பகுத்தறிவு உலகு

சனி, 12 பிப்ரவரி, 2022

ஆறாம் அறிவு யாதெனில்!



   February 09, 2022 • Viduthalai

சுருக்கென்று தான் கேட்டார் அந்த கல்லூரி இளைஞர்! நானோ சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்!

"அய்யா எல்லோருக்கும் பகுத்தறிவு இருக் கிறது. பின்னர் ஏன் உங்களை மட்டும் பகுத்தறி வாளர்கள் என்று சொல்றீங்க? மற்றவர்களுக்கெல் லாம் பகுத்தறிவு இல்லையா?" இது அவர் கேட்டது.

" எல்லோருக்கும் தான் இருக்கிறது, ஆனால் யார் பகுத்தறிவை ஆள்கிறார்களோ, யார் பகுத் தறிவை பயன்படுத்துகிறார்களோ, யார் பகுத்தறி வின் பயனை நுகர்வோர் ஆக்கிக்கொண்டு மற்ற வருக்கு கொடுக்கிறார்களோ அவர்கள்தான் பகுத் தறிவாளர்கள்! பகுத்தறிவை கையாளத் தெரிந்த வர்கள்! எடுத்துக்காட்டாக வெற்றுக் காலில் நடந்து போகும்போது சாணத்தை மிதித்து விட்டால் அரு வருப்பாக உள்ளது என்று கழுவிவிட்டு நிம்மதி பெறுவது பகுத்தறிவு. அதே ஆள் சற்று தூரத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாணியை வைத்து ஒரு புல்லை வைத்தால் அங்கே தலையை குட்டிக் கொண்டு நின்றால் பகுத்தறிவை பயன்படுத்த வில்லை என்பது பொருள். இப்போது நன்றாக உங்களுக்கு விளங்குமே" இது நான் சொன்னது!

பல கோடி பேர் நாட்டில் உலவினாலும் பகுத் தறிவாளர்கள் எவரென்று 4.2.2022 அன்று நடை பெற்ற  பகுத்தறிவு பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் இப்படி தெரி வித்தார். சரி, இந்த  பகுத்தறிவாளர்களுக்கு என்ன தான் பணி  நாட்டில்? என்று அடுத்து எவரேனும் கேட்பாரென்றால் அதற்கும் பதில் சொல்கிறார்.

அடிப்படைக் கடமையே, அடிப்படைப் பணி!

"அரசமைப்புச் சட்டத்தின் கூறு 51a உட்பிரிவு h இல் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அடிப்படை உரிமை களை பற்றி இங்கு எல்லோரும் கவலைப்படு கிறார்கள். ஆனால் அடிப்படைக் கடமைகளைப் பற்றி பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் கவலைக் கொண்டு அன்றாடம் அப்பணியைச் செய் கிறார்கள்.

நம் ஊரிலே என்னதான் அறிவியலில் பட்டம் பெற்றாலும் நெற்றியில் பட்டை போட்டுக்கொள் கிறார்கள். கேட்டால் உடம்பில் இருக்கும் நீரை எடுத்து விடும் என்று வியாக்கியானம் பேசு கிறார்கள். பெரியார் கேட்டார், இரும்பு பெட்டிக்கு போடுகிறீர்களே அதற்குள் என்ன இருக்கிறது இழுத்துக் கொள்ள என்று?  அதனால் சொல்கி றோம். அறிவியல் படித்தால் மட்டும் போதாது... அறிவியல் மனப்பான்மை வந்தால் வாழ்வில் எந்த சோதனையையும் வென்று வரலாம்.

ஏன் வேண்டும் அறிவியல் மனப்பான்மை என்றால் மனிதநேயத்தை எல்லோருக்கும் பரப்ப வேண்டும் என்பதால் வேண்டும். அதுதான் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பது.

இதை எப்படி பெறமுடியும் என்றால் கேள்வி கள் கேட்பதன் மூலம் பெறலாம். அடுத்ததாக அடிப்படை கடமைகளில் இறுதியாக வருவதுதான் 'சீர்திருத்தத்திற்கு மாற்றம் பெற அஞ்சாத நிலை.' இப்படியாக அரசமைப்புச் சட்டத்தில் கடமைகளாக  கூறப்பட்ட இந்த நான்கு அம்சங்களையும் அன்றாடம் செய்யும் அமைப்பு தான் திராவிடர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும். மற்றவர்கள் செய்யத் துணியாத காரியம், செய்ய தயங்குகிற பணி -செய்யாத பணியை நாம் செய்கிறோம். அதனால் பெருமை கொள்வோம் என்கிறார்!

நாம் யார்? நம்முடைய பணி என்ன? என்ப தெல்லாம் சொல்லி விட்டு எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோமே என்று நாம் எண்ணிக் கொள்ள தேவையில்லை, 180 கோடி மக்கள் தொகையில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறை வானவர்கள் மட்டுமே. அப்படித்தான் நாமும் என்கிறார். அடுத்த செய்திகளை தலைவர் அவர்கள் சொல்லக் கேட்கும் போது வர வேண்டிய கர்வம் சற்று தூக்கலாகவே எட்டிப் பார்க்கிறது நமக்கு.

சென்னை பகுத்தறிவின் அன்னை!

அமெரிக்காவின் முக்கிய நகரமான செயின்ட் லூயிஸில் என்னைப் பேச  அழைத்தார்கள். பத்து பதினைந்து பேர் பரபரப்பின்றி இயல்பாக அமர்ந் திருந்தார்கள். இன்னும் யாராவது வரவேண்டுமா துவங்கலாமா என கேட்டேன். வழக்கமாக மூவர் நால்வர் வருவோம் இன்று நீங்கள் வந்திருப்பதால் "Full attendance"  என்று மகிழ்ச்சியோடு அந்த அம்மையார் சொன்னார்கள்... எனக்கோ ஒரே வியப்பு.  அந்த அம்மையார் தான் இங்கே வந்து நம் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகளை எல்லாம் பார்த்து வியந்து 'உலகின் பகுத்தறிவுத் தலைநகரம் சென்னை' என்று பாராட்டினார்.

உலக நாத்திக அமைப்பின் தலைவர் நார்வே நாட்டின் லெலி ஃபிராக்கில் சொல்லிச் சென்ற கருத்தும் மிக முக்கியமானது, நம் செயல்பாடு களுக்கு உரமிடக் கூடிய ஒன்று" என்று புரிய வைக்கிறார் நமக்கே நமக்கான பெருமையை.

"சென்னையில் இருக்கிற மிக முக்கியமான இரண்டு சாலைகள் இரண்டு நாத்திகர்கள் பெய ரால் இருப்பது மிகப்பெரிய சிறப்பு. அமெரிக்கா போன்ற இடங்களில் எல்லாம் கூட பகுத்தறிவாளர் களுக்கு இத்தகைய சிறப்புகள் இல்லை!  பல்வேறு நாடுகளிலும் பகுத்தறிவாளர்கள் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் கூட்டம் கூடி புத்தக ஆய்வு செய்வார்கள். ஆனால் (லிபர்டி)  'விடுதலை' என்ற பெயரில் நாளிதழ் தொடங்கி அன்றாடம் பகுத்தறிவுப் பணியை செய்து கொண்டிருப்பவர்கள் நீங்கள் மட்டும்தான்!" என்று அவர் சொன்னதை பெருமையோடு சுட்டிக்காட்டி உலகிலேயே மிகவும் தனித்துவமானவர்கள் நாம்  என்று உற்சாக வெள்ளத்தில் நம்மை மிதக்க விடுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அய்யாவும் அண்டை பகுத்தறிவாளர்களும்!

"உலகத்தின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்ளிட்ட மற்றும் பல அய்ரோப்பிய நாடுகளில் நாத்திக அமைப்புகள் - பகுத்தறிவாளர்கள் நிறைய உண்டு என்றாலும் அவர்களுக்கும் பெரியாருக்கும் என்ன ஒரு பெரிய வேறுபாடு என்றால் பெரியார் மட்டும் தான் இங்கே மக்கள் இயக்கம் ஆக்கிக் காட்டினார். மற்றவர்களெல்லாம் தங்கள் அறிவு ஆற்றல் சிந்தனைகளை இவற்றை வளர்த்துக் கொண்டு மேம்படுத்திக் கொண்டு தங்களை பகுத்தறிவா ளர்கள் ஆக்கிக்கொண்டாலும் தாங்கள் சார்ந்த சமூகத்தை அந்த வகையிலே கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் மக்கள் பிரச்சினை களில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தந்தை பெரியார் மட்டும் தான் சமூக நீதி, பாலியல் நீதி, எல்லோருக்குமான சமவாய்ப்பு, உரிமைகள் பற்றி மாலைநேர கல்லூரிகளாக தம் வகுப்பை மாற்றி மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை இங்கே முன் னெடுத்தார். இது தந்தை பெரியாருக்கு மட்டுமே உடைய பெரும் சிறப்பு" என்று முத்தாய்ப்பாக ஆசிரியர் அவர்கள் சொன்ன செய்தி என்பது பெரியாரியலை வாழ்வியலாக ஏற்ற நம் அனைவருக்கும் பெருமை என்பதோடு தெளிவும் உறுதியும் ஒருங்கே பெறும் நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது.

அய்யிரண்டு திசைமுகத்துக்கும்!

எனவே திசைகள் எட்டு, மேல் கீழ் என்று பத்தும் ஆன இந்த பூமிப் பந்தில் இந்த அளவிற்கு புகழ் பெறக்கூடிய பயன்பெறக்கூடிய ஒரு தத்துவம் தான் தந்தை பெரியார் என்று ஆசிரியர் புகழாரம் சூட்டுகிறார்.

ஆசிரியரின் பேச்சை ஆராய்ச்சி செய்தால் ஆறாம் அறிவென்பதின் 'அடையாளப் பேருரு வாக' நம் கண்முன் விண்முட்டும் அளவில் காட்சியளிப்பது 'பெரியார் எனும் மனிதநேயமே!' அவ்வறிவை எல்லோரும் ஆள, நாம் பெற்ற பேரின்பம் ஞாலமெலாம் நிறைய தமிழர் தலைவர் வழியே தஞ்சமாவோம்!

பெரியாரை வாரி இறைக்கும் அவர் உழைப் புக்கே என்றும் நன்றியாவோம்- நீட்சியாவோம்!

- ம.கவிதா, திருப்பத்தூர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற

துணைத் தலைவர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:40 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதா, பகுத்தறிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் – 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் நூல் : எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் “திராவிட இயக்கத் தூண்கள்” நூல் அறிமுக உரை: முனைவர் அரிமா த.கு.திவாகரன் நன்றியுரை : ஒசூர் செல்வி ( மாவட்டத் தலைவர், தி.க.மகளிரணி ஒசூர்) zoom : 82311400757 Passcode : PERIYAR

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்தராபாத்
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • அறிக்கை
  • அறிவியல் நாள்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இந்திய பகுத்தறிவாளர்
  • இயேசு
  • இரங்கல்
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலகத் தமிழர் மாநாடு
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கன்னடம்
  • கனடா
  • காணொளி
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • கோரா
  • சங்கமம்
  • சச்சி ராமாயண்
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • திரைப்படம்
  • தில்லி
  • தீர்மானம்
  • துரை.சந்திரசேகரன்
  • தெலங்கானா
  • தெலங்கானா மாநிலம்
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாகபுரி
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நாத்திகர் சங்கம்
  • நிகழ்ச்சிகள்
  • நிர்வாக குழு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • நூற்றாண்டு
  • ப.க.
  • ப.க. கலந்துரையாடல்
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புதுவை
  • புரட்சிக்கவிஞர்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியார் லலாய் சிங்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பேராசிரியர்
  • பேராசிரியர்கள்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மனிதநேய மாநாடு
  • மாணவர்
  • மாணவர் பேரணி
  • மாநாடு
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மும்பை
  • மேற்கு வங்கம்
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லாஸ் ஏஞ்சல்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • வடஇந்தியர்
  • விசாகப்பட்டினம்
  • விஞ்ஞானி
  • வியட்நாம்
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வீரவணக்கம்
  • வைக்கம்
  • ஜெயகோபால்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK
  • periyar

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...
  • நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!
    தமிழர் தலைவர் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது சென்னை, 17.8.2019 * பெரியார் 1000 வினா - விடை...
  • கடவுள், மதங்கள் இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்
    கடவுள், மதங்களுக்குக் கல்தா! இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள் சென்னை, ஜூலை 1_ இன்சைடர்மாங்கி எனும் இணையப் பக்கத்தில்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (19)
    • ►  நவம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ▼  பிப்ரவரி (5)
      • மாநில பகுத்தறிவாளர் கழகப் பகுத்தறிவு ஆசிரியரணி - ப...
      • தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையத்தில் தெ...
      • உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
      • நாடெங்கும் பகுத்தறிவுப் பேரொளி பரவ வழி செய்வீர்! வ...
      • ஆறாம் அறிவு யாதெனில்!
    • ►  ஜனவரி (5)
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.