது.


குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

18

6.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு கும்ப கோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் குடந்தை பெரியார் மாளிகை கூட்ட அரங்கத்தில் மாவட்ட கழக. செயலாளர் முனை வர் பேராசிரியர் சேதுராமன் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

தொடர்ந்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தன்னை தோழர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு, கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றூண்டு விழா” நடத்துதல், உறுப்பினர் சேர்க் கையை அதிகப்படுத்துதல், குடந்தையில் மீண்டும் “பெரியார் பேசுகிறார்” கூட்டத்தை நடத்துதல்'' போன்றவற்றை மய்யப் பொருளாக வைத்து உரை யாற்றினார்,

19

தொடர்ந்து, ஒவ்வொரு தோழர்களும் தங்களை அறிமுக செய்து கொண்டு இயக்கத்தின் செயல் பாடுகள், தாங்கள் ஆற்றியச் செயல்பாடுகள் குறித்தும் தோழர்கள் இராம.புகழ், வி.சி.க.செல்வராஜ், ப.தியாக ராசன், மாவட்டப.க. அமைப்பாளர் சு.திருஞான சம்பந்தம், சேகர், துகிலிதமிழ்மணி, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் க.பவானிசங்கர், மீன்சுருட்டி சேக்கிழார், மேனாள் கழக மாவட்ட செயலாளர் மில்லர். சுவாமிமலை ஞானம், பாபநாசம், ஒன்றிய கழகத் தலைவர் சு.கலியமூர்த்தி, கபிஸ்தலம் ஏ.கைலா சம், மகளிரணி எம்.திரிபுரசுந்தரி, கி.இந்திரா அ.சங்கர், ச.திராவிட ராஜேஷ், வே.குணசேகரன், குடந்தை ஒன்றிய கழகத் தலைவர் ஜில்ராஜ், இளஞ்சேட் ஜென்னி, சோழபுரம் மதியழகன், திருநாகேஸ்வரம் சிவக்குமார், தமிழ்வேந்தன், இரமேஷ், பாபநாசம் சங்கர், கோவி.பெரியார்கண்ணன், கு.ரியாஸ் கி.செல்வ ராசன், முனைவர் பிரபாகரன், என்.காமராசு, குடந்தை மாநகர கழகத் தலைவர் வழக்குரைஞர் இரமேஷ் க.வளர்தமிழ், தே.அகல்யா, மண்டல கழக செயலாளர். க.குருசாமி ஆகியோர் உரையாற்றினர். 

தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றினார். அவர் தமதுரையில், ‘‘கும்பகோணம் எப் போதுமே பல வரலாறுகளை படைத்த ஊர். திராவிட மாணவர் கழகம் தோன்றுவதற்கு அடித்தளமிட்ட ஊர். பல மாநாடுகளை நடத்திய ஊர், இவ்வூர் மத வாதிகளும், மனுதர்மவாதிகளும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த திட்டமிடும் பகுதி. ஆனால், பெரியார் காலம் முதல் நம் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலுடன் என்றும் இது திராவிடமண், சுயமரியாதை, பகுத்தறிவு, இன உணர்வை வளர்க்கும் மண். இங்கு நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்த்தெடுப்போம், எதிர்கால நம் தலைமுறைக்கு பெரியாரியலை பரப்புவோம், வாசகர் வட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்'' என்று கூறிமுடித்தார்.

20
தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றினார். அவரது உரையில், கும்ப கோணம் என்பது, திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத ஊர். குடந்தை கல்லூரியில் நடந்த மாணவர் எழுச்சிதான் திராவிட மாணவர் கழகத்தின் மூலம் பார்ப்பனர்களின் ஜாதி, திமிரை அடக்கியது. நம் இயக்கம். பல வகையில் பிரச்சாரப் பணிகளைச் செய்தாலும், இன்னமும் மகாமக குளத்தின் மூலம் மூடநம்பிக்கைகளைப் பரப்பியும், அரசும் பல கோடிக்கணக்கான தொகைகளை செலவு செய்து அறி வியலுக்குப் புறம்பான கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புகின்றனர்.  அதை நாம் முறியடிக்க வேண்டும்.  எதிர்கால சமூகம் அறிவு வழியில் செல் வதற்கு பெரியார் கருத்துகளை நாம் தொடர்ந்து பிரச் சாரம் செய்து, ஒத்தக்கருத்துள்ள முற்போக்குச் சிந் தனையாளர்களை அடையாளம் கண்டு பகுத்தறி வாளர் கழகத்தை வலிமை பெற செய்வோம். ஆசிரி யர் தமிழர் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செய லாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார். இறுதியில் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.


 பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்


21

7.5.2023 அன்று காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் மெரினா ஓட்டல் அரங்கத்தில் மாவட்ட ப.க. தலைவர் ஆ.இரத் தினசபாபதி தலைமையில், மாவட்ட கழகத் தலைவர் பெ.வீரைய்யன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.காம ராசு, பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

கூட்டத்தின் நோக்கமான வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு களை விரிவுப்படுத்துதல் பற்றி மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தொடக்கவுரையாற்றினார்.  
22

வருகை தந்த தோழர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டும், கூட்டத்தின் பொருள் சார்ந்தும், அமைப்பின் வளர்ச்சிக்கு  அவரவர்கள் நல்ல செயல் திட்டங்களைக் கூறிக் கீழ்க்காணும் தோழர்கள் நகர தலைவர் சிற்பி.சேகர், மதுக்கூர் ஒன்றிய ப.க. தலைவர் நாராயணன், நகர அமைப்பாளர் அ.இரவிக்குமார், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் சு.நடராசன், மாவட்ட ப.க. பொறுப்பாளர் மாணிக்க சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் சி.ரெங்கசாமி, க.சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, ஒன்றிய கழகத் தலைவர் ரெ.வீரமணி, பள்ளத்தூர் சண்முக வேல், சொக்கனாவூர் கு.சிவாஜி, சேது ஒன்றிய தலை வர் சி.செகநாதன், காசாங்காடு திருமேனி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராசு, ஆசிரியர் வீர.முருகேசன், ப.க. அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன், மண்டலக்கோட்டை சரவணன், புல வஞ்சி பெ.அண்ணாதுரை, கருப்பூர் சி.முருகேசன், பேராவூரணி வசி, உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து, திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர். அதிரடி அன்பழகன் உரையாற்றும் போது, ‘‘சுயமரியாதை இயக்கம், பட்டுக்கோட்டையில் பகுத்தறிவாளர் கழக தொடக்கம், மாநாடு, ஊர்வலம், போன்ற செயல்களை செய்திட்ட பட்டுக்கோட்டை சதாசிவத்தின் தொடர் பிரச்சாரத்தால் இப்பகுதியில் உருவானப் பேச்சாளர் களில் நானும் ஒருவன், பட்டுக்கோட்டை சுயமரி யாதைக் கோட்டை பகுத்தறிவுக் கோட்டையாகும்.  

தந்தை பெரியார் காலத்திலிருந்து, அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற பல நூறு இளைஞர்களை உருவாக்கிய இயக்கம்தான். இன்றும் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் காலத்திலும் இப்பகுதி பகுத்தறிவுக் கோட்டையாகத் தான் திகழ்கிறது. 


குறிப்பாக நம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை போன்றவர்களை பகுத்தறி வாளர்களாக உருவாக்கியதும் நம் தொடர் பிரச்சாரம் தான்.  எனவே, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுப் போம்'' என்று பேசினார்.
23

பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில்  தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, நம் அமைப்பை வளர்த்திட தோழர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும் என உரையாற்றினார்.

நிறைவாக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் தமதுரையில், ‘‘அமைப்பை கட்டமைக்க தோழர்களின் சந்திப்பும் - மாதாந்திரக் கூட்டமும் அவசியம்.  மேலும், மாதந்தோறும் “பெரியார் பேசுகிறார்” என்ற தொடர் கூட்டங்கள்மூலம் புதிய தோழர்களை உருவாக்கி பகுத்தறிவாளர்கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ண ஒட்டத்திற்கு செயலாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.  மாவட்ட ப.க அமைப்பாளர் ஆசிரியர் வீர.முருகேசன் நன்றி கூறினார்.

மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

7.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ப.க. தலைவர் வை.கவுதமன் தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் சித்தார்த்தன், மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், மாவட்ட ப.க. செயலாளர் உ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அடுத்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றாண்டு விழா”உறுப்பினர் சேர்க்கை, மாதாந்திர தொடர் கூட்டங்கள் நடத்துவது போன்றவைப்பற்றிக் கூறி இது தொடர்பாகவும், அமைப்பு வளர்ச்சிப் பற்றியும் தோழர்கள் உரையாற்ற வேண்டும் என கூறினார். 

தொடர்ந்து, மாவட்ட ப.க.ஆசிரியரணி செயலாளர் இரா.கோபால், மாவட்ட கழக துணைத் தலைவர் ந.இன்பக்கடல், நகர ப.க. தலைவர் கோவி.அழகிரி, நகர கழக செயலாளர் மு.இராமதாஸ், ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் பு.காமராசு, ஒன்றிய ப.க. செயலாளர் வே.வினோத், மாவட்ட ஆசிரியரணி தலைவர் த.வீரமணி, செ.இராமலிங்கம், ஆசிரியர் ஜெ.அருளரசன், மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், அழகேசன், எம்.பி.குமார்,  சிவா.வணங்காகுடி, மு.சந்திரசேகரன், ந.இந்திரஜித், த.சத்தியமூர்த்தி, அ.குணசேகரன், இரா.வெங்கட்ராமன், மாவட்ட கழக அமைப்பாளர் அன் பழகன், மா.மணிகண்டன், மு.சந்திரபோஸ் ஆகி யோரின் உரைக்குப்பின் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் பேசும்போது, பகுத்தறிவாளர் கழகம் என்பது, திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தள மான அமைப்பாகும்.  நம் படிப்பகத்தில் முன்பு போல் மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற வேண்டும், அதற்கு என் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றிய போது, ‘‘பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களை நாம் அடிக்கடி சந்தித்து கலந்துரையாட வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தந்தை பெரியார், நம் ஆசிரியர் அவர்களின் தொடர் போராட்டத்தால் கிடைத்த பலன்கள். அதை நாம் பாதுகாக்க வேண்டும். பெரியாரின் பணிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். இல்லையென் றால் நம் அடுத்த தலைமுறை மிகப் பெரிய பாதிப்பு களைச் சந்திக்கும்'' என்று எச்சரிக்கை விடுத்து நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்க்கப் பாடுபடுவோம் என்று உரை யாற்றினார். 

முன்னிலை வகித்த மாவட்ட கழக  தலைவர் சித்தார்த்தன், தனது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தோடு, திராவிடர் கழகமும் இணைந்து ஒரு குழு அமைத்து இந்த மாதத்திலிருந்தே, இதே பெரியார் படிப்பகத்தில் “பெரியார் பேசுகிறார்” என்ற நிகழ்வை நடத்துவோம்''  என்று அறிவித்தார்.

நிறைவுரையாக மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றும் போது, ‘‘அனைத்துத் தோழர் களின் உரைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மாவட்ட கழகத் தலைவர் அவர்களின் அறிவிப்பானது மாதாந்திரக் கூட்டம் நடத்துவோம் என்பதை எண்ணி மகிழ்கிறேன். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு களும், செஞ்சி மாநாட்டிற்கு அதிக நன்கொடையும் அளித்த மாவட்ட தோழர்களைப் பாராட்டுவதோடு சிறிய மாவட்டமாக இருந்தாலும், செயல் திட்டத்தில் மிகப்பெரிய மாவட்டம் மன்னை மாவட்டமாகும். நல்ல பொறுப்பாளர்களைப் பெற்றுள்ள தோழர்கள் நீங்கள். உங்களின் செயல்பாடுகளால் பகுத்தறிவாளர் கழகத்தை வலிமையான அமைப்பாக உருவாக்குவோம். நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் சிந்தனைக்கு செயலாக்கம் தருவோம்'' என்று கூறி, புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார். இறுதியில் நகர ப.க. செயலாளர் பேராசிரியர் பு.காமராசு நன்றி கூற கூட்டம் மகிழ்வுடன் நிறைபெற்றது.