பகுத்தறிவு உலகு

புதன், 9 மார்ச், 2022

பகுத்தறிவாளர் கழக பெரியாரியல் பயிற்சி பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை -1



  March 08, 2022 • Viduthalai

தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது; ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதே முக்கியம்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பகுத்தறிவுச் சிந்தனைகள் - அறிவியல்பூர்வமான தந்தை பெரியாருடைய தத்துவங்கள் போராயுதங்கள் - பேராயுதங்கள்!

சென்னை, மார்ச் 8   தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது; ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறவேண் டும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பகுத்தறிவுச் சிந்தனைகள் - அறிவியல்பூர்வமான தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்கள் - போராயுதங்கள் - பேராயுதங்கள் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியாரியல் பயிற்சி வகுப்பு - பரிசளிப்பு விழா

கடந்த 4.2.2022 அன்று பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பகுத்தறிவுப் பயிற்சி பரிசளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தன்மானத்தை, இனமானத்தைப் பெறுகிறார்கள்

பகுத்தறிவாளர்களாக அவர்கள் மாறுகின்ற நேரத் தில், அவர்கள் பெறுகின்ற லாபமோ, வருமானத்தை விட, தன்மானத்தை அவர்கள் பெறுகிறார்கள். தன் மானத்தைவிட சிறப்பு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அதைவிட இன்னும் தாண்டி, அடுத்த கட்டத்திற்கு அவர்கள் மேலும் பக்குவப்படுத்தப்பட்டால், இன மானத்தைப் பெறுகிறார்கள். இனம் என்று சொல்லு கிறபொழுது, அது மானுடம் விரிந்த எல்லை.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

பெரியாருடைய பார்வை உலகப் பார்வை

பெரியாருடைய பார்வை உலகப் பார்வை. தந்தை பெரியார் அவர்கள், மனிதனைப் பார்க் கின்ற நேரத்தில், மனிதம் என்று சொன்னார்கள். மானுடப் பற்று - அதுதான் முக்கியம்.

அண்மையில் பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அமெரிக்காவில் பணியாற்றக் கூடியவர் அவர்.

அந்தப் புத்தகத்தின் தலைப்பு

The Search for Self-Respect - Author - Dr.Maxwell Maltz 

அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அமெரிக்கப் பேராசிரியர், சிந்தனையாளர் - அதிலும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், பிளாஸ்டிக் சர்ஜன் அவர்.

Self-Respect என்ற வார்த்தையை எல்லோ ரும் பயன்படுத்துகிறார்கள். பீகாரில் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் பேரணி நடத்தினார் கள். அந்தப் பேரணிக்குப் பெயர் ‘சுயமரியாதைப் பேரணி' (சுய அபிமான்) என்பதுதான்.

எனவே, சுயமரியாதை என்பது ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்திற்கு, ஒரு குறிப்பிட்ட அமைப்பா ளர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.

சுயமரியாதையை முதலில் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்

உண்மையான மனிதன், சமத்துவத்தையும், சுதந் திரத்தையும், பகுத்தறிவையும் விரும்பக்கூடிய மனி தன் எவராக இருந்தாலும், அவர் மிருகங்களுக்கு அப்பாற்பட்ட ஆறாவது அறிவைப் பெற்றிருக்கிறோம் என்பது உண்மையானால், அவன் தன்னுடைய சுயமரியாதையை முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

'காற் செருப்பை பிறனொருவன்

கழிவிடத்தில் தள்ளினாலும்

பொறாத உள்ளம்!'

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொன்னார்.

ஒரு சாதாரண செய்தி அது. நம்முடைய கால் செருப்பைத் தூக்கி ஒருவர் அலட்சியமாகப் போட்டாலே நமக்குக் கோபம் வரும்.

அப்படிப்பட்ட அந்த உணர்வுகள் என்பன தன்னை மதிக்கவேண்டும் என்பதுதான்.

''நம்மை மதியாரை நாம்  மதிக்கமாட்டேமால்''

சிலப்பதிகாரத்தில் வருகின்ற ஒரு வரி இது.

அது வேறிடத்தில் வருகிறது - ஆனால், அந்த வரிகள் மிக முக்கியமானவையாகும்.

நம்மை மதியாரை நாம் மதிக்கமாட்டேமால் - மதியாரை, நாம் மதிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், மதியாரையும் மதிக்கவேண்டும் - அதுதான் மிகவும் முக்கியம்.

மதிக்கப்படக் கூடாதவர்கள் என்று கருதக் கூடிய வர்கள் யாருமில்லை. எல்லோரும் மதிப்பிற்குரியவர் கள், மதிக்கப்படக் கூடியவர்கள் என்று சொல்வதுதான்  பகுத்தறிவின் பயன்.

பெரியாருடைய தத்துவங்கள் - போராயுதங்கள் - பேராயுதங்கள்!

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான செய்திகளுக்கு நம்மை ஆயத்தப்படுத்தியதும், வாழ்க்கைக்கு நம்மை சரிப்படுத்தி, தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது; ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பகுத்தறிவுச் சிந்தனைகள் - அறிவியல்பூர்வமான தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்கள் - போராயுதங்கள் - பேராயுதங்கள்.

ஆகவே நண்பர்களே அதை மிகத் தெளிவாக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தக்  கொள்கையை கொண்டவர்கள் எல்லோரும் இளைஞர்கள்தான்.

வயது இடைவெளி இல்லாமல் எல்லோருமே இதில் கலந்துகொண்டு வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.

செஞ்சியில் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா!

எனவே, அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்லி, கரோனா  தொற்று காலகட்டம் இல்லை என்றால், நேரிலே உங்களையெல்லாம் சந்தித்து இருப்பேன். நிலைமைகள் சீரான பிறகு, நிச்சய மாக உங்களை யெல்லாம் சந்திப்பேன். குறிப்பாக நிலைமைகள் சரியானால், பகுத்தறிவாளர் கழகத் தினுடைய பொன் விழா நிறைவு விழாவினை செஞ்சியில் நடத்தவிருக் கின்றோம்.

வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டை பகுதியில் நாம் நடத்துவதற்கு அறிவித்திருக்கி றோம்; இன்னும் தேதி முடிவாகவில்லை.

இப்பொழுது பரிசு பெற்ற அனைவரையும் அப் பொழுது அவர்களை அழைத்து நேரில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

அடுத்தபடியாக, மிகச் சிறப்பான வகையில், குறுகிய காலத்தில் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பயிற்சி வகுப்பிற்குப் பதிவு செய்தவர்கள் மொத்தம் 463.

இதில் ஆண்கள் 237 பேர்

பெண்கள் 226

இருபாலர்கள் அல்ல - எப்பாலர்களாக இருந்தாலும் வரவேற்கக்கூடியவர்கள் நாம்!

50 - 50 விழுக்காடு ஏறத்தாழ - இது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இருபாலர்கள் கலந்துகொண்டிருக்கின் றனர். இன்னும் முப்பாலராக இருந்தாலும் வரவேற் போம்; எப்பாலர்களாக இருந்தாலும் நாம் வரவேற்க வேண்டியவர்கள்.

மாணவர்கள் 136 பேர்

ஆசிரியர்கள் 63 பேர்

பேராசிரியர் 25 பேர்

ஆய்வு மாணவர்கள் 16 பேர்

அறிவியல் மாணவர் ஒருவர்

பொறியாளர்கள் 6 பேர்

மருத்துவர்கள் 4 பேர்.

தேர்வு என்பது ஓர் அடையாளம்தான்.

தேர்வுக்குத் தகுதியானவர்கள் 126 பேர் என்றால்,

அதில் மாணவர்கள் 27 பேர்,

ஆசிரியர்கள் 21 பேர்

பேராசிரியர் 9 பேர்

ஆய்வு மாணவர்கள் 3 பேர்

பிற மாணவர்கள் 60 பேர்.

அதிக அளவில் பயிற்சியில் கலந்துகொண்ட மாவட்டங்கள் சென்னை, தருமபுரி, சேலம்.

அடுத்த பயிற்சி வகுப்புகளில் எல்லா மாவட்டங் களுக்கும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு முன் னுரிமை கொடுக்கவேண்டும்.

அதுபோலவே, கிழக்குப் பகுதி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

10 சிலைகளை 10 பேருக்குப்

பரிசாக அறிவித்திருக்கிறீர்கள்!

எல்லாவிதமான, ''அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்'' என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.

அதுபோல, இங்«கூட10 சிலைகளை, 10 பேருக்கு பரிசாக அறிவித்திருக்கிறீர்கள்.

நான் இரண்டு நாள்களுக்குமுன் உரையாற்றும் பொழுதுகூட சொன்னேன்; அய்யா அவர்கள் ஒப் பற்ற சுயசிந்தனையாளர் என்பதற்கு அடையாளத் திற்கு உதாரணம் சொல்வதுபோன்று,

சி.டி.தேஷ்முக்

தேஷ்முக் என்ற பெயர்களை வடபுலத்தில் பயன்படுத்துகிறார்கள்.

நிதியமைச்சராகக்கூட சி.டி.தேஷ்முக் இருந்தார். ஏற்கெனவே அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர்.

பஞ்சாப ராவ் தேஷ்முக் என்று சமூகநீதிக்காக மராட்டியத்தில் பயன்பட்டவர். அவரைப்பற்றி சொல் லும்பொழுது ஒரு கருத்தை நான் சுட்டிக்காட்டினேன். இந்த அரங்கத்தில் உள்ளவர்களில் ஒரு சிலர் கேட் டிருக்கக்கூடும். கேட்காதவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மீண்டும் அதை சொல்லுகிறேன்.

இராவணனுக்கு 10 தலை என்று சொன்னார்கள். ஆனால், வேடிக்கையாக 10 தலை உடையவர்கள் என்று நம்முடைய தோழர்கள் சொல்வார்கள்.

ஒருவருக்கு 10 தலை இருக்க முடியாது; அது ஒரு கற்பனை.

ஆனால், அதற்கு விளக்கம் சொல்கிறபொழுது, வடநாட்டில் அந்தப் பெயரைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

தேஷ்முக், தேஷ்முக் என்று எல்லோரும் உச்சரிப்ப தோடு நிறுத்திவிட்டோம். ஆனால், பெரியார் அவர் கள் தஷ்முக் என்று சொல்வார். தசமுகன் என்று சொன்னால்,  சமஸ்கிருதத்தில் தசம் என்றால் 10; முகம் என்றால் தலை.  ஆகவே தஷ்முக் என்று சொன்னாலே, பத்து தலை என்றுதான் அர்த்தம்.

எனவே, அந்த அளவிற்கெல்லாம் சிறப்பாக இருக் கக்கூடியவர்கள் என்று அவர்கள் சொல்லக்கூடிய நிலையை மாற்றி, 10 தலைகள் இருந்ததோ இல் லையோ, ஆனால், 10 சிலைகளைக் கொடுத்திருக் கிறீர்கள்.

பெரியார் பற்றுதலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்!

அதன்மூலம் பற்றுதலை - பெரியார் பற்றுதலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அனைவருக்கும் மகிழ்ச்சி.

கொடுத்தவர்களுக்கும் மகிழ்ச்சி - இவர்களுக்கு அறிவுத்தூண்டலைத் தூண்டி, இவர்களையெல்லாம் இந்தக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள வைத்த நம்முடைய பயிற்சியாளர்களாக இருக்கக்கூடிய இயக்கப் பொறுப்பாளர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும்,  கவிஞர் அவர்களிலிருந்து எல்லா தோழர் களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வகுப்பெடுக்கவில்லையே என்கின்ற ஆதங் கம் எனக்கு உண்டு. பல காரணங்களினால் அது முடி யாமற் போய்விட்டது. அடுத்தடுத்து வரக் கூடிய வாய்ப்புகளில் நிச்சயமாக நான் பங்கேற்று வகுப்பெடுப்பேன்.

சீரமைக்கப்பட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்பான செயல்பாடுகள்!

அடுத்ததாக தோழர்களே, புதிதாக சீரமைக்கப் பட்ட பகுத்தறிவாளர் கழகத்தில், மிக வேகமான செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

தமிழ்ச்செல்வன், மோகன் மற்ற மற்ற நண்பர்கள் - அதேபோல, மற்ற பிரிவுகளில் இருக்கக்கூடிய தோழர்கள்.

பகுத்தறிவு எழுத்தாளர்கள் இன்னும் சிறப்பாக, பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் சொன்னதைப் போல, மேலும் அவர்கள் எழுதவேண்டும். கட்டு ரைகளை எழுதி அனுப்புங்கள்; ''செந்தமிழும் நா பழக்கம்'' என்று சொல்வதைப்போல, அச்சப்படா தீர்கள்; கூச்சப்படாதீர்கள். தவறாக வந்துவிடுமோ என்று யோசிக்காதீர்கள்.

வாழ்க்கை என்பதே தவறு - Trial & Error method  என்று சொல்வார்கள். நாம் தவறு செய்துதான் கற்றுக்கொள்கிறோம். நீச்சல் கற்றுக்கொள்ளும் பொழுது, பல நேரங்களில் மூழ்கிப் போய்தான் மீண்டும் வருவோம்.

நீச்சல் சரியாகத் தெரிந்த பிறகுதான் தண்ணீரில் இறங்குவோம் என்றால், நீச்சலை ஒருபோதும் கற்றுக் கொள்ள முடியாது என்பார்கள். அதுபோலத்தான் இதுவும்.

பகுத்தறிவு எழுத்தாளர்கள் நிறைய எழுதவேண்டும்!

எனவேதான், தோழர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், பகுத்தறிவு எழுத்தாளர்கள் நிறைய எழுதவேண்டும். குறிப் பாக நேரு அவர்கள் நிறைய எழுதுகிறார்கள்;  அதுமட்டும் போதாது; மற்றவர்களையும் இணைக்கவேண்டும்.

இங்கே பங்கேற்றுள்ளவர்கள் நிறைய பேர் எழுத்தாளர்களாக இருப்பீர்கள். கருத்தாளர்கள், எழுத்தாளர்களாக மாறவேண்டும். பகுத்தறிவா ளர்களாக இருந்தால், ‘செம்மலர் நாற்றமுடைத்து' என்று சொல்லக்கூடிய அளவில், வெறும் மலராக இருப்பதைவிட, மணமுள்ள மலராக இருக்கும் பொழுது, அது இன்னும் பயன் தரும்.

எழுதுகிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல -  எழுத்தை ஆளவேண்டும்!

ஏனென்றால், எழுத்துகள் எப்பொழுதும் நிலை யாக நிற்கும், பேச்சுகளை விட. ஆகவேதான் அப்படிப் பட்ட நல்ல எழுத்தாளர்களாக - எழுதுகிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல - எழுத்தை ஆள வேண்டும்.

யார் பகுத்தறிவை ஆளுகிறார்களோ, அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்!

பகுத்தறிவாளர்கள் என்று சொல்லும்பொழுதுகூட, பகுத்தறிவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், யார் பகுத்தறிவை ஆளுகிறார்களோ, அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்.

பல நேரங்களிலும் சொல்லியிருக்கிறேன்; வானொ லியில் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவும் சொல்லியிருக்கிறேன். மீண்டும் இப்பொழுது அதை உங் களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

மாணவரின் கேள்வியும் - அவருக்கு நான் சொன்ன பதிலும்!

பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் என்னைப் பார்த்து, ''அய்யா எல்லோருக்கும் பகுத்தறிவு இருக் கிறது; ஆனால், உங்களை மட்டும் பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்கிறீர்களே, மற்றவர் களுக்கு எல்லாம் பகுத்தறிவு இல்லையா? நீங்கள்தான் பகுத்தறிவாளர்களா?'' என்று சுருக்கென்று கேட்டார்.

அந்தக் கேள்வியை நான் வரவேற்று, சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.

எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது; ஆனால், பகுத்தறிவாளர்கள் என்ற சொல்லை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம் என்று சொன்னால் அருமை நண்பர்களே, யார் பகுத்தறிவை ஆளுகிறார்களோ - ஆளவேண்டும் - கையாளவேண்டும் - பயன் படுத்தவேண்டும் - அந்தப் பகுத்தறிவின் பயனை நுகர்வோராக ஆக்கிக்கொண்டு, மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

இதுபோன்று எல்லோருக்கும் கிடையாது; பகுத் தறிவு  இருக்கின்ற அத்தனை பேருக்கும் கிடையாது. அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்,

பகுத்தறிவாளர்களுக்கும், சாதாரண பகுத்தறிவு உள்ளவர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கு வதற்காக ஓர் உதாரணம் சொல்லுகிறேன். வெறும் தத்துவத்தை மட்டும் சொல்லிவிட்டு, வரையறையை மட்டும் சொல்லிவிட்டுப் போனால்,  அது உங்களில் பல பேருக்கு விளங்காது என்பதற்காக அன்று சொன்ன உதாரணத்தை மீண்டும் இந்த அரங்கத்தில் உள்ளவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

அது என்னவென்றால், ஒருவர் செருப்பில்லாமல் நடந்துபோகின்ற நேரத்தில்,  எதிர்பாராமல் சாணியை மிதித்துவிடுகிறார். உடனே அவன் அருவருப்படை வான்; ஒரு காலில் நொண்டிக் கொண்டே சென்று, அருகிலிருக்கும் குழாயிலோ அல்லது தண்ணீரை வாங்கியோ கழுவினால்தான் அவன் நிம்மதியடை வான்.  இது பகுத்தறிவு.

பகுத்தறிவு இருந்தும் பயன்படுத்தாதவன்

அதே ஆள் கொஞ்ச தூரம் சென்றவுடன், ஒரு பிள் ளையார் கோவில் இருக்கிறது;  பிள்ளையார் சிலைகூட இல்லை, சாணியில் பிள்ளையாரைப் பிடித்து, இதுதான் பிள்ளையார் என்று சொன்னால்,  அங்கே நின்று குனிந்துகொண்டு, தலையில் குட்டிக் கொள்வான்.

முதலாமவன் பகுத்தறிவை ஆளுகிறவன்;

அடுத்தவன் பகுத்தறிவு இருந்தும் பயன்படுத் தாதவன்.

எனவேதான், பகுத்தறிவாளர்கள் என்று சொல்வ தற்கு இதுதான் வேறுபாடு என்று மிகத் தெளிவாகச் சொன்னேன்.

இது அறிவியல் பூர்வமான செய்தி.

- தொடரும்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:44 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், பகுத்தறிவாளர் கழகம், பரிசளிப்பு, பெரியாரியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் – 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் நூல் : எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் “திராவிட இயக்கத் தூண்கள்” நூல் அறிமுக உரை: முனைவர் அரிமா த.கு.திவாகரன் நன்றியுரை : ஒசூர் செல்வி ( மாவட்டத் தலைவர், தி.க.மகளிரணி ஒசூர்) zoom : 82311400757 Passcode : PERIYAR

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்தராபாத்
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • அறிக்கை
  • அறிவியல் நாள்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இந்திய பகுத்தறிவாளர்
  • இயேசு
  • இரங்கல்
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலகத் தமிழர் மாநாடு
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கன்னடம்
  • கனடா
  • காணொளி
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • கோரா
  • சங்கமம்
  • சச்சி ராமாயண்
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • திரைப்படம்
  • தில்லி
  • தீர்மானம்
  • துரை.சந்திரசேகரன்
  • தெலங்கானா
  • தெலங்கானா மாநிலம்
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாகபுரி
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நாத்திகர் சங்கம்
  • நிகழ்ச்சிகள்
  • நிர்வாக குழு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • நூற்றாண்டு
  • ப.க.
  • ப.க. கலந்துரையாடல்
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புதுவை
  • புரட்சிக்கவிஞர்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியார் லலாய் சிங்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பேராசிரியர்
  • பேராசிரியர்கள்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மனிதநேய மாநாடு
  • மாணவர்
  • மாணவர் பேரணி
  • மாநாடு
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மும்பை
  • மேற்கு வங்கம்
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லாஸ் ஏஞ்சல்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • வடஇந்தியர்
  • விசாகப்பட்டினம்
  • விஞ்ஞானி
  • வியட்நாம்
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வீரவணக்கம்
  • வைக்கம்
  • ஜெயகோபால்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK
  • periyar

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...
  • நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!
    தமிழர் தலைவர் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது சென்னை, 17.8.2019 * பெரியார் 1000 வினா - விடை...
  • கடவுள், மதங்கள் இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்
    கடவுள், மதங்களுக்குக் கல்தா! இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள் சென்னை, ஜூலை 1_ இன்சைடர்மாங்கி எனும் இணையப் பக்கத்தில்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (19)
    • ►  நவம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (1)
    • ▼  மார்ச் (4)
      • காரல் மார்க்ஸ்
      • பகுத்தறிவாளர் கழக பெரியாரியல் பயிற்சி பரிசளிப்பு வ...
      • வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களுக்கும் - பெரியார் இயக...
      • தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில...
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.