இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக குழு கூட்டம் NATIONAL EXECUTIVE MEETING OF FIRA
சென்னை, ஜூலை 3 – இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் [FIRA] தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 30.6.2024 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு ஆதரவுடன் நடைபெற்றது.
முன்னதாக வருகை தந்த தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் அவர்களது தங்கியுள்ள விடுதிகளில் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் .சந்தித்து வரவேற்று காலை உணவளித்து அவர்களை நிகழ்வுக்கு வரவேற்று வந்தார்கள்.
காலை 10.00 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு தக்க்ஷின் கன்னட ரேஷனலிஸ்ட், கருநாடகா அமைப்பை சார்ந்தவரும் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் நரேந்திர நாயக் தலைமை ஏற்றார்..
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக தலைவரும், கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவருமான இரா. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.
மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி அமைப்பை சார்ந்தவரும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான பேராசிரியர். முனைவர் சுடேஷ் பாஸ்கர் கோடேராவ் அவர்கள் கடந்த ஆறு மாதங்களில் கூட்டமைப்பின் செயல்பாடுகளை தொகுத்து உரையாற்றினார்.
கூட்டத்தில், அரியானா தக்க்ஷீல் சொசைட்டி தாரவாடி தலைவர் சதி ஃபபாம் சிங், தக்ஷீல் சொசைட்டி நிதி தலைவர் லூதியானா சதி ஆத்மா சிங், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டமைப்பின் முதல் உறுப்பினர் சு.அறிவுக்கரசு. பேரா. பல்வான்ட் சிங், குருஷேத்ரா இதழ் ஆசிரியர் ஜெயகோபால், நிறுவுனர் பாரத நாஸ்திக சமாஜம் பேரா. முனைவர். முந்த்ரா ஆதிநாராயணா தெலுங்கான ஜன விஞ்ஞான் வேதிகா, யு.கலாநாதன், புரவலர், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர் பாசுரேந்திர பாபு, திருவனந்தபுரம் பத்மசிறீ பிருபாலா ராபா, அஸ்ஸாம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டமைப்பு பதிவு செய்வது பற்றியும் கூட்டமைப்பின் வரைவு ஆவணம் பற்றியும் விவாதம் நடந்தது. விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.
கூட்டமைப்பின் வரவு செலவுகளை பொருளாளர் சார்பில் தலைவர் நரேந்திர நாயக் அவர்கள் படித்திட அனைவரும் ஒப்புதல் வழங்கினார்கள்.
தொடந்து ஒடிசா ஹூமனிஸ்ட் அன்ட் ரேஷனலிஸ்ட் அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஈ.தேஜேஸ்வர் ராவ் வழங்கினார்கள்.
தெலங்கானா ரேஷனலிஸ்ட் ஃபேமிலிஸ் சொசைட்டி அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் வழக்குரைஞர் செலிமேளா ராஜேஷ்வர் வழங்கினார்கள்.
கேரளா யுக்திவாதி சங்கத்தின் அறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் இரிங்கல் கிருஷ்ணன் வழங்கினார்.
அகில் பாரதீய அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் செயலறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஹரீஷ் தேஷ்முக் வழங்கினார்கள்.
ஒடிசா ஹுமனிஸ்ட் அன்ட் ரேஷனலிஸ்ட் அமைப்பின் அறிக்கையை நிர்வாகக்குழு உறுப்பினர் பாசந்தி ஆச்சார்யா வழங்கினார்.
மானவ விகாசா வேதிகா, ஹைதராபாத் அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் செயலாளர் சாம்பசிவராவ் வழங்கியதோடு 2024 செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அய்தராபாத் நகரில் நடக்க இருக்கும் தங்களது அமைப்பின் இருபதாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அனைவருக்கும் கடிதம் கொடுத்து முடித்தார்.
கேரளா, திருவனந்தபுரம் பெரியார் ரேஷனலிஸ்ட் ஃபோரம் சார்பின் லால்சலாம் அவர்கள் தங்களது அமைப்பு ஆற்றிவரும் செயல்பாடுகளை அறிக்கையாக வழங்கினார்.
எத்திஸ்ட் சொசைட்டி ஆப் ஆந்திரபிரதேஷ் அண்ட் தெலுங்கானா அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் செயலாளர் புத்தா முஸ்லி நாயுடு வழங்கினார்.
ஜான் விகாஸ் ஃபவுண்டேஷன் இன்டர்நேஷனல், கார்டி, மகாராட்டிரா அமைப்பின் செயலறிக்கையை மனோஜ் பன்சோட் வழங்கினார்.
அடுத்து பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளரும், கூட்டமைப்பின் செயலாளருமான வி.மோகன் பகுத்தறிவாளர் கழகத்தின் செயலறிக்கையை வழங்கினார்..
இந்நேரத்தில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேனாள் பகுத்தறிவாளர் கழக தலைவரும், திராவிடர் கழக பொருளாளருமான வீ.குமரேசன் அவர்களோடு நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆசிரியர் அவர்களிடம் கூட்டமைப்பின் மாநாட்டை பற்றியும், அதுபற்றிய வழிகாட்டுரையும் வழங்கிட கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கூட்டமைப்பு செயல்பட வேண்டிய விதம், மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்றும் எதனை முன்னிறுத்தி இம்மாநாடு நடைபெற வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற இடம் திருச்சி என்றும், மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், மாநாடு கூட்டமைப்பின் மாநாடாகவும், பன்னாட்டு மாநாடாகவும் இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக்காட்டி உரையாற்றினார்.
‘The Modern Rationalaist’ இதழ் பற்றி எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து 4 பேர் சந்தா வழங்கிட முன்வந்ததை பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசனும், வடசென்னை இராமுவும் சேகரித்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் முனைவர். பேரா. சுடேஷ் பாஸ்கர் கோடேராவ் அவர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அனைவருக்கும் இம்மாத தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழை வழங்கிடச் செய்தார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் வடசென்னை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இராமு இருவரும் அனைவருக்கும் The Modern Rationalist Annual Number book வழங்கினார்கள்.
தலைவர் நரேந்திர நாயக் தனது முடிவுரையில் ஆசிரியர் அவர்களது வழிகாட்டுதல்களை ஏற்று செயல்படுவதாக அனைவரது கையொலிகளுக்கிடையே தெரிவித்தார்.
நேரத்தின் அருமை கருதி அவரே நன்றியும் கூறி நிகழ்வை முடித்தார்.
தொடர்ந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் அவர்களோடு மகிழ்வுடன் அளவளாவினார்கள்.
ஒவ்வொருவரும் ஆசிரியர் அவர்களுடன் தனித்தனியாகவும் குழுவாகவும் புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டார்கள்.
நிகழ்வில், ஒடிஷா முனைவர் பிது பிரவா, கருநாடகா ஸ்ரீனிவாஸ் நடேகர், முனைவர்.ஹெச்.ஆர்.ஸ்வாமி, கேரளாவின் எல்சம்மா, தெரேசியா என் ஜோன், சந்தோஷ் குமார், மகாராஷ்டிரா ஷீலா கோடேராவ், எஸ்.அபிலாஷ், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் மதுரை வா.நேரு, செயலாளர் மீனாட்சி சுந்தரம், பகுத்தறிவு ஊடகத் துறை தலைவர் அழகிரிசாமி, வடசென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.கோபால், சு.துரைராசு, மதுரை அன்புமணி, செந்தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் சுரேஷ், பெரியார் திடல் கலைமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக